siddhas

Tuesday 28 April 2015

நரம்பு தளர்ச்சிக்கு உணவு. காலை. கால் டாக்சி ஆக்குங்கள்.



தினமும் ஒரு கால் மணி நேரமாது உடற் பயிற்ச்சி  செய்ய வேண்டும். அரை மணி நேர நடை பயிற்ச்சி. மாலை வேளை. 1,2 கிலோ மீட்டர்  துரம் என்றால். காலை கால் டாக்சியாக உபயோகப்படுத்துங்கள். ஆணோ, பெண்ணோ. நடக்கும் பொழுது. நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வையோடு நடக்க வேண்டும். நெஞ்சை  நிமிர்த்தி எந்த அளவு நீங்கள் வேகமாக நடக்கிரீர்களோ. அந்த அளவு. உங்கள் உடலில் ரத்த  ஓட்டம் சீராகும். நரம்புகள் புத்துணர்ச்சி பெறுவதோடு வலு பெறும்.  Treadmill லில் நடு  ஹாலில் நடப்பவர்கள். அருகில் உள்ள கடைகள், நண்பர்கள், உறவினர்களை பார்பதற்க்கு. 2 வீலர், 4 வீலர் உபயோகிக்காமல்.   வேகமாக நடந்து செல்லலாம். அதற்காக Treadmill  தேவையே இல்லை. என்று நான் சொல்லவரவில்லை. நமது நடையின் வேகத்தை. Treadmill  பயிற்ச்சி  அதிகரிக்கும் இது நான் அனுபவபூர்வமாக உணர்ந்த உண்மை. முடிந்த அளவு நாம். வாகனத்தை பயன்படுத்துவதை குறைத்து காலை பயன்படுத்துவதை அதிகரித்தால். நமது உடல் நலன் மேம்படும். நரம்புகள் வலிமை  இழக்க. நமது மன நிலையும் ஒரு காரணம்.

 அதனால். வாரத்தில் ஒரு நாள் உங்களுக்கு பிடித்த இடத்திற்க்கு தனியாக சென்று. தனிமையிலே இனிமை காணலாம். இல்லை. பிடித்த நபர்களோடு. பிடித்த இடம் சென்றும் நீங்கள் இனிமை காணலாம்.  நகைச்சுவை, இசை. இந்த இரண்டும். ஒருவர் வாழ்வில் இல்லையென்றால். அந்த வாழ்வு நரகம்.  வாழ்க்கை என்னும் ரயில். அந்த இரண்டு தண்டவாளங்களின் மீது தான். பல கவலைகளை மறந்து, தடைகளை வென்று பயணம் செய்து கொண்டிருக்கிறது. இன்று. நகைச்சுவைக்கு என்றே. இரண்டு தொலைகாட்சிகள் தமிழில் உள்ளது. இசைக்கு என்று.  ஒரு 7,8 தொலைகாட்சிகள் இருக்கிறது. அதை தவிர. நாம் எந்த குறிப்பிட்ட பாடல், நகைச்சுவை காட்சியை பார்க்க விரும்புகிறோமோ. அதை யூ  ட்யூப்பில்  பார்க்கலாம். உங்கள் மனம். எப்பொழுது எல்லாம். கவலையில் இருக்கிறதோ. அப்பொழுது. உங்கள் மனதிற்க்கு. இசை, நகைச்சுவை என்னும் இரண்டு மருந்துகளை மறக்காமல் கொடுங்கள்.

  நரம்பு தளர்ச்சியை சரி செய்யும் உணவுகள்.


  சௌ சௌ, ஜூஸ்க்கு உபயோகபடுத்தபடும் கேரட், பீட் ரூட், ஜாதிக்காய், வாழை பூ, வாழை தண்டு,   பழங்களில்.  மாதுளை, மாம்பழம், பப்பாளி.


  மாதுளம் பழத்தின்  பூவை 300 கிராம் எடுத்து. அதை கையாலோ, மிக்சி மூலமாகவோ. சாறாக்கி. அதோடு 200 கிராம். நெய் கலந்து. அதை. தினமும் ஒரு ஸ்பூன்  சாப்பிட வேண்டும். இவ்வாறு ஒரு 48 நாட்கள் சாபிட்டு வந்தால், நரம்பு நன்கு வலுபெறும். 48 நாட்களுக்கு மேலும் சாப்பிடலாம். தப்பில்லை.

   நாளை. வாத நோய்களுக்கு உண்டான மருந்தை பாப்போம்.

3 comments:

  1. Dear sir,

    My father attacked bi Paralysis from last 2 month. He is having Suger and BP from 3 years. Please guide to cure this dieses. He can take honey?

    You can send me the mail: marunkumabe @gmail.com

    Thanks in advance.


    Arun kumar

    ReplyDelete
  2. Dear Sir,

    My mother suffered from spinal cord tuberculosis in D1 & D2 position same has been replaced last year Mar2016, and fitted titanium metal. Still she cannot able to walk in this regards please advise to cure this issuse.
    Please advise below mentioned mail id.

    mail id: ruban.chan@gmail.com

    With regards,

    Ruban.

    ReplyDelete