siddhas

Tuesday 7 April 2015

தேங்காய் பூலோகத்தின் கற்பக விருட்சம்




தேங்காய் சமையலில் சேர்த்து கொள்ளவே கூடாது என்னும் தேங்காய் மடையர்களின் சொல்லை பொருட்படுத்தாமல் தினமும் சமையலில் தேங்காய் சேர்த்து அதன் மூலம் பள, பள தோலுடன் தள, தளவென்று இளமையாக இருக்கும் மலையாள மக்களுக்கு நான் இந்த பதிவை சமர்பிக்கிறேன். நேற்று நெய் புராணம் பார்த்தோம். இன்று தேங்காய் புராணம் பார்ப்போம்.
சக்கரை வியாதி உள்ளவர்கள் தேங்காய் சேர்த்து கொள்ள கூடாது என்பது சரி தான். ஆனால் சிறு குழந்தைகளுக்கு கூட தேங்காய்யை கண்ணில் காட்ட கூடாது என்று சொல்பவர்களை தான் நான் தேங்காய் மடையர்கள் என்று குறிப்பிட்டேன். பீட்ரூட், கேரட்டில் கூட சக்கரை உள்ளது. ஆங்கில மருத்துவ உலகினருக்கு தேங்காய் மீது மட்டும் why this கொலவெறி.
மனித உடலில் 13 Vitamins. Minerals and Trace Elements 14 இருக்கும். இவற்றில் ஏதேனும் ஒன்று கூடினாலும் குறைந்தாலும் பிரச்சனை தானே.
மிகவும் பலவீனமாக உள்ள ஒரு கல்லூரி மாணவன் நல்ல டாக்ட்டர் ஒருவரிடம் சென்றான். அவர் அவனுக்கு உடம்பு நன்றாக தேருவதற்க்கு ஒரு டானிக் எழுதி கொடுத்தார். அதை காலையில் ஒரு ஸ்பூந் நைட் ஒரு ஸ்பூந் சாப்பிட வேண்டும் என்று சொன்னார். அவன் உடலை விட மனம் பலவீனம். ஓவர் நைட்ல அர்னால்ட் ஆணும்னு எலி குஞ்சு மாதிரி இருக்கற அந்த பையன் ஒரு பாட்டில் டானிக்யும் ஜூஸ் குடிக்கற மாதிரி ஒரே மடக்கில் குடிச்சான். அதன் பிறகு என்ன நடந்து இருக்கும் என்பது உங்களுக்கே தெரியும்.
உணவும் அதே மாதிரி தாங்க. இப்போ நெய்னு எடுத்துண்டா அது என்ன. ஒரு டானிக். ஒரு நாளைக்கி ஒரு ஸ்பூந் சேர்த்துக்கலாம். கடினமான உழைப்பாளிகள். உடற் பயிற்ச்சி செய்பவர்கள் ரெண்டு ஸ்பூந் சேர்த்துக்கலாம். அதையே சோறு திங்கும் அளவு தின்று. தினமும் நெய்யில் பொறித்த பலகாரங்களை தின்று அதனால் நோய் வந்தால் அதற்க்கு காரணம் நெய் அல்ல. அசட்டு தனம், கிறுக்கு தனம்.
இன்று பல படித்த மேல் தட்டு குடும்பங்களில் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் உணவு. No Cocunut, No Oil, No Curd, No Ghee. சில வீடுகளில் No Milk also. அவ்வாறு உணவு கொடுத்தால் அந்த குழந்தைக்கு No Energy, No Power, No Stamina. ஆனால் குழந்தைகளுக்கு Noodles போன்ற குப்பை உணவுகளையும் கக்கூஸ் கழுவ நன்கு உபயோகப்படும் பெப்சி, கோக் போன்ற பானங்களையும் கொடுப்பார்கள். ஒரு குழந்தைக்கு பிடித்த உணவு, பிடிக்காத உணவு என்பது அந்த குழந்தையின் தாய் பழக்கப்படுத்துவதில் தான் இருக்கிறது. Noodles எப்பையாது உண்பதில் தவறில்லை. அதிலும் சக்த்துக்கள் இருக்கிறது. ஆனால் அது போன்ற அதிக சுவை மிகுந்த உணவுகளை விவரம் தெரிவதற்கு முன்பே ஊட்டி பழகினால் பின்னர் அதிக சக்த்து மிகுந்த கீரை போன்ற உணவுகள் குழந்தைகளுக்கு பிடிக்காமல் ஆகி விடும். அதனால் நீங்கள் சுவை மிகுந்த உணவுகளை முதலில் குழந்தைக்கு கொடுப்பதை விட சக்த்து மிகுந்த உணவுகளை கொடுத்து பழகுங்கள்.
எனக்கு இன்று வரை கீரை, பாகற்காய் போன்ற உணவுகள் பிடித்த உணவு. காரணம். எனது தாய் சிறு வயதிலேயே அதை கொடுத்து பழக்கினார். பீஸா, பர்கர் போன்ற உணவுகளின் சுவைகளை 12 வயதிற்கு மேல் தான் என் நாக்கு அறிந்தது. ஒழுங்காக சமைக்க தெரிந்தவர்கள் சமைத்தால் பாகற்காய் கசக்காது. கொழுப்பு என்பது என்ன. உடலில் இருக்க வேண்டிய சக்த்துகளில் அதுவும் ஒன்று. அந்த கொழுப்பு அதிகரித்தால் தான் வியாதி. கொழுப்பு சக்த்தே ஒருவரது உடலில் இல்லையென்றால் என்ன ஆகும் யோசித்து பாருங்கள். கொழுப்பு சக்த்துள்ள உணவுகளையே குழந்தைகளின் கண்ணில் காட்டாமல் வளர்ப்பது சரியா.
தேங்காய் உண்ணுவதன் மூலம் கிடைக்கும் நற்பலன்களை பார்ப்போம்.
1] வாழைப்பழம், ஆப்பிள்ளில் உள்ளதை விட அதிக ப்ரோடீந் தேங்காய்யில் உள்ளது.
2] தேங்காயில் உள்ள Fatty Acid. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கிறது
3] இதையம், சிறுநீரகம், கல்லீரல் குறைபாட்டிற்கு தேங்காய் மிக சிறந்த மருந்து.
4] புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன.
5] தேங்காய் பால் அல்சர்க்கு ஒரு மிக சிறந்த மருந்து. அதிக உடல் வலிமையை தர கூடியது
6] இளநீரை விட சிறந்த க்லூகோஸ் வாட்டர் உண்டா. அது வெறும் சக்தியை கொடுப்பது மட்டும் அல்லாமல் சக்தியை செரிக்கவும் உதவி புரிகிறது.
 7]வாதம், பித்தம், கபம் முதலான பல வியாதிகளுக்கு இளநீர் அரு மருந்து.
8]குடல் புழுக்களை இளநீர் அழிக்கிறது, காலரா நோய்க்கு நல்ல நிவாரணமும் அளிக்கிறது
9]ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவிற்க்கு சிறந்த மாற்று பொருளாக இளநீர் பயன் படுத்தப்படுகிறது.
10ரத்தத்தில் உள்ள நச்சு பொருட்களை அழிக்க இளநீர் பயன்படுகிறது
11] தாய்ப்பாலில் எந்த அளவு புரத சக்த்து உள்ளதோ. அதற்க்கு இணையாக இளநீரிலும் உள்ளது.

தேங்காய் எண்னை
தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களைக் குணப்படுத்துகின்றன. நாள்பட்ட தீராத புண்களுக்கு மருந்தாகத் தரப்படும் மத்தம் தைலம், தோல் நோய்களுக்கான கரப்பான் தைலம், வாத வலிகளைக் குணப்படுத்தும் கற்பூராதி தைலம், தலைக்குப் பயன்படுத்தப்படும் நீலபிரிங்காதித் தைலம், சோரியாசிஸ் நோய்க்குப் பயன்படும் வெப்பாலைத் தைலம், தலையில் உள்ள பொடுகுக்கு மருந்தாகும் பொடுதலைத் தைலம் ஆகிய தைலங்களில் தேங்காய் எண்ணெய்யின் பங்கு முக்கியமானது.

நாளை Bp நோய்க்கு உரிய மருத்துவத்தை பார்ப்போம்





No comments:

Post a Comment