siddhas

Thursday 30 April 2015

வாதம், பித்தம், கபம். மூன்றையும் சீராக வெய்க்க சீராண வழி





பிரண்டை.

வாதம், பித்தம், கபம். மூன்றையும்  சீரான அளவில் வெய்க்கும்.  இதை எவ்வாறு பயன்படுத்துவது.

  ஒரு தேங்காய் சட்னி, புதினா சட்னி, தக்காளி சட்னி போன்ற சட்னிகளை செய்வதற்க்கு பயன்படுத்தும். மிளகாய், உப்பு, புளி, உளுத்தம் பருப்பு போன்றவை தான் இதற்க்கும்  பயன் படுத்த வேண்டும். பிரண்டையை சட்னியாக, தொகையலாக  பயன் படுத்தலாம்.  பொதுவாக இதை சமையலில் அதிகம் சேர்த்து கொள்ள மாட்டார்கள். சேர்த்தால் நல்லது.






  வாகை பூ-    ஆன்மீக சிறப்பு,  வரலாற்று சிறப்பு, அதீத மருத்துவ சிறப்பு வாய்ந்த பூ. சங்ககாலத்தில் போரில் வெற்றிபெறும் வீரர்களுக்கு வாகை மலர் சூட்டப்பட்டு வெற்றிக் களிப்பை பகிர்ந்ததாக தமிழ் இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன. "வெற்றி வாகை சூடினான்" எனும் தொடர் இன்னமும் வழக்கிலுள்ளது. இது அதீத மருத்துவ குணம் உடையது. வாகை மர‌த்‌தி‌ன் ‌பி‌சி‌ன், மர‌ப் ப‌ட்டை, பூ, ‌விதை, இலை என அனை‌த்‌தி‌ற்கு‌ம் மரு‌த்துவ குண‌ங்க‌ள் உ‌ள்ளன. வாகை‌யி‌ல் புரத‌ச் ச‌த்து, கா‌ல்‌சிய‌ம், பா‌ஸ்பர‌ஸ், சோடிய‌ம், பொ‌ட்டா‌சிய‌ம், மெ‌‌க்‌னீ‌சிய‌ம் ஆ‌கிய ச‌த்து‌க்க‌ள் ‌நிறை‌ந்து காண‌ப்படு‌கி‌ன்றன.வாகை‌ப் பூவை சேக‌ரி‌த்து ‌நீ‌ர்‌வி‌ட்டு‌க் கா‌ய்‌ச்‌சி பா‌தியளவாக வ‌ற்‌றியது‌ம் வடிக‌ட்டி குடி‌த்து வர. வாதம், பித்தம், கபம் மூன்றும்  உடலில் சம நிலைக்கு வரும்.  விஷத்தை முறிக்கும் சக்தியும் இதற்க்கு  உண்டு.


Wednesday 29 April 2015

80 வகை வாத நோய்களும். அவற்றை தீர்க்கும் மூலிகைகளும்.


மனிதனின் உடலில் வாதம், பித்தம், கபம் மூன்றும்  இருக்க வேண்டும். ஆனால்?  சரியான அளவில் இருக்க வேண்டும். நமது உடலிலே நீரும்  இருக்கிறது,  நெருப்பும் இருக்கிறது. இனிப்பும்  இருக்கிறது, கசப்பும் இருக்கிறது. ஆனால் எல்லாம் சரியான அளவில் இருக்க வேண்டும். எதுவுமே கூடினாலும், குறைந்தாலும் பிரச்சனையே. வாதம் அதிகரித்தால் உடல் வலி. பித்தம் அதிகரித்தால், வாந்தி, மயக்கம், தூக்கமின்மை போன்ற நோய்கள். கபம் அதிகரித்தால் அடிக்கடி  சளி தொல்லை வரும்.

 ஆயுர்வேத மருத்துவர் மொஹமத் அலி அவர்கள்.


காலம் போன கடைசியில் வாதம் வந்து வாய்த்ததே என்பது கிராமத்துப் பழமொழி. ஆம் வயது முதிர்ந்து நாடி தளர்ந்து உடல் ஒடுங்கிய வேளை இது. இந்த நேரத்தில் வாதம் வேறு வந்து வாய்த்துவிட்டதே என்ற வேதனையின் பிரதிபலிப்பே இந்தப் பழமொழியாகும்.

உடலில் உண்டாகும் பிணிகள் 4448 என்று சித்த மருத்துவம் சொல்கிறது. இதில் வாதம், என்பது 80 வகை என்று வரையறுத்துக் கூறப்பட் டுள்ளது. இவற்றின் குணங்களைத் துல்லியமாக விளக்குகிறது. யூகிமுனி வைத்திய காவியம் என்னும் சித்தர் நூல்.

வாதநோய் தாக்கும் இடங்களைப் பொறுத்து அது வெவ்வேறு பெயர்களைப் பெறுகின்றது. உதாரணமாக மூட்டுகளைத் தாக்கினால் மூட்டுவாதம் என்றும், முகத்தைத் தாக்கி முகம் கோணிக் கொண்டால் முக வாதம் என்றும், சர்வ அங்கங்களையும் தாக்கினால் சர்வாங்க வாதம் என்றும் பெயர்களைப் பெறுகிறது. இவ்வாறாக 80 வகை வாதங்களில் மனிதனை அதிகமாகத் தாக்குவது முடக்குவாதம், பக்கவாதம் எனும் இருவகை வாத நோய்களாகும். ஏனெனில் வாத நோய்களிலேயே மூட்டுகள் அதிகமாகப் பாதிக்கப்பட்டு மனிதனின் இயக்கங்கள் அனைத்தையுமே முடக்கி அவனைச் செயலற்றவனாக்கி விடுவதே முடக்குவாதம்.


நரம்புகள் பாதிக்கப்பட்டு உறுப்புகளை உணர்விழக்கச் செய்து மனிதனைச் செயலற்றவனாக்கி விடுகிறது பக்கவாதம்.


இந்த இருவித நோய்களுமே மனிதனை அணுவணுவாகச் சித்திரவதை செய்யும் நோய்களாகும்.

முடக்குவாத நோயும் நிவாரணமும்.

முடக்குவாதம் என்பது உஷ்ணம் மிகுதியாலோ கிருமித் தொற்றுகளாலோ உடலில் பிரிக்கப்பட வேண்டிய நீர். உடல் அங்கங்களின் மூட்டுகளில் தங்கி இணைப்புத் தசைகளை வீங்கச் செய்து மிகுந்த வலி தரும். தொடர்ந்து காய்ச்சல் அதனால் உடலை அசைக்க முடியாத தன்மையே முடக்கு வாதம். சுருங்கச் சொன்னால் மனிதனின் இயக்கங்கள் அனைத்தையுமே முடக்கி வைப்பதே முடக்கு வாதம்.

முடக்குவாத வியாதியின் ஆரம்பத்தில் சில சமயம் தொண்டை பாதிக்கப்படுகிறது. பின்பு எலும்பு சந்துகள் சிவந்து வீங்கி வலியுண்டாகிப் படிப்படியாக பெரிய மற்றும் சிறிய மூட்டுகளையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. அதனால் காய்ச்சல், வாந்தி, மயக்கம், உடம்புப் பெருக்கம் உண்டாகும். உட்கார்ந்தால் எழ முடியாது. அசைந்தால் உயிர் போவது போல் வலிக்கும். எந்த வேலையிலும் கவனம் செல்லாது. இந்த நோயைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் இதயம் நோய் வாய்ப்படும். இதனால் இதய வால்வுகளிலும், உட்பகுதிகளிலும் அழற்சி உண்டாகும்.

முடக்குவாதம்.  நரம்புத் தளர்ச்சி, மனச் சஞ்சலம் ஆகியவைகளால் கூட வரவாய்ப்புள்ளது.

முடக்கு வாத நோய்க்கு  தீர்வு.

கொடி வேலி, மிளகரணை, நொச்சி இவைகளின் வேர்ப்பட்டையைக் சமமாக எடுத்துச் சூரணமாகச் செய்து வைத்துக்கொண்டு  சிறிதளவு அளவு காலை, மாலை நீரில் கலந்து சாப்பிட்டுவர முடக்குவாதம் விலகும். இதை பச்சை தண்ணீரில் தான் கலக்க வேண்டும். வெந்நீர் உபயோகிக்க கூடாது.



100 கிராம் ஆமணக்குப் பருப்பை வெண்ணெய் போலரைத்துச் சிறிது, சிறிதாக 100 கிராம் நெய் விட்டுச் சிவக்க வதக்கி அதில் 600 மில்லி பால்விட்டுக் காய்ச்சி குழம்பு பதமானதும் 100 கிராம் சுக்குத் தூளைப் பொடித்துத் தூவிக் கிளறி வைத்துக்கொண்டு வேளைக்கு 5 கிராம் அளவு காலை, மாலை உண்டு வர முடக்கு வாதம், அதனால் ஏற்பட்ட இடுப்பு பிடிப்பு வலி  குணமாகும்.

பரங்கிப்பட்டை, கொடி வேலி வேர்ப்பட்டை சங்கன் வேர்ப்பட்டை, அமுக்கிலான் கிழங்கு ஆகிய நான்கிலும் வகைக்கு 100 கிராம் எடுத்து அதனுடன் சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், ஏலம் இவைகள் வகைக்கு 15 கிராம் வீதம் சேர்த்துச் சூரணித்து வைத்துக்கொள்ளவும்.   கடுமையான முடக்கு வாதமாக இருந்தால் மகாவில் வாதி லேகியத்தை முறைப்படி உண்ண நோய் விலகும்.


 பக்கவாத நோய்க்கு தீர்வு

பொதுவாக பக்கவாத நோய் 40 முதல் 60 வயதுள்ளவர்களைத் தாக்குகிறது. அதிகமாக ஆண்களுக்கே இந்நோய் ஏற்படுகிறது எனப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. பக்கவாத நோய் ஆணுக்கு வலதுபுறமும், பெண்ணுக்கு இடது புறமும் தாக்கினால் எளிதில் தீராது. அதோடு நாக்கும் பாதிக்கப்பட்டால் மருந்துக்கு வசப்படுவதில்லை. கால தாமதம் ஆகலாம். பக்க வாத நோய் தாக்கி நீண்ட நாளாகுதல், உடல் மெலிதல், நோய் தாக்கிய பகுதி சூம்பிப் போதல், உடல் வீங்குதல், நடுக்கம் ஏற்படல் ஆகிய இவை மருத்துவத்திற்குக் கட்டுப்படுவது கடினம். நீண்ட நாள் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டால் பலன் கிடைக்கலாம்.



பக்கவாத நோய் வாதமிகுதியால் வரும் நோய் எனவே வாதத்தை தன்நிலைப்படுத்த வேண்டும்.
பக்கவாத நோயாளிக்குத் தாக்கப்பட்ட உறுப்புகள் பயனற்றுப் போவதால் முதலில் தேங்கியுள்ள மலத்தைக் கழிச்சல் மருந்துகளைக் கொடுத்து மலச்சிக்கலைப் போக்கவேண்டும்.

அதற்கு கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக் காய் மூன்றையும், கொட்டைகளை நீக்கிச் சமமாக எடுத்து உலர வைத்து சூரணமாக எடுத்து சலித்து வைத்துக்கொண்டு பக்கவாத நோயாளிக்கு 1 முதல் 2  ஸ்பூன்  வரை இரவு சாப்பிடச் சொல்லலாம். இதையே திரிபலா சூரணம் என்பர். இதைப்போலவே நிலாவரைச் சூரணத்தையும் உபயோகிக்கலாம். இவை இரண்டும் சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும்.


முள் சங்கின் இலை, அதன் விதை, அதன் பட்டை இம்மூன்றையும் சமமாக எடுத்து அரைத்து சுண்டைக்காயளவு காலை, மாலை, சாப்பிட்டு, சுடுநீர் அருந்தி வர, பாரிசவாதம் அதனால் கை கால்கள் உணர்வற்றுப்போன நிலை மாறும்.

மேலும் சித்திர மூலப்பட்டை, மாவிலிங்கப் பட்டை, கொன்றைப் பட்டை, முருங்கைப்பட்டை., சங்கன்பட்டை, வேப்பம் பட்டை, வெள்ளறுக்கு, சுக்கு, மிளகு,  பஞ்சலவணம் என்று சொல்லப் படுகின்ற இந்துப்பு, வளையலுப்பு, சோற்றுப்பு, கல்லுப்பு, கரியுப்பு முதலியவைகளைச் சமமாக எடுத்து இடித்துச் சூரணமாகச் சலித்து வைத்துக் கொள்ளவேண்டும். இந்தச் சூரணத்தில் வேளைக்கு ஒரு டீஸ்பூன் முதல் 2 டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர, பக்கவாதம் குணமடையும்.


இவையன்றிப் பக்கவாத நோய்க்குச் சண்ட மாருத செந்தூரம், ஆறுமுகச் செந்தூரம், அயவீரச் செந்தூரம், கெந்தி மெழுகு, நந்தி மெழுகு, மகாவீர மெழுகு, வாதராட்சதன் போன்ற உயரிய மருந்துகள் சித்த மருத்துவத்தில் உள்ளன. ஆனால் இவைகளைக் கை தேர்ந்த சித்த மருத்துவரின் ஆலோசனைப்படிதான் உண்ண வேண்டும். பக்கவாத நோயில் உள் மருந்துகளுடன் வெளிப்பூச்சுத் தைலங்களும், மற்றும் ஒத்தடம் போடுதல் போன்ற சிகிச்சைகளும் மிகவும் அவசியம். காரணம் உணர்விழந்த பகுதிகளைத் தேய்த்துச் சூடு உண்டாக்குவதன் மூலம் ரத்த ஓட்டம் உண்டாகி உணர்வு திரும்ப வாய்ப்புள்ளது.


அவ்வகையில் பச்சைச் சித்திர மூலவேர் 150 கிராம், ஊமத்தன் இலைச்சாறு 1 லிட்டர், ஓமம் 50 கிராம், நல்லெண்ணெய் ஒரு லிட்டர், கற்பூரம் 25 கிராம் இவைகளில் முதல் சொன்ன சித்திர நூல் வேலை சோற்றுக் கற்றாழையின் சாறு விட்டு நன்றாக ஒரு பாத்திரத்தில் போட்டு மீதமுள்ள ஊமத்தை இலைச்சாறு, நல்லெண்ணெய் இவைகளை நன்றாகக் கலந்து வண்டல் மெழுகு பதமாகத் தங்கும்போது தேக்கி வைத்துக் கொண்டு பக்கவாத நோயில் பாதிக்கப்பட்ட இடத்தின்மீது தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். காலை, மாலை இப்படிச் செய்தால் போதும்.


இது தவிர பிண்டத் தைலம், வாத கேசரித் தைலம், மையத் தைலம் விஷமுஷ்டித் தைலம் உளுந்துத் தைலம் போன்ற தைலங்கள் கடையில் கிடைக்கின்றன. இவையும் பக்கவாத நோய்களுக்குப் பயன்படுத்தலாம்.
பக்கவாத நோயினால் சில நேரம் நாக்கு பாதிக்கப்பட்டுத் துவண்டுவிடும். அதற்கு அண்டத் தைலம் எனும் மருந்து அற்புதமாகப் பயன் தருகிறது.


மேற்பூச்சித் தைலங்களைப் பூசி மசாஜ் செய்த பின் கழற்சிக் கொழுந்து, வாதநாராயணன் உத்தாமணி இலை, முடக்கற்றான் இலை, நொச்சி இலை, தழுதாலை இலை ஒவ்வொன்றும் ஒரு கைப்பிடி அளவு எடுத்துப் பொடியாக நறுக்கி ஆமணக்கு எண்ணெயில் போட்டுச் சிறு மூட்டைகளாகக் கட்டிப் பாதிக்கப்பட்ட  இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.


பக்கவாதத்தால் செயலிழந்த உறுப்புகளுக்குச் சிகிச்சை முறைகளுடன் லேசான பயிற்சியும் அவசியம். பக்கவாத நோயாளிகளுக்கு இதய நோய், நீரிழிவு மற்றும் பால்வினை நோயிருந்தால் அதற்கான மருந்துகளையும் கொடுத்து நோயைக் குணப்படுத்த வேண்டும். பக்கவாத நோயாளிகளுக்கு அக, புற சிகிச்சைகளோடு உணவு முறைகளிலும் கவனம் செலுத்தினால் துரிதமாகக் குணமடைய வாய்ப்புள்ளது.
பொதுவாக வாதரோகம் அனைத்திற்குமே உள் மருந்துகளுடன் மேற்பூச்சு தைலங்களும் ஒத்தட முறைகளும் மேற்கொள்வது அவசியம். அவற்றோடு பத்தியமும்   மிக முக்கியம். மலச்சிக்கலை உண்டாக்காத உணவு முறை முக்கியம். சைவ உணவே சாலச் சிறந்தது.


வெங்காயம், தக்காளி, காரட், புதினா, கறிவேப்பிலை, வெள்ளரிக்காய் போன்றவைகளைக் கலந்து பச்சடி செய்து உண்ணவேண்டும். வாரம் இருமுறை கொள்ளு ரசம் சாப்பிட வேண்டும். அரிசி உணவைக் குறைத்து கோதுமை உட்கொள்ளலாம். புளிளை அறவே நீக்க வேண்டும். உப்பைக் குறைக்க வேண்டும். உடலில் நீர் சேராமல் காக்கும் முள்ளங்கிச் சாம்பார் வாழைத்தண்டு கூட்டு, முருங்கைக்கீரை பொரியல் ஆகியவை உணவில் சேர்க்கலாம்.

 காலையில் 1 டம்ளர் பார்லித் தண்ணீர் குடிக்கலாம். இரவில் 2 பல் பூண்டு போட்டுக் காய்ச்சிய பாலையும், பூண்டையும் தேன் கலந்து சாப்பிடலாம். முடக்கு வாதத்திற்கென்றே இறைவன் படைத்த மூலிகை முடக்கற்றான். இதனை சூப்பாக செய்து வாரம் ஒரு முறை அருந்தி வரலாம்.


முன் சொன்னவாறு பொதுவாக வாதநோய்க்குப் புறமருந்து, அகமருந்து, உணவுப் பத்தியம் இவைகளுடன் உடற்பயிற்சியும் அவசியம். ஆதலால் கால்களுக்குப் பயிற்சி தரும் விதத்தில் மடக்கி நீட்ட முயலவேண்டும். ஆசனத்தில் திரிகோணாசனம் (முக்கோணநிலை) மிகவும் பயன்தரவல்லது. பிராணாயாமம் என்னும் மூச்சுப்பயிற்சியால் உயிர்காற்று உடலுக்கு அதிகம் கிடைப்பதால் நோய் விரைவில் குணமாகும்.



நோயாளிகளுக்குச் சிறுநீரகக் கோளாறு, இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற நோய்கள் உள்ளனவா எனப் பரிசோதித்து அதற்குத் தகுந்த வண்ணம் மருந்துகளைப் பிரயோகிக்க வேண்டும். மருந்துகளுடன் உடல் தேற்றி மருந்துகளையும் இணைத்தே மருத்துவம் மேற்கொள்ளவேண்டும். முடக்கு வாதத்திற்கு முதல் தரமான சிகிச்சை சித்த மருத்துவத்தில் மட்டுமே உண்டு.

 இதன் தொடர்ச்சியை நாம் நாளை பாப்போம்.




Tuesday 28 April 2015

நரம்பு தளர்ச்சிக்கு உணவு. காலை. கால் டாக்சி ஆக்குங்கள்.



தினமும் ஒரு கால் மணி நேரமாது உடற் பயிற்ச்சி  செய்ய வேண்டும். அரை மணி நேர நடை பயிற்ச்சி. மாலை வேளை. 1,2 கிலோ மீட்டர்  துரம் என்றால். காலை கால் டாக்சியாக உபயோகப்படுத்துங்கள். ஆணோ, பெண்ணோ. நடக்கும் பொழுது. நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வையோடு நடக்க வேண்டும். நெஞ்சை  நிமிர்த்தி எந்த அளவு நீங்கள் வேகமாக நடக்கிரீர்களோ. அந்த அளவு. உங்கள் உடலில் ரத்த  ஓட்டம் சீராகும். நரம்புகள் புத்துணர்ச்சி பெறுவதோடு வலு பெறும்.  Treadmill லில் நடு  ஹாலில் நடப்பவர்கள். அருகில் உள்ள கடைகள், நண்பர்கள், உறவினர்களை பார்பதற்க்கு. 2 வீலர், 4 வீலர் உபயோகிக்காமல்.   வேகமாக நடந்து செல்லலாம். அதற்காக Treadmill  தேவையே இல்லை. என்று நான் சொல்லவரவில்லை. நமது நடையின் வேகத்தை. Treadmill  பயிற்ச்சி  அதிகரிக்கும் இது நான் அனுபவபூர்வமாக உணர்ந்த உண்மை. முடிந்த அளவு நாம். வாகனத்தை பயன்படுத்துவதை குறைத்து காலை பயன்படுத்துவதை அதிகரித்தால். நமது உடல் நலன் மேம்படும். நரம்புகள் வலிமை  இழக்க. நமது மன நிலையும் ஒரு காரணம்.

 அதனால். வாரத்தில் ஒரு நாள் உங்களுக்கு பிடித்த இடத்திற்க்கு தனியாக சென்று. தனிமையிலே இனிமை காணலாம். இல்லை. பிடித்த நபர்களோடு. பிடித்த இடம் சென்றும் நீங்கள் இனிமை காணலாம்.  நகைச்சுவை, இசை. இந்த இரண்டும். ஒருவர் வாழ்வில் இல்லையென்றால். அந்த வாழ்வு நரகம்.  வாழ்க்கை என்னும் ரயில். அந்த இரண்டு தண்டவாளங்களின் மீது தான். பல கவலைகளை மறந்து, தடைகளை வென்று பயணம் செய்து கொண்டிருக்கிறது. இன்று. நகைச்சுவைக்கு என்றே. இரண்டு தொலைகாட்சிகள் தமிழில் உள்ளது. இசைக்கு என்று.  ஒரு 7,8 தொலைகாட்சிகள் இருக்கிறது. அதை தவிர. நாம் எந்த குறிப்பிட்ட பாடல், நகைச்சுவை காட்சியை பார்க்க விரும்புகிறோமோ. அதை யூ  ட்யூப்பில்  பார்க்கலாம். உங்கள் மனம். எப்பொழுது எல்லாம். கவலையில் இருக்கிறதோ. அப்பொழுது. உங்கள் மனதிற்க்கு. இசை, நகைச்சுவை என்னும் இரண்டு மருந்துகளை மறக்காமல் கொடுங்கள்.

  நரம்பு தளர்ச்சியை சரி செய்யும் உணவுகள்.


  சௌ சௌ, ஜூஸ்க்கு உபயோகபடுத்தபடும் கேரட், பீட் ரூட், ஜாதிக்காய், வாழை பூ, வாழை தண்டு,   பழங்களில்.  மாதுளை, மாம்பழம், பப்பாளி.


  மாதுளம் பழத்தின்  பூவை 300 கிராம் எடுத்து. அதை கையாலோ, மிக்சி மூலமாகவோ. சாறாக்கி. அதோடு 200 கிராம். நெய் கலந்து. அதை. தினமும் ஒரு ஸ்பூன்  சாப்பிட வேண்டும். இவ்வாறு ஒரு 48 நாட்கள் சாபிட்டு வந்தால், நரம்பு நன்கு வலுபெறும். 48 நாட்களுக்கு மேலும் சாப்பிடலாம். தப்பில்லை.

   நாளை. வாத நோய்களுக்கு உண்டான மருந்தை பாப்போம்.

Monday 27 April 2015

நரம்பு தளர்ச்சி வர காரணம் மன தளர்ச்சியே. நரம்பு தளர்ச்சி தீர ஓஷோ சொன்ன வைத்தியம்.


இன்று நரம்பு  தளர்ச்சிக்கான  தீர்வை பார்க்க போகிறோம். முதலில் நரம்பு  தளர்ச்சி வருவதற்கான காரணங்கள்.

பல மணிநேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்கள்.  சரியான உடற் பயிர்ச்சி  செய்யாமல் இருந்தால். நரம்பு   தளர்ச்சி வரும். முக்கியமாக. . நாம் மனதில் சேர்த்து வெய்க்கும் கவலைகள். நம்முடைய நாடி, நரம்பு , சதை, எலும்பு, ரத்தம், புத்தி அனைத்தையும் பாதிக்கும்.

 எனது பள்ளி நண்பன் ஒருவன். நல்ல வசதியான குடும்பம். ஆனாலும். அவன் தன்னை விட உயர்ந்த இடத்தில இருப்பவர்களோடு. தன்னை ஒப்பிட்டு கொண்டே இருப்பான். அதனாலேயே. அவன் ஒருநாளும் நிம்மதியாக இருந்தது இல்லை. அவனை மாற்ற. இரண்டு, மூன்று  முறை  முயற்ச்சி  செய்து.  ம்ஹ்ம். இது தேறாது என்று தண்ணீ தெளித்து விட்டு விட்டேன். ஒருநாள் நானும் எனது நண்பர்களும் மாயாஜாலில் ஜாலியாக படம் பார்த்து விட்டு மகாபலிபுரம் வந்தோம். அங்கும் அவன் புலம்பலை ஆரம்பித்து விட்டான். என்னுடைய நண்பர்கள். ஏண்டாப்பா. இவனை நம்ப செட்ல சேர்த்து கொண்டோம் என்பதை போல். ஒருவருக்கொருவர் பார்வையாலேயே பேசி கொண்டனர்.

நான் உடனே. கார்த்திக்கை யாருன்னு நினைத்தீர்கள். [ [பெயர் மாற்றப்பட்டுள்ளது ]  சராசரி மனிசனால இந்த அளவு கவலைப்படவே முடியாது. நாடி, நரம்பு,  சதை, எலும்பு, ரத்தம், புத்தி. எல்லாத்துலையும். பண வெறி ஊறி போன ஒருத்தனால தான் இப்டி கவலைப்பட முடியும். என்று சொன்னவுடன்.  என் உடன் இருந்த 12 நண்பர்களும் கோரசாக சிரித்தார்கள். என் நண்பர்களில் ஒருவன். கார்த்திக்.  எனக்கு இப்பவே தெரிஞ்சி ஆகணும். உண்மையை சொல்லு. நீ நாலு வருசத்துக்கு மின்னாடி பாம்பேல என்ன பண்ணிண்டு இருந்த. என்று கேட்டான். ம். பாணி பூரி வித்துண்டு இருந்தான் என்று இன்னொருவன் சொன்னான். டேய். இப்ப தான். எந்திரன்  பார்த்துட்டு வரோம். இங்க என்னடா. நீங்க எல்லாரும் சேர்ந்து பாட்ஷா பார்ட் 2 எடுத்துண்டு இருக்கீங்க .

  இந்த சம்பவதிர்ற்கு பின் அவன். பிறர் முன்.  புலம்புவதை நிறுத்தி விட்டான். கொஞ்சமா? அவனை நாங்க ஒட்டினோம்.

 தனக்கு மேல் உள்ளவர்களை பார்த்து பொறாமை கொள்வது. தனக்கு கீழ் உள்ளவர்களை பார்த்து மகிழ்ச்சி கொள்வது. இரண்டுமே தவறு தான். இதை பற்றி ஓஷோ கூறுவதை கேளுங்கள்.

ஒப்பிடுதல்:

மக்கள் எப்போதும் தம்மைப் பிறருடன் ஒப்பிடுவது வழக்கம். இந்த ஒப்பீடுகளால்தான் அவர்கள் மகழ்ச்சியாகவோ, துக்கமாகவோ இருக்கிறார்கள். புகழ் பெற்ற  மகான் ஒருவரை நான் சந்தித்தேன். எனக்கும் அவருக்கும் இடையில் என்ன வேறுபாடு என்பதை அவர் சொன்னார். "துக்கப்படுகிறவர்களைப் பார்ப்பதில்தான் மகிழ்ச்சியின் மர்மமே இருக்கிறது. ஊனமானவனைப் பார்க்கும்போது, நீ ஊனமில்லாமல் இருப்பதற்காக மகிழ்வு தோன்றும். கண்ணற்றவனைப் பார்க்கும்போது, நீ அப்படி இல்லை என்பதில் மகிழ்ச்சி பிறக்கும். ஏழையைப் பார்த்தால் நாம் ஏழை இல்லை என்பதில் ஆனந்தம் தோன்றும்", என்றார் அவர்.

 மேலே உளறாமல் இருக்க, நான் அவரைக் குறுக்கிட்டுத் தடுக்க வேண்டி வந்தது.


"உங்களுக்கு ஒரு சிறிய விஷயம் புரியவில்லை. ஒப்பிட ஆரம்பித்தால் அதற்க்கு முடிவே இல்லை. பரிதாபத்திற்குரியவர்களோடு மட்டுமே ஒருவன் தன்னை ஒப்பிட்டுக் கொள்ள மாட்டான். தன்னை விட வலிமை படைத்தவனோடும், மதிப்பு மரியாதை கொண்டவனோடும் ஒப்பிட ஆரம்பிப்பான். அதனால், துக்கமே உண்டாகும். நீங்கள் ஆனந்த இரகசியத்தைச் சொல்லவில்லை. துக்கத்தின் இரகசியத்தையே சொல்கிறீர்கள்!" என்றேன்.


ஆனால், இப்படித்தான் காலம் காலமாக நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள், வெவ்வேறு வார்த்தைகளில். ஆனால், அடிப்படை என்னவோ ஒன்றுதான். பல மத நுல்களும்  இதைத்தான் சொல்கின்றன. மக்கள் துக்கப்படுகிறவர்களைப் பார்த்து நிறைவடைகிறார்கள். தாம் அப்படித் துன்பப் படவில்லையே என்று கடவுளுக்கு நன்றி சொல்கிறார்கள். இது ஒரு பக்கச் சார்புடையதாகத் தொடர்ந்து இருந்து வரக் கூடாது. பிறரோடு உங்களை ஒப்பிட ஆரம்பிக்கும்போது உங்களை விடத் தாழ்ந்தவர்களோடு மட்டுமல்லாமல்,உயர்ந்தவர்களோடும் ஒப்பிடவே தோன்றும். மிஞ்சுவது நீங்காத கவலைதான்.  ஒப்பிடுதலே சரியில்லை. நீங்கள் நீங்களேதான். வேறு யாரும் அல்ல. ஒப்பற்றவர் நீங்கள். மற்றவரும் அப்படியே. அதனால்தான், ஒப்பிடாதீர்கள்.ஒப்பிடுவது உலகத்தோடு உங்களை விலங்கு மாட்டி விடுவது. அது போட்டி பொறாமைகளை ஏற்படுத்திவிடுகிறது. அது தனியாக வருவதில்லை. துணையுடனே வருகிறது.ஒப்பிடுவதற்கு முடிவே இல்லை.ஆனால், நீங்கள் முடிந்துவிடுவீர்கள்!அதை ஏற்றுக் கொள்வது, வாழ்வின் தவறான பாதையைத் தேர்ந்தெடுப்பதாகும்.

   ஓஷோ சொன்ன இந்த ஆனந்த ரகசியத்தை நாம் வாழ்வில் பின்பற்ற ஆரம்பித்தால். நமக்கு  நரம்பு  தளர்ச்சியோ, Bp யோ வருமா.

  நமது கவலைக்கு இன்னொரு காரணம். மத்தவங்க  நம்பளை  பத்தி என்ன?நினைபாங்களோ  என்று. நமக்கு பிடித்த. சின்ன, சின்ன விசயங்களை கூட இன்பமயமாக அனுபவிக்காமல். அவற்றை. மனதிற்குள்ளேயே குழி தோண்டி புதைத்து விடுவது. இந்த உலகில் பலர். ஊர் என்ன சொல்லுமோ, உலகம் என்ன சொல்லுமோ என்று பயந்து, பயந்து தனக்கு பிடித்த மாதிரி வாழாமல். அடுத்தவர்களிடம் நல்ல பேர் எடுக்க வேண்டும் என்பதற்காக. போலி தனமாக வாழ்கிறார்கள்.



 இந்த உலகம் ஒரு நாடக மேடை. நாம் அனைவரும் அதில் நடிகர்கள் என்றார் ஷேக்ஸ்பியர். அவர் ஏதோ ஒரு Flow  ல  சொல்லிட்டார். அதை அப்படியே நம்ப பாலோ பண்ணனுமா என்ன.

 கையை வீசி நெஞ்சை நிமிர்த்தி. எந்த அளவு நாம் வேகமாக நடக்கிறோமோ. அந்த அளவு. உடல் ஆரோக்யத்திற்கு நல்லது. ஒருமுறை. எனக்கு தெரிந்த ஒருவர்.  நீ இவ்வளவு வேகமாக நடந்து வருவதை பார்த்தால். யாரோ ஒரு பத்து பேரை அடிக்க வருவதை போல் இருக்கிறது. கொஞ்சும் Casual லா நடையேன். எதற்க்கு இந்த 8,9 கிலோ மீட்டர் வேக நடை. இவ்வாறு நீ நடப்பது நன்றாக இல்லை. நான் அவரிடம் பொறுமையாக. உங்களுக்கு பிடித்த மாதிரி நடந்தால். அதனால் எனக்கு ஏதேனும் பரிசு கிடைக்க போவதில்லை. எந்த மாதிரி நான் நடந்தால் எனக்கு பிடிக்குமோ, அந்த மாதிரி தான். தெருவிலும் சரி. என் வாழ்விலும் சரி. நடப்பேன். எனது வாழ்க்கை. எனக்கு பிடித்த மாதிரி நான் வாழ வேண்டும். ஊர் உலகம் என்ன சொல்கிறது என்பதை பற்றி எனக்கு கவலை இல்லை.

உங்களது உடல் ஆரோக்யத்தை, பிறரது உடலை,  மனத்தை காயபடுத்தாத   எந்த ஒரு விசயமும் தவறே இல்லை.


என்னுடைய நண்பன் ஒருவன். ஒருநாள். நான் அவன் வீட்டிற்க்கு எனது நண்பர்களோடு சென்று இருந்தேன். அன்று ஞாயிற்று கிழமை.  நாங்கள் அவனது ரூமிற்க்கு செல்லும் வரை. அவன் டிவியில் சோட்டா பீம். டோரீமான் என்று இரண்டு கார்ட்டூன்கள் மாறி, மாறி பார்த்து விடுமுறையை மகிழ்வாக கழித்து கொண்டிருந்தான். நாங்கள் அவனோடு பேசி கொண்டிருக்கும் பொழுது. அவனோட அம்மா. அவன் அறைக்குள் வந்தார். ஏழு கழுதை வயது ஆய்டுத்து. இன்னும் இவன் உட்கார்ந்து. ஒன்னாம் கிளாஸ்ல பார்த்துண்டு இருந்த. கார்ட்டூன்களை பார்த்துண்டு இருக்கான். நீங்க யாராவது. இன்னுமும் பொம்மை படம் பார்த்துண்டு இருக்கீங்களா என்று கேட்டார். நானும் நேரம் கிடைக்கும் பொழுது கார்ட்டூன் பாக்கற டம்மி பீசு தான் என்று மைண்ட் வாய்ஸ்ல நினைச்சேன். ஆனால் வாயை திறந்து சொல்லலை. எனது நண்பனோ. பொறுமையாக. நீ தினமும் மெகா சீரியல் பார்த்து அழுவதற்க்கு. நான் . கார்ட்டூன் பார்த்து சிரிப்பது ஒன்றும் தவறு இல்லை என்று. தன்னுடைய அம்மாவிற்க்கு. மென்மையான குரலில், மேன்மையாக பதில் சொல்ல. அவனது தாயார். மேற்கொண்டு எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்து விட்டார்.

கார்டூனில் ஆரம்பித்து. பார்க்கில் ஊஞ்சல் ஆட வெக்கபடுவது வரை. பல பெரியவர்கள். ஊர், உலகத்திற்காக. தனக்குள் உள்ள அணைத்து ஆசைகளையும் குழி தோண்டி புதைக்கிறார்கள். குழந்தை தனத்தை கொல்கிறார்கள்.   நாம் வேலை செய்யும் அலுவலகத்தில். மாணவர்கள் என்றால். பள்ளி, கல்லூரியில். அங்கே உள்ள சட்ட, திட்டங்களுக்கு கட்டுப்பட்டு தான் ஆக வேண்டும். அது தவறில்லை. ஆனால். உங்களுக்கு கிடைக்கும் ப்ரீ டைம்மில். உங்களுக்கு பிடித்த மாதிரி நீங்கள் வாழ்வதில் என்ன? தயக்கம். சில நடிகர்கள் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்றால். காதல் காட்சிகள் உட்பட. அணைத்து காட்சிகளிலும்  விறைப்பாகவே இருப்பார்கள்.அதே போல் தான் சிலர். மனதை எப்போதும் விறைப்பாக, விழிகளை முறைப்பாக வெய்த்து உள்ளனர்.

 நீ யாருக்காகவும் உன்னை மாற்றி கொள்ள நினைக்காதே. அவ்வாறு மாற்றி கொள்ள நினைத்தால். ஒவ்வொருவருக்காகவும். உன்னை நீ மாற்றி கொள்ள வேண்டியதாக இருக்கும்.



   கண்ணதாசன்.

எதையும்  டேக் இட் ஈசியாக எடுத்து கொள்ள பழகுங்கள். நாம் கவலைபடுவதால் நமது பிரச்சனைகள்  தீரும் என்றால் கவலைபடலாம். கவலைபடுவதால் நமது பிரச்சனைகள் தீர போவதில்லை. பின்னர் ஏன்? கவலைப்பட வேண்டும். குழப்பம், கவலை, கோபம் இந்த மூன்றும்  இல்லாத நேரங்களில் தான். நமது மனம் தெளிவாக இருக்கும். தெளிவாக இருக்கும் மனம் தான் சரியான முடிவை எடுக்கும். அதனால். முதலில் கவலையை தூர எறியுங்கள்.


 இதன் தொடர்ச்சியை நாம் நாளை பாப்போம்.










 








Sunday 26 April 2015

கல்லீரல் [Liver] பாதிப்பு தீர இயற்க்கை மருத்துவம். அரசாங்க மருத்துவமனையின் சாதனை




 கல்லீரல் நோய் தீர இயற்க்கை மருத்துவம் பாப்போம். அதர்க்கு  முன். கல்லீரல் சுத்தமாக செயல் இழந்த. உயிர் போகும் நிலையில் இருந்த ஒரு கல்லுரி மாணவரை. ஸ்டான்லி அரசு  மருத்துவர்கள். அறுவை சிகிச்சை இல்லாமல் பிழைக்க வெய்த்து சென்ற வருடம் மார்ச் மாதம் மருத்துவ உலகில் பெரிய சாதனை படைத்து  உள்ளனர்.

  அதை  பற்றி முதலில் பாப்போம்.

  மோகன பிரசன்னா பொறியியல் கல்லூரி  மாணவர். அவருக்கு மிக இளம் வயதிலேயே. கல்லீரலில் பெரிய பிரச்சனை  வந்தது. முதலில் அவரை ஒரு பெரிய தனியார் ஹாச்பித்தரியில் சேர்த்தனர். அந்த மருத்துவமனை.  அறுவை சிகிச்சை மூலமே. இவர் பிரச்சனையை சரி செய்ய முடியும் என்றும். அதற்க்கு. அதிக பக்ஷம் வெறும் 70 லக்சம் மட்டுமே ஆகும் என்று கூறினர். ரொம்ப கம்மி இல்ல. நடுத்தர குடும்பத்து பெற்றோர்கள் என்ன? செய்வார்கள். பிரசன்னாவை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

  அங்கே உள்ள மருத்துவர்களான  சுந்தர மூர்த்தி அய்யா, வெங்கடேஸ்வரன் அய்யா ஆகியோர். அந்த மாணவரை பரி சோதித்து  விட்டு. இவரை குனப்படுத்த அறுவை சிகிச்சையே தேவையில்லை என்று கூறினர். அதற்க்கு  பதிலாக என்ன? சிகிச்சை செய்தார்கள் தெரியுமா.

 ரத்தம்  உறைய. அதிக பக்ஷம் 13 வினாடிகள் ஆகும். பிரசன்னாவிற்கு லிவர். மிகவும் மோசமான அளவு பாதிக்கபட்டு இருப்பதால். ரத்தம்  உறைய 114 வினாடிகள் ஆனது.  ரத்தம்  உறைவதர்க்கு  தேவைப்படும் மூலபொருட்கள்  பிரசன்னாவின் உடலில் செலுத்தப்பட்டது. அதன்மூலம். அவரின் லிவர் பிரச்னையும் சரி செய்யப்பட்டது. தமிழகத்தில் முதன்  முதலில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனை. மலர் மருத்துவமனையோ,  விஜயா மருத்துவமனையோ, அப்போலோவோ அல்ல. அரசாங்க மருத்துவமனை. அதை செய்தது 2009இல். 2014லிலோ. அறுவை சிகிச்சை இன்றியே. நவீன யுக்தியை பயன்படுத்தி.  உயிர் போகும் நிலையில் இருந்த ஒரு மனித உயிரை காத்து உள்ளனர்.

 பெரிய மருத்துவமனை என்றால். அதன்  தகுதி என்ன?.  எந்த மருத்துவமனை அதிகம் காசு வாங்குகிறதோ. அது பெரிய மருத்துவமனை. பெரிய ஸ்கூல் என்றால்  அதன் தகுதி. நிறைய பீஸ் வாங்கினால் அது பெரிய ஸ்கூல். மாநில அளவில், தேசிய அளவில் சாதனை படைக்கும் மாணவ, மாணவிகளை அத்தகைய பெரிய ச்கூல்கள் உருவாக்குவதில்லை. ஒவ்வொரு வருடமும் 10, 12ம்  வகுப்பில். மாநில அளவில்.   முதல் இடத்தில் வரும் மாணவ மாணவிகளில்  எவ்வளவு? பேர் அத்தகைய பெரிய ச்கூல்களில் படிக்கிறார்கள். அடிக்கடி  நியூஸ் பேப்பர் படிப்பவர்களுக்கு இது புரியும். வரும் மே  மாதம் மறக்காமல் பார்த்து சொல்லுங்கள்.

  ஒரு கடைநிலைஅரசாங்கஊழியர் 100 ரூபாய் லஞ்சம் வாங்கினால் கூட கைது செய்யும் சட்டம். சில  தனியார் பள்ளிகள். LKG  அட்மிசன்க்கே  வாய் கூசாம. 2 லக்சம் donation  என்னும் பெயரில் வாங்குகிறார்களே. அவர்களை ஏன்? நமது சட்டம் கைது செய்வதில்லை. நியாயமா. அவ்ளோ பணம் வாங்கும் பள்ளி நிர்வாகிகள், கொடுக்கும் பெற்றோர்கள் ரெண்டு போரையும் தூக்கி உள்ள போடணும். எனது குடும்ப நண்பர் ஒருவர். அத்தகைய பள்ளியில் தனது மகனை சேர்த்து அதனால் படாத  பாடு பட்டார். அவரது மகன். அளவுக்கு மீறிய. அந்த பள்ளியின் கண்டிப்பால். அதிக மன அழுத்தத்திற்கு  உள்ளானான். அத்தகைய பள்ளிகளில் என்ன, என்ன மாதிரியெல்லாம். மாணவர்களை மட்டும் இல்லாமல். பெற்றோர்களையும் சேர்த்து கொடுமைபடுத்துவார்கள் என்பதற்க்கு  எனது குடும்ப நண்பர் பல விசயங்களை சொன்னார். அதில் ஒன்று. அத்தகைய பள்ளிகளின் வாட்ச் மேன். நாயை விரட்டுவதை போல். பெற்றோர்களை விரட்டுவான். நீங்க பாடம் எடுக்கற லக்சனதுக்கு லக்ச கணக்குல பணத்தை தூக்கி  கொடுக்கும் இளிச்ச வாய்களுக்கு நியாயமா கோவில் கட்டி கும்பிடனும்டா. கொக்கா மக்காஸ்.

  டாப்பிக் வேற எங்கயோ பெய்டுத்து. சரி.. இப்போ மீண்டும் கல்லீரல் சமாச்சரதிர்க்கே வருவோம்.



கரிசலாங்கண்ணி கீரை. கல்லீரல் பிரச்சனைக்கு மிக சிறந்த நிவாரணி . கல்லீரல் பிரச்சனை  உள்ளவர்கள் தினமுமே இதை உண்ணலாம்.

 இதை தவிர்த்து நன்னாரி கிழங்கும்  கல்லீரல் பிரச்சனைக்கு நல்லது. நன்னாரியை அப்டியே பழமாக, சர்பத்தாக , ஊருகாயாக. உணவில் எவ்ளவு சேர்த்து கொள்ள முடியுமோ சேர்த்து கொள்ளுங்கள்.

 மற்றும் ஆப்பிள், வால்நட்ஸ், எலுமிச்சை, மஞ்சள்,  பூண்டு போன்ற பல உணவுகள் லிவரை சுத்தபடுத்தும். அனால். முழுமையாக லிவரை க்யூர் செய்வது. கரிசலாங்கண்ணி கீரை தான். அதை போல் வேறு எதுவும் இல்லை. இதை ஆங்கில மருத்துவம் உட்பட அணைத்து மருத்துவ முறையும் ஒப்பு கொண்ட விஷயம். அதற்க்கு  அடுத்த இடத்தில இருப்பது  நன்னாரி பழம்.

  நாளை. நிரம்பு தளர்ச்சிக்கான தீர்வை பாப்போம்.









Friday 24 April 2015

மண்ணீரல்[Spleen] னில் ஏற்படும் பாதிப்புகளுக்கு. நிரந்தர தீர்வு.



மனித உடலினுள்ளே பல உள் உறுப்புகள்  உண்டு. அவற்றில் மண்ணீரலுக்கே அதிக பொறுப்புகள் உண்டு. மன்னீரல்  நமது உடலில் காத்தல், படைத்தல், அழித்தல்  என்னும் முத்தொழிலையும் செய்கிறது.

 மூளையின்  செயல்பாடுகளை  சீராக்கி. புதிய எண்ணங்களை படைக்கிறது. ரத்தம் வழியாக பரவும் நோய்களுக்கு எதிராக. தடுப்பு சுவர் போல் இருந்து  காத்தல்  தொழிலை செய்கிறது. ரத்தத்தில் உள்ள நுண் கிருமிகளை அழிக்கிறது.  இத்தகைய மண்ணீரல் பாதிக்கப்பட்டால். நமது உடல் ஆரோக்கியம் என்ன? ஆகும்.

கால்,  வயிறு வலியில்  ஆரம்பித்து. ரத்த அழுத்தம், மஞ்சள் காமாலை வரை. பல நோய்கள் வரும்.  மண்ணீரல் பாதிக்கபட்டவர்கள். உற்சாகம் இன்றி. சோகமாக கானபடுவார்கள்.

  ஒரு ஆன்.  அவருக்கு. இடுப்பில் பெண்களை போல் அதிக சதை இருந்தால் அதற்க்கு  உடல் கொழுப்பு மட்டும் காரணமாக இருக்காது. மண்ணீரல் பாதிப்பும் ஒரு காரணம்.

பல காரணங்கள் மண்ணீரல் பாதிக்க இருந்தாலும். மனமே முதல் காரணம்.  அதை தவிர்த்து. மது, புகை போன்ற தீய பழக்க வழக்கங்கள். ரத்தத்தில் பித்த நீர் அதிகரிப்பு  போன்ற காரணங்களாலும் மண்ணீரல் பாதிக்கப்படும். இதற்க்கு  தீர்வு.

 சென்ற 16 அன்று. மற்ற எந்த உணவுகளிலும் இல்லாத பல சிறப்புக்கள். கேழ்வரகில் என்ன, என்னவெல்லாம் இருக்கிறது என்பதை பற்றி பார்த்தோம் அல்லவா. மண்ணீரல் பாதிப்பு உள்ளவர்களுக்கு. கேழ்வரகு உணவு சிறந்த மருந்து. காரணம். காரணம். Methionine Acid   ரத்த  சிகபனுக்களின் உற்பத்தி, பித்த நீர் சுத்தி. இரண்டையும் செய்கிறது.  கேழ்வரகில் உள்ள அளவு Methionine  உலகில் வேறு எந்த தானியத்திலும் இல்லை. நமது உடலில் காத்தல், படைத்தல், அழித்தல்  என்னும் முத்தொழிலையும் செய்யும் மன்னீரலை. Methionine  காக்கும். அதை அதிகம் தருவது கேழ்வரகு. அதை தவிர்த்து.

 பழங்களில்- ஸ்ட்ராபரி, பப்பாளி, மாதுளை, பிளம்ஸ், அன்னாசி, ஆரஞ்ச், திராட்சை.

காய்களில்-  முளைத்த  பயிறு, புதினா, பூண்டு, வெள்ளரி, சின்ன வெங்காயம், முளை விட்ட பயிர்,  பீட்ரூட், கேரட், கீரை வகைகள். மற்றும் தேங்காய்.

 பழங்களில்  பப்பாளி, கொய்யா இரண்டும். மண்ணீரல் பிரச்சனைக்கு மிக விரைவான தீர்வு தரும்  என்பதால். மண்ணீரல் பிரச்சனை  உள்ளவர்கள். இந்த இரண்டு  பழங்களையுமே. தினமும் சேர்த்து கொள்ளுங்கள்.

  நாளை கல்லீரல் பிரச்சனைக்கு  உரிய தீர்வை பாப்போம்.


Endometriosis. உலகில் ஆறில் ஒரு பெண்ணிற்கு வரும் நோய். இதை தடுக்க தீர்க்க வழிகள்.




 Endometriosis. இதற்க்கு  எவ்வளவு பேருக்கு அர்த்தம் தெரியும். இதை தமிழில். இடமகல் கருப்பை அகப்படலம் என்று சொல்வார்கள். கருப்பை என்னும் வார்த்தை மட்டும் புரியர்து. மத்தது புரியலை என்று சொல்கிறிர்களா. இந்த பெயர் வேண்டுமானால் உங்களில் பலருக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால். உலகில் ஆறு பெண்களில் ஒருவருக்கு இந்த பிரச்சனை  இருக்கிறது.  நீங்களும் அந்த ஆறில் ஒருவராக இருந்தால்? Endometriosis  பிரச்சனைக்கான அறிகுறிகள், தீர்வுகளை பாப்போம்.

 Endometriosis என்றால் என்ன? அதன்  அறிகுறிகள்.

  பெண்மணிகளுக்கு கருப்பையின் வெளியே இருக்கும் ஒரு Tissue  தான் Endometriosis. அது சற்று அப் நார்மல்லாக அதிகம் ஆகுதல், குறைதல். கருப்பையின் வெளியே உள்ள அது. உள்ளே வருதல் போன்றவைகள் நிகழ்ந்தால். அதன் அறிகுறியாக முதலில் உயிர் போகும் அளவு  இடுப்பு வலி வரும். பின்னர் வயிற்று  வலி.

 யூட்ரச்  பிரச்சனை  என்று முதலிலேயே சொல்லியிருக்கலாமே. எதற்க்கு  சுத்தி வளைச்சி. Endometriosis, இடமகல்னுலாம் சொல்லி குழப்பனும் என்று நீங்கள் நினைக்கலாம். Endometriosis  என்பது. யூட்ரச்சில் உள்ள.  Fallopian Tube, Cervix, Vaginia, Ovary போல். Endometriosis சும்  ஒரு பகுதி. அவ்வளவே.






ஆனால்?  யூட்ரஸ்சில் ஏற்ப்படும் பிரச்சனைகளுக்கு இந்த Endometriosis  தான் முக்கிய மூல  காரணம். இந்த பிரச்சனை  உள்ள ஒரு   பெண். மருத்துவரிடம் சென்று சோதனை   செய்தால். அவர். உங்களுக்கு யூட்ரஸ்சில் பிரச்சனை  என்று தான் சொல்லுவாரே ஒழிய. Endometriosis  என்று சொல்ல மாட்டார். காரணம். அவ்வாறு மருத்துவர்.   Endometriosis என்று சொன்னால். அதை கேட்கும் பெண். நமக்கு ஏதோ? புது வித நோய் வந்து இருக்கிறதோ என்று குழம்புவார். Endometriosis னா  என்னனு. டாக்டர்ரிடம். சம்பந்தபட்ட பெண் கேள்வி கேட்பார். அவர் விளாவரியாக. அந்த பெண்ணிற்க்கு  புரியும்படி விளக்க வேண்டியதாக இருக்கும். அதனால். வெறும்ன  உங்களுக்கு யூட்ரச்  பிரச்சனை  என்று மருத்துவர்   சொல்லி விடுவார்.

  உங்களுக்கு அடிக்கடி. முதலில் இடுப்பு வலி வந்து. அடுத்து வயிறு  வலி  வந்தால். உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள். அவ்வாறு செய்து. உங்களுக்கு வெறும் சாதாரண வலி தான் என்று மருத்துவர் சொன்னால் சந்தோசம். அவ்வாறு இல்லாமல். உங்களுக்கு யூட்ரச்  பிரச்சனை  என்று மருத்துவர் சொன்னால். Endometrirosis மூலம்  வரும் பிரச்சனையா என்று மருத்துவரிடம் கேளுங்கள். அவர் சில நொடிகள் உங்களை ஆச்சர்யமாக பார்ப்பார்.

  இதை முற்ற விட்டால்.  மிக ஆபத்து. காரணம். முற்ற விட்டால். புற்று நோய் வரும்.

   So. Prevention Is Better Than  Cure. வரும் முன்னே காப்பது சிறந்து.


 எனக்கு தெரிந்து. இந்த பிரச்சனை ஆங்கில மருத்துவத்தின் மூலம்   முழுமையாக தீர்க்க முடியாது.

 இதற்க்கு  என்றே உள்ள சில பெயின்  கில்லர் மாத்திரைகள் வலியை  கட்டுபடுத்தும். அனால் Endometriosis  பிரச்சனைக்கு ஒரு எண்டு. அதன்மூலம்  கிடைக்காது. இதர்க்கு ஆங்கில மருத்துவம் தரும் ஒரே ஒரு தீர்வு. யூட்ரஸ்  உறுப்பையே  அறுவை சிகிச்சை செய்து வெட்டி விடுவது தான்.

  எனக்கு தெரிந்த ஒரு  அம்மையார். மிகவும் முத்திய  நிலையில் மருத்துவரிடம் பரிசோதனை செய்தார். அந்த அம்மாவிற்க்கு  Endometriosis  இருப்பது  உறுதி செய்யப்பட்டது. நல்லவேளை. அவருக்கு cancer  இல்லை. ஆனால். அந்த அம்மாவின் உயிரை காப்பாற்ற. கருப்பை. அறுவை சிகிச்சையின் மூலம்  வெட்டி அகற்றப்பட்டது.  அதன் மூலம். 35 வயதிலேயே 75 வயது போல் அவரின் உடல் பலவீனம் அடைந்தது.

  இந்த Endometriosis நோய்க்கான இயற்க்கை நிவாரணங்களை பாப்போம்.

   Folic  Acid அதிகம் உள்ள உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். பச்சை காய் கறிகளில் இந்த போலிக் ஆசிட் இருக்கும். குறிப்பாக கீரையில் அதிக அளவில்.


விட்டமின்  C, D அதிகம் உள்ள உணவுகளை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும்.

 தேனில் ஊற  வெய்த்த. நெல்லிக்கனி ஒன்று, இரண்டு காலையில்  வெறும் வயிற்றில் சாப்பிடுவது. இதற்க்கு மிக சிறந்த மருத்துவம் ஆகும். தேனில் இன்று நிறைய கலப்பட வகைகள் இருப்பது  வேதனையான விஷயம். காதி என்றால் நம்பி வாங்கலாம். அணைத்து காதி கிளைகளிலும்   தேனில் ஊர வெய்த்த நெல்லிக்கனியை கண்ணாடி குடுவைகளில் போட்டு விற்ப்பார்கள்.

 முள்ளங்கியை வேக வெய்த்து அதன்  நீரை தினமும் அருந்தி வந்தால். Endometriosis சில் உள்ள அணைத்து குறைபாடுகளையும் இது சரி செய்து விடும். கருப்பை பிரச்சனைக்கு. நமது நாட்டு சித்தர்கள் பரிந்துரைத்த மிக சிறந்த தீர்வு. சீனாவில் பெண்கள். [அந்த அரசின் லூசு தனமான சட்டங்களால் இன்று பெண்களே அந்த நாட்டில் ஒரு அறிய வகை உயிரினம்] ஆனால் காலம் காலமாக. அங்கு பெண்மணிகள் Endometriosis  மூலம்  வரும் பிரச்சனைகளுக்கு முள்ளங்கி மூலம்  தீர்வை கண்டனர். சீனர்களின் பிரதான உணவுகளில் முள்ளங்கியும் ஒன்று.

 Endometriosis  பிரச்சனை  வந்தால் தான். தேனில் ஊர வெய்த்த நெல்லிகாயும், முள்ளங்கியும் உன்ன வேண்டும் என்று இல்லை. பல மருத்துவ, மகத்துவ குணங்கள். தேன், நெல்லிக்காய், முள்ளங்கியில் அடங்கியுள்ளது. இதை தினமும் உண்டால்.  Endometriosis  பிரச்சனை வரவே வராது.  தினமும் இவற்றை உண்ணுங்கள் ஆரோக்யமாக வாழுங்கள்.  Endometriosis  பிரச்சனையை. ரொம்ப முத்த விட்டால். கருப்பையை அறுப்பதை  தவிர வேறு வழி  இல்லை.

 நாளை. உங்கள் அனைவர் வீட்டிலும் என்ன? சமையல். முள்ளங்கி சாம்பாரா.

  நாளை மண்ணீரல் பிரச்சனைக்கு உரிய தீர்வை பாப்போம்.





Thursday 23 April 2015

வயிறு வலி நிரந்தரமாக தீர அற்ப்புதமான வழிகள்.


குழந்தைகளுக்கு மட்டும் தான்  வயிற்றில் அடிக்கடி  பூச்சி  சேரும் என்று இல்லை. இது பல பெரியவர்களுக்கும் இருக்கும் பிரச்சனை. எத்தனை  பெரியவர்கள். நமது கண் முன்னே தினம், தினம் வயிற்று  வலியால்  அவதிப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.  பொதுவாக. நாம் அனைவருக்குமே. என்றாவது ஒருநாள். தலை வலி, வயிற்று  வலி இரண்டுமே வந்து இருக்கும். சிலருக்கு. தலை வலி, வயிற்று  வலி. நிரந்தரமாக இருக்கும். தலை வலிக்கான தீர்வை. சென்ற 11 அன்று செய்த பதிவில் பார்த்தோம். இன்று வயிற்று  வலிக்கான தீர்வை பாப்போம்.

 வயிற்று  வலி வர.  18இற்கும் மேற்பட்ட காரணங்கள்.  அதில் ஒன்றான  Food Alergy.  இது அடிக்கடி  நாம் அனைவர்க்கும் நடக்கும் ஒன்று.  நிரந்தரமாக சிலருக்கு  வயிற்று   வலி வர நான்கு   வைரஸ் கிருமிகள்  மிக முக்கியமான காரணம். அவை.


1]  RotaVirus
3] NoroVirus
4] AdenoVirus
5] AstroVirus.

ஆகிய நான்கு  வைரஸ் கிருமிகள்.நிரந்தர வயிற்று வலிக்கு  நிரந்தரமான காரணங்கள். மற்றும் வாயு தொல்லை, சிறு நீரகத்தில் ஏற்ப்படும் பிரச்சனை. இதை  தவிர்த்து.  Endometriosis  எனப்படும் நோயால் ஏற்ப்படும் வயிறு  வலி. பெண்களுக்கு மட்டுமே வரும். அது ஏன்? எதனால்? நாளை பாப்போம். இன்று. நிரந்தர வயிற்று  வலிக்கான நிரந்தர தீர்வை பாப்போம்.

அறுசுவைகளில் கசப்பும் ஒன்று. நாம் வாரத்தில் ஒரு நாளாவது  வேப்பம்பூ ரசம், பாகற்காய் சேர்த்து கொள்ள வேண்டும். நிறைய வெல்லம்  சேர்த்து பக்குவமாக வறுத்தால். பாகற்காய் கசக்காது. வேப்பம்பூ ரசம். அது சாப்பிடும் படி சுவையாக தான்  இருக்கும். ஒருமுறை சாப்பிட்டு தான்  பாருங்களேன். வயிற்று  வலியை  ஏற்படுத்தும்  ஐந்து கிருமிகளுக்கும்  வேப்பிலை எமன். சென்ற 17 அன்று. புற்று நோய்க்கான தீர்வாக. தொடர்ந்து 48 நாட்கள் செம்பு பாத்திரத்தில் துளசியை எட்டு மணி நேரம் ஊர போட்டு. வெறும் வயிற்றில் குடித்து வந்தால் புற்று நோய் பூரணமாக குணம் ஆகும். மேலும். 448 வித நோய்கள்  குணம் ஆகும் என்பதை  பார்த்தோம் அல்லவா. அந்த 448இல் வயிறு சம்பந்தபட்ட அணைத்து கோளாறுகளும் அடங்கும்.

 எலுமிச்சை சாறு. துளசி சாறு இரண்டையும் ஒன்றாக கலந்து. தினமும்  குடிப்பது. வயிற்றில் உள்ள அசுத்தங்களை சுத்தபடுத்தும். அது மட்டும் இல்லாமல். உடலில் ஜீரன சக்தியை அதிகரிக்கும். வாயு தொல்லை, அதனால் வரும் வயிறு வலி தொல்லை. இதனால் நீங்கும்,. மேலும். இது உடலில்  உள்ள நோய் எதிர்ப்பு சக்த்தியை அதிகரிக்கும்.  நமது உடலை சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தும். அகத்திகீரை, மனத்தக்காளி  கீரை. இரண்டும்.  வயிறு வலிக்கு  சிறந்த உணவு. இவை  சற்று கசப்பாக தான்  இருக்கும். இதோடு. தேங்காய், வெல்லம்  இரண்டையும் சேர்த்து சமைப்பது. இதன் மருத்துவ குணம், சுவை இரண்டையும் கூட்டும். வெந்தயம், ஜீரகம், பெருங்காயம் மூன்றையும்  மோரில் கலந்து குடித்து வருதல். infection  னால்  வயிறுக்கு ஏற்ப்படும் பாதிப்புகளுக்கு சிறந்தது.

  மிக முக்கியமாக. வேப்பிலை, பாகற்காய்.இரண்டும்.  வயிறு வலி, வயிற்று  புழுக்கள், வயிறு அசுத்தம் அடைவதால் வரும் நோய்கள், வயிறு வலிக்கு காரணமாக இருக்கும் நான்கு  வைரஸ்கள். முதலியவற்றிற்கு எமன்கள்.  தாமிர பாத்திர துளசி நீரோ. அணைத்து வியாதிகளுக்குமே எமன்.

 நாளை. Endometriosis  நோய்க்கு உரிய தீர்வை பாப்போம்.








Wednesday 22 April 2015

நெஞ்சு எரிச்சலுக்கு தீர்வு. விஷத்தை விலை கொடுத்து வாங்கும் மடையர்கள்.



அஜீரண கோளாறுக்கும் அசிடிட்டிக்கும். [ நெஞ்சு எரிச்சலுக்கும்] சற்று தொடர்பு இருக்கிறது.  ஆனால்.  நாம் சாப்பிடும் உணவு  ஜீரணம் ஆகாமல் போனால். அசிடிட்டி வராது.   அசிடிட்டிக்கு அஜீரணம் காரணம் இல்லை .  ஆனால். அஜீரண கோளாறுக்கு அசிடிட்டி  கரணம்.

  மனித உடல். Physics, chemistry இரண்டின் கலவை. நமது மனித உடலே ஒரு எந்திரம் தான்.  செரிமானம். மற்ற செயல்பாடுகளுக்கு என்று மனித உடலில். பல அமிலங்கள், எந்திரங்கள் இருக்கிறது.  நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்க. வயிற்றில் Gastric  Acid  சுரக்கிறது.





இந்த ஆசிட். உணவுக் குழாய் வயிற்றுடன் சேரும் இடத்திலுள்ள வட்ட வடிவ தசைகளில் உள்ளது. வயிற்றிலிருந்து ஆசிட் மேலே வர விடாமல். அந்த தசைகள்.  இறுகி தடுக்க வேண்டும். இந்த பிடிப்பு சரியில்லை எனில் ஆசிட் எளிதில் மேலே வந்து விடுகின்றது. இதனையே நெஞ்செரிச்சல் அல்லது `அசிடிட்டி' என்கிறோம். வயிற்றில் இருக்க வேண்டிய ஆசிட். நெஞ்சிற்க்கு  வந்தால். அது  நெஞ்சிர்ற்கு அநீதி அல்லவா.

 சரி. நெஞ்சிர்ற்கு அநீதியை ஏற்படுத்தும். அசிடிட்டிக்கு  உரிய தீர்வை பாப்போம். அதற்க்கு  முன்.  சில வியாதிகள் தானாக நம்மை வந்து தாக்கும். அவை. தொற்று  வியாதிகள். ஆனால்?. அசிடிட்டி போன்ற பல வியாதிகள். நாமே பெரும்பாலும் நமக்கு வர வெய்த்து கொள்கிறோம். அசிடிட்டி எதனால்? வருகிறது.

 அதிக கோபம், அதிக காரம். அதை தவிர்த்து. இன்று பலர் செய்யும் முட்டாள் தனம். நாம் oxygen னை  சுவாசித்து. Carbondai  oxide  டை வெளியே விடுவோம். உலகில் அணைத்து  மனிதர்களும். இதை  தானே செய்கிறோம். நாமே நினைத்தாலும். Carbondai  oxide  டை சுவாசிக்க முடியாது. அத்தகைய carbondai oxide. டை. MNC  கம்ப்பனிகள். கூல் டிரிங் பாட்டில்களில்  அடைத்து விற்கிறார்கள். அந்த விஷத்தை. தினமும் லக்ச கணக்கான முட்டாள்கள் காசு கொடுத்து வாங்கி குடிக்கிறார்கள். இதை  தெரியாமல் செய்யும் படிப்பறிவு இல்லாத பாமர மக்களிடம் கூட. எடுத்து சொன்னால். தவறை திருத்தி கொள்கிறார்கள். ஆனால்? இதை  தெரிந்தே செய்யும் படித்த முட்டாள்கள். வியாதி வந்து நல்லா அவஸ்த்தை  படட்டும்  என்று தான் சொல்ல தோன்றுகிறது.  புகை, மது போன்றவைகளும். அசிடிட்டி ஏற்ப்பட காரணம். சரி.  அசிடிட்டிக்கான தீர்வை பார்ப்போம்.

சிறிதளவு இனிப்பு, உணவுக்கு முன்னால் எடுத்துக் கொள்ளலாம். பேரீச்சை, அத்தி, நாவல்பழம், தேங்காய், மாம்பழம், பப்பாளி, மாதுளை, செல்லெரி இலை, சர்க்கரைவள்ளி கிழங்கு, காரட், பீட்ரூட், சீரகம், தனியா, ஏலக்காய்,  பார்லி, கம்பு, கோதுமை, சோம்பு,
குளிர்ந்த பால்,பாதாம்,  துளசி இலை, தர்பூசணி, வெள்ளரி,
இஞ்சி சாறு 2 டீஸ்பூன்,துளசி,  கிராம்பு, சீரகம்,
 வெள்ளரி. மற்றும். அரிசிப்பொறி சாப்பிட அது அசிடிட்டியை உறிஞ்சி விடும். புதினா இலைகளை கொதிக்க வைத்து அந்த நீரை குடிப்பது சிறந்தது. சிறு துண்டு வெல்லத்தை 2 மணிக்கொரு முறை வாயில் வைத்து அந்நீரை விழுங்க அசிடிட்டி கட்டுப்படும். காலையில் வெதுவெதுப்பான நீரில் சிட்டிகை மஞ்சள் தூளை போட்டு பருக அசிடிட்டி குறையும்.

முடிந்த அளவு மிளகாய்க்கு பதில் மிளகை  பயன்படுத்தவும். இளநீர். நெஞ்சு எரிச்சலுக்கு மிக நல்லது. தக்காளி. முடிந்த அளவு. அசிடிட்டி பிரச்சனை இருபவர்கள் மட்டும் தவிர்க்கவும்.



அதிக பழம், காய்கறிகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.  இதுபோன்ற உணவு செரிக்க உடலுக்கு குறைந்த சக்தியும். அதன்மூலம். உடலுக்கு அதிக சக்தியும் கிடைக்கிறது.

 நாளை. வயிற்று  புழுக்களுக்கான  தீர்வை பார்ப்போம்.




Tuesday 21 April 2015

சூப்பர் ஸ்டார் சிக்கிரட் பிடிப்பதை நிறுத்திய காந்தி. நுரையீரல் பிரச்சனைக்கு தீர்வு.



நுரையீரல் பஞ்சு போல் மென்மையானது. புகை பிடித்தல். புற்று நோயை  உண்டாக்கும். புகை பிடித்தல் உயிரை கொல்லும்னு . குட்கா முகேஷ் திரை அரங்கில். எவ்வளவு முறை சொன்னாலும். புகை  பிடிப்பவர்கள். பிடித்து கொண்டு தான்  இருக்கிறார்கள். புகை பிடிப்பவர்களுக்கு வரும் பாதிப்பை விட. அதை  சுவாசிப்பவர்களுக்கு வரும் பாதிப்பு அதிகம். பெரும்பாலான வீடுகளில். புகைப்பவர்களை விட அதை   சுவாசிப்பவர்கள். அதிக பாதிப்பிற்க்கு  உள்ளாகிறார்கள்.

  இந்த கட்டுரையை படிக்கும். புகை பிடிப்பவர்களின் கவனத்திற்க்கு.  நீங்கள் ஆரோக்யமாக  இருக்கிறீர்கள். உங்கள் மனைவி, வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு. அடிக்கடி. ஏதேனும் நோய். வருகிறது என்றால். அது  நீங்கள் பிடிக்கும் புகையை அவர்கள் சுவாசிப்பதால் தான். நீங்கள். உண்மையிலேயே. உங்கள் குடும்பத்தை நேசிப்பவராக இருந்தால். இதை  செய்வீர்களா. உங்களுக்காக  இல்லையென்றாலும். உங்கள் குடும்பத்தினரின் ஆரோக்யதிர்காகவாது. சிகிரெட்டை  துர  எறியுங்கள்.  குடியை விட. புகை பழக்கம்  கொடிது. காரணம். குடி. குடிப்பவனை மட்டும் கொல்லும். புகை. அதை. சுவாசிப்பவர்களையும். சேர்த்து  கொல்லும்.

 இப்ப. இந்த பழக்கத்தில்  இருந்து வெளி வருவது மிக சுலபம். இதற்க்கு என்றே. மெடிக்கல் ஷாப்பில் மருந்து விற்கிறார்கள். அதை  தொடர்ந்து. 14 நாட்கள் நீங்கள் உபயோகபடுத்தினால். பின்னர். உங்களுக்கு சிகிரட்  வாடையின் மீது ஒரு வித வெறுப்பு  வந்து விடும். நீங்களாகவே விருப்பப்பட்டாலும். உங்களுக்கு புகை பிடிக்க தோனாது.  இன்னொரு வழியும் இருக்கிறது.

 அதாவது காந்தி வழி. புரியவில்லை. சூரிய காந்தி பூ.


 உங்களுக்கு எப்பொழுது எல்லாம். புகை பிடிக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ. அப்பொழுது. சூரிய காந்தி விதைகளை சிறிது. பல் இடுக்கில். அடக்கி வெய்த்து கொள்ளுங்கள். சில நிமிடங்கள் கழித்து.  அதை  துப்பி விட வேண்டும். முழுங்க கூடாது. இவ்வாறு சில நாட்கள் செய்து வந்தால். எந்த வித பாதிப்பும் இல்லாமல். நீங்கள் புகை பழக்கத்தில்  இருந்து வெளியே வரலாம்.



 ரஜினி. இவ்வாறு செய்து தான். தனது புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டார்.

பிறந்த இந்த 27 வருடங்களில். நீ. என்ன?  சாதனை செய்தாய். என்று என்னை யாராவது கேட்டால். இதுவரை. புகை பிடிக்காமல்,  தண்ணி அடிக்காமல், குட்கா, ஜர்தா, பான் உண்ணாமல்.  நான் வாழ்ந்து கொண்டு இருப்பதே    மிக பெரிய சாதனை என்பேன். இப்பொழுது. ஸ்டார் ஹோட்டல்களில்.  பெண்கள் அதிகமாக தண்ணி அடிக்கிறார்களாம். எங்கே? போய்  கொண்டு இருக்கிறது. நமது தேசம்.  இதற்க்கு  முன்.  பெண்ணை பெற்ற பெற்றோர்கள். தனது பெண்ணிற்க்கு  மாப்பிள்ளை பார்க்கும் பொழுது. பையனிற்க்கு  குடி, புகை, ரேஸ். இது  போன்ற தீய பழக்கங்கள் இருக்கிறதா என்று விசாரிப்பார்கள். இப்பொழுது. பையனுக்கு பொண்ணு பார்க்கிரவர்களும். அதே  போல். விசாரிக்க வேண்டிய. நிலையில். இன்று  நமது நாடு போய்  கொண்டு இருக்கிறது.

 நுரையீரல் பிரச்சனையை தீர்க்கும் உணவுகளை பார்ப்போம்.

 பீன்ஸ். நாம் சாப்பிடும் உணவுகளில் அதிகம் சேர்த்து கொண்டால். நுரையீரலில் பாதிப்பு வருவதற்க்கான  வாய்ப்பு. கணிசமாக குறையும் என்பது. ஜெப்பான்னில். கார்ட்டின் யூனிவர்சிட்டி  நடத்திய ஆய்வில். தெரிய வந்துள்ளது.  வைட்டமின் சி. அதிகம்  உள்ள உணவுகள். நுரையீரல் பிரச்சனைக்கு தீர்வை அளிக்கும்.

 மாதுளம் பழம், ஆப்பிள், ஆரஞ்சு. இந்த மூன்று  பழங்களும்  நுரையீரலுக்கு அதிக நன்மை செய்யும். மாதுளம் பழம். நுரையீரலில் தோன்றும் கட்டியை. தடுப்பதை மட்டும் செய்யாமல்.  சுவாச பிரச்சனையையும் சரி செய்யும்.

 நாளை. நெஞ்சு எரிச்சலுக்கு உரிய தீர்வை பார்ப்போம்.

Monday 20 April 2015

சிக்ஸ் பாக்கின் ரகசியம். உபாயத்தால் வந்த அபாயம்.




சிக்ஸ் பாக். இன்றைய பல இளைங்கர்களின் கனவுகளில் ஒன்றாக இருக்கிறது. உடல் இளைக்க. உடற் பயிற்ச்சி  செய்பவர்கள் ஒருபுறம் என்றால். நல்ல ஆரோக்யமான உடல் இருந்தாலும். சிக்ஸ் பாக் வர வேண்டும் என்பதற்காக. உடற் பயிற்ச்சி  செய்பவர்கள் இன்னொரு புறம். பிரியாணி. மற்றும் கொழுப்பு சக்த்து உள்ள உணவுகளை எடுத்து கொண்டால். சிக்ஸ் பாக்கிற்கு என்று exercise  பண்ணாலும் Six  Pack வராது. சிக்ஸ் பாக் வந்த பிறகு. பிரியாணி தின்னால். வந்த சிக்ஸ் பாக் பெய்டும்.  ஆனால். கட்டட வேலை, ரோடு போடும் வேலை, விவசாயிகள் இவர்கள் எல்லாம். நிறைய கொழுப்பு சக்த்து உள்ள உணவுகளை எடுத்து கொள்கிறார்கள். அவர்கள் சிக்ஸ் பாக்கிற்கு என்று தனியாக உணவுகளை எடுத்து கொள்வதில்லை. ஜிம்மிற்க்கு  போவதில்லை. ஆனாலும். ஜிம்மிற்கு போய்  சிக்ஸ் பாக் வர வெய்க்கும்  நம்மை விட. அவர்களுக்கு. சிக்ஸ் பாக் ஜம்  என்று நன்றாக இருக்கிறது. அதற்க்கு  காரணம். நமக்கு உடற் பயிற்ச்சி  என்பது. நாம் வேலை செய்யும் நேரம் போக. நமக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் ஒரு பகுதி. ஆனால்? அவர்களுக்கு.  அவர்கள் ஒரு நாளைக்கி. 8 மணி நேரம், 10 மணி நேரம் செய்யும் வேலையே உடற் பயிற்ச்சி  தான்.



  நாம். நுரையீரல் பிரச்சனைக்கான தீர்வை பார்க்கும் முன். உங்களிடம் ஒரு சுவாரஸ்யமான கதையை முதலில் பகிர்ந்து கொள்கிறேன்.  இந்த கதை.   சென்ற பிப்ரவரி மாதம். தினமணியில் நான் படித்தது. இது  எந்த? அளவு உண்மை.






  கன்பூஷியஸ். ஏறக்குறைய 2600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். அப்பொழுது அத்தகைய தொழில் நுட்பங்கள் இருந்து இருக்குமா என்பது தெரியவில்லை. ஆனால்?. ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய கதை.

சீன தேசத்து ஞானிகளில் முதன்மையானவர் கன்பூஷியஸ். இவருக்கு பல சீடர்கள். அதில் ஒருவர் தான் சாங்- ஹோ - சாங்க். தமது குருவிடமிருந்து பல கலைகளை கற்றவர். இயற்பியல், எந்திரவியல் வல்லுநர்.


ஒருமுறை அறிங்கர் சாங் கிராம புறத்தில் உலாவ சென்றார். வழியில் ஒரு அழகான பழத்தோட்டம் கண்டு உள்ளே நுழைந்தார். Six Pack உடம்புடன் ஒரு இளைங்கர் கிணற்றில் இருந்து தண்ணீர்  இறைத்து கொண்டிருந்தார். வாளி [ பக்கெட் ] ரொம்பியதும் தன்னீரை நிமிர்ந்து எடுக்காமல் குனிந்து, முதுகை வளைத்து எடுக்கும் அமைப்பில் அந்த விவசாயி வீட்டு கிணறு இருந்த்து. பாவம் இப்படி மாடாய் உழைத்தால் இவனது ஆரோக்யம் சீக்கிரமே கெட்டு விடுமே. இளமையிலேயே கூன் விழுந்து இவன் கிழவன் போல் ஆகி விடுவானே என்று சாங் வருந்தினார்.


பின்னர் அந்த இளைங்கனை சந்தித்து, இந்த கிணற்றின் இரண்டு பக்கமும் தூண் போல் அமைத்து நடுவில் ஒரு கம்பியை பொருத்தி, அதில் ஒரு கொக்கியை பொருத்தி அதில் இதே பக்கெட்டை தொங்க விட்டு நீ நீரை இறைத்தால் உனக்கு சிரமம் தெரியாது என்று விளக்கினார். அதோடு மறுநாள் அவரே அதை செய்தும் கொடுத்தார்.

அந்த விவசாயிக்கு இது புதுசு. எவ்வாறு இதில் தண்ணீர்  இறைப்பது என்று தெரியாமல் குழம்பினார். சுமார் 2500  ஆண்டுகளுக்கு முன் இது கூட ஒரு அறிவியல் விந்தை அல்லவா. சாங் அதில் எவ்வாறு தண்ணீர்  இறைப்பது என்று செய்து காட்டினார். பின்னர் அந்த விவசாயி மிகுந்த மகிழ்வுடன் தண்ணீர்  இறைக்கலானார். இது உண்மையில் நல்ல விசயம் தான். இதோடு சாங் நிறுத்தி இருக்கலாம். இதன் பின்னர் அவர் செய்த சில அறிவியல் விந்தைகள், அந்த விவசாயிக்கு ஆபத்தாக முடிந்தது.

மறுநாள் மாலை சாங் அந்த தோட்டத்திற்கு வந்தார். விவசாயி அவரை வணங்கி வரவேற்று அமர செய்தார். விவசாயி தண்ணீர் இறைக்கும் சிரமமும், நேரமும் முன்பை விட குறைந்தது. ஆனாலும் சில குறைகள் இருப்பது சாங்கின் அறிவியல் கண்ணிற்க்கு தெரிந்தது. ஒவ்வொரு முறையும் அவர் பக்கெட்டை கிணறுக்குள் இறக்கி, தண்ணீர் எடுத்ததும் கயிற்றிலிருந்து பக்கெட்டை கழட்டி எல்லா செடிகளுக்கும் தண்ணீர் விட்டு மறுபடியும் மாட்டி, மறுபடியும் கழட்டி, மறுபடியும் மாட்டி, மறுபடியும் கழட்டி, மறுபடியும் மாட்டி, கழட்டி, மாட்டி, கழட்டி, மாட்டி. இவ்வாறு கழட்டி, மாட்டும் வேலை மற்றும் நீர் விடுவதற்கு என்று கிணற்ரிற்க்கும், தோட்டத்திற்கும் இடையில் நடக்கும் வேலைக்கு முற்றுப்புள்ளி வெய்க்க வேண்டும் என்று சாங் நினைத்தார். அந்த விவசாயியை மண்வெட்டியை கொண்டு வர சொன்னார்.

கிணற்றின் அடியில் இருந்து தோட்டம் வரை செல்லும் ஒரு கால்வாய் அவர் அமைத்தார். அதன் பின் அந்த விவசாயி நின்ற இடத்தில் இருந்தே நீரை இறைத்து, அந்த கால்வாயில் ஊற்றினார். அவருக்கு நடக்கும் வேலையும் இல்லாமல் போனது, கழட்டி மாட்டும் வேலையும் இல்லாமல் போனது. ஒரு வருடம் கழித்து.

இதற்க்கு முன் இல்லாத அளவு அமோக விளைச்சல், லாபம். அதற்க்கு நன்றி செலுத்தும் விதமாக பெரும் தொகையுடன் சாங் ஆசிரமத்திற்கு விவசாயி அவரது மனைவி இருவரும் வந்தனர். துறவியை வணங்கினர். பக்தனுடைய இந்த காணிக்கையை நீங்கள் ஏற்று கொள்ள வேண்டும் என்று சாங் முன் பணத்தை நீட்ட. அவர் அதை வாங்கி கொள்ள வில்லை. பணமும், துரும்பும் உண்மை துறவிக்கு ஒன்று தான். அந்த பணத்தில் ஒரு சிறு பகுதியை செலவழித்தால் தோட்டத்தில் ஒரு குழாய் வெய்த்து அதன் மூலம் நீர் இறைக்கும் வேலையும் செய்யாமல் அந்த உழைப்பு, அதற்கான நேரத்தையும் மிச்சப்படுத்தலாம் என்று சொல்ல உடனே ஒரு பைப் connection கொடுக்கப்பட்டது.

முதலில் அந்த விவசாயிக்கு குனியும் வேலை போனது, பின்னர் நடக்கும் வேலை போனது. இப்போ பைப் connection மூலம் நீரை இறைக்கும் வேலையும், அதை கால்வாயில் ஊற்றும் வேலையும் போனது. தோட்டத்தை பெருக்குவது விவசாயி மனைவியின் வேலை. [நல்ல வேளை. சாங் வேக்கம் க்லீநர் கண்டுபிடிக்கவில்லை]  சில வருடங்கள் கழித்து.

பல ஊர்களுக்கு சுற்று பயணம் செய்த சாங் தனது மடத்திற்க்கு திரும்பினார். இரண்டு நாட்கள் கழித்து அந்த விவசாயியின் தோட்டத்திற்க்கு சென்றார். அங்கு அவர் கண்ட காட்சிகள் அவரை திகைப்படைய செய்தது. நாம் வேறு இடத்திற்க்கு மாறி வந்து விட்டோமா என்று குழம்பினார். நடக்கும் பாதைகளில் கூட செடிகள் தாறு மாறாக வளர்ந்து இருந்தது. புதர்கள், முட் செடிகள், அழுகிய நிலையில் கிளைகளில் தொங்கும் பழங்கள். அப்பொழுது யாரோ இரும்பும் சத்தம் கேட்டது. பார்த்தால் சும்மா six pack உடலுடன் சிறுத்தை மாதிரி இருந்த விவசாயி உடல் பலம் சிறுத்து, உடம்பு மிக பெருத்து, தொந்தியும், தொப்பையுமாக கயிற்று கட்டிலில் படுத்து இருந்தார். அருகில் விவசாயியின் மனைவி. விவசாயியின் அந்த நிலமையை கண்ட சாங் மனம் அதனால் மேலும் வருத்தம் அடைந்தது.

சாங்கை பார்த்ததும் விவசாயி எழுந்து கை கூப்பினார். விவசாயியின் மனைவி சாங்கை முறைத்து ஒரு பார்வை பார்த்தாள். அவள் பார்வையிலேயே நம் மீது இவளுக்கு ஏதோ கோபம் என்பது அவருக்கு புரிந்தது. ஆனால்? கோபத்திற்கான காரணம் புரியாதவராய் சாங்கை பார்த்து. உனக்கு எதனால் இந்த நிலமை. நீ வேறு ஏதேனும் கடின வேலை செய்ததால் உனக்கு இந்த மாதிரி ஆய்டுத்தா. சொல். அந்த உழைப்பையும் குறைக்க நான் எதாவது உபாயம் செய்கிறேன் என்று சொல்ல, அருகில் இருந்த விவசாயியின் மனைவி அய்யா, உபாயம்ங்கர பேர்ல நீங்க இதுவரை செய்த அபாயங்கள் எல்லாம் போதும். இவர் கடினமாக உழைத்ததால் இப்படி ஆகவில்லை. உழைப்பதை நிறுத்தியதால் தான் இவ்வாறு ஆனார் என்று சொல்ல, அப்பொழுது தான் சாங்கிற்க்கு அவள் கோபத்திற்கான காரணம் புரிந்தது. அவள் மேலும் பேசலானாள்.

இதற்க்கு முன் இவர் உடம்பிலிருந்து வெள்ளமாக வேர்வை வரும் அளவு உழைத்தார். அதில் இவர் உள் உடம்பு நல்லா சுத்தம் ஆச்சு, பாத்தி கட்டி நல்லா ஃபுல் மீல்ஸ் சாப்ட்ட மனுசன். படுத்த உடனேயே தூங்கிய என் புருசன். இப்போ இவர் உடம்பு வேர்ப்பதில்லை, சரியாக சாப்பிடுவதில்லை, போன வருடம் சாப்பிட்ட சாப்பாட்டில் கால் பங்கு கூட இந்த வருடம் இவர் சாப்பிடவில்லை. அப்டி கம்மியா சாப்ட்டே அஜீரண கோளாறு, தூக்கம் வராமல் தவிப்பு, இது எல்லாம் சேர்ந்து தான் இன்று இவரை இந்த நிலைக்கு ஆக்கியது என்று அவள் சொல்லி முடித்ததும். சாங் அப்டியே அமைதி ஆனார். சாங் தன்னுடைய தவறுக்கு மன்னிப்பு கேட்டது மட்டுமில்லாமல் தனக்கு ஞானம் புகட்டிய அந்த ஞான பெண்ணை தனது குருவாக ஏற்று கொண்டார்.

மூன்று மாதம் கழித்து. விவசாயி பழைய தெம்புடன் உழைக்கலானார். கிணறு இருந்தது, கிணற்றின் இரண்டு பக்கமும் தூண் இருந்தது, இரண்டு தூண்களுக்கு நடுவில் கம்பி, கம்பியில் கொக்கி, கொக்கியில் வாளி, கீழே கால்வாய் எல்லாம் இருந்தது. ஆனால் குழாய்யை காணோம்.

மனிதனுடைய உடல் உழைப்பு, நேரம் முதலியவற்றை குறைக்க எந்திரங்கள் தேவை தான். ஆனால் உயிர் அற்ற எந்திரங்களையே ஒரு மனிதன் முழுமையாக சார்ந்து இருந்தால், உயிர் உள்ள மனித எந்திரம் ரிப்பேர் ஆய்டும். சும்மாவா சொன்னார் திருமூலர். மனமே மந்திரம், உடலே எந்திரம். அன்று உணவே மருந்து. இன்று மருந்தே உணவாக இருக்கு. அன்று நம்முடைய அன்றாட வேலைகளே உடற் பயிற்சியாக இருந்தது. இன்று உடலுக்கு என்று தனியாக பயிற்ச்சி தேவைப்படுகிறது. கடின வேலைகள் செய்வதை விட, தலை முதல் தோள், மார்பு, கை, வயிறு, இடுப்பு, கால் என்று உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பிற்க்கு என்று பிரத்யேகமாக பயிற்சிகள் செய்வது சிறந்தது தான். தினமும் ஒரு அரை மணி நேரமாது உடற் பயிற்ச்சி செய்யுங்கள். நோயின்றி வாழுங்கள். நோயற்ற வாழ்வே, குறைவற்ற செல்வம்.
நாளை. நுரையீரல் நோய்க்கு உரிய தீர்வை பார்ப்போம்.






சகாயம். 700 கோடியில் ஒருவர்.




நேர்மை, துணிச்சல் இரண்டும் மிகுந்த மத்திய. மாநில அரசு அதிகாரிகள் ஒரு லக்சம் பேர் கூடவா  இந்தியாவில் இருக்க மாட்டார்கள். தமிழகத்தில் ஒரு ஆயிரம் பேர் கூடவா  இருக்க மாட்டார்கள்.  ஒரு அரசாங்க அதிகாரி. மிக நேர்மையாக பணியாற்றுகிறார் என்றால். அவர் வாங்கும் சம்பளத்திற்கு. நேர்மையாக வேலை செய்கிறார்.  அவ்வளவு தான். அந்த ஆயிரத்தில். சகாயம் என்கிற ஒருவரை மட்டும். ஏன்? தலையில் தூக்கி  வெய்த்து  கொண்டாட வேண்டும்.  என்று சிலர் கேட்கிறார்கள்.

  அதீத நேர்மை, அதீத துணிச்சல். இரண்டும் ஒருங்கே அமையபெற்ற அதிகாரிகள். இந்தியாவில். அதிக பக்ஷம் ஒரு ஆயிரம் பேர் இருப்பார்கள்.  ஆனால்?  சகாயம் அளவு நேர்மை, துணிச்சல் வாய்ந்த அதிகாரி.  அகில உலகங்களில் சல்லடை போட்டு தேடினாலும். எங்கும் கிடைக்க மாட்டார்கள். இவர் ஆயிரத்தில்  ஒருவரோ, லக்சதில் ஒருவரோ, ஏன் ? கோடியில் ஒருவரோ கூட  அல்ல . 700 கோடி உலக மக்கள் தொகையில். இவரை போல் இவர் மட்டுமே இருக்கிறார். இவர் 700 கோடியில் ஒருவர்.

அப்படி என்ன? அவர் செய்தார். லஞ்சம்  வாங்காமல் நேர்மையா இருந்தார், தப்பு செய்பவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுத்தார்,  தனது அதிகாரத்தை பயன் படுத்தி. அதிக பக்சம். எவ்வளவு மக்களுக்கு நன்மை செய்ய முடியுமோ. அதை  செய்தார். அவ்வளவு தானே. என்று நீங்கள் கேட்டால். இல்லை. உலகில் எந்த ஒரு அதிகாரியும் செய்யாததை, செய்ய துனியாததை  இவர் செய்தார்.  இதை  பற்றி ஏற்கனவே பலர்  முகனுல்  பக்கங்களில் பதிவு செய்துள்ளனர். ஆனாலும். மறதி  என்பது தமிழர்களின் தேசிய வியாதி. அதுவும் வெய்யில் காலங்களில்.  நம்மில் பலர் இதை  மறந்து விடுவார்கள் என்பதால். இப்பொழுது இதை  நியாபகபடுத்த வேண்டியது என் கடமை.

 காஞ்சிபுரத்தில் ஒரு பெரியவர். பெப்சி கூல் டிரிங் வாங்குகிறார்.  அதில் அழுக்குகள்  மிதப்பது அப்படியே அப்பட்டமாக தெரிகிறது, அப்பொழுது காஞ்சிபுரம் டி.ஆர்.ஓவாக இருந்த சகாயத்திடம். அந்த பாட்டிலோடு பெரியவர்  வந்தார். சகாயம் அவர்கள். உடனே களத்தில் குதித்தார். 7,8 கடைகளில், குடோன்களில் அவர் அதிகாரிகளுடன் ஆய்வில் இறங்குகிறார். உடன் இருக்கும் அதிகாரிகள் எல்லாம் பயந்து நடுங்குகின்றனர். சார். இது  ரொம்ப பெரிய........... இடம்.  என்று இழுத்தனர்.  சகாயம் அவர்கள்.  இது. எவ்ளோ பெரிய...........................  இடமாக  வேண்டுமானாலும் இருக்கட்டும்.  மக்களின் ஆரோக்யம் என்பது. அதை  விட ரொம்ப பெரிய..........................................     விஷயம் என்று சொன்னார். அணைத்து இடங்களில் செய்த ஆய்வுகளிலும். பெப்சி கூல்  டிரிங்கில் அழுக்கு இருப்பது  தெரிய வந்தது. முடிவில். அந்த கூல் டிரிங். லேப்பில் பரிசோதனை செய்வதற்காக அனுப்பி வெய்க்கப்பட்டது.   உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அழுக்கு படலங்கள், நச்சு பொருட்கள் இருப்பது  உறுதி செய்யபட்டது.  சகாயம் அவர்கள் உடனடியாக என்ன?  செய்தார் தெரியுமா.

 செங்கல்பட்டில் உள்ள தாசில்  தாருக்கு  போன் செய்து. எட்டு பூட்டுகளை  வாங்கி கொண்டு. சென்னை, திருச்சி நெடுஞ்சாலைக்கு வர சொன்னார். அவரும் எட்டு பூட்டுகளோடு சகாயம் சொன்ன இடத்திற்க்கு  வந்தார்.  எதற்காக? இந்த பூட்டு  என்று தாசில்  தார்  கேட்டார். வாங்க. சொல்றேன். என்று அவரை வண்டியில் அழைத்து கொண்டு. நேராக. திருமுல்லை வாயிலில் உள்ள பெப்சி கம்பெனிக்கு  போனார்.  அப்பொழுது கூட. தாசில்  தாரால். பெப்சி கம்பெனிக்கு  வேட்டு  வெய்க்க தான். இந்த எட்டு பூட்டுகள்  என்று.   கற்பணை  கூட  செய்து பார்க்க முடியவில்லை. நம்ப எதுக்காக. பெப்சி கம்பெனிக்கு  வந்து இருக்கோம் என்று தாசில்  தார்  கேட்டார்.   அவரிடம். சகாயம் அவர்கள். Flash Bag  சொன்னார்.  மேலும் லேப்  ரிப்போர்ட்டை. தாசில்தார் கையில் கொடுத்து.  இந்த காப்பியை. இதன்  மேனேஜர்ரிடம் கொடுத்து. உடனடியாக. இந்த இடத்தை விட்டு. அனைவரும் வெளியேறுமாறும். இந்த கம்பெனிக்கு  சீல் வெய்க்க போவதாகவும். சொல்லுங்கள் என்று  அவர் சொல்ல. அதை  கேட்ட தாசில்தார். பயத்தில் உறைந்து போய் விட்டார். சார்.  இது  ரொம்ப பெரிய இடம். எதுக்கும். கலெக்டர்  கிட்ட ஒரு வார்த்தை... என்று அவர் இழுக்க. சகாயம். அவரிடம் கேட்டால்.  வேண்டாம் என்று தான்  பதில் வரும். இதை  செய்வதற்கு. சட்டப்படி. துணை கலெக்டர்ரான எனக்கே அதிகாரம் உண்டு. நான் சொன்னதை  செய்யுங்கள். என்று அழுத்தமான குரலில் சொல்ல. தாசில்தார். பயந்து நடுங்கியவாறே உள்ளே போனார்.

 ஒரு மணி நேரம் கழித்து  தாசில்தார் வெளியே வந்தார். சார். அவுங்க. உள்துறை செயலாளர், தலைமை செயலாளர்னு  ஒருத்தர் விடாம. எல்லாருக்கும் போன் பண்ணிட்டாங்க. யார், யார் பேரலாமோ  சொல்லி. நாங்க. அவுங்க கிட்ட பேசிக்கறோம், இவுங்க கிட்ட பேசிக்கறோம்னு சொல்றாங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்கு சார் என்று அவர் சொல்ல. சகாயம். நமது கையில் லேப்  ரிப்போர்ட் இருக்கு. இப்பொழுது. இவர்களாக வெளியில் வரவில்லை என்றால். அனைவரையும் கைது செய்து. பின்னர். இந்த கம்பெனிக்கு  சீல் வெய்போம்  என்று சொல்லுங்கள் என்று சகாயம் சொல்ல. அதை அப்படியே. அவர். அந்த கிளை மேலாளரிடம் சொல்ல. அடுத்த பதினைந்து நிமிடங்களில். அனைவரும் வெளியே வந்தனர்.  பின்னர் அந்த கம்பெனிக்கு  எட்டு பூட்டுகள்  போட்டு பூட்டப்பட்டது.

 இதை  பற்றி. ஒரே  ஒரு பத்திரிகை மட்டும் தான்  செய்தி வெளியிட்டது. கத்தி  கதிரேசன் ஸ்டைல்ல சொல்லனம்னால். லேகியம் விக்கவும், சமையல் குறிப்பு எழுதவும், சினிமா கிசு, கிசுக்கள்  எழுதவும் பத்திரிகைகளில் இடம் இருக்கு. ஆனால்  இதை  பத்தி நாலு வரி எழுத இடம் இல்லை. இதை  பற்றி துணிச்சலாக எழுதிய. தமிழ் நாட்டில் முதுகெலும்பு உடைய ஒரே பத்திரிகை. ஜூனியர் விகடன்.


 அப்பொழுது செல். நமது நாட்டிற்க்கு  வரவில்லை. பெப்சி கம்பெனிக்கு  எட்டு பூட்டு  போட்டபின். அலுவலகத்திற்கோ, வீட்டிற்கோ. செல்லாமல். அவர். அருகில் உள்ள கிராமங்களில் ஆய்வு செய்ய சென்றார். இரவு எட்டு மணிக்கு தான்  வீட்டிற்க்கு  வந்தார். அதற்குள் . வீட்டிற்கும், அலுவலகத்திற்கும். மாறி, மாறி பல போன் கால்கள். அவர் வீட்டிற்க்கு  வரும் பொழுது. அவரது மனைவியார்  வெளியே நின்று கொண்டிருந்தார்.  பல மிரட்டல் கால்கள் வந்ததை பற்றி சொன்னார். யாரை கேட்டு பெப்சி கம்பனிக்கு சீல் வெய்த்தீங்க. உங்களை சச்பெண்ட்  பண்ண போறோம். என்று கலெக்டர் சொல்ல. நான். இந்திய சட்ட, திட்டங்களை மீறி எதுவும் செய்யவில்லை. என் மீது நடவடிக்கை எடுப்பதாக  இருந்தால். தாராளமாக எடுக்கலாம். Iam Waiting என்று  போன்னை  வெய்த்தார்.

 இவர் அது  மட்டும் செய்யவில்லை. காஞ்சிபுரம் மாவட்டத்தில். பெப்சி குளிர்பானம் விற்க்க  தடையும் விதித்தார். உலகில் வட  கொரியா போன்ற சில நாடுகள். பெப்சி, கோக் பானங்களை தடை செய்துள்ளது. இதை  கேரளா, அருணாச்சல் பிரதேஷ், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் விற்பதில்லை. இப்பொழுது டெல்லியில். பள்ளி, கல்லூரிகளில் இதை  விற்க்க  தடை.  அது  எல்லாம் செய்தது அரசாங்கமே ஒழிய, அரசாங்க அதிகாரிகள் இல்லை. ஆனால்?.உலகிலேயே.  பெப்சி  விற்க்க  தடை உத்தரவு பிறப்பித்த முதல். One  and  Only அதிகாரி  இவர் தான்.  பின்னர். அவர் அங்கிருந்து உடனடியாக.  transfer  செய்யப்பட்டதும். இரண்டே நாளில். அந்த எட்டு பூட்டுகள்  உடைக்கபட்டதும் வேறு விஷயம். ஆனால்?.

தன்னுடைய அதிகார வரம்பை தவறாக துஷ் பிரயோகம் செய்யும். பல அதிகாரிகளின் மத்தியில். எந்த அளவு தன்னுடைய அதிகாரத்தை பயன் படுத்தி. நல்லது செய்ய முடியுமோ செய்தார். இரண்டு நாட்களாது அவரால். பெப்சி கம்பெனியை தடை செய்ய முடிந்ததே. இவர். மாற்றலாகி போகும் ஒவ்வொரு ஊரிலும்.  அது  வரை  கிடைக்காமல் இருந்த. முதியோர் பென்ஷன், தியாகி பென்ஷன், மாற்று திறநாளிகளுக்கு அரசாங்கம் மூலம்  கிடைக்க வேண்டிய உதவி என அனைத்தும் கிடைத்தது. சென்னையில் 650 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலங்களை. இவர் மீட்டதில் ஆரம்பித்து. மதுரையில். பல ஆயிரம் கோடி மதிப்பில்.  நடந்த. கிரானைட்  முறைகேட்டை. அம்பலபடுத்தியது  வரை. இவர். செய்த சாதனைகள். கொஞ்சம், நஞ்சம் அல்ல. மேலோட்டமாக. இதை  கேட்பவர்களுக்கு. இவர் ஏதோ. தனது கடமையை ஒழுங்காக. செய்த ஒரு அதிகாரி என்று தோன்றலாம். ஆனால்?

 பலமுறை. இவர் தனது உயிரை பணையம் வெய்த்து தான். இத்தனை  விசயங்களை செய்ய முடிந்தது. ஒரே நாளில் இரண்டு முறை transfer  செய்யப்பட்டவர் இவர். MA, ML  படித்து. IAS  சும்  படித்தவர்.  சட்ட படிப்பு இவர் படித்ததால்  தான். சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன் படுத்தி.  ஆட்டையா  போடும்  பலரை இவரால் வேட்டை ஆட முடிந்தது. போர் கலைகள் கற்ற மற  தமிழனாக இவர் இருப்பதால். பத்து  பேர் ஆயுதங்களோடு வந்தாலும். இவரால் தனி ஒருவனாக. அவர்களை.  பந்தாட முடிந்தது.

 இப்பொழுது சொல்லுங்கள். இத்தகைய நேர்மை, துணிவு, வீரம், அறிவு என அனைத்தையும் உடைய. தமிழை தாய் மொழியாக கொண்ட இவர்.  நமது தமிழ் நாட்டின் முதல் அமைச்சராக ஆனால்  எப்படி இருக்கும். இவரை பற்றி தெரியாதவர்களும். நமது தமிழ் நாட்டில் இருக்கிறார்கள் என்பது கசப்பான உண்மை.

 அடுத்து கிருஷ்ண கிரியில் 77 ஏக்கர் பரபளவு நிலத்தை. கோக்  கம்பெனிக்கு  தமிழக அரசாங்கம் வாடகைக்கு விட போகிறது. ஒரு ஏக்கருக்கான வாடகை 77 ருபாய் மட்டுமே.

77x 77= 5929 ரூபாய் மட்டுமே. இது  பன்னாட்டு நிறுவனத்திற்கான வாடகையா? இல்லை. Bachelor ரூமிர்கான வாடகையா.

  வெய்யில் அதிகம் இருப்பது  உண்மை தான். கோக், பெப்சி குடிப்பதற்கு  பதில். Fresh  Lemon  Juice  குடிக்கலாமே.

 மேலும் சகாயம் அவர்களை பற்றி சிந்திக்க வேண்டியது நிறைய இருக்கிறது. சிந்திப்போம்.

Sunday 19 April 2015

உடற் பயிற்சியால் மூளைக்கு நல்லது. கிராண்ட் மாஸ்டரின் வெற்றி சூத்திரம்.


இரும்பினில் செய்த தசைகளும், நிரம்புகளும் கொண்ட உடல் வேண்டும் என்றார். சுவாமி விவேகானந்தர். 15 வயதில் ஒரு முரட்டு  குதிரையை தனி ஒருவனாக அடக்கி.  அந்த குதிரை வண்டியில் வந்த கர்ப்பிணி பெண்ணை காப்பாற்றியவர் விவேகனந்தர். அவர். கடைசி வரை. உடற் பயிற்ச்சியை  விட  வில்லை. பல ஊர்கள், நாடுகள் அவர் சென்ற பொழுதும். டம்பிள்ஸ். அவர் கூடவே பயணம் செய்தது.

 இதற்கு  முன். அதாவது.  நமது தாத்தா, பாட்டி  காலத்தில். உடற் பயிற்ச்சி  என்பது. ஏதோ. விளையாட்டு துறையை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே உரியது என்பதை போல் ஒரு எண்ணம் இருந்தது. அதை  அன்றைய காலத்தில் தவறு என்று சொல்ல  முடியாது. காரணம்.

அன்று  3,4 கிலோ மீட்டர்  துரம் என்றாலும். மக்கள் நடந்தே தான்  சென்றனர். பைக்கில் செல்லவில்லை. அன்று, ஆன், பெண் அனைவருக்குமே கடினமான வேலைகள் இருந்தது.   இன்று. இயந்திர தனமான இந்த உலகில்  எல்லாமே தலை கீழாக ஆகி விட்டது. அன்று மனிதர்கள் செய்த வேலைகளை. இன்று machines  தான். செய்கிறது.  அதனால். இன்று ஆரோக்யமாக வாழ. உடற் பயிர்ச்சி  மிக, மிக அவசியமான ஒன்று. நாம். எந்த வேலை செய்வதாக இருந்தாலும். அதை. இந்த உடலை கொண்டே செய்கிறோம்.  ஆரோக்கியம் இல்லாத மனித உடலின் மனமும் ஆரோக்கியம் இன்றியே இருக்கும்.   மன நலனிற்கு உடல் நலன் மிக, மிக அவசியம்.




 கிரான்ட்  மாஸ்டர் விஸ்வநாத் ஆனந்த் சொல்வதை  சற்று கேளுங்கள்.

நான் தினமும் ஜிம்மிற்க்கு  சென்று உடற் பயிற்ச்சி  செய்து எனது உடலை கட்டுபாடுடன் வெய்த்து உள்ளேன். எனது உடல் கட்டுப்பாட்டுடன்  இருந்தால்  தான். மனமும் கட்டுபாடுடன் இருக்கும். உடல் ஆரோக்யமாக  இல்லாமல் செஸ் போட்டியில் சவால்களை எதிர் கொள்வது என்பது. கடினமான செயலாகி விடும்.

 நீங்கள். வீடுகளில், அலுவலகங்களில்   கடின வேலை செய்பவர்களாக இருந்தாலும். ஒவ்வொரு குறிப்பிட்ட உடல் பாகத்திற்கு என்று பிரத்யேகமாக செய்யும் உடற் பயிற்ச்சி.  அதிக பலனை தரும்.

 சரி. இப்பொழுது. உடற் பயிற்ச்சி  செய்வதன் மூலம். உடலில், மனதில், மூளையில், ஏன்? மரபணுவில் கூட சில நல்ல மாற்றங்கள் நடக்கிறது. அது சம்பந்தமாக அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வை பற்றி, ஆரோக்யத்திற்கு என்றே வரும். பிரபல .Cell  Metabolism  என்னும் ஆங்கில  இதழில் வந்த. கட்டுரை ஒன்றை பாப்போம்.

உடற்பயிற்ச்சி செய்தால் உடலுக்கு நல்லது. ஆனால்? மூளைக்கு நல்லதா. ஆம். இது சம்பந்தமாக நடந்த பல ஆராய்ச்சிகள் இதை நிரூபித்து உள்ளன.
உடற்பயிற்சி எப்படி மூளை செயல்பாட்டுக்கு உதவுகிறது, எப்படியெல்லாம் நன்மை செய்கிறது என்பதை ஆதாரபூர்வமாக நிரூபித்திருக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. கடுமையான உடற்பயிற்சி செய்யும் போது மூளையில் ‘ஐரிசின்’ (irisin) என்ற மூலக்கூறு உற்பத்தியாகிறது என்று அடையாளம் காட்டியிருக்கிறது அந்த ஆய்வு. அதோடு, அந்த மூலக்கூறு, நரம்புகளைப் பாதுகாக்கிறது என்றும் உறுதியாக எடுத்துச் சொல்லியிருக்கிறது.
இந்த ஆய்வை தலைமை ஏற்று நடத்தியவர் டாக்டர் புரூஸ் ஸ்பீஜெல்மேன் (Dr.Bruce Spiegelman). அமெரிக்காவில் இருக்கும் டானா ஃபார்பர் கேன்ஸர் இன்ஸ்டிடியூட் மற்றும் ஹார்வர்ட் மெடிக்கல் ஸ்கூலில் பேராசிரியர். அவர் தலைமையிலான குழு, ஒரு எலியை வைத்து ஆராய்ச்சி செய்ததில்தான் இந்த உண்மையைக் கண்டுபிடித்திருக்கிறது.



உடற்பயிற்சி செய்வதால், செயற்கை முறையில் ரத்தத்தில் இருக்கும் ‘ஐரிசின்’ அளவை அதிகரிக்க முடியும். அது, கற்றல் மற்றும் ஞாபகம் தொடர்பான மரபணுவை செயல்பட வைக்கும் என்றெல்லாம் பட்டியல் போடுகிறது இந்த ஆய்வு. சுருக்கமாக, ‘உடற்பயிற்சி, மூளையில் அறிவாற்றல் தரும் செயல்பாட்டை மேம்படுத்தும். நரம்புத் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கும்’ என்று அடித்துச் சொல்கிறார்கள் இந்த ஆய்வை நடத்தியவர்கள். அதாவது, மன அழுத்தம், பக்கவாதம், அல்ஜீமெர்ஸ் நோய் (Alzheimer’s disease) போன்ற நரம்பியல் நோய்கள் நெருங்குவதற்கான வாய்ப்பை உடற்பயிற்சி தடுத்துவிடும் என்கிறார்கள்.

 நாளை.

 பிரியாணி சாபிட்டால் சிக்ஸ் பாக்  போய்  விடுமா.  நுரையீரலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு. முதலியவற்றை பாப்போம்.

  பின் குறிப்பு. ரெட் டீ  ஷர்ட்டில்  இருக்கும் இந்த இளைங்கன். எனது ஆருயிர் நண்பன் சரத் குமார். மிக சிறந்த Waight  Lifting  Champion. ஆறு முறை மிஸ்டர் இந்தியா பட்டம் வென்ற காமராஜின் மாணவன்.








Saturday 18 April 2015

ஜீரன சக்திக்கு உதவும் வாழ்கை முறைஉணவு முறை. நா சொல்வதை. கேட்க கூடாது.




ஜீரன சக்தியை அதிகரிக்க. என்ன, என்னவெல்லாம் சாப்பிடலாம் என்பதை பார்க்கும் முன்.  ஒரு மனிதன், மனுசி  ஆரோக்யமாக வாழ. ஒரு நாளைக்கி எவ்வளவு சாப்பிடலாம். எந்த, எந்த வேளைகளில் எவ்வளவு  அளவு சாப்பிட வேண்டும். என்பதை பற்றி பாப்போம்.

  வெறுமன  உட்கார்ந்த இடத்தில்  வேலை பார்பவர்கள். அதாவது. physical  work. உடற் பயிர்ச்சி  கூட  செய்யாதவர்கள், செய்ய முடியாதவர்கள். ஒரு நாளைக்கி 1800 கலோரி உணவை  தான்  அதிக பக்சம் எடுத்து கொள்ள வேண்டும். கடின உடற் பயிர்ச்சி  செய்பவர்கள் ஒரு நாளைக்கி 2500 கலோரியில் இருந்து. 4000 அதுக்கும் மேல.  அவுங்க எந்த அளவு exercise  பண்றாங்களோ அதற்கு  தகுந்த மாதிரி சாப்பாடு எடுத்து கொள்ள வேண்டும்.


இப்பொழுது நான் என்று எடுத்து கொண்டால். மணிக்கு ஏழு  கிலோ மீட்டர்  வேகத்தில். ஒரு நொடி கூட  ஓய்வு எடுக்காமல் இரண்டு மணி நேரம் நடப்பேன்.  14 கிலோ மீட்டர்.  என்னுடைய நடை வேகத்திற்கு. ஒரு மணி நேரத்தில் 750 கலோரிகளாவது எரியும். ஆக  வெறும் நடையிலேயே. எனக்கு 1500 கலோரிகள் எரிக்கப்படும். அதை  தவிர்த்து இரண்டரை மணி நேர கடுமையான உடற் பயிர்ச்சி. முதலில்  Floor  Exercise ஒண்டரை மணி நேரம். பின்னர். பவர் டியூப், மசில்  மாஸ்டர், டம்பிள்ஸ், கர்லா கட்டை, க்ரிப்  ட்ரைனர்  போன்ற instrumental  exercises  ஒரு மணி நேரம்.

  ஒரு நாளைக்கி. 5000 கலோரிகள் கிடைக்கும் உணவை எடுத்து  கொண்டால் தான். என்னால். இவ்ளவும்  பண்ண முடியும். 2500 கலோரிகள் உள்ள உணவை எடுத்து கொண்டால். பாதி  நடக்கும் பொழுதே. நான் சுருண்டு தெருவில் விழுந்து விடுவேன்.  ஆக.   நீங்கள் உண்ணும் உணவானது. நீங்கள் செய்யும் உடல் உழைப்பிற்கு தகுந்த அளவு இருக்க வேண்டும்.

 நாம் சாப்பிடும் பொழுது. நாவின் பேச்சை கேட்க  கூடாது.  வயிற்றின் பேச்சை கேட்க வேண்டும். அது  தான். உடல் ஆரோக்யத்திற்கு நல்லது.






 தலை வாசல் விஜய்யை பலருக்கு. அவர் ஒரு சாதாரண குண சித்திர நடிகராக தான்  தெரியும். உண்மையில் அவர் ஒரு மிக சிறந்த யோகா ஆசிரியர் மற்றும் நீச்சல் வீரரும் கூட. அவரின் மகள் ஜெய வீணா.  வயது 12.  சமீபத்தில். கேரளாவில் தேசிய அளவில் நடந்த நீச்சல் போட்டியில் தங்க பதக்கம்  வென்றாள். தலை வாசல் விஜய். உணவின் அளவு முறை பற்றி பலமுறை சொல்வது.

 காலையில் ராஜா  மாதிரி சாப்பிடனும், மதியம் கொஞ்சும் கம்மியா. ராணி மாதிரி. இரவு பிச்சை காரன் மாதிரி.

நைட் எப்போதுமே புல் லோட்  வயிற்றில் ஏற்ற   கூடாது.

 சாப் பிட்டு அரை மணி நேரம் கழித்து  தான். நாம் தண்ணீர் குடிக்க வேண்டும். நடுவில் விக்கல் எடுத்தால் வேறு வழியில்லை.  அது  எப்பொழுதாவது தற்செயலாக நடக்கும்  ஒன்று. இரவு நாம் துங்க போவதற்கு இரண்டு மணி நேரம் முன்பே உன்ன வேண்டும்.

  மிக கடுமையான உடற் பயிற்சியெல்லாம் செய்ய வேண்டும் என்று கூட  அவசியம் இல்லை.  உங்களால் முடிந்தால் செய்யலாம். ஒரு நாளைக்கி 15 நிமிடங்கள் உடற் பயிற்ச்சி  செய்தாலே ஆரோக்யமாக வாழலாம். மற்றும் தினமும் 30 நிமிட நடை.

 ஜீரன சக்திக்கு நாம் எடுத்து கொள்ள வேண்டிய உணவுகள்.

  சூடான நீரில் சிறிது எலுமிச்சை பழ  சாற்றை பிழிந்து வெறும் வயிற்றில் குடிப்பது. உடல் இளைக்க, ஜீரன சக்தி இரண்டிற்கும் நல்லது.  மற்றும் வேப்பிலை கட்டி.





உங்களில் சிலருக்கு  இதை  பற்றி தெரிந்து இருக்கும். தெரியாதவர்கள். இது  ஏதோ. வேப்பிலையில் இருந்து செய்யபடுவது  என்று நினைப்பார்கள். உண்மையில் இதற்கும், வேப்பிலைக்கும் சம்பந்தமே இல்லை. இதற்கு எதனால் அந்த பெயர் வந்தது என்று தெரியவில்லை. பெயர் ஆராய்ச்சி எதற்கு. இது உடல் ஆரோக்யதிற்கும், ஜீரனத்திற்கும் நல்லது.

  இதை  எப்படி செய்வது.

   நாரத்தை,   எலுமிச்சை இலைகள். ஒரு கைப்பிடி.
கறிவேப்பிலை அரை கைப்பிடி.
மிளகாய் வற்றல்—-3
ஓமம்,  அல்லதுசீரகம்      2 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி—   அரை டீஸ்பூன்

ருசிக்கு—-உப்பு
கடுகு,  வெந்தயம்  வகைக்கு  கால் டீஸ்பூன்
நல்லெண்ணெய்—–சிறிது.
நாரத்தை  இலை மற்றும் எலுமிச்சை  இலைகளில் நார் பகுதியை நீக்கி விட்டு  சிறு இலைகளாக கிழித்து கொள்ளவும். கறிவேப்பிலை  அப்படியே
சேர்க்கலாம்.
வெறும் வாணலியில்    கடுகு,வெந்தயத்தை  சிவக்கவும்,ஓமத்தை
வாஸனை வரும்படியும் வறுத்து  ஆறவிடவும்.

மிளகாயைத் துளி எண்ணெயில்    வறுத்து ,   உப்பு,பெருங்காயம்
சேர்த்து  மிக்ஸியில் அரைத்து.    ஒரு முறை கிளறிவிட்டு ஒன்று சேர
பொடிக்கவும்.    தண்ணீர் இதில் கொஞ்சும் கூட சேர்க்க வேண்டாம்.
சற்று கெட்டியாக     மசிந்ததை எடுத்து  சிறிய வில்லைகளாகவோ
உருண்டையாகவோ செய்து     சிறிது சிறிதாக
உபயோகிக்கலாம்.

சிறிய பாட்டில்களில்  போட்டு  மூடிவைத்து உபயோகிக்கவும்.
நாரத்தை, எலுமிச்சை,இலைகள் பித்தத்தை நீக்கி  நாவிற்கு
ருசியைக் கொடுக்கும். இது சற்று விறுவிறுவென்று இருக்கும். அனைவரின் நாவிற்கும் இது  பிடிக்குமா என்று தெரியவில்லை. ஏற்கனவே நான் மேலே  சொன்னதை போல். நாவின் பேச்சை கேட்க கூடாது. வயிற்றின் பேச்சை கேட்க வேண்டும். இந்த வேப்பிலை கட்டி. காதி, அம்பிகா அப்பளம் டிப்போ, மற்றும் பல நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

 தயிர், மோர் அண்ணம்  உண்ணும் பொழுது. உருகாய்க்கு பதில் இதை  தொட்டு கொண்டால். நல்ல விறு, விறுப்பா  இருக்கும். உடல் ஆரோக்யத்திற்கும்  நல்லது.

 இஞ்சி ஜீரணத்திற்கு நல்லது என்பது அனைவருக்குமே தெரியும். தெரிந்து பயன் இல்லை. அதை  தினமும் உணவில் சேர்த்து கொண்டால் தான்  பயனே. நான்  தினமும். மூன்று  வேளையும். சாப்பிட்டு  அரை மணி நேரம் இடைவேளை விட்டு. இஞ்சி மரப்பா ஒரு சிறிய துண்டு வாயில் மென்னுவேன். நெல்லிகாய் சாப்பிட்டு  தண்ணீர் குடித்தால். எவ்வாறு தண்ணீர் தித்திக்குமோ.  அதே  போல். இஞ்சி மறப்பா சாப்பிட்டு தண்ணீர் குடித்தால். அது ஒரு தனி சுவை.

 பப்பாளி பழம்  ஜீரன சக்திக்கு நல்லது. வெளி நாடுகளில் மாமிச உணவு செய்யும் பொழுது. சிறிது பப்பாளி துண்டை சேர்த்து கொள்வார்கள்.

 கொத்தமல்லியை சாறாக்கி. அதனுடன் ஒரு கரண்டி ஜீரகம் கலந்து. அது இரண்டையும் தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.

மோரில் ஓமம் கலந்து குடிக்கலாம்.

 பெருங்காயத்தை மட்டுமே. சாப்பாட்டில்  போட்டு. அதோடு சிறிது நெய்யும் கலந்து உண்பது. ஜீரணத்திற்கு மிக நல்லது. ஒரு 2,3 உருண்டை அவ்வாறு சாபிட்டாலே போதும்.




 அஷ்ட்ட  சூர்ணம். எட்டு விதமான ஆயுர்வேத முலிகைகளால்  இதை  தயார் செய்வார்கள். இதன் சிறப்பு என்னவென்றால். பசியே எடுக்கவில்லை என்றாலும். வயிற்றில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்கி பசியை துண்டும்.  ஔட்  கோயிங் ரொம்ப ஓவரா இருந்தாலும். அதை  கட்டுபடுத்தும். கோட்டக்கல் போன்ற ஆயுர்வேத மருந்து கடைகளில் கிடைக்கும். வாரம் ஒரு முறை அல்லது இரு முறை. அஷ்ட்ட  சூரணத்தை அன்னத்தில் ரெண்டு ஸ்பூன் போட்டு. அதில் நெய் ஒரு ஸ்பூன் கலந்து உண்ணலாம்.

  நாளை. உடற் பயிர்ச்சி  செய்தால் உடல் ஆரோக்யத்திற்கு நல்லது சரி. மனதிற்கு நல்லதா. இல்லை. யோகா தான். உடல், மனம் இரண்டிற்கும் நல்லது என்று நீங்கள் நினைத்தால் தவறு. உடற் பயிற்ச்சியும். உடல், மனம் இரண்டிற்குமே நல்லது. எப்படி? இதற்கான அறிவியல் பூர்வமான விளக்கத்தை நாம் நாளை பாப்போம்.




Friday 17 April 2015

புற்று நோய் வராமல் தடுக்கவும், தீர்க்கவும் தீர்வு. 448 நோய்களை குணமாக்கும் துளசி.



புற்று நோய் வருவதற்கான காரணங்கள் பல. புற்று நோய். கேசாதி, பாதம்
முதல் எங்கு வேண்டுமானாலும் வரும். புற்று நோய் ஒருவருக்கு வந்து விட்டால். அதற்க்கு உரிய சிகிச்சையை எடுத்து கொண்டே ஆக வேண்டும். முன்பு இது தீர்க்க முடியாத நோயாக ஆங்கில மருத்துவத்தில்  இருந்தது. இப்பொழுது  தீர்வு ஆங்கில மருத்துவ உலகிலும் வந்து விட்டது.  சித்த மருத்துவம். மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் தீர்வு இருகிறதா? என்றால் இருக்கிறது.

 கர்நாடகாவில் யாரோ ஒரு சித்த மருத்துவர். புற்று நோய்க்கு ஒரு மூலிகையை இலவசமாக கொடுப்பாராம்.  அதை பெற்று கொண்ட 5000 புற்று நோயாளிகள் முழுமையாக குணம் அடைந்தனர்.  இந்த சேவைக்கு. அவருக்கு கிடைத்த பரிசு என்ன?  தெரியுமா. அக்கம், பக்கத்தில் உள்ள ஆங்கில மருத்துவர்கள். ஒரு போலி சமூக சேவகரை செட் பண்ணி. அந்த போலி சமூக சேவகர் மூலம். அவர் மீது கேஸ் போட்டார்கள். அவர் போலி மருத்துவர் என்று.  வழக்கு முடியும் வரை. அவர் இலவசமாக கூட யாருக்கும் மூலிகை கொடுக்க கூடாதுனு  ஜட்ஜ் அய்யா தீர்ப்பு சொல்லிட்டாரு.

 இந்த சம்பவத்தை என்னுடைய நண்பர் ஒருவர் வெகு நாள் முன்பு சொன்னார். இது எந்த? அளவு உண்மை என்று தெரியவில்லை. அந்த சித்த மருத்துவரின் பெயர். மற்றும் தொலைபேசி என்னை எவ்வளவு கேட்டும் அந்த நண்பர் கொடுக்க மறுத்து  விட்டார். இந்த பதிவை படிப்பவர்களில். அந்த 5000 பேரில் ஒருவர் இருந்தால். இல்லை. அந்த மருத்துவரின் பெயர், என். இரண்டும் தெரிந்த யாரேனும் ஒருவர் இருந்தால். அதை எனக்கு தெரியபடுத்தவும். இப்பொழுது அந்த மருத்துவரின் மன நிலை, சூழ்நிலை எவ்வாறு இருக்கிறது என்பது தெரிந்தால் தான். அது சம்பந்தமாக என்னால் பதிவு செய்ய முடியும்.

  புற்று நோய்க்கான தீர்வுகள் எனக்கு தெரிந்தவற்றை சொல்கிறேன்.

  மருத்துவர்கள் வெறும் மருத்துவர்களாக மட்டும் அல்லாமல். மனோ தத்துவ நிபுணர்களாகவும் இருக்க வேண்டியது அவசியம். ஒரு அம்மாக்கு புற்று நோய் மிக முற்றிய நிலையில் தான் கண்டு பிடிக்கப்பட்டது. அவங்களுக்கு அறுவை சிகிச்சையும் செய்யபட்டது. ஆனால். அந்த அம்மாவை அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றிய மருத்துவர்.  உங்களுக்கு என்ன தான் ஆபரேஷன் பண்ணாலும்..... ரொம்ப. அது உங்களுக்கு முற்றி போனவுடன் தான்.  ஆபரேஷன் பண்ணியிருக்கு. அதனால. நீங்க இவ்ளவு நாள் தான் உயிரோட இருப்பீங்கனு. அந்த மருத்துவர் சொல்ல. அதை கேட்டு பயத்தாலேயே தினம், தினம் அவுங்க செத்து கொண்டு இருந்தார்கள்.

 எனது நண்பர் சதீஷ் சொன்னதின் பேரில். நான் அவங்களை நேரில் சென்று பார்த்து கவுன்சிலிங் கொடுத்து. தினமும் வெறும் வயிற்றில். செம்பு பாத்திரத்தில் நிரப்பிய  துளசி நீரை குடியுங்கள். என்று எனக்கு தெரிந்த. புற்று நோய்க்கான சிறந்த மருத்துவத்தையும் அவங்களுக்கு சொல்லி விட்டு வந்தேன். மேலும் அங்கு ஒரு கொலையும் செய்தேன். நான் கொன்றது யாரை தெரியுமா. உலகின் மிக கொடிய நோயான பயத்தை.

  இப்பொழுது அந்த அம்மா. பயபடுவதே இல்லை. நான் கூறியபடியே. தினமும் முதலில் துங்கி எழுந்தவுடன். அவுங்க. சிரித்த முகத்துடன் கண்ணாடியை பார்கிறார்கள். எனக்கு இன்றிலிருந்து எல்லாம் நன்றாகவே இருக்கும். நான் நீண்ட நாள் வாழுவேன் என்று உரக்க. தன்னம்பிக்கையோடு கூறுகிறார்கள். பிறகு பத்து  நிமிடம் வஜ்ராசனம். அதை செய்த பிறகு. வெறும் வயிற்றில் செம்பு பாத்திரத்தில் இருந்து துளசி நீரை எடுத்து  அருந்துகிறார்கள். உடல், மனம் இரண்டுமே ஆரோக்யமாக இப்பொழுது அவங்களுக்கு இருக்கு.

 துளசியின் மகத்துவம் பாப்போம்.

 ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளை. எவ்வளவு தாரளமாக போட முடியுமோ அவ்வளவு தாராளமாக. செம்பு பாத்திரத்தில். ஒரு 1.5, 2 லிட்டர் தண்ணீர் விட்டு 8 மணி நேரம்   ஊர வெய்க்க வேண்டும். பின்னர். வெறும் வயிற்றில். ஒரு டம்ளர்ரோ, இரண்டு டம்ளர்ரோ குடிக்க வேண்டும். அவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம். அதாவது 48 நாட்கள் குடித்தால். புற்று நோய் பூரணமாக குணம் ஆகும். அது உடலின் எந்த பகுதியில் இருந்தாலும். மிக முற்றி போனால். இது  வேலை செய்யுமா என்று தெரியவில்லை. ஆனால். ஆரம்ப நிலையிலேயே. புற்று நோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு. இந்த துளசி சிகிச்சையை மேற்கொண்டால். புற்று நோய்  மட்டுமல்ல. 448 விதமான நோய்கள் குணமடையும். துளசியின் மருத்துவ பண்புகள். அறிவியல் பூர்வமாக நிருபிகபட்ட உண்மை. சரி. அந்த துளசி நீரை. எவர்சில்வர் பாத்திரத்தில் விட்டு குடிக்கலாம். அதிக வசதி இருந்தால். தங்க பாத்திரத்தில் கூட விட்டு குடிக்கலாம். ஏன்? செம்பு பாத்திரம்.

 தாமிர சக்த்து  [செம்பு] உடலுக்கு தேவையான ஒன்று. தைராய்ட் வர உடலில் தாமிர சக்தி குறைவதும் ஒரு காரணம். தைராய்ட் நோய் உள்ளவர்கள் செம்பு பாத்திரத்தில் நீர் அருந்துதல். தைராய்ட் நோய்க்கு  சிறந்த சிகிச்சை. கீழ் வாதம் முதலான நோய்கள் குணமாகும். உடலில் உள்ள புண்களை குனப்படுத்துவதுடன் . புதிதாக. உடலில் அணுக்களையும் உற்பத்தி  செய்யும் சக்தி தாமிரத்திர்க்கு  உண்டு. தாமிர பாத்திரத்தில் நிரப்படும் சாதாரண நீரே.  உடற் கட்டியை குணபடுத்தும் என்றால். தாமிர துளசி நீர்.

  துளசி நீர், புற்று நோயை குணபடுத்தும் என்று சித்த மருத்துவமோ, ஆயுர் வேத மருத்துவமோ. சொல்லியிருக்கா என்பதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. நீ சொல்லும் இந்த செய்தி. அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்றா? கை வைத்தியம், பாட்டி வைத்தியம் பண்ணி சரி பண்ண. புற்று நோய் ஒன்னும் bp, சுகர்  அல்ல. அது ஆட் கொல்லி நோய். என்று. உங்களில் சிலர் கேட்பது புரிகிறது. உங்களது கேள்வி. மிக நியாயமானதும் கூட. துளசி புற்று நோயை குணபடுத்தும் என்பதை. உலக அளவில் நடந்த பல அறிவியல் ஆய்வுகள் முடிவு செய்துள்ளது. அதில் ஒன்று. NDTV இதை பற்றி அமெரிக்காவில் நடந்த ஆய்வு சம்பந்தமாக செய்தி வெளியிட்டு உள்ளது. அதன் லிங்க் கீழே.

http://www.ndtv.com/india-news/tulsi-enters-us-lab-to-fight-cancer-548197

 Tulsi  Cures  Cancer  என்று google ளில் டைப் செய்து பாருங்கள். இதே போல். பல ஆய்வுகளின் முடிவை google  சொல்லும்.

 வியாதி உள்ளவர்கள் தான். தாமிர பாத்திரத்தில் துளசி நீரை விட்டு குடிக்க வேண்டும் என்று இல்லை. நல்ல ஆரோக்கியம் இருப்பவர்களும். தினமும் ஒரு டம்பளர் துளசி நீரை பருகுங்கள். மண் பானை நீரை விட தாமிர பாத்திர நீர் உடல் ஆரோக்யத்திற்கு அவ்வளவு நல்லது.

 பெருமாள் கோவில்களில். தாமிர பாத்திரத்தில் துளசி நீர் பன்னெடுங்காலமாக கொடுக்கும் ஆன்மிக சடங்கினுள் ஒரு மிக பெரிய அறிவியல் உண்மை ஒளிந்து இருப்பது உங்களுக்கு புரிகிறதா.

 இந்த உலகிலேயே. மிக சிறந்த நதி. தாமிரபரணி ஆறு தான்.

  இதை தவிர்த்து. வைட்டமின் சி. மற்றும் இ. அதிகம் உள்ள உணவுகளை எடுத்து கொண்டால் புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு மிக குறைவு.

  வைட்டமின் சி உள்ள உணவுகள்.

   நாம் தினமும் சுவை, மனம் ஆகியவற்றிற்காக சேர்த்து கொள்ளும் மிளகு. மற்றும் தக்காளி, பப்பாளி பழம், அணைத்து கீரை வகைகள்.

 வைட்டமின்  இ உள்ள  உணவுகள்.

 பாதாம், மாம்பழம், கோதுமை, கேரட் , பூசணிக்காய், கடுகு  கீரை, சூரிய காந்தி என்னை, ஆலிவ் ஆயில்.

 இதை தவிர்த்து. புற்று நோய் என்று அல்ல. பூண்டு. அணைத்து வியாதிகளுக்கும் நல்லது. ஆயுர்வேதம் பூண்டை மிக உயர்ந்த இடத்தில வெய்த்து உள்ளது. ஆதலால். இடையில் வந்த சில பிரகஸ்பதிகள். சாஸ்திர நுல்களில் பூண்டை சேர்த்து கொள்ள கூடாது என்று எழுதியதை. அப்படியே கண் மூடி தனமாக பின் பற்றாதீர்கள். இஞ்சியும் புற்று நோய்க்கு நல்லது. ஒமேகா 3 என்னும். உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பு. புற்று நோய் வரும் அபாயத்தை. பெருமளவு தடுக்கும். வேர்கடலையில் ஒமேகா 3. உள்ளது. மீன்களுக்கு இணையான அளவு ஒமேகா 3. வேர்கடலையில் மட்டுமே உண்டு.  பாதாமில் உள்ளதை விட மூன்று மடங்கு அதிக நற்குணங்கள் வாய்ந்தது வேர்கடலை. அதனால். தினமும் சிறிதளவு வேர்கடலை எடுத்து கொள்ளுங்கள்.

 மற்றும் வாழை தண்டு, பீன்ஸ் போன்ற நார் சக்த்து  உள்ள உணவுகளை சேர்த்து கொள்ளுங்கள்.

 எனது தாயாருக்கு  தலை முதல் கால் வரை பல நோய்கள் இருந்தது. ஆங்கில மருத்துவம் குணமே செய்ய முடியாது என்று கை விட்ட பல நோய்கள். இன்று பெரும்பாலானவை. ஆயுர் வேத மருத்துவத்தால் குணம் ஆகி விட்டது. குணம் ஆகி கொண்டு இருக்கிறது.

எங்களது நங்கநல்லூர் ஏரியாவிலேயே ஆகாஷ் மாதவன் என்கிற சிறந்த ஆயுர் வேத மருத்துவர் தன்வந்திரி போல் வந்து எனது தாயை காத்து விட்டார். அவரின் விலாசம் மற்றும் தொலை பேசி என்னை. இந்த பதிவில்  தருகிறேன். உங்களுக்கோ, உங்களுக்கு தெரிந்தவர்களுக்கோ. ஏதேனும். தீர்க்க முடியாத நோய் இருந்தால். இவரை தொடர்பு கொள்ளலாம்.

Number 27, Barani Complex, Nanganallur Market Road, Opposite to Vasanth & Co.

 Contact- 09789887007,
 044- 22243619.

  நாளை. இன்று பலருக்கு உள்ள ஒரு பிரச்சனை தான். அஜீரண கோளாறு. அதற்கான தீர்வை பாப்போம்.


Thursday 16 April 2015

நுறு சதவீதம் இயற்கையான, அதிக சக்துகளை உள் அடக்கிய உலகின் ஒரே அற்ப்புத உணவு.




Ganesa Moorthy Roja என்னும் எனது முகநுல் நண்பர். பட்டப்படிப்பு படித்து விவசாயம் செய்யும் இளைங்கர். இயற்க்கை வின்ஞானி நம்மாழ்வார் அவர்களையே தனது குலசாமியாக வணங்குபவர். அவர் சென்ற மார்ச் 11 அன்று சென்னை வந்து இருந்தார். அப்பொழுது அசோக் நகர் ஹாட் சிப்ஸ்சில் அவரை சந்தித்தேன். அது என்னுடைய வாழ்நாளில் ஒரு பொன் நாள் என்று சொல்லலாம். அவர். மிகுந்த மன வருத்ததுடன் சிலவற்றை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.


MNC கம்ப்பனிகள் கொடுக்கும் ரசாயன கலவைகள் அடங்கிய விதையை விவசாயிகள் நட்டால் தான். அரசாங்கம் மூலம் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய மானியம் கிடைக்கும். நமது நாட்டில் விளையும் விளை பொருட்களின் விதையை விலை கொடுத்து. அந்த தானியங்கள் எதுவுமே விளையாத வெளி நாட்டு காரர்களிடம் நாம் வாங்க வேண்டும். இந்த கொடுமை வேறு எந்த நாட்டிலாவது நடக்குமா. அது விதை அல்ல. விஷம். 40, 50 லக்சம் செலவு செய்து இன்று ஒவ்வொருவரும் மருத்துவர் ஆகிறார்கள். அவர்களுக்கு வருமானத்தை அதிகம் ஏற்படுத்தி தர. உயிர் காக்கும் மருத்துவர்களை காக்கும் ஒரு நடவடிக்கையாக அரசாங்கம் செய்வதாக தான் நாம் இதை நினைக்க வேண்டும்.


பின் குறிப்பு- இது வஞ்சக புகழ்ச்சி அணி.

எந்த அரசாங்கம் வந்தாலும் இது மாற போவதில்லை. ஆனால்? எதுவும் என்றாவது ஒரு நாள் மாறும் என்னும் நம்பிக்கையில் நாம் ஆறுதல் அடைவதை தவிர வேறு வழியில்லை.

 கியூபா ஒரு கம்யூனிச நாடு என்பது உங்கள் அனைவருக்குமே தெரியும். அந்த கம்யூனிச நாடு தான். நமது பாரம்பரிய சித்த  மருத்துவத்தை காத்து கொண்டு இருக்கிறது என்பது. உங்களில் எவ்வளவு பேருக்கு தெரியும்.  அது மட்டுமா. அங்கே . நுறு சதவீதம் இயற்க்கை முறையில் விவசாயம் நடக்கிறது. அணைத்து கல்லுரி மாணவர்களும். ஒரு நாளைக்கி இரண்டு மணி நேரம் விவசாயம் கண்டிப்பாக செய்ய வேண்டும்.

 அமெரிக்கா உட்பட பல நாட்டாமை நாடுகள் கியூபா மீது பொருளாதார தடை விதித்தும். உலக அரங்கில் ஒரு வல்லரசாக மட்டும் அல்ல. நல்லரசாகவும் தலை நிமிர்ந்து கியூபா நிற்கிறது. அந்த பொருளாதார தடைகளால் கரன்சி விசயத்தில் பிரச்சனை வந்த பொழுது. பழைய பண்டம் மாற்றும் முறையை சில ஆண்டுகள் அவர்கள் கடை பிடித்தனர். பிரேசில் நாடு. கியூபாவிற்கு பெட்ரோல்லை கொடுத்து அதற்கு பதிலாக எதை  பெற்று கொள்கிறது தெரியுமா. சித்த  மருத்துவத்தை.


கேடி அரசாங்கம் கூன் பாண்டியர்களின் ஆதரவோடு நிலம் கையகபடுத்தும் சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி விட்டது. ஆனால். அதை செயல்படுத்த முடியாது. அது வேறு விஷயம்.

 அரசியல் வாதிகள் பசித்தால் சோறு தின்பார்களா. இல்லை அமெரிக்க டாலர்களை தின்பார்களா.


அரசியல் வியாதிகளை நாம் மாற்றுவதும். அத்தகைய வியாதிகளை ஆதரிக்கும் கோடான கோடி மன நோயாளிகளை நாம் மாற்றுவதும் கஷ்ட்டம். ஆனால்? நாம் அதற்கு பதிலாக உணவு முறையை மாற்றி கொண்டால் பிரச்சனை இல்லை. ஒரு சதவீதம் கூட ரசாயன கலவை இல்லாத ஒரே உணவு உலகில் கேழ்வரகு மட்டுமே. ஏன்?





கேழ்வரகுக்கு உரம் போட்டால்தான் ஆபத்து. வேகமாக செடி உயர வளர்ந்து, கதிர் மட்டும் சிறுத்து, விதை குறைந்துபோகும். இயற்க்கை , செயர்க்கை என்று எந்த உரமும் கேழ்வரகிற்கு போட முடியாது. அதனால் MNC கம்ப்பனிகளின் பாட்ஷா, படையப்பா எதுவுமே கேழ்வரகிடம் பலிக்காது. கேழ்வரகில் அடங்கியுள்ள Calcium. பாலில் உள்ளதை விட மூன்று மடங்கும். அரிசியில் உள்ளதை விட பத்து மடங்கும் அதிகம்.

கேழ்வரகில் 'மித்தியானைன் [Methionine] எனும் ஒரு முக்கிய அமினோ அமிலம் இருப்பது இதன் கூடுதல் சிறப்புக்குக் காரணம். தனியாக இந்த 'மித்தியானைன்’ புரதம் குறித்த ஆய்வுகள் இப்போது கொடிகட்டிப் பறக்கின்றன. வயோதிகத்தைக் கட்டுப்படுத்தவும், தோல், நகம், முடியின் அழகைப் பேணவும் இந்தப் புரதச் சத்து மிக அவசியம். இந்த 'மித்தியானைன்’ அதிகம் உள்ள ஒரே தானியம் கேழ்வரகு மட்டும் தான். ஈரலில் படியும் கொழுப்பை விரட்ட இந்த 'மித்தியானைன்’கொண்ட கேழ்வரகு பெரிதும் உதவும். அதற்காக நாளைக்கே கடைக்குச் சென்று, இந்த 'மித்தியானைன்’ கேப்சூல்ஸ் இருக்கிறதா என்று தேடாதீர்கள். தனியாக 'மித்தியானைன்’ புரதத்தை மட்டும் பிரித்துச் சாப்பிட்டால், ஒரு சில ஆபத்துகள் நேர வாய்ப்புகள் உண்டு என்று சொல்கின்றன ஆய்வுகள். ஆதலால், மொத்தமாக 'மித்தியானைன்’ உள்ளடக்கிய கேழ்வரகை, கூழாக, அடையாக, தோசையாகச் சாப்பிட்டுப் பழகுங்கள்.

இப்பொழுது நான் தினமும் மத்தியம் கேழ்வரகு அடை தான் உண்கிறேன். இரவில் சப்பாத்தி. அரிசி உணவை பண்டிகை காலங்களில் மட்டுமே உண்கிறேன். நீங்களும்.  ஒரு வேளை கேழ்வரகை. கஞ்சி, கூழ், இட்லி, தோசை, அடை என்று ஏதேனும் ஒரு formமில் உண்ணலாம்.

 கேழ்வரகை விட ஓட்ஸ் மூன்று மடங்கு விலை அதிகம். கேழ்வரகிலோ. ஓட்ஸ்சை விட மூன்று மடங்கு சக்துகள் அதிகம். நமது நாட்டிலேயே. சக்தான தானியங்கள் விளையும் பொழுது. அதை விட சக்த்து குறைவாகவும், விலை அதிகமாகவும் உள்ள அன்னிய உணவு நமக்கு எதற்க்கு.

மூட்டு வலி முதல் ஆண்மை குறைவு வரை. அனைத்திற்கும் கேழ்வரகு உணவு. மிக சிறந்த மருந்து.

நாளை. புற்று நோய். Cancer நோய்க்கு உரிய தீர்வை பாப்போம்.

Wednesday 15 April 2015

எலும்பு தேய்மானம். [Arthritis] க்கு தீர்வு.


இன்றைய பெண்மணிகள் 30, 35 வயதை தாண்டினாலே.  எலும்புகள் தேய ஆரம்பித்து விடுகிறது. எலும்பு தேய்மானம் இப்பொழுது ஆண்களிடையேயும் அதிகரித்து வருகிறது.   இன்றைய உணவு முறை, வாழ்க்கை முறை ஆகியவையே அதற்க்கு   காரணம்.  கால்சியம் சக்துக்கள்  எந்த, எந்த உணவுகளில் அதிகம் இருக்கும் என்பது உங்களுக்கே தெரியும். கீரை வகைகள், பால், கம்பு, சோளம் போன்ற தானிய வகைகள்,பப்பாளி  பழம், முள்ளங்கி போன்றவை  அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். தினமும் வெள்ளை மலை பூண்டை. ஒரு 30 இல் இருந்து 50 கிராம். பாலில் போட்டு. சுண்ட காய்த்து  குடித்தால். எலும்புகள் எந்த வயதிலும். அதன்  வலிமையை இழக்காது.  கண் கெட்டபின்  சூரிய நமஸ்காரம் என்பது போல் அல்லாமல். இதை  இன்றிலிருந்தே செய்யுங்கள். எலும்பு தேய்மானம் அடைந்தாலும். நீங்கள். அதற்கு  தகுந்த உணவுகளை எடுத்து கொண்டு. தேய்ந்த  எலும்புகளை  Replace  செய்வதற்கு  என்றே பிரத்யேகமாக சில யோகாசனங்கள் இருக்கிறது. ஒரு நல்ல யோகா  ஆசிரியரிடம். அவற்றை கற்று கொண்டால். பிரச்சனை  இல்லை.

 ஒரு நல்ல பைக், கார்  நாம் வாங்கி. அதை  உபயோகப்படுத்தாமலேயே  இருந்தால் என்ன ஆகும். மனித உடலும் ஒரு வண்டி  தான். தனக்கு தானே பெட்ரோல், டிசல் போட்டு. தன்னை தானே சர்வீஸ் செய்து கொள்ளும் எந்திரம்  மனித எந்திரம். வண்டியை நாம் ஓட்டும் பொழுது மட்டும் தான். நாம் அதற்கு பெட்ரோல், டிசல் அல்லது எரிவாயு என்று ஏதேனும் ஒரு தீனி கொடுப்போம். ஆனால்? மனித எந்திரம். வேலை செய்தாலும், எந்த வேலையும் செய்யாமல் புடிச்சி வெய்த்த  பிள்ளையார் மாதிரி 24 மணி நேரமும் ஒரே இடத்தில உட்கார்ந்து இருந்தாலும்.சாம்பார், ரசம், தயிர் என்று முன்று ரவுண்டு  புல் மீல்ஸ் சாபிட்டால் ஆரோக்கியம் என்ன ஆகும். நிங்கள் என்ன வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால்  அதற்க்கு  தகுந்த வேலையை உடலுக்கு  கொடுக்காமல் விட்டால். அந்த உணவுகள் செரிக்கப்படாமல் கெட்ட  கொழுப்பாக மாறும். அதன்  மூலம். நமது உடலில் உள்ள திசுக்களும், எலும்புகளும் பலவீனமாக ஆகும். தினமும் யோகா அல்லது உடற் பயிற்ச்சி . முடிந்தால் இரண்டையுமே செய்யுங்கள். ஆரோக்யமாக வாழுங்கள்.  

 ஊனினை  உருக்கி உள்  ஒளி  பெருக்கி.

  மாணிக்க வாசகர்.

  இன்று நாம் உண்ணும் உணவு அனைத்துமே ரசாயனங்களின் கலவை. ஒரு சதவீதம் கூட  ரசாயன கலவை கலக்காத சக்த்தான  உணவு இருக்கிறதா. இருக்கிறது. அதை  நாம் நாளை பார்ப்போம் .

Monday 13 April 2015

இனிப்பான மருந்து. நீர் கடுப்பு நோய்யை குணப்படுத்தும். சக்கரைக்கு மாற்று.


சக்கரைக்கு மாற்றாக. வெறும் சுவை மட்டும் அல்லாது. ஆரோக்கியத்தையும் தரும் ஒன்று.      நீர் கடுப்பு நோய்க்கு சிறந்த மருந்தாகும் ஒன்று. இவ்வளவு மருத்துவ குணங்கள் இருந்தும். தித்திக்கும் சுவையோடு உள்ள மருந்து. இந்த ஒன்றே ஒன்று தான். அது என்ன?. அது தான் பனங்கர்கண்டு. இதில் அடங்கியுள்ள சக்த்து பட்டியலை பார்ப்போம். 







Nitrogen (N)
202
NA
NA
NA
10
0
Phosphorus (P)
79
7
4
2
3
0
Potassium  (K)
1,030
1
52
234
65
2.5
Calcium (Ca)
8
1.5
6
67
24
6
Magnesium (Mg)
29
1
2
14
7
1
Sodium (Na)
45
1
4
9
2
1
Chloride (Cl)
470
NA
NA
NA
16
10
Sulfur (S)
26
NA
NA
NA
13
2
Boron (B)
0.6
NA
NA
NA
0
Zinc (Zn)
2
0.2
0.2
4.2
.2
0.1
Manganese (Mn)
0.1
0.1
0.1
3.3
.2
0
Iron (Fe)
2
1
0.4
1.2
1.26
0.1
Copper (Cu)
0.23
0.1
0
0.1
0
0
Thiamine
0.41
0
0
0
0
0
Vitamin C
23.4
0.5
0.5
0
0
0




 பனங்கர்கண்டு.  உங்கள் வீட்டில் சளிக்காக  கஷாயம் போடும் பொழுது.  வால் மிளகு, கண்டம் திப்பிலி, அதி மதுரம், சித்ரத்தை போன்ற மூலிகை பொருட்களோடு. பனங்கர்கண்டையும் போடுவார்கள். இது பனை மரத்திலிருந்து கிடைப்பதாலும். கர்க்கண்டை போன்ற தோற்றம் மற்றும் சுவையில் இருப்பதாலும். இதற்க்கு பனங்கர்கண்டு என்று பெயர் வந்தது. இந்த பனங்கர்கன்டை மிக்ஸீயில் பொடித்து சக்கரைக்கு மாற்றாக பயன் படுத்தலாம். ஒரு கிலோ சக்கரையின் விலை 36 என்றால். இது ஒரு கிலோ 80 முதல்   400 ரூபாய் வரை.  ஆனால்? 100 கிராம் சுகர் ஃப்ரீ 90 ரூபாய் கொடுத்து வாங்குவதற்கு. இதை ஒரு கிலோ 80 ரூபாய் கொடுத்து வாங்குவது எவ்வளவோ மேல். 2 ஸ்பூந் சக்கரையில் கிடைக்கும் இனிப்பு. ஒரு ஸ்பூந் பனங்கர்க்கன்டில் கிடைக்கும்.  மேலும் இதில் Rich Iron, Cacium சக்த்துக்கள் அடங்கி உள்ளது. 

நீர் கடுப்பு. [ Urinary Infection]  நோய்க்கு சிறந்த மருந்து. 


 இதை சக்கரை வியாதி உள்ளவர்கள் தான் பயன் படுத்த வேண்டுமா.

 இல்லை. சக்கரைக்கு மாற்று தான் இது. யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இதன் மூலம் உடலில் கெட்ட சக்கரையின் அளவு ஏறவே ஏறாது. எங்கள் வீட்டில். நாங்கள் அனைவருமே பனங்கர்கண்டிர்க்கு மாறிட்டோம். 

 நாளை தமிழ் புத்தாண்டிற்க்கு வாங்க வேண்டிய ஐட்டங்களில் பனங்கர்கண்டும் இருக்கும் என்று நினைக்கிறேன். 

 அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். 

 நாளைய பதிவு-  பொதுவாக இன்று பல பெண்மணிகளுக்கு 30 வயதை தாண்டினால் மூட்டு வலி வருகிறது. அதற்க்கான தீர்வு.