siddhas

Thursday 21 May 2015

நம்மாழ்வார் அய்யா. அறிவியலுக்கு எதிரானவரா?


நான் எனக்கு தெரிந்த நண்பன் ஒருவன். மன்னிக்கவும். அவன் நண்பன் இல்லை வம்பன். அவனோடு பேசி கொண்டு இருந்தேன். அவன் 2 விசயங்கள் சொன்னான். முதல் விஷயம். இன்று பல இளைங்கர்கள். அதுவும் குறிப்பாக படித்த பல இளைங்கர்கள் விவசாயம் குறித்து பேசுவது என்பது ஒரு தேவை இல்லாத Fashion னாம். அடுத்து சொன்னான் பாருங்க ஒரு விஷயம். இயற்க்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அய்யா. சும்மா இயற்க்கை, இயற்க்கைனு. அறிவியல், நவீன தொழில் நுட்பம் ஆகியவற்றை எதிர்த்த ஒரு பழமை வாதியாம். அந்த படித்த முட்டாள்க்கு நான் என்ன ரிப்ளை கொடுத்தேன் தெரியுமா.
இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.






Wednesday 13 May 2015

வாய் புண், வயிற்று புண் குணமாக



 உடல் சூடு, அளவுக்கு அதிகமான காரம், அளவுக்கு அதிகமான உணவு, அளவுக்கு அதிகமான பட்டினி. மற்றும். கோபம், ஆசை முதலிய பல உணர்வுகளை அடக்கி  வெய்த்து. அந்த அழுத்தத்தால்  ஏற்ப்படும் பாதிப்பு என்று. பல காரணங்களால்  வாய் புண்,  வயிற்று  புண் வரும்.

   நாம் கோபப்படுவதால் நமது உடல் நலன் பாதிப்பு அடைவதை விட. அதை அடக்குவதால் அதிகம் பாதிப்பு அடையும். அதற்க்காக. நமது கோபத்தை வெளிப்படுத்தி. பிறர் மனங்களை புண் படுத்துவதும் கூடாது. பின்ன. வேறு என்ன தான் செய்வது.

 ஓஷோ சொன்ன வழி  தான். உங்கள் ஆத்திரம் தீர. கை சோர்ந்து போகும் அளவு. தலகாணியை  குத்துங்கள். மற்றும் புலம்பல் தியானம் என்று ஒரு தியானம். உங்கள் மனதினில் உள்ள அணைத்து கவலைகளையும். தனியாக. அறையில் அமர்ந்து. கதவை சாத்தி  கொண்டு கத்தி  புலம்புங்கள். எவ்வளவு அழ  முடியுமோ. அழுது  விடுங்கள். அதன் பின். உங்கள் மனதை. பாறாங்கல்  போல். அழுத்தி கொண்டு இருந்த பாரம் இறங்கியிருப்பதை நீங்கள் உணர்வீர்கள்.

 மின்சார எந்திரங்களை.  Hi, Lo  வோல்ட்டேஜ்ஜில் இருந்து Stabelizer காப்பதை போல். மனித எந்திரத்தை காக்கும் Stabelizer  தான். ஸ்படிக மாலை.

ஒரு இடத்தில்  அநீதி நடக்கிறது. அந்த அநீதியை தட்டி கேக்கும் தகுதி, அதிகாரம் நமக்கு இருக்கிறது. தண்டனை கொடுக்கும் அதிகாரம் இருக்கிறது  என்றால்.நாம் அதை செய்து தான் ஆக வேண்டும். ஆனால். அதை கூட கோபபடாமல் செய்யலாம்.

 வாய் புண்,  வயிற்று புண்ணிற்கு  உரிய இயற்க்கை நிவாரணங்கள்.

 வாய் புண் உள்ளவர்கள்  ஹனுமார்க்கு.  வெண்ணை காப்பு செய்வதை போல். தினமும் வாயில் வெண்ணை தடவி கொள்ளுங்கள்.  நீங்கள் வீட்டில் இருக்கும் பொழுது. உறங்க போகும் பொழுது. தினமும் சுத்தமான தேங்காய் எண்ணையை. அது உங்கள் வீடு அருகே. எங்கே கிடைக்கும் என்று விசாரித்து. வாங்கி. அதை தினசரி உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

 வெறும் வயிற்றில் தேங்காய் பால். தொடர்ந்து 48 நாட்கள் குடித்து வாருங்கள். அதற்க்குள்  குணமாகி விடும். அந்த 48 நாட்களிலும் குணமாகவில்லை என்றால். அது குணம் ஆகும் வரை. தேங்காய் பால். வெறும் வயிற்றில் குடிப்பதை நிருத்தாதீர்கள்.  மற்றும். மாதுளம் பழம். ஒரு நாளைக்கி 2 பழம்  கண்டிப்பாக எடுத்து கொள்ள வேண்டும்.

 அதை தவிர்த்து.  மாதுளம் மணப்பாகு. இதை எவ்வாறு செய்வது.


மாதுளம் பழச்சாறு - 100 மி.லி.,
பனங்கற்கண்டு - 100 கிராம்,

Tuesday 12 May 2015

உடல், உள்ளம் இரண்டின் சூட்டையும் தணிக்கும் ஸ்படிகம்




வணக்கம் நண்பர்களே. நடுவில் சில நாட்கள் தொழில் நிமித்தமாக. பயணம் செய்ய வேண்டி இருந்தது. அதனால்.  blog பதிவு செய்ய நேரம் கிடைக்காமல் போய்  விட்டது. வரும் வியாழ  கிழமையில் இருந்து. நான் தொடர்ந்து பத்து நாட்கள்.  ஆழ்நிலை தியானத்தில் அமர போகிறேன். அந்த பத்து  நாட்களும். யாரிடமும் ஒரு வார்த்தை பேச மாட்டேன். பேச்  புக், google  blogger எதையும் உபயோகபடுத்த மாட்டேன். அதன் பிறகு. நான் சென்னையில் இருக்கும் அணைத்து நாட்களிலும். சித்த  மருத்துவம் தொடர்பான பதிவுகள் தொடரும்.

 இன்று உடல் சூட்டை தணிக்கும் வழிகளை  பற்றி பார்ப்போம்.

  உடல் சூட்டை தணிக்க. என்ன, என்ன உணவுகள் எடுத்து கொள்ள வேண்டும் என்பது உங்களுக்கே தெரியும். தர்பூசணி, கிர்ணி பழம், இளநீர், மோர் என்று உடலுக்கு குளிர்ச்சியை தரும் பட்டியல் நீளும். உடல், மனம் இரண்டையும் குளிர்ச்சியாக வெய்க்க உள்ள வழிமுறைகளில் மிக சிறந்த வழிமுறை என்னவென்றால் ஸ்படிக மாலை அணிவது.

 அன்று அறிவியல் ரீதியான காரணங்கள் சொன்னால் அதை எடுத்து கொள்ளும் பக்குவத்தில் மக்கள் இல்லை. இப்பொழுது ஓரளவு விழிப்புணர்வு வந்து உள்ளது. அது போல், அன்று இல்லாத கால கட்டங்களில். வேப்பிலை, துளசி, வில்வம், ஆல், அரசு, அத்தி, வன்னியில்  ஆரம்பித்து. பசுவின் கோமியம் சாணம் வரை.  அதீத மருத்துவ பயன்கள்  உடைய அனைத்திற்க்கும்  ஆன்மீக சாயம்  சித்தர்கள் பூசி விட்டார்கள். எளிமையாக அனைவருக்கும் புரியும் படி சொல்வதென்றால். கசப்பான மருந்துகளை தேனில் குழைத்து  கொடுப்பதை போல். அன்று சித்த  பெருமக்கள். அறிவியல் என்னும் மருந்தை ஆன்மீகம் என்னும் தேனில் கலந்து கொடுத்தார்கள். அதில் ஒன்று தான் இந்த ஸ்படிக மாலை.


ஸ்படிகம் என்றால் என்ன?

  பல நுறு  வருடங்களாக பூமிக்கு அடியில் தேங்கியுள்ள நீர் பாறையாக மாறும். அந்த பாறையில் இருந்து சுத்தமான கற்களை தேர்வு செய்து. அதில் தான் ஸ்படிக மாலை, ஸ்படிக லிங்கம் செய்வார்கள்.

 ஸ்படிக மாலை அணிவதால் கிடைக்கும் அறிவியல் ரீதியான பலன்கள்.

1] ஸ்படிக மாலை அணிவது. நமது உடலில் அதீதமாக உள்ள சூட்டை கட்டுபடுத்தும்.  ஸ்படிக மாலை. நமது உடலில் சரியான அளவில் உள்ள சூட்டை குறைக்காது.  உடல் சூட்டை  சீரான. சரியான அளவில் வெய்க்கும்.

 2] மனித மனம் ஆல்பா, பீட்டா என்று இரண்டு நிலைகளில் இருக்கும். இன்று பெரும்பாலான மனித மனம் பீட்டா நிலையிலேயே இருக்கிறது. மனித மனம் ஆல்பா நிலையில் இருந்தால் தான் அமைதியாக இருக்கும். ஸ்படிக மாலை. நமது மனதை. அலை பாயும் பீட்டா நிலையில் இருந்து. அமைதியான ஆல்பா நிலைக்கு  அழைத்து செல்லும். ரத்த  கொதிப்பு உள்ளவர்களுக்கு. ஸ்படிக மாலையை விட சிறந்த மருந்து எதுவும் இல்லை.

 நமது உடல்  சூடு, உள்ள சூடு இரண்டையும் தணிக்கும் ஆற்றல் ஸ்படிகதிர்க்கு  இணையாக. வேறு எதற்க்கும்  இல்லை.

 ஸ்படிக மாலை குறித்து கேட்கப்படும் கேள்விகள்.

 1]ஸ்படிக மாலை  அணிவதர்க்கு  என்று ஏதேனும் அடிப்படை  தகுதிகள் இருக்கிறதா?.
2] ஸ்படிக மாலை அணிவதற்க்கு . ஏதேனும் ஆச்சார. அனுஷ்டானங்களை கடைபிடிக்க வேண்டுமா?
3] ஸ்படிக மாலை அணிவோர்கள். அசைவம் சாப்பிட கூடாதா.
4] ஸ்படிக மாலை பெண்கள் அணியலாமா?
5] ஸ்படிக மாலையில் எவ்வளவு? விதமான தரங்கள் உள்ளது
6] ஸ்படிக மாலையின் தரத்தை எவ்வாறு கண்டறிவது.

 ஏற்கனவே. நான் மேலே குறிப்பிட்டதை போல். அன்று. மக்கள் பயன் பெற வேண்டும் என்பதற்க்காக. சித்த  புருஷர்களும், ரிஷிகளும் அறிவியலை. ஆன்மீகம் என்னும் தேனில் கலந்து கொடுத்தார்கள். அது போலவே ஸ்படிகம். பின்னால் வந்த. குறுக்கு புத்தி உடைய சில சாமானிய மக்கள். ஸ்படிக மாலை. இன்னார், இன்னார் அணியலாம். ஸ்படிக மாலை அணிய. இன்ன, இன்ன விதி முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று. அவர்கள் இஷ்டத்திற்க்கு  மனதில் தோன்றியவைகளை எழுதி வெய்த்து விட்டு சென்று விட்டார்கள்.

 அறிவியல் ரீதியாக. ஸ்படிகம். சிறுவர் முதல் பெரியவர் வரை. ஆண்கள், பெண்கள் யார் வேண்டுமானாலும் அணியலாம்.

 காற்று, சூரியன், சந்திரன், நீர் என்று. இறைவனின் அணைத்து படைப்புகளும் அனைவருக்கும் பொதுவானது தானே. நீர் அனைவர்க்கும் பொதுவானது என்றால். நீர் பாறையில் இருந்து கிடைக்கும் ஸ்படிகம் மட்டும் எவ்வாறு? ஹிந்துக்களுக்கு மட்டும். உரிய ஒன்றாக ஆகும். நாஸ்திகர்கள் உட்பட. இதை யார் வேண்டுமானாலும் அணியலாம்.

 தெய்வ  பக்த்தி  உள்ளவர்கள்.  108 மணிகள் உடைய ஸ்படிக மாலையை கையில் வெய்த்து.  உங்களுக்கு பிடித்த இறைவனின்  பெயரை. கிடைக்கும் நேரத்திற்க்கு  தகுந்தார் போல். ஜெபம் செய்யலாம்.

 அதை தவிர்த்து. இறை நம்பிக்கை உடையவர்கள், இல்லாதவர்கள் இருவருமே.  அதி காலையில் எழுந்து. மொட்டை மாடி போன்ற ஒப்பன் ச்பேச்சில். உங்கள் லட்சியம் என்னவோ. அதையே. திரும்ப, திரும்ப சொல்லி. மொட்டை மாடியில். ஜெபம் போல் ஸ்படிக மலையை வெய்த்து செய்யுங்கள்.

 நாம் வெற்றி பெற வேண்டும் என்றால் மனம் ஒருநிலைப்பட  வேண்டும்.  அமைதியான அதிகாலை வேளை  தான் மனதை ஒரு நிலை படுத்த சரியான நேரம். பிரும்ம முகூர்த்தம் எனப்படும் மூன்றிலிருந்து ஐந்து.

 இதை நீங்கள் சும்மா. முயற்ச்சி  செய்து பாருங்க. உங்களுடைய ஆசை நியாயமான ஆசையாக இருந்தும். அது நிறைவேற கால தாமதம் ஆனால். இவ்வாறு செய்வது. அதன் கால தாமத்தை குறைக்கும். முக்கியமாக. இதன்மூலம் உங்களுடைய நேர்மறை எண்ணம் அதிகரிக்கும்.

 ஸ்படிக மாலையை நீங்கள் கழிவறை செல்லும் நேரம் தவிர. மீதி அணைத்து நேரங்களிலும் கழுத்தில் போட்டு கொள்ளலாம். முக்கியமாக நீங்கள் குளிக்கும் பொழுது. கழுத்தில் ஸ்படிக மலையோடு குளிப்பது நல்லது.

  ஸ்படிக மாலையின் தரத்தை எவ்வாறு? கண்டறிவது.

 ஸ்படிக மாலையில் மொத்தம் பத்து  விதமான Quality இருக்குங்க. ஸ்படிக மாலையில் நீங்க கை வெக்கறீங்கனா. வெச்சவுடன். நீங்க ஒரு வித குளிர்ச்சியை உணர்வீர்கள். உணர்ந்தால். அது நல்ல உயர் தரமானது.

 காதி, பூம்புகார் போன்ற கடைகளில் தரமான ஸ்படிக மாலை கிடைக்கும்.

 இதன் விலை?

 450 ரூபாயில் ஆரம்பித்து. 4800 ரூபாய் வரை. என்னுடைய தொழில். டூர். நான். மாதம் ஒருமுறையோ, இரு முறையோ. ஒரு 30, 40 பேரை அழைத்து  கொண்டு காசி செல்வேன். அப்பொழுது. காசியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள



 சாரநாத்தில். எனது நண்பர்கள். யார், யாருக்கு ஸ்படிக மாலை தேவை படுகிறதோ வாங்கி. வருவேன். 4800 ரூபாய் மதிப்பிலான ஸ்படிக மாலை. சாரநாத்தில் வெறும் 350 ரூபாய் மட்டுமே. அங்க. 1st, 2nd quality லாம்  கிடையாது.  Only One. அது No 1.

 நாளை. வயிற்று  புண், வாய் புண்ணிற்கு  உரிய நிவாரணத்தை பாப்போம்.



Thursday 7 May 2015

மைக்கோவிர்க்கு எமனாகும் வினிகர். காச நோய், நிமோனியா, மார்பு சளி முதலான பல் பிணிகளுக்கு தீர்வு .



இன்று TB.  எலும்புருக்கி நோய்க்கான தீர்வை பாப்போம்.

எலும்புருக்கி நோய் மைக்கோ பாக்டீரியா என்பதால் ஏற்படுவது. அலோபதி மருத்துவத்தில் இதை குனபடுத்த ஆறு மாதம் முதல் இரண்டு ஆண்டுகள் வரை ஆகும். சிலருக்கு அதற்க்கு மேலும் ஆகலாம்.  மைக்கோ பாக்டீரியாவிர்க்கு  எமனாக வினிகர் உள்ளது. அதனால் நோய் உள்ளவர்கள். தினமும் உணவில் வினிகர் சேர்த்து கொள்ள வேண்டும். இதை தவிர்த்து

பூண்டு, வாழைபழம், சீதா பழம், ஆரஞ்ச், அன்னாசி, வால் நட், புதினா, கரும் மிளகு, முருங்கக்காய், கிரீன் டீ  ஆகிய பத்து  உணவு பொருட்கள் எலும்புருக்கி நோய்க்கு நிவாரணமாக உள்ளது.

மற்றும்.

வைட்டமின் டி என்பது உணவில் காணப்படும் ஒரு ஊட்டச்சத்து மட்டுமன்று, அது நம் உடலில் சுரக்கும் ஒரு ஹார்மோனும் கூட. உலகளவில் சுமார் 1 பில்லியன். அதாவது 10 கோடி  மக்கள், அவர்களின் இரத்தத்தில் மிகக் குறைந்த அளவில் வைட்டமின் டி-யைக் கொண்டிருப்பதாகவும், இந்த குறைபாடு அனைத்து வயதினரிடையேயும்,  பரவலாகக் காணப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

வைட்டமின் டி என்பது, கொழுப்புச் சத்தில் கரையக்கூடிய வைட்டமின் வகையைச் சார்ந்தது. இந்த கலப்பானது உடலில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பேட் போன்றவற்றை மேம்படுத்தக் கூடியதாகும். மனிதர்களைப் பொறுத்தவரை, இந்த வைட்டமின் வகையில் வைட்டமின் டி3 மற்றும் வைட்டமின் டி2 ஆகியவை மிக முக்கியக் கூறுகளாகும். போதுமான சூரிய ஒளி உடலுக்கு கிடைக்குமானால், கொலஸ்ட்ராலில் இருந்து வைட்டமின் டி-யை உடல் ஒருங்கிணைத்துக் கொள்ளும். இதன் காரணமாக, வைட்டமின் டி ‘சூரிய ஒளி வைட்டமின்’ என்றும் குறிப்பிடப்படுகிறது.

நோய் தடுப்பு வைட்டமின் டி, உடலில் அபரிமிதமாக இருந்தால், அது எலும்புருக்கி நோய் மட்டுமல்ல.  புற்றுநோய், இதயம் மற்றும் இரத்த நாளங்கள் சம்பந்தப்பட்ட நோய்கள், சிறுநீரக நோய், காசநோய், நிமோனியா, முடி உதிர்தல் மற்றும் மன அழுத்தம், ஈறு நோய்  போன்ற நோய்களை தடுக்கக் கூடியதாகும்.

வைட்டமின் டி. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, ஜலதோஷம்,  மற்றும் நிமோனியா காய்ச்சல் போன்றவற்றிற்கு எதிரான பாதுகாப்புக் கவசத்தை வழங்கக்கூடியதாகும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு உகந்தது. சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியுடன் கூடிய ஆரோக்கியமான குழந்தைகளின் உருவாக்கத்திற்கு மிகவும் முக்கியமானதானக உள்ள வைட்டமின் டி, குறைமாத பிரசவம் நிகழும் அபாயங்களையும் குறைக்க வல்லதாகும்.

மேலும், வைட்டமின் டி- யை சரியான அளவில் உட்கொண்டு வந்தால், கீழே தவறி விழுவது, எலும்பு முறிவுகள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் முதலாம் வகை சர்க்கரை நோய், போன்றவற்றால் ஏற்படும் காயங்களினால் உண்டாகக்கூடிய அபாயங்களை குறைக்கும். மேலும் உடலில் உண்டாகும் புண்களை விரைவில் ஆற்றக் கூடிய சக்தியும் கொண்டது வைட்டமின் டி.

 மேலே குறிப்பிட்ட 10 உணவுகளும் நமக்கு வைட்டமின்  சக்த்தை  அதிகம் தந்து. நம்மை பல்வேறு நோய்களிலிருந்து காக்கும்.

 நாளை.   இந்த வெய்யிலில் உடல் மட்டும் சூடாவது இல்லை. அதனால் மனமும் சூடாகிரது.

 உடல், மன சூட்டை  தணிக்க வழிகளை நாம் நாளை பாப்போம்.

Monday 4 May 2015

ஆஸ்மா, வீசிங், சைனஸ் முதலான சுவாச நோய்களுக்கு யோகா, மூலிகைகள்.



ஆஸ்மா, வீசிங், சைனஸ்  என்று சுவாசம் சம்பந்தமாக வரும்  எந்த  நோயுமே  இந்த உலகில் சரி செய்ய முடியாத விஷயம் இல்லை. அதற்க்கு  உதாரணமாக எனது தம்பியையே கூறலாம். மேலே இருப்பது  எனது தம்பியின் புகைப்படம்  தான்.


 16 வருடங்களுக்கு முன்.  பிறக்கும் பொழுதே இவனுடன் ஐந்து சத்ருக்கள் உடன் பிறந்தார்கள். அவை. ஆஸ்மா, வீசிங், சைனஸ்,  டிங்கு, எலும்புருக்கி நோய் எனப்படும்  TB . டிங்குவை உடனடியாக மருத்துவம் மூலம்  சரி செய்ய முடிந்தது. அனால்.  மீதி  நாலு   சத்ருக்களையும் அவ்வாறு அழிக்க  முடியவில்லை. ஆஸ்மா, வீசிங், சைனஸ். இந்த மூன்றில்  ஏதேனும் ஒன்று வந்தாலே. அது எவ்வளவு வேதனை. மூன்றும் ஒன்றாக. அதுவும் பச்சிளம் குழந்தைக்கு.  குறிப்பாக.  எலும்புருக்கி நோயால். வாழ்நாள் முழுக்க  எலும்பும், தோலுமாக பலவீனமாக  அவன் இருப்பானே என்று மிகுந்த கவலையில் ஆழ்ந்தேன்.


முதல் 12 வருடங்கள். நானும் எனது பெற்றோரும். தூங்கிய  இரவுகளை விட.  தூங்காத இரவுகளே அதிகம்.   நான்கு வருடங்களுக்கு முன். வெற்றி கரமாக எனது தம்பி அந்த நான்கு சத்ருக்களையும் கொன்று விட்டான். எவ்வாறு  .


தினமும்  தூதுவளை, துளசி. அவனது உணவில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் இடம் பிடித்தது. மற்றும். அவனது எலும்புருக்கி நோயை குணப்படுத்தும்,  எலும்பை  பலபடுத்தும் உணவுகள் அவனுக்கு கொடுக்கபட்டது. எலும்புருக்கி நோய்க்கு உண்டான உணவுகள், மூலிகைகள் குறித்து நாளை பாப்போம்.


நான் ஆதம்பாக்கத்தில் உள்ள. வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாழும் கலைமன்றத்தில்  மாணவனாக. சேர்ந்தேன். அங்கு. மற்றும் எனது தந்தையின் நண்பர்  கார்த்திக். போன்றோர்களிடம். யோகாசனங்களை கற்று கொண்டு. அவற்றில் எவை, எவை. சுவாச பிரச்சனைக்கான சிறந்த யோகாசனங்கள் என்பதை தேர்வு செய்து. அவற்றை எனது தம்பிக்கு சொல்லி கொடுத்தேன். அணைத்து. யோகாசனங்களுமே. சுவாசத்திற்கு நல்லது. அதில் முக்கியமாக. Breathing  exercise  எனப்படும் பிராணாயாம பயிற்ச்சி. அது நான் யோகா வகுபிற்க்கு செல்வதற்கு முன்பே. வீட்டில் கற்று தரப்பட்ட ஒன்று தான். ஆனால்?  எனது தம்பிக்கு இருந்த பிரச்சனைகளுக்கு.  பிராணாயாமம் மட்டும் பத்தாது. அதனால். அவனுடைய சுவாசம் சம்பந்தமான அணைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் மூன்று முக்கிய யோகாசனங்களை  அவனுக்கு கற்று தந்தேன்.


அவை.

  வஜ்ராசனம்.



 சுப்த வஜ்ராசனம்.



 ஹலாசனம்.




இவை மூன்றின் பலன்களையும் வெகு விரைவில் யூ  டியூப்பில் வீடியோக்களாக  வெளியிடுகிறேன். முழுமையான பலனை பெற. அருகில் உள்ள நல்ல யோகா ஆசிரியரை அணுகி நீங்கள் பயிற்ச்சி எடுத்து கொள்ளுதலே சிறந்தது.  எனது வீடியோ. ஒரு  மாதிரி. அவ்வளவே. ஏற்கனவே மாரைடைப்பை தடுக்கும் வழிமுறைகள் குறித்து இரண்டு வீடியோக்கள் அப்லோட் செய்து இருக்கிறேன். எழுத்து மூலம் சொல்லும் தகவல்களை. காணொளி வாயிலாக சொன்னால். தமிழ் படிக்க தெரியாதவர்களும் பயன் பெறுவார்கள் என்றாலும். எனக்கு. பேசுதலை விட. எழுதுவதில் ஆர்வம் அதிகம். பேச்சு பணியோடு வழக்கம் போல் எழுத்து பணியும் தொடரும்.


 நான் மேலே குறிப்பிட்ட மூன்று யோகாசனங்களில்.  சுப்த வஜ்ராசனம் எனப்படும் யோகா. சுவாச பிரச்சனை மட்டும் அல்ல. எலும்புகளை நன்கு பலப்படுத்துதல். அதில் உள்ள கோளாறுகளை சரி செய்தல். முதலியவற்றை செய்யும்.   வஜ்ராசனம் மட்டும்.  நீங்கள் கற்று கொள்ளாமல் இப்பொழுதே கூட புகைபடத்தில் இருப்பதை பார்த்து  முயற்ச்சி செய்யலாம். ஆனால்? சுப்த வஜ்ராசனம், ஹலாசனம் இரண்டையும். ஒரு நல்ல ஆசானிடம் பயிற்ச்சி எடுக்காமல் முயற்ச்சி செய்தால். உங்களுக்கு ஒழுங்காக உள்ள  எலும்பு கூட உடைந்து விடும். காரணம். இந்த இரண்டு ஆசனங்களையும் செய்வதற்கு. உடலில்  Flexibility தேவை. நீங்கள் முறையான நடன பயிற்ச்சி எடுத்து இருந்தால் கவலை இல்லை.


பிறக்கும் பொழுதே. எலும்புருக்கி நோயுடன் பிறந்த என் தம்பி. இன்று. 16 வயதினில். 6 அடிக்கும் மேல் உயரம். 15 இஞ்சில் ஆர்ம்ஸ். அகன்ற மார்பு. அவன் உயரத்திற்கு ஏற்ற எடை என்று. ராஜகுமாரன் போல் இருக்கிறான். கராத்தே, சிலம்பம் இரண்டு பயிற்சிகளும் முறைப்படி கற்று இருக்கிறான்.


 அவன் ஒழுங்காக ஒத்துழைத்ததால் தான்.  என்னால் அவனுக்கு யோகா பயிற்ச்சி. அதுவும். அப்பொழுது அவன் உடல் இருந்த நிலைக்கு கடினமான யோகா பயிற்ச்சி கொடுக்க முடிந்தது. அவனுடைய விடா முயற்ச்சி, தன்னம்பிக்கை,  மருந்து மாத்திரைகளால் தீர்க்கவே முடியாத  நோய்களை. மனம் என்னும் மந்திர சக்தி கொண்டு. அந்த சக்தியை உடல் என்னும் எந்திரத்தில் செலுத்தி. எவ்வாறேனும். தீர்க்க முடியாத நோய்களை தீர்த்து கட்ட வேண்டும் என்று அவனுக்கு இருந்த அந்த வெறியே. இன்று நிரந்தர தீர்வை கொடுத்து இருக்கிறது.


சுவாசம் சம்பந்தமான கோளாறு  இருப்பவர்கள் தினமும் துளசி நீர் அருந்த வேண்டும். பெருமாள் கோவிலில் ஒரு உத்தரிணி, இரண்டு உத்தரிணி அல்ல. எட்டு மணி நேரம் தாமிர பாத்திரத்தில். துளசியை நன்கு  ஊர வெய்த்து. 1, 2 டம்பளர் வெறும் வயிற்றில் தொடர்ந்து 48 நாட்கள் குடிக்க வேண்டும். மற்றும்  தூதுவளையை தினமும் சேர்த்து கொள்ளவும். அதோடு  சரகர் சொன்ன 10 மூலிகைகள். 2/5/2015  செய்த பதிவை பார்க்கவும்.


 இவற்றை செய்தால். சுவாசம் சம்பந்தமான அணைத்து கோளாறுகளும் நிச்சயம் நீங்கும்.


 நாளை எலும்பு உருக்கி நோய்க்கான தீர்வை பார்க்கலாம்.


          

Herbal Remedys and Technique, Exercise for Heart Attack.


Sunday 3 May 2015

பல ரோகம் போக்கும் தங்க மரம்




ஒரு முக்கிய அறிவிப்பு.

இன்று இதைய நோய் சம்பந்தமான யூ  டியூப் வீடியோவை பார்த்து பல நண்பர்கள் பாராட்டினார்கள். ஆனாலும் பேச்சில் உள்ள அளவு எனக்கு எழுத்தில் திறமை இல்லை என்பது உண்மை தான். தமிழே எழுத படிக்க  தெரியாத பல இளைய தலை முறையினர் இருப்பதால். அவர்களும் பயன்   பெற வேண்டும் என்பதற்காகவே. இந்த யூ  டியூப்  சேவை. யூ  டியூப்  வீடியோவில். நான் எழுத்தில் சொல்லாத தகவல்கள் நிறைய வரும்.

 தமிழை படிப்பதை விட. தமிழ் வீடியோவை பார்ப்பது எளிது அல்லவா.

  ஆனாலும். எனக்கு பேச்சில் விட எழுத்தில் தான் அதிக ஆர்வம். வழக்கம் போல் என்னுடைய எழுத்து பனி தொடரும். கூடுதலாக பேச்சு  பணி. அவ்வளவே.

 நேற்றைய பதிவின் தொடர்ச்சியை பாப்போம்.

ஒரு மருத்துவன் நோயாளியை எவ்வாறு நடத்த வேண்டும் என்கின்ற கேள்விக்கு சரகர் கூறி இருக்கும் விடை
.
தம் புத்ர வத் உபாச்சறேத் -நோயாளிகளை உன் சொந்த பிள்ளைகளை போல் கவனி .
இதற்க்கு மேல் அடுத்த கட்டம் -மம பூத தயா பிரதி -நீ உன்னை எவ்வாறு நடத்துவாயோ அவ்வாறு உன்னிடம் வரும் அனைத்து ஜீவன்களையும் நடத்து.

இதை விட சிறந்த கருத்து எதுவுமே இல்லை ,என்னை நெகிழ செய்த கருத்து .கண்களில் நீர் பணிக்கும் .எண்ணி பாருங்கள் ,ஒரு மருத்துவர் அதிக வீர்யமுள்ள மருந்துகளை ,ஒரே பெயருள்ள வெவ்வேறு கம்பெனி மருந்துகளை ,இல்லை தேவயற்ற பரிசோதனைகளை ,இல்லை சந்தைக்கே வராத அல்லது சந்தையில் தடை செய்ய பட்ட ஒரு மருந்தை தன் குழந்தைக்கோ இல்லை தனக்கோ கொடுக்க முயல்வாரா? நிச்சயம் கிடையாது .நோயாளி என்பவன் வேறு யாரோ என்பதால் தான் இந்த அசிரதை அஜாக்கிரதை எல்லாம் .எத்தனை பெரிய தத்துவத்தை எளிமையாக ஒரு வரியில் அடக்கி விட்டார்கள் !!
இப்படி ஒவ்வொரு மருத்துவரும் எண்ணி மருத்துவம் செய்தால் உலகம் எத்தனை அற்புதமாக இருக்கும் .!!

சரக சம்ஹீதையில் கொன்ணை அத்யாயம்.

கொன்ணை மரம். இதன் ஆங்கில பெயர் Golden Shower Tree. Botanical Name [CASSIA FISTULA] இதன் மருத்துவ பயன்பாடுகள் பற்றி சரகர்.
சரகராலும், சுச்ரூதாவாலும் பல தோல் குஷ்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டது. சரகர் எவ்வாறு சர்ம நோய்களுக்கு இந்த மருந்து பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி, ஒரு அத்தியாயமே எழுதியிருக்கிறார். தன்வந்திரி நிகண்டு, தோல் வியாதிகள், ஜுரம் இவற்றுக்கு மருந்தாக, கொன்னையை குறிப்பிடுகிறது. இதன் இலைகள் ஜூரத்தை குறைக்கவும், பூக்களும் விதைகளும் பித்தத்தையும், கபத்தையும் குறைக்கவும், பழக்கதுப்பு, பசியை உண்டாக்கும் என்றும் ப்ருஹத் நிகண்டு ரத்னாகரா தெரிவிக்கிறது.

சரகர் கொன்னை பழ கதுப்பை, 12 வகையான மருந்தாக தயாரிக்கும் விதத்தை கூறியிருக்கிறார்.

கொன்னை தோல் வியாதிகள், உடல்பருமன், கொலஸ்ட்ரால் குறைப்பு இவற்றுக்கு அருமருந்து, குஷ்டம், வெண் குஷ்டம், போன்ற சர்ம வியாதிகளுக்கு பயன்படும்.

கொன்னை மரப்பட்டை வலிகளை குறைக்கவும், தொற்றுநோய்கள் அண்டாமலும் தாக்கும்.

பாக்டீரியா தொற்றுகளை தடுக்கும் சக்தி உடையது. ஷயரோக கிருமியான மைக்கோபேக்டீரியம் டியூபர்க்ளோசிஸ் என்றதை அழிக்கும். விதைகளின் சாரம் சால்மோனெல்ல டைஃபி, இவற்றை அழிக்கும். பழக்கதுப்பு சிறப்பான கிருமி, நுண்ணுயிர் நாசினி.

வேர்ப்பட்டையிலிருந்து எடுக்கப்படும் பால், மூட்டு வலி, ஆர்த்தரைடீஸ், சோரியாஸிஸ்க்கும் நல்ல மருந்து.

தோலில் அரிப்பு, நமைச்சல் இவற்றை போக்கும்

இதயத்திற்கு நல்ல டானிக். நீரிழிவு, மூட்டு வலி மலச்சிக்கல், கல்லீரல் வீக்கம் இவற்றுக்கெல்லாம் மருந்தாக பயன்படுகிறது.

கொன்னை மரப்பட்டை வைரஸ் கிருமிகளின் எதிரி. அதே போல் பழக்கதுப்பு பாக்டீரியாவை அழிக்கும். விதைகளின் பொடி அமீபா நுண்ணுயிர்களை அழிக்கும். எலிகளை வைத்து நடத்திய பரிசோதனைகளில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தவிர கொலஸ்ட்ராலை குறைக்கும் குணமும் உடையது கொன்னை. கொன்னை இலைகள் டயாபடீஸ் உள்ள எலிகளுக்கு கொடுத்த போது, சர்க்கரை அளவு குறைவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

பழக்கதுப்பு, கொன்னையின் மற்ற பாகங்களை விட, சிறந்த கிருமி நாசினி, ஃபங்கஸ் எனப்படும் நுண்ணுயிர்களுக்கு கொன்னை மர வேர் எதிரி.
கொன்னை பழம் உலர வைத்தது பாதுகாப்பான மலமிளக்கி.

உபயோகம்

கொன்னை இலைகொழுந்திலிருந்து பிழிந்த சாற்றில் 150 மி.லி. எடுத்து, சர்க்கரையுடன் சேர்த்து உட்கொள்ள, கிருமி, திமிர்ப்பூச்சி வெளியேறும்.

இலையை அரைத்து படர்தாமரைக்கு பூசலாம்.

கொன்னை பூவுடன், பழச்சாறு விட்டு அரைத்து, உடம்பில் தேய்த்து குளிக்க, தேமல், சொறி, கரப்பான் நீங்கும்

பூவை குடிநீரில் சேர்த்து குடிக்க வயிற்றுவலி, குடல் நோய்கள் நீங்கும்.

பூவை தேனில் ஊறவைத்து கொடுக்க காலை வெளிஏற வேண்டியவை ஒழுங்காக வெளிஏறும். . பாலுடன் பூவைக் கலந்து காய்ச்சி உண்ண உள் உறுப்புக்களை வலிமைப்படுத்தும். மெலிந்தவர்களுக்கு பலன் தரும்.

மரப்பட்டையின் கஷாயம் (60 மிலி), தேன் (5 மி.லி.) கலந்து ஒரு நாளைக்கு இருவேளை, 1-2 மாதங்கள் உட்கொண்டு வர கொலஸ்ட்ரால், அதிக உடல்பருமன் குறையும்.

மரப்பட்டை கூழ் 15 கிராம் அளவில், 1 மாதம் உண்டுவர மூட்டுவலி, வயிற்றுப் பூச்சிகள் நீங்கும

கொழுந்து இலைகளின் கூழுடன் 5-15 கிராம் மோருடன் 1 மாதம் சாப்பிட்டு வர உடல் பருமன் குறையும். இதே போல் பூவுடன், மோர் சேர்த்து உட்கொள்ள, வயிற்றுப்புண்கள் குணமாகும். இவ்வளவு பயன்களை தரும் கொன்னை மரம், ராஜமரம் என்று ஆயுர்வேதத்தில் குறிப்பிடுவது ஆச்சரியமல்ல.

ஒரு மருத்துவன் நோயாளியை எவ்வாறு நடத்த வேண்டும் என்கின்ற கேள்விக்கு சரகர் கூறி இருக்கும் விடை
.
தம் புத்ர வத் உபாச்சறேத் -நோயாளிகளை உன் சொந்த பிள்ளைகளை போல் கவனி .
இதற்க்கு மேல் அடுத்த கட்டம் -மம பூத தயா பிரதி -நீ உன்னை எவ்வாறு நடத்துவாயோ அவ்வாறு உன்னிடம் வரும் அனைத்து ஜீவன்களையும் நடத்து.

இதை விட சிறந்த கருத்து எதுவுமே இல்லை ,என்னை நெகிழ செய்த கருத்து .கண்களில் நீர் பணிக்கும் .எண்ணி பாருங்கள் ,ஒரு மருத்துவர் அதிக வீர்யமுள்ள மருந்துகளை ,ஒரே பெயருள்ள வெவ்வேறு கம்பெனி மருந்துகளை ,இல்லை தேவயற்ற பரிசோதனைகளை ,இல்லை சந்தைக்கே வராத அல்லது சந்தையில் தடை செய்ய பட்ட ஒரு மருந்தை தன் குழந்தைக்கோ இல்லை தனக்கோ கொடுக்க முயல்வாரா? நிச்சயம் கிடையாது .நோயாளி என்பவன் வேறு யாரோ என்பதால் தான் இந்த அசிரதை அஜாக்கிரதை எல்லாம் .எத்தனை பெரிய தத்துவத்தை எளிமையாக ஒரு வரியில் அடக்கி விட்டார்கள் !!
இப்படி ஒவ்வொரு மருத்துவரும் எண்ணி மருத்துவம் செய்தால் உலகம் எத்தனை அற்புதமாக இருக்கும் .!!

சரக சம்ஹீதையில் கொன்ணை அத்யாயம்.

கொன்ணை மரம். இதன் ஆங்கில பெயர் Golden Shower Tree. Botanical Name [CASSIA FISTULA] இதன் மருத்துவ பயன்பாடுகள் பற்றி சரகர்.
சரகராலும், சுச்ரூதாவாலும் பல தோல் குஷ்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டது. சரகர் எவ்வாறு சர்ம நோய்களுக்கு இந்த மருந்து பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி, ஒரு அத்தியாயமே எழுதியிருக்கிறார். தன்வந்திரி நிகண்டு, தோல் வியாதிகள், ஜுரம் இவற்றுக்கு மருந்தாக, கொன்னையை குறிப்பிடுகிறது. இதன் இலைகள் ஜூரத்தை குறைக்கவும், பூக்களும் விதைகளும் பித்தத்தையும், கபத்தையும் குறைக்கவும், பழக்கதுப்பு, பசியை உண்டாக்கும் என்றும் ப்ருஹத் நிகண்டு ரத்னாகரா தெரிவிக்கிறது.

சரகர் கொன்னை பழ கதுப்பை, 12 வகையான மருந்தாக தயாரிக்கும் விதத்தை கூறியிருக்கிறார்.

கொன்னை தோல் வியாதிகள், உடல்பருமன், கொலஸ்ட்ரால் குறைப்பு இவற்றுக்கு அருமருந்து, குஷ்டம், வெண் குஷ்டம், போன்ற சர்ம வியாதிகளுக்கு பயன்படும்.

கொன்னை மரப்பட்டை வலிகளை குறைக்கவும், தொற்றுநோய்கள் அண்டாமலும் தாக்கும்.

பாக்டீரியா தொற்றுகளை தடுக்கும் சக்தி உடையது. ஷயரோக கிருமியான மைக்கோபேக்டீரியம் டியூபர்க்ளோசிஸ் என்றதை அழிக்கும். விதைகளின் சாரம் சால்மோனெல்ல டைஃபி, இவற்றை அழிக்கும். பழக்கதுப்பு சிறப்பான கிருமி, நுண்ணுயிர் நாசினி.

வேர்ப்பட்டையிலிருந்து எடுக்கப்படும் பால், மூட்டு வலி, ஆர்த்தரைடீஸ், சோரியாஸிஸ்க்கும் நல்ல மருந்து.

தோலில் அரிப்பு, நமைச்சல் இவற்றை போக்கும்

இதயத்திற்கு நல்ல டானிக். நீரிழிவு, மூட்டு வலி மலச்சிக்கல், கல்லீரல் வீக்கம் இவற்றுக்கெல்லாம் மருந்தாக பயன்படுகிறது.

கொன்னை மரப்பட்டை வைரஸ் கிருமிகளின் எதிரி. அதே போல் பழக்கதுப்பு பாக்டீரியாவை அழிக்கும். விதைகளின் பொடி அமீபா நுண்ணுயிர்களை அழிக்கும். எலிகளை வைத்து நடத்திய பரிசோதனைகளில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தவிர கொலஸ்ட்ராலை குறைக்கும் குணமும் உடையது கொன்னை. கொன்னை இலைகள் டயாபடீஸ் உள்ள எலிகளுக்கு கொடுத்த போது, சர்க்கரை அளவு குறைவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

பழக்கதுப்பு, கொன்னையின் மற்ற பாகங்களை விட, சிறந்த கிருமி நாசினி, ஃபங்கஸ் எனப்படும் நுண்ணுயிர்களுக்கு கொன்னை மர வேர் எதிரி.
கொன்னை பழம் உலர வைத்தது பாதுகாப்பான மலமிளக்கி.

உபயோகம்

கொன்னை இலைகொழுந்திலிருந்து பிழிந்த சாற்றில் 150 மி.லி. எடுத்து, சர்க்கரையுடன் சேர்த்து உட்கொள்ள, கிருமி, திமிர்ப்பூச்சி வெளியேறும்.

இலையை அரைத்து படர்தாமரைக்கு பூசலாம்.

கொன்னை பூவுடன், பழச்சாறு விட்டு அரைத்து, உடம்பில் தேய்த்து குளிக்க, தேமல், சொறி, கரப்பான் நீங்கும்

பூவை குடிநீரில் சேர்த்து குடிக்க வயிற்றுவலி, குடல் நோய்கள் நீங்கும்.

பூவை தேனில் ஊறவைத்து கொடுக்க காலை வெளிஏற வேண்டியவை ஒழுங்காக வெளிஏறும். . பாலுடன் பூவைக் கலந்து காய்ச்சி உண்ண உள் உறுப்புக்களை வலிமைப்படுத்தும். மெலிந்தவர்களுக்கு பலன் தரும்.

மரப்பட்டையின் கஷாயம் (60 மிலி), தேன் (5 மி.லி.) கலந்து ஒரு நாளைக்கு இருவேளை, 1-2 மாதங்கள் உட்கொண்டு வர கொலஸ்ட்ரால், அதிக உடல்பருமன் குறையும்.

மரப்பட்டை கூழ் 15 கிராம் அளவில், 1 மாதம் உண்டுவர மூட்டுவலி, வயிற்றுப் பூச்சிகள் நீங்கும

கொழுந்து இலைகளின் கூழுடன் 5-15 கிராம் மோருடன் 1 மாதம் சாப்பிட்டு வர உடல் பருமன் குறையும். இதே போல் பூவுடன், மோர் சேர்த்து உட்கொள்ள, வயிற்றுப்புண்கள் குணமாகும். இவ்வளவு பயன்களை தரும் கொன்னை மரம், ராஜமரம் என்று ஆயுர்வேதத்தில் குறிப்பிடுவது ஆச்சரியமல்ல.

 அடியேனுக்கு தேவையான தகவல்களை தந்த. Swamis  Indology  Blog  உரிமையாளர் சுவாமிநாதன் மற்றும் அமானுஷ்யம் blog  உரிமையாளர் யோகி குரு முதலானோர்க்கு  நன்றி. எழுத்தாளார்  ஜெய மோகன் அவர்களின் நுல்  மூலம்  நான்  அதிகம் சரகர் அவர்களை பற்றி தெரிந்து கொண்டேன். அவரின் நுலே. என்னை சரக  சம்ஹிதா வாங்க தூண்டியது.

 நாளை ஆஸ்மா, வீஸிங்  முதளியவற்றிர்கான நிரந்தர தீர்வை பாப்போம்.

Saturday 2 May 2015

ஆச்மா நோய் தீர. சரகர் சொன்ன பத்து மூலிகைகள்.



புனித பாரத தேசத்தில் பிறந்த ஒவ்வொருவரும் அவசியம் சரகர், சுச்ருதா  போன்ற மருத்துவ ஜாம்பவான்களின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் பாரத திருநாட்டின் பழமையான மருத்துவர்கள் மட்டும் அல்ல. ஒவ்வொரு இந்தியனும் பெருமை படும் படி. மனித சமுதாயதிற்கு  தொண்டு செய்த  அருமையான மருத்துவர்களும் கூட.

  சரகர் யார் என்பதை இன்று முதலில் பாப்போம். அதற்க்கு    முன். சரகர் ஆஸ்மா நோயை குணப்படுத்த கூரிய  மருத்துவ முறை பற்றி நாம் முதலில் பாப்போம்.
சரகர் சொன்ன ஆஸ்துமாவிற்கான பத்து மூலிகைகள்

பூலாங்கிழங்கு, புஷ்கரமூலம், புளிவஞ்சி, ஏலரிசி, பெருங்காயம், அகில், துளசி, கீழாநெல்லி, கீரைப்பாலை, காட்டுக் கோரை கிழங்கு. இந்த பத்தையும்  ஒன்றாக கலந்து தினமும் உண்டால். ஆஸ்மா வெகு விரைவில் குணம் ஆகும். ஆஸ்மாவிற்கு இதே போல் நிறைய மூலிகைகள், மருந்துகள் இருக்கிறது. அதை பார்பதற்க்கு  முன். சரகரின் வாழ்க்கை வரலாறு. அவர் மருத்துவ உலகிற்க்கு கூறிய  அறிவுரைகளை பாப்போம்.
. இவரது சரக சம்ஹிதை 120 அத்தியாயங்களைக் கொண்டது.

சரகர் ஆத்ரேய முனிவரின் சீடர். அக்னி வேஸர் எழுதிய நூலை செம்மை படுத்தி இவர் சரக சம்ஹீதை எழுதினார் என்று சொல்லப்படுகிறது. சரகர் ஆயுர்வேதத்தைப் பரப்பியவர்களுள் முக்கியமான ஒருவர். சரகர்

சரகரின் காலம்

கி.பி. முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டுகள் என்று கருதப்படுகிறது. ஆனால் இந்த வாதத்தை மறுக்கும் அறிஞர்கள் சரகர் கிறிஸ்து பிறப்பதற்கு முன் பல நூற்றாண்டு காலம் முன்னதாக வாழ்ந்தவர் என்று உறுதி படக் கூறுகிறார்கள். ஆத்ரேய மஹரிஷியின் காலத்தை பல நூற்றாண்டுகாலத்திற்கு முன்பேயே நிர்ணயிக்க வேண்டியிருப்பதால் சரகரின் காலமும் மிக மிக முற்பட்டதாக இருக்க வேண்டும் என்பது இவர்களின் வாதம். ஆத்ரேயர் புராண கால முனிவர். அவர் காலத்தில் புத்தர் இல்லை. ஆனால் சரக சம்ஹிதாவில் ஹிந்து வேதங்களில் கூறப்பட்ட மருத்துவ முறைகள் கூறப்பட்டாலும் சில இடங்களில் புத்த மத சித்தாந்தங்களும் பேசப்படுகிறது. புத்தர் 2600 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர். இவர் காலத்தில் தான் சுஷ்ருதாவும் வாழ்ந்தார். சரகர் புத்தர் வாழ்ந்த காலத்துக்கும் 300 ஆண்டுகள் முற்பட்டவர். என்று ஒரு சிலர் சொல்கிறார்கள்.இவர் நூலில் புத்த மத சித்தாங்களும் சில இடங்களில் சொல்லப்பட்டு இருப்பதால் அவர் புத்தருக்கு பின் வந்தவர். ஆத்ரேய முனிவரின் சீடர் என்பது கற்ப்பனை என்று ஆகி விடுகிறது.

சரகரது நூலில் புத்த மத சித்தாந்தங்கள் வந்ததற்க்கு சில ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் பின்னணி.

சரகரது சம்ஹீதையில் மூன்றில் ஒரு பங்கு கிடைக்காமல் போக இந்த குறைபாட்டை 4ம் நூற்றாண்டில் செரி செய்தவர் த்ருதபாலா என்கிற புத்த துறவி. இவர் பாடுபட்டு பல இடங்களிலிருந்து செய்திகளை சேகரித்து சரகசம்ஹிதையை பூர்த்தி செய்தார். அதற்கும் முன்னே கி.மு. 323 ஆண்டில் நாகார்ஜூனா எனும் புத்த துறவி திபெத்திய மொழியில் மொழி பெயர்த்தார். கி கா யீ மற்றும் டான் ஐயவோ ஆகிய இரு சீன தேசத்து புத்த துறவிகள் கி.பி. 472இந்த நூலை மொழிபெயர்த்தனர். அவ்வாறு செய்யும் பொழுது இவர்களில் யாரேனும் ஒருவரோ இல்லை அனைவருமே அவர்களது சொந்த சரக்கை கொஞ்சும் இதில் கலந்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

சரகர் தனது குருகுலத்தை நடத்தி வந்த விதம், மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் திறமை அவரது சம்ஹிதையிலிருந்து புரிகிறது. அவர் பட்டிமன்றம், விவாதங்கள் தர்க்கங்கள் மூலம் மருத்துவத்தை சொல்லி கொடுத்தார். க்ரூப் டிஸ்கஶந்ஸ் எனப்படும் இன்றைய முறையை சரகர் பின்பற்றியிருக்கிறார்.

சரகர் கண்டிப்பான ஆனால் அறிவு மிகுந்த ஆசிரியர். அவர் மருத்துவர்களை பற்றி சொன்னது.

“அறிவில்லா வைத்தியரிடம் சிகிச்சை பெறுவதை விட இறப்பது மேல்”
“நோயாளிகளை குணப்படுத்த நால்வர் சிறப்பாக அமைய வேண்டும். நால்வர்-மருத்துவர், மருந்துகள், உதவியாளர், நோயாளி” சரகர் கொடுத்த கல்வி பயிற்சி 7 வருடங்களுக்கு எட்டுவகை மருத்துவ முறைகள் கற்றுத்தரப்படும். அதன்பின் Hippocratesன் சத்ய பிரமாணம் போலவே (இந்த யுக டாக்டர்கள் எடுக்கும் சத்ய பிரமாணம்). சரகரும் ஒரு சத்திய பிரமாணத்தை எழுதியிருக்கிறார். எப்படி ஒரு மருத்துவர் பிரசவம் பார்க்க வேண்டும் என்று மட்டும் இவர் சொல்லாமல் பிரசவத்திற்கு பின் கவனிக்கவேண்டியவை பற்றியும் சொல்லி இருக்கிறார்.

மேலும் சரகர் மருத்துவ உலகிற்க்கு சொன்ன அறிவுரைகளை நாம் நாளை பார்ப்போம். அவை எக்காலத்திற்கும் பொருந்த கூடியவை. சரக சம்ஹிதாவில் ஒரு மரத்திற்க்கு அவர் அதிக முக்கியத்துவம் கொடுத்து உள்ளார். அது எந்த? மரம்.

நாளை.  Heart Attack.  நமது முறையற்ற உணவு, கவலையின் பிரதி பலிப்பாக  இன்று இந்த நோய் அதிகம் அதிகரித்து உள்ளது. இது வராமல் தடுக்கவும், தீர்க்கவும் வழிகளை பற்றிய வீடியோ தனியாக வெளி ஆகும். அதை  தவிர்த்து. இந்த பதிவின் தொடர்ச்சி நாளை வெளி ஆகும்.


Friday 1 May 2015

உங்கள் பித்தம் எங்கள் பாக்கியம்





கரிசலாங்கண்ணி கீரை,  சீரகம், தனியா, எலுமிச்சை, மஞ்சள், இஞ்சி  இவையெல்லாம் பித்தம் தணிக்கும்.

மாதுளம்பழம் தினமும் சாப்பிட்டு வர அறிவு விருத்தி, ஞாபக சக்தி எலும்பு வளர்ச்சி, பித்த சம்பந்தமான வியாதி நீங்கும்

  நாம் தினமும் உணவுகளில் இஞ்சிக்கு பிரதான இடம் கொடுக்க வேண்டும்.  சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை. சுப்ரமன்யதிற்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை  என்பது பழமொழி. மீன் காய்ந்தால் கருவாடு.   இஞ்சி காய்ந்தால் சுக்கு.

சுக்கும், பனை வெல்லமும் போட்டு காய்ச்சிய நீரை நித்தமும்  குடித்து வந்தால். பித்த கோளாறு மொத்தமாக தீரும்.

 எலுமிச்சை சாறு, இஞ்சி சாறு, அவற்றோடு ஜீரகம், தேன்  நான்கையும் கலந்து தினமும் ஒரு வேளையோ, இரண்டு வேளையோ குடித்து  வரவும்.


இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட. அது வாத கோளாறையும் ஓரளவு சீர் செய்யும்.


இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோலை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து, அத்துடன் சுத்தமான தேனையும் அதே அளவிற்கு சேர்த்து நான்கு நாள் கழித்து தினமும் ஒன்றிரண்டு துண்டுகளாக ஒரு மண்டலத்திற்கு சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் அடைந்து, பித்தம் முழுவதுமாக நீக்கப்பட்டு விடும். ஆயுள் அதிகரிப்பதுடன் முகப்பொலிவும், அழகும் கூடும்.

 பித்த பாதிப்பிர்க்கு இஞ்சிக்கு இணையாக மருந்து இந்த உலகில் இல்லை. பித்தத்தை சரி செய்ய நாம்  எந்த மருந்து, மூலிகையை, உணவு பொருளை   எடுத்து கொண்டாலும். அவற்றோடு இஞ்சி சேர்த்து கொண்டால் தான். அது  வேலை செய்யும். ஆனால்.  இஞ்சி சிங்கம் மாதிரி சிங்கிளா இருந்தே பித்தத்தை சரி செய்யும். இஞ்சியின் காரத்தை நாம் தாக்கு பிடிக்க தேன்  மட்டுமே தேவை படுகிறது.


கெட்ட  கொழுப்பிற்கு  இஞ்சி ரொம்ப...... கெட்டது.  இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொப்பை எனும் பெருவயிறு கரைந்து விடும்.

இஞ்சி குறித்த. எனது யூ  டியூப்  வீடியோ ஒன்று. வெகு விரைவில் வெளி ஆகும்.


 வெகு நாள் முன் படித்த ஒரு டாக்டர் ஜோக். ஒரு சித்த  வைத்தியர் வீட்டு  வாசலில் உள்ள பலகை.

  உங்கள் பித்தம், எங்கள்  பாக்கியம்.

  பின் குறிப்பு-  நான் ஜோக்னு  சொன்னேன்கர்துக்காக  சிரிப்பே வராம கஷ்டப்பட்டு சிரிக்க  வேண்டாம். சிரிப்பு வந்தால் சிரிங்க.

 நாளை-  ஆஸ்மா, வீசிங் முதலான சுவாச பிரச்சனைகளுக்கு தீர்வு.




Thursday 30 April 2015

வாதம், பித்தம், கபம். மூன்றையும் சீராக வெய்க்க சீராண வழி





பிரண்டை.

வாதம், பித்தம், கபம். மூன்றையும்  சீரான அளவில் வெய்க்கும்.  இதை எவ்வாறு பயன்படுத்துவது.

  ஒரு தேங்காய் சட்னி, புதினா சட்னி, தக்காளி சட்னி போன்ற சட்னிகளை செய்வதற்க்கு பயன்படுத்தும். மிளகாய், உப்பு, புளி, உளுத்தம் பருப்பு போன்றவை தான் இதற்க்கும்  பயன் படுத்த வேண்டும். பிரண்டையை சட்னியாக, தொகையலாக  பயன் படுத்தலாம்.  பொதுவாக இதை சமையலில் அதிகம் சேர்த்து கொள்ள மாட்டார்கள். சேர்த்தால் நல்லது.






  வாகை பூ-    ஆன்மீக சிறப்பு,  வரலாற்று சிறப்பு, அதீத மருத்துவ சிறப்பு வாய்ந்த பூ. சங்ககாலத்தில் போரில் வெற்றிபெறும் வீரர்களுக்கு வாகை மலர் சூட்டப்பட்டு வெற்றிக் களிப்பை பகிர்ந்ததாக தமிழ் இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன. "வெற்றி வாகை சூடினான்" எனும் தொடர் இன்னமும் வழக்கிலுள்ளது. இது அதீத மருத்துவ குணம் உடையது. வாகை மர‌த்‌தி‌ன் ‌பி‌சி‌ன், மர‌ப் ப‌ட்டை, பூ, ‌விதை, இலை என அனை‌த்‌தி‌ற்கு‌ம் மரு‌த்துவ குண‌ங்க‌ள் உ‌ள்ளன. வாகை‌யி‌ல் புரத‌ச் ச‌த்து, கா‌ல்‌சிய‌ம், பா‌ஸ்பர‌ஸ், சோடிய‌ம், பொ‌ட்டா‌சிய‌ம், மெ‌‌க்‌னீ‌சிய‌ம் ஆ‌கிய ச‌த்து‌க்க‌ள் ‌நிறை‌ந்து காண‌ப்படு‌கி‌ன்றன.வாகை‌ப் பூவை சேக‌ரி‌த்து ‌நீ‌ர்‌வி‌ட்டு‌க் கா‌ய்‌ச்‌சி பா‌தியளவாக வ‌ற்‌றியது‌ம் வடிக‌ட்டி குடி‌த்து வர. வாதம், பித்தம், கபம் மூன்றும்  உடலில் சம நிலைக்கு வரும்.  விஷத்தை முறிக்கும் சக்தியும் இதற்க்கு  உண்டு.


Wednesday 29 April 2015

80 வகை வாத நோய்களும். அவற்றை தீர்க்கும் மூலிகைகளும்.


மனிதனின் உடலில் வாதம், பித்தம், கபம் மூன்றும்  இருக்க வேண்டும். ஆனால்?  சரியான அளவில் இருக்க வேண்டும். நமது உடலிலே நீரும்  இருக்கிறது,  நெருப்பும் இருக்கிறது. இனிப்பும்  இருக்கிறது, கசப்பும் இருக்கிறது. ஆனால் எல்லாம் சரியான அளவில் இருக்க வேண்டும். எதுவுமே கூடினாலும், குறைந்தாலும் பிரச்சனையே. வாதம் அதிகரித்தால் உடல் வலி. பித்தம் அதிகரித்தால், வாந்தி, மயக்கம், தூக்கமின்மை போன்ற நோய்கள். கபம் அதிகரித்தால் அடிக்கடி  சளி தொல்லை வரும்.

 ஆயுர்வேத மருத்துவர் மொஹமத் அலி அவர்கள்.


காலம் போன கடைசியில் வாதம் வந்து வாய்த்ததே என்பது கிராமத்துப் பழமொழி. ஆம் வயது முதிர்ந்து நாடி தளர்ந்து உடல் ஒடுங்கிய வேளை இது. இந்த நேரத்தில் வாதம் வேறு வந்து வாய்த்துவிட்டதே என்ற வேதனையின் பிரதிபலிப்பே இந்தப் பழமொழியாகும்.

உடலில் உண்டாகும் பிணிகள் 4448 என்று சித்த மருத்துவம் சொல்கிறது. இதில் வாதம், என்பது 80 வகை என்று வரையறுத்துக் கூறப்பட் டுள்ளது. இவற்றின் குணங்களைத் துல்லியமாக விளக்குகிறது. யூகிமுனி வைத்திய காவியம் என்னும் சித்தர் நூல்.

வாதநோய் தாக்கும் இடங்களைப் பொறுத்து அது வெவ்வேறு பெயர்களைப் பெறுகின்றது. உதாரணமாக மூட்டுகளைத் தாக்கினால் மூட்டுவாதம் என்றும், முகத்தைத் தாக்கி முகம் கோணிக் கொண்டால் முக வாதம் என்றும், சர்வ அங்கங்களையும் தாக்கினால் சர்வாங்க வாதம் என்றும் பெயர்களைப் பெறுகிறது. இவ்வாறாக 80 வகை வாதங்களில் மனிதனை அதிகமாகத் தாக்குவது முடக்குவாதம், பக்கவாதம் எனும் இருவகை வாத நோய்களாகும். ஏனெனில் வாத நோய்களிலேயே மூட்டுகள் அதிகமாகப் பாதிக்கப்பட்டு மனிதனின் இயக்கங்கள் அனைத்தையுமே முடக்கி அவனைச் செயலற்றவனாக்கி விடுவதே முடக்குவாதம்.


நரம்புகள் பாதிக்கப்பட்டு உறுப்புகளை உணர்விழக்கச் செய்து மனிதனைச் செயலற்றவனாக்கி விடுகிறது பக்கவாதம்.


இந்த இருவித நோய்களுமே மனிதனை அணுவணுவாகச் சித்திரவதை செய்யும் நோய்களாகும்.

முடக்குவாத நோயும் நிவாரணமும்.

முடக்குவாதம் என்பது உஷ்ணம் மிகுதியாலோ கிருமித் தொற்றுகளாலோ உடலில் பிரிக்கப்பட வேண்டிய நீர். உடல் அங்கங்களின் மூட்டுகளில் தங்கி இணைப்புத் தசைகளை வீங்கச் செய்து மிகுந்த வலி தரும். தொடர்ந்து காய்ச்சல் அதனால் உடலை அசைக்க முடியாத தன்மையே முடக்கு வாதம். சுருங்கச் சொன்னால் மனிதனின் இயக்கங்கள் அனைத்தையுமே முடக்கி வைப்பதே முடக்கு வாதம்.

முடக்குவாத வியாதியின் ஆரம்பத்தில் சில சமயம் தொண்டை பாதிக்கப்படுகிறது. பின்பு எலும்பு சந்துகள் சிவந்து வீங்கி வலியுண்டாகிப் படிப்படியாக பெரிய மற்றும் சிறிய மூட்டுகளையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. அதனால் காய்ச்சல், வாந்தி, மயக்கம், உடம்புப் பெருக்கம் உண்டாகும். உட்கார்ந்தால் எழ முடியாது. அசைந்தால் உயிர் போவது போல் வலிக்கும். எந்த வேலையிலும் கவனம் செல்லாது. இந்த நோயைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் இதயம் நோய் வாய்ப்படும். இதனால் இதய வால்வுகளிலும், உட்பகுதிகளிலும் அழற்சி உண்டாகும்.

முடக்குவாதம்.  நரம்புத் தளர்ச்சி, மனச் சஞ்சலம் ஆகியவைகளால் கூட வரவாய்ப்புள்ளது.

முடக்கு வாத நோய்க்கு  தீர்வு.

கொடி வேலி, மிளகரணை, நொச்சி இவைகளின் வேர்ப்பட்டையைக் சமமாக எடுத்துச் சூரணமாகச் செய்து வைத்துக்கொண்டு  சிறிதளவு அளவு காலை, மாலை நீரில் கலந்து சாப்பிட்டுவர முடக்குவாதம் விலகும். இதை பச்சை தண்ணீரில் தான் கலக்க வேண்டும். வெந்நீர் உபயோகிக்க கூடாது.



100 கிராம் ஆமணக்குப் பருப்பை வெண்ணெய் போலரைத்துச் சிறிது, சிறிதாக 100 கிராம் நெய் விட்டுச் சிவக்க வதக்கி அதில் 600 மில்லி பால்விட்டுக் காய்ச்சி குழம்பு பதமானதும் 100 கிராம் சுக்குத் தூளைப் பொடித்துத் தூவிக் கிளறி வைத்துக்கொண்டு வேளைக்கு 5 கிராம் அளவு காலை, மாலை உண்டு வர முடக்கு வாதம், அதனால் ஏற்பட்ட இடுப்பு பிடிப்பு வலி  குணமாகும்.

பரங்கிப்பட்டை, கொடி வேலி வேர்ப்பட்டை சங்கன் வேர்ப்பட்டை, அமுக்கிலான் கிழங்கு ஆகிய நான்கிலும் வகைக்கு 100 கிராம் எடுத்து அதனுடன் சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், ஏலம் இவைகள் வகைக்கு 15 கிராம் வீதம் சேர்த்துச் சூரணித்து வைத்துக்கொள்ளவும்.   கடுமையான முடக்கு வாதமாக இருந்தால் மகாவில் வாதி லேகியத்தை முறைப்படி உண்ண நோய் விலகும்.


 பக்கவாத நோய்க்கு தீர்வு

பொதுவாக பக்கவாத நோய் 40 முதல் 60 வயதுள்ளவர்களைத் தாக்குகிறது. அதிகமாக ஆண்களுக்கே இந்நோய் ஏற்படுகிறது எனப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. பக்கவாத நோய் ஆணுக்கு வலதுபுறமும், பெண்ணுக்கு இடது புறமும் தாக்கினால் எளிதில் தீராது. அதோடு நாக்கும் பாதிக்கப்பட்டால் மருந்துக்கு வசப்படுவதில்லை. கால தாமதம் ஆகலாம். பக்க வாத நோய் தாக்கி நீண்ட நாளாகுதல், உடல் மெலிதல், நோய் தாக்கிய பகுதி சூம்பிப் போதல், உடல் வீங்குதல், நடுக்கம் ஏற்படல் ஆகிய இவை மருத்துவத்திற்குக் கட்டுப்படுவது கடினம். நீண்ட நாள் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டால் பலன் கிடைக்கலாம்.



பக்கவாத நோய் வாதமிகுதியால் வரும் நோய் எனவே வாதத்தை தன்நிலைப்படுத்த வேண்டும்.
பக்கவாத நோயாளிக்குத் தாக்கப்பட்ட உறுப்புகள் பயனற்றுப் போவதால் முதலில் தேங்கியுள்ள மலத்தைக் கழிச்சல் மருந்துகளைக் கொடுத்து மலச்சிக்கலைப் போக்கவேண்டும்.

அதற்கு கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக் காய் மூன்றையும், கொட்டைகளை நீக்கிச் சமமாக எடுத்து உலர வைத்து சூரணமாக எடுத்து சலித்து வைத்துக்கொண்டு பக்கவாத நோயாளிக்கு 1 முதல் 2  ஸ்பூன்  வரை இரவு சாப்பிடச் சொல்லலாம். இதையே திரிபலா சூரணம் என்பர். இதைப்போலவே நிலாவரைச் சூரணத்தையும் உபயோகிக்கலாம். இவை இரண்டும் சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும்.


முள் சங்கின் இலை, அதன் விதை, அதன் பட்டை இம்மூன்றையும் சமமாக எடுத்து அரைத்து சுண்டைக்காயளவு காலை, மாலை, சாப்பிட்டு, சுடுநீர் அருந்தி வர, பாரிசவாதம் அதனால் கை கால்கள் உணர்வற்றுப்போன நிலை மாறும்.

மேலும் சித்திர மூலப்பட்டை, மாவிலிங்கப் பட்டை, கொன்றைப் பட்டை, முருங்கைப்பட்டை., சங்கன்பட்டை, வேப்பம் பட்டை, வெள்ளறுக்கு, சுக்கு, மிளகு,  பஞ்சலவணம் என்று சொல்லப் படுகின்ற இந்துப்பு, வளையலுப்பு, சோற்றுப்பு, கல்லுப்பு, கரியுப்பு முதலியவைகளைச் சமமாக எடுத்து இடித்துச் சூரணமாகச் சலித்து வைத்துக் கொள்ளவேண்டும். இந்தச் சூரணத்தில் வேளைக்கு ஒரு டீஸ்பூன் முதல் 2 டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர, பக்கவாதம் குணமடையும்.


இவையன்றிப் பக்கவாத நோய்க்குச் சண்ட மாருத செந்தூரம், ஆறுமுகச் செந்தூரம், அயவீரச் செந்தூரம், கெந்தி மெழுகு, நந்தி மெழுகு, மகாவீர மெழுகு, வாதராட்சதன் போன்ற உயரிய மருந்துகள் சித்த மருத்துவத்தில் உள்ளன. ஆனால் இவைகளைக் கை தேர்ந்த சித்த மருத்துவரின் ஆலோசனைப்படிதான் உண்ண வேண்டும். பக்கவாத நோயில் உள் மருந்துகளுடன் வெளிப்பூச்சுத் தைலங்களும், மற்றும் ஒத்தடம் போடுதல் போன்ற சிகிச்சைகளும் மிகவும் அவசியம். காரணம் உணர்விழந்த பகுதிகளைத் தேய்த்துச் சூடு உண்டாக்குவதன் மூலம் ரத்த ஓட்டம் உண்டாகி உணர்வு திரும்ப வாய்ப்புள்ளது.


அவ்வகையில் பச்சைச் சித்திர மூலவேர் 150 கிராம், ஊமத்தன் இலைச்சாறு 1 லிட்டர், ஓமம் 50 கிராம், நல்லெண்ணெய் ஒரு லிட்டர், கற்பூரம் 25 கிராம் இவைகளில் முதல் சொன்ன சித்திர நூல் வேலை சோற்றுக் கற்றாழையின் சாறு விட்டு நன்றாக ஒரு பாத்திரத்தில் போட்டு மீதமுள்ள ஊமத்தை இலைச்சாறு, நல்லெண்ணெய் இவைகளை நன்றாகக் கலந்து வண்டல் மெழுகு பதமாகத் தங்கும்போது தேக்கி வைத்துக் கொண்டு பக்கவாத நோயில் பாதிக்கப்பட்ட இடத்தின்மீது தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். காலை, மாலை இப்படிச் செய்தால் போதும்.


இது தவிர பிண்டத் தைலம், வாத கேசரித் தைலம், மையத் தைலம் விஷமுஷ்டித் தைலம் உளுந்துத் தைலம் போன்ற தைலங்கள் கடையில் கிடைக்கின்றன. இவையும் பக்கவாத நோய்களுக்குப் பயன்படுத்தலாம்.
பக்கவாத நோயினால் சில நேரம் நாக்கு பாதிக்கப்பட்டுத் துவண்டுவிடும். அதற்கு அண்டத் தைலம் எனும் மருந்து அற்புதமாகப் பயன் தருகிறது.


மேற்பூச்சித் தைலங்களைப் பூசி மசாஜ் செய்த பின் கழற்சிக் கொழுந்து, வாதநாராயணன் உத்தாமணி இலை, முடக்கற்றான் இலை, நொச்சி இலை, தழுதாலை இலை ஒவ்வொன்றும் ஒரு கைப்பிடி அளவு எடுத்துப் பொடியாக நறுக்கி ஆமணக்கு எண்ணெயில் போட்டுச் சிறு மூட்டைகளாகக் கட்டிப் பாதிக்கப்பட்ட  இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.


பக்கவாதத்தால் செயலிழந்த உறுப்புகளுக்குச் சிகிச்சை முறைகளுடன் லேசான பயிற்சியும் அவசியம். பக்கவாத நோயாளிகளுக்கு இதய நோய், நீரிழிவு மற்றும் பால்வினை நோயிருந்தால் அதற்கான மருந்துகளையும் கொடுத்து நோயைக் குணப்படுத்த வேண்டும். பக்கவாத நோயாளிகளுக்கு அக, புற சிகிச்சைகளோடு உணவு முறைகளிலும் கவனம் செலுத்தினால் துரிதமாகக் குணமடைய வாய்ப்புள்ளது.
பொதுவாக வாதரோகம் அனைத்திற்குமே உள் மருந்துகளுடன் மேற்பூச்சு தைலங்களும் ஒத்தட முறைகளும் மேற்கொள்வது அவசியம். அவற்றோடு பத்தியமும்   மிக முக்கியம். மலச்சிக்கலை உண்டாக்காத உணவு முறை முக்கியம். சைவ உணவே சாலச் சிறந்தது.


வெங்காயம், தக்காளி, காரட், புதினா, கறிவேப்பிலை, வெள்ளரிக்காய் போன்றவைகளைக் கலந்து பச்சடி செய்து உண்ணவேண்டும். வாரம் இருமுறை கொள்ளு ரசம் சாப்பிட வேண்டும். அரிசி உணவைக் குறைத்து கோதுமை உட்கொள்ளலாம். புளிளை அறவே நீக்க வேண்டும். உப்பைக் குறைக்க வேண்டும். உடலில் நீர் சேராமல் காக்கும் முள்ளங்கிச் சாம்பார் வாழைத்தண்டு கூட்டு, முருங்கைக்கீரை பொரியல் ஆகியவை உணவில் சேர்க்கலாம்.

 காலையில் 1 டம்ளர் பார்லித் தண்ணீர் குடிக்கலாம். இரவில் 2 பல் பூண்டு போட்டுக் காய்ச்சிய பாலையும், பூண்டையும் தேன் கலந்து சாப்பிடலாம். முடக்கு வாதத்திற்கென்றே இறைவன் படைத்த மூலிகை முடக்கற்றான். இதனை சூப்பாக செய்து வாரம் ஒரு முறை அருந்தி வரலாம்.


முன் சொன்னவாறு பொதுவாக வாதநோய்க்குப் புறமருந்து, அகமருந்து, உணவுப் பத்தியம் இவைகளுடன் உடற்பயிற்சியும் அவசியம். ஆதலால் கால்களுக்குப் பயிற்சி தரும் விதத்தில் மடக்கி நீட்ட முயலவேண்டும். ஆசனத்தில் திரிகோணாசனம் (முக்கோணநிலை) மிகவும் பயன்தரவல்லது. பிராணாயாமம் என்னும் மூச்சுப்பயிற்சியால் உயிர்காற்று உடலுக்கு அதிகம் கிடைப்பதால் நோய் விரைவில் குணமாகும்.



நோயாளிகளுக்குச் சிறுநீரகக் கோளாறு, இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற நோய்கள் உள்ளனவா எனப் பரிசோதித்து அதற்குத் தகுந்த வண்ணம் மருந்துகளைப் பிரயோகிக்க வேண்டும். மருந்துகளுடன் உடல் தேற்றி மருந்துகளையும் இணைத்தே மருத்துவம் மேற்கொள்ளவேண்டும். முடக்கு வாதத்திற்கு முதல் தரமான சிகிச்சை சித்த மருத்துவத்தில் மட்டுமே உண்டு.

 இதன் தொடர்ச்சியை நாம் நாளை பாப்போம்.




Tuesday 28 April 2015

நரம்பு தளர்ச்சிக்கு உணவு. காலை. கால் டாக்சி ஆக்குங்கள்.



தினமும் ஒரு கால் மணி நேரமாது உடற் பயிற்ச்சி  செய்ய வேண்டும். அரை மணி நேர நடை பயிற்ச்சி. மாலை வேளை. 1,2 கிலோ மீட்டர்  துரம் என்றால். காலை கால் டாக்சியாக உபயோகப்படுத்துங்கள். ஆணோ, பெண்ணோ. நடக்கும் பொழுது. நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வையோடு நடக்க வேண்டும். நெஞ்சை  நிமிர்த்தி எந்த அளவு நீங்கள் வேகமாக நடக்கிரீர்களோ. அந்த அளவு. உங்கள் உடலில் ரத்த  ஓட்டம் சீராகும். நரம்புகள் புத்துணர்ச்சி பெறுவதோடு வலு பெறும்.  Treadmill லில் நடு  ஹாலில் நடப்பவர்கள். அருகில் உள்ள கடைகள், நண்பர்கள், உறவினர்களை பார்பதற்க்கு. 2 வீலர், 4 வீலர் உபயோகிக்காமல்.   வேகமாக நடந்து செல்லலாம். அதற்காக Treadmill  தேவையே இல்லை. என்று நான் சொல்லவரவில்லை. நமது நடையின் வேகத்தை. Treadmill  பயிற்ச்சி  அதிகரிக்கும் இது நான் அனுபவபூர்வமாக உணர்ந்த உண்மை. முடிந்த அளவு நாம். வாகனத்தை பயன்படுத்துவதை குறைத்து காலை பயன்படுத்துவதை அதிகரித்தால். நமது உடல் நலன் மேம்படும். நரம்புகள் வலிமை  இழக்க. நமது மன நிலையும் ஒரு காரணம்.

 அதனால். வாரத்தில் ஒரு நாள் உங்களுக்கு பிடித்த இடத்திற்க்கு தனியாக சென்று. தனிமையிலே இனிமை காணலாம். இல்லை. பிடித்த நபர்களோடு. பிடித்த இடம் சென்றும் நீங்கள் இனிமை காணலாம்.  நகைச்சுவை, இசை. இந்த இரண்டும். ஒருவர் வாழ்வில் இல்லையென்றால். அந்த வாழ்வு நரகம்.  வாழ்க்கை என்னும் ரயில். அந்த இரண்டு தண்டவாளங்களின் மீது தான். பல கவலைகளை மறந்து, தடைகளை வென்று பயணம் செய்து கொண்டிருக்கிறது. இன்று. நகைச்சுவைக்கு என்றே. இரண்டு தொலைகாட்சிகள் தமிழில் உள்ளது. இசைக்கு என்று.  ஒரு 7,8 தொலைகாட்சிகள் இருக்கிறது. அதை தவிர. நாம் எந்த குறிப்பிட்ட பாடல், நகைச்சுவை காட்சியை பார்க்க விரும்புகிறோமோ. அதை யூ  ட்யூப்பில்  பார்க்கலாம். உங்கள் மனம். எப்பொழுது எல்லாம். கவலையில் இருக்கிறதோ. அப்பொழுது. உங்கள் மனதிற்க்கு. இசை, நகைச்சுவை என்னும் இரண்டு மருந்துகளை மறக்காமல் கொடுங்கள்.

  நரம்பு தளர்ச்சியை சரி செய்யும் உணவுகள்.


  சௌ சௌ, ஜூஸ்க்கு உபயோகபடுத்தபடும் கேரட், பீட் ரூட், ஜாதிக்காய், வாழை பூ, வாழை தண்டு,   பழங்களில்.  மாதுளை, மாம்பழம், பப்பாளி.


  மாதுளம் பழத்தின்  பூவை 300 கிராம் எடுத்து. அதை கையாலோ, மிக்சி மூலமாகவோ. சாறாக்கி. அதோடு 200 கிராம். நெய் கலந்து. அதை. தினமும் ஒரு ஸ்பூன்  சாப்பிட வேண்டும். இவ்வாறு ஒரு 48 நாட்கள் சாபிட்டு வந்தால், நரம்பு நன்கு வலுபெறும். 48 நாட்களுக்கு மேலும் சாப்பிடலாம். தப்பில்லை.

   நாளை. வாத நோய்களுக்கு உண்டான மருந்தை பாப்போம்.

Monday 27 April 2015

நரம்பு தளர்ச்சி வர காரணம் மன தளர்ச்சியே. நரம்பு தளர்ச்சி தீர ஓஷோ சொன்ன வைத்தியம்.


இன்று நரம்பு  தளர்ச்சிக்கான  தீர்வை பார்க்க போகிறோம். முதலில் நரம்பு  தளர்ச்சி வருவதற்கான காரணங்கள்.

பல மணிநேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்கள்.  சரியான உடற் பயிர்ச்சி  செய்யாமல் இருந்தால். நரம்பு   தளர்ச்சி வரும். முக்கியமாக. . நாம் மனதில் சேர்த்து வெய்க்கும் கவலைகள். நம்முடைய நாடி, நரம்பு , சதை, எலும்பு, ரத்தம், புத்தி அனைத்தையும் பாதிக்கும்.

 எனது பள்ளி நண்பன் ஒருவன். நல்ல வசதியான குடும்பம். ஆனாலும். அவன் தன்னை விட உயர்ந்த இடத்தில இருப்பவர்களோடு. தன்னை ஒப்பிட்டு கொண்டே இருப்பான். அதனாலேயே. அவன் ஒருநாளும் நிம்மதியாக இருந்தது இல்லை. அவனை மாற்ற. இரண்டு, மூன்று  முறை  முயற்ச்சி  செய்து.  ம்ஹ்ம். இது தேறாது என்று தண்ணீ தெளித்து விட்டு விட்டேன். ஒருநாள் நானும் எனது நண்பர்களும் மாயாஜாலில் ஜாலியாக படம் பார்த்து விட்டு மகாபலிபுரம் வந்தோம். அங்கும் அவன் புலம்பலை ஆரம்பித்து விட்டான். என்னுடைய நண்பர்கள். ஏண்டாப்பா. இவனை நம்ப செட்ல சேர்த்து கொண்டோம் என்பதை போல். ஒருவருக்கொருவர் பார்வையாலேயே பேசி கொண்டனர்.

நான் உடனே. கார்த்திக்கை யாருன்னு நினைத்தீர்கள். [ [பெயர் மாற்றப்பட்டுள்ளது ]  சராசரி மனிசனால இந்த அளவு கவலைப்படவே முடியாது. நாடி, நரம்பு,  சதை, எலும்பு, ரத்தம், புத்தி. எல்லாத்துலையும். பண வெறி ஊறி போன ஒருத்தனால தான் இப்டி கவலைப்பட முடியும். என்று சொன்னவுடன்.  என் உடன் இருந்த 12 நண்பர்களும் கோரசாக சிரித்தார்கள். என் நண்பர்களில் ஒருவன். கார்த்திக்.  எனக்கு இப்பவே தெரிஞ்சி ஆகணும். உண்மையை சொல்லு. நீ நாலு வருசத்துக்கு மின்னாடி பாம்பேல என்ன பண்ணிண்டு இருந்த. என்று கேட்டான். ம். பாணி பூரி வித்துண்டு இருந்தான் என்று இன்னொருவன் சொன்னான். டேய். இப்ப தான். எந்திரன்  பார்த்துட்டு வரோம். இங்க என்னடா. நீங்க எல்லாரும் சேர்ந்து பாட்ஷா பார்ட் 2 எடுத்துண்டு இருக்கீங்க .

  இந்த சம்பவதிர்ற்கு பின் அவன். பிறர் முன்.  புலம்புவதை நிறுத்தி விட்டான். கொஞ்சமா? அவனை நாங்க ஒட்டினோம்.

 தனக்கு மேல் உள்ளவர்களை பார்த்து பொறாமை கொள்வது. தனக்கு கீழ் உள்ளவர்களை பார்த்து மகிழ்ச்சி கொள்வது. இரண்டுமே தவறு தான். இதை பற்றி ஓஷோ கூறுவதை கேளுங்கள்.

ஒப்பிடுதல்:

மக்கள் எப்போதும் தம்மைப் பிறருடன் ஒப்பிடுவது வழக்கம். இந்த ஒப்பீடுகளால்தான் அவர்கள் மகழ்ச்சியாகவோ, துக்கமாகவோ இருக்கிறார்கள். புகழ் பெற்ற  மகான் ஒருவரை நான் சந்தித்தேன். எனக்கும் அவருக்கும் இடையில் என்ன வேறுபாடு என்பதை அவர் சொன்னார். "துக்கப்படுகிறவர்களைப் பார்ப்பதில்தான் மகிழ்ச்சியின் மர்மமே இருக்கிறது. ஊனமானவனைப் பார்க்கும்போது, நீ ஊனமில்லாமல் இருப்பதற்காக மகிழ்வு தோன்றும். கண்ணற்றவனைப் பார்க்கும்போது, நீ அப்படி இல்லை என்பதில் மகிழ்ச்சி பிறக்கும். ஏழையைப் பார்த்தால் நாம் ஏழை இல்லை என்பதில் ஆனந்தம் தோன்றும்", என்றார் அவர்.

 மேலே உளறாமல் இருக்க, நான் அவரைக் குறுக்கிட்டுத் தடுக்க வேண்டி வந்தது.


"உங்களுக்கு ஒரு சிறிய விஷயம் புரியவில்லை. ஒப்பிட ஆரம்பித்தால் அதற்க்கு முடிவே இல்லை. பரிதாபத்திற்குரியவர்களோடு மட்டுமே ஒருவன் தன்னை ஒப்பிட்டுக் கொள்ள மாட்டான். தன்னை விட வலிமை படைத்தவனோடும், மதிப்பு மரியாதை கொண்டவனோடும் ஒப்பிட ஆரம்பிப்பான். அதனால், துக்கமே உண்டாகும். நீங்கள் ஆனந்த இரகசியத்தைச் சொல்லவில்லை. துக்கத்தின் இரகசியத்தையே சொல்கிறீர்கள்!" என்றேன்.


ஆனால், இப்படித்தான் காலம் காலமாக நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள், வெவ்வேறு வார்த்தைகளில். ஆனால், அடிப்படை என்னவோ ஒன்றுதான். பல மத நுல்களும்  இதைத்தான் சொல்கின்றன. மக்கள் துக்கப்படுகிறவர்களைப் பார்த்து நிறைவடைகிறார்கள். தாம் அப்படித் துன்பப் படவில்லையே என்று கடவுளுக்கு நன்றி சொல்கிறார்கள். இது ஒரு பக்கச் சார்புடையதாகத் தொடர்ந்து இருந்து வரக் கூடாது. பிறரோடு உங்களை ஒப்பிட ஆரம்பிக்கும்போது உங்களை விடத் தாழ்ந்தவர்களோடு மட்டுமல்லாமல்,உயர்ந்தவர்களோடும் ஒப்பிடவே தோன்றும். மிஞ்சுவது நீங்காத கவலைதான்.  ஒப்பிடுதலே சரியில்லை. நீங்கள் நீங்களேதான். வேறு யாரும் அல்ல. ஒப்பற்றவர் நீங்கள். மற்றவரும் அப்படியே. அதனால்தான், ஒப்பிடாதீர்கள்.ஒப்பிடுவது உலகத்தோடு உங்களை விலங்கு மாட்டி விடுவது. அது போட்டி பொறாமைகளை ஏற்படுத்திவிடுகிறது. அது தனியாக வருவதில்லை. துணையுடனே வருகிறது.ஒப்பிடுவதற்கு முடிவே இல்லை.ஆனால், நீங்கள் முடிந்துவிடுவீர்கள்!அதை ஏற்றுக் கொள்வது, வாழ்வின் தவறான பாதையைத் தேர்ந்தெடுப்பதாகும்.

   ஓஷோ சொன்ன இந்த ஆனந்த ரகசியத்தை நாம் வாழ்வில் பின்பற்ற ஆரம்பித்தால். நமக்கு  நரம்பு  தளர்ச்சியோ, Bp யோ வருமா.

  நமது கவலைக்கு இன்னொரு காரணம். மத்தவங்க  நம்பளை  பத்தி என்ன?நினைபாங்களோ  என்று. நமக்கு பிடித்த. சின்ன, சின்ன விசயங்களை கூட இன்பமயமாக அனுபவிக்காமல். அவற்றை. மனதிற்குள்ளேயே குழி தோண்டி புதைத்து விடுவது. இந்த உலகில் பலர். ஊர் என்ன சொல்லுமோ, உலகம் என்ன சொல்லுமோ என்று பயந்து, பயந்து தனக்கு பிடித்த மாதிரி வாழாமல். அடுத்தவர்களிடம் நல்ல பேர் எடுக்க வேண்டும் என்பதற்காக. போலி தனமாக வாழ்கிறார்கள்.



 இந்த உலகம் ஒரு நாடக மேடை. நாம் அனைவரும் அதில் நடிகர்கள் என்றார் ஷேக்ஸ்பியர். அவர் ஏதோ ஒரு Flow  ல  சொல்லிட்டார். அதை அப்படியே நம்ப பாலோ பண்ணனுமா என்ன.

 கையை வீசி நெஞ்சை நிமிர்த்தி. எந்த அளவு நாம் வேகமாக நடக்கிறோமோ. அந்த அளவு. உடல் ஆரோக்யத்திற்கு நல்லது. ஒருமுறை. எனக்கு தெரிந்த ஒருவர்.  நீ இவ்வளவு வேகமாக நடந்து வருவதை பார்த்தால். யாரோ ஒரு பத்து பேரை அடிக்க வருவதை போல் இருக்கிறது. கொஞ்சும் Casual லா நடையேன். எதற்க்கு இந்த 8,9 கிலோ மீட்டர் வேக நடை. இவ்வாறு நீ நடப்பது நன்றாக இல்லை. நான் அவரிடம் பொறுமையாக. உங்களுக்கு பிடித்த மாதிரி நடந்தால். அதனால் எனக்கு ஏதேனும் பரிசு கிடைக்க போவதில்லை. எந்த மாதிரி நான் நடந்தால் எனக்கு பிடிக்குமோ, அந்த மாதிரி தான். தெருவிலும் சரி. என் வாழ்விலும் சரி. நடப்பேன். எனது வாழ்க்கை. எனக்கு பிடித்த மாதிரி நான் வாழ வேண்டும். ஊர் உலகம் என்ன சொல்கிறது என்பதை பற்றி எனக்கு கவலை இல்லை.

உங்களது உடல் ஆரோக்யத்தை, பிறரது உடலை,  மனத்தை காயபடுத்தாத   எந்த ஒரு விசயமும் தவறே இல்லை.


என்னுடைய நண்பன் ஒருவன். ஒருநாள். நான் அவன் வீட்டிற்க்கு எனது நண்பர்களோடு சென்று இருந்தேன். அன்று ஞாயிற்று கிழமை.  நாங்கள் அவனது ரூமிற்க்கு செல்லும் வரை. அவன் டிவியில் சோட்டா பீம். டோரீமான் என்று இரண்டு கார்ட்டூன்கள் மாறி, மாறி பார்த்து விடுமுறையை மகிழ்வாக கழித்து கொண்டிருந்தான். நாங்கள் அவனோடு பேசி கொண்டிருக்கும் பொழுது. அவனோட அம்மா. அவன் அறைக்குள் வந்தார். ஏழு கழுதை வயது ஆய்டுத்து. இன்னும் இவன் உட்கார்ந்து. ஒன்னாம் கிளாஸ்ல பார்த்துண்டு இருந்த. கார்ட்டூன்களை பார்த்துண்டு இருக்கான். நீங்க யாராவது. இன்னுமும் பொம்மை படம் பார்த்துண்டு இருக்கீங்களா என்று கேட்டார். நானும் நேரம் கிடைக்கும் பொழுது கார்ட்டூன் பாக்கற டம்மி பீசு தான் என்று மைண்ட் வாய்ஸ்ல நினைச்சேன். ஆனால் வாயை திறந்து சொல்லலை. எனது நண்பனோ. பொறுமையாக. நீ தினமும் மெகா சீரியல் பார்த்து அழுவதற்க்கு. நான் . கார்ட்டூன் பார்த்து சிரிப்பது ஒன்றும் தவறு இல்லை என்று. தன்னுடைய அம்மாவிற்க்கு. மென்மையான குரலில், மேன்மையாக பதில் சொல்ல. அவனது தாயார். மேற்கொண்டு எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்து விட்டார்.

கார்டூனில் ஆரம்பித்து. பார்க்கில் ஊஞ்சல் ஆட வெக்கபடுவது வரை. பல பெரியவர்கள். ஊர், உலகத்திற்காக. தனக்குள் உள்ள அணைத்து ஆசைகளையும் குழி தோண்டி புதைக்கிறார்கள். குழந்தை தனத்தை கொல்கிறார்கள்.   நாம் வேலை செய்யும் அலுவலகத்தில். மாணவர்கள் என்றால். பள்ளி, கல்லூரியில். அங்கே உள்ள சட்ட, திட்டங்களுக்கு கட்டுப்பட்டு தான் ஆக வேண்டும். அது தவறில்லை. ஆனால். உங்களுக்கு கிடைக்கும் ப்ரீ டைம்மில். உங்களுக்கு பிடித்த மாதிரி நீங்கள் வாழ்வதில் என்ன? தயக்கம். சில நடிகர்கள் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்றால். காதல் காட்சிகள் உட்பட. அணைத்து காட்சிகளிலும்  விறைப்பாகவே இருப்பார்கள்.அதே போல் தான் சிலர். மனதை எப்போதும் விறைப்பாக, விழிகளை முறைப்பாக வெய்த்து உள்ளனர்.

 நீ யாருக்காகவும் உன்னை மாற்றி கொள்ள நினைக்காதே. அவ்வாறு மாற்றி கொள்ள நினைத்தால். ஒவ்வொருவருக்காகவும். உன்னை நீ மாற்றி கொள்ள வேண்டியதாக இருக்கும்.



   கண்ணதாசன்.

எதையும்  டேக் இட் ஈசியாக எடுத்து கொள்ள பழகுங்கள். நாம் கவலைபடுவதால் நமது பிரச்சனைகள்  தீரும் என்றால் கவலைபடலாம். கவலைபடுவதால் நமது பிரச்சனைகள் தீர போவதில்லை. பின்னர் ஏன்? கவலைப்பட வேண்டும். குழப்பம், கவலை, கோபம் இந்த மூன்றும்  இல்லாத நேரங்களில் தான். நமது மனம் தெளிவாக இருக்கும். தெளிவாக இருக்கும் மனம் தான் சரியான முடிவை எடுக்கும். அதனால். முதலில் கவலையை தூர எறியுங்கள்.


 இதன் தொடர்ச்சியை நாம் நாளை பாப்போம்.










 








Sunday 26 April 2015

கல்லீரல் [Liver] பாதிப்பு தீர இயற்க்கை மருத்துவம். அரசாங்க மருத்துவமனையின் சாதனை




 கல்லீரல் நோய் தீர இயற்க்கை மருத்துவம் பாப்போம். அதர்க்கு  முன். கல்லீரல் சுத்தமாக செயல் இழந்த. உயிர் போகும் நிலையில் இருந்த ஒரு கல்லுரி மாணவரை. ஸ்டான்லி அரசு  மருத்துவர்கள். அறுவை சிகிச்சை இல்லாமல் பிழைக்க வெய்த்து சென்ற வருடம் மார்ச் மாதம் மருத்துவ உலகில் பெரிய சாதனை படைத்து  உள்ளனர்.

  அதை  பற்றி முதலில் பாப்போம்.

  மோகன பிரசன்னா பொறியியல் கல்லூரி  மாணவர். அவருக்கு மிக இளம் வயதிலேயே. கல்லீரலில் பெரிய பிரச்சனை  வந்தது. முதலில் அவரை ஒரு பெரிய தனியார் ஹாச்பித்தரியில் சேர்த்தனர். அந்த மருத்துவமனை.  அறுவை சிகிச்சை மூலமே. இவர் பிரச்சனையை சரி செய்ய முடியும் என்றும். அதற்க்கு. அதிக பக்ஷம் வெறும் 70 லக்சம் மட்டுமே ஆகும் என்று கூறினர். ரொம்ப கம்மி இல்ல. நடுத்தர குடும்பத்து பெற்றோர்கள் என்ன? செய்வார்கள். பிரசன்னாவை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

  அங்கே உள்ள மருத்துவர்களான  சுந்தர மூர்த்தி அய்யா, வெங்கடேஸ்வரன் அய்யா ஆகியோர். அந்த மாணவரை பரி சோதித்து  விட்டு. இவரை குனப்படுத்த அறுவை சிகிச்சையே தேவையில்லை என்று கூறினர். அதற்க்கு  பதிலாக என்ன? சிகிச்சை செய்தார்கள் தெரியுமா.

 ரத்தம்  உறைய. அதிக பக்ஷம் 13 வினாடிகள் ஆகும். பிரசன்னாவிற்கு லிவர். மிகவும் மோசமான அளவு பாதிக்கபட்டு இருப்பதால். ரத்தம்  உறைய 114 வினாடிகள் ஆனது.  ரத்தம்  உறைவதர்க்கு  தேவைப்படும் மூலபொருட்கள்  பிரசன்னாவின் உடலில் செலுத்தப்பட்டது. அதன்மூலம். அவரின் லிவர் பிரச்னையும் சரி செய்யப்பட்டது. தமிழகத்தில் முதன்  முதலில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனை. மலர் மருத்துவமனையோ,  விஜயா மருத்துவமனையோ, அப்போலோவோ அல்ல. அரசாங்க மருத்துவமனை. அதை செய்தது 2009இல். 2014லிலோ. அறுவை சிகிச்சை இன்றியே. நவீன யுக்தியை பயன்படுத்தி.  உயிர் போகும் நிலையில் இருந்த ஒரு மனித உயிரை காத்து உள்ளனர்.

 பெரிய மருத்துவமனை என்றால். அதன்  தகுதி என்ன?.  எந்த மருத்துவமனை அதிகம் காசு வாங்குகிறதோ. அது பெரிய மருத்துவமனை. பெரிய ஸ்கூல் என்றால்  அதன் தகுதி. நிறைய பீஸ் வாங்கினால் அது பெரிய ஸ்கூல். மாநில அளவில், தேசிய அளவில் சாதனை படைக்கும் மாணவ, மாணவிகளை அத்தகைய பெரிய ச்கூல்கள் உருவாக்குவதில்லை. ஒவ்வொரு வருடமும் 10, 12ம்  வகுப்பில். மாநில அளவில்.   முதல் இடத்தில் வரும் மாணவ மாணவிகளில்  எவ்வளவு? பேர் அத்தகைய பெரிய ச்கூல்களில் படிக்கிறார்கள். அடிக்கடி  நியூஸ் பேப்பர் படிப்பவர்களுக்கு இது புரியும். வரும் மே  மாதம் மறக்காமல் பார்த்து சொல்லுங்கள்.

  ஒரு கடைநிலைஅரசாங்கஊழியர் 100 ரூபாய் லஞ்சம் வாங்கினால் கூட கைது செய்யும் சட்டம். சில  தனியார் பள்ளிகள். LKG  அட்மிசன்க்கே  வாய் கூசாம. 2 லக்சம் donation  என்னும் பெயரில் வாங்குகிறார்களே. அவர்களை ஏன்? நமது சட்டம் கைது செய்வதில்லை. நியாயமா. அவ்ளோ பணம் வாங்கும் பள்ளி நிர்வாகிகள், கொடுக்கும் பெற்றோர்கள் ரெண்டு போரையும் தூக்கி உள்ள போடணும். எனது குடும்ப நண்பர் ஒருவர். அத்தகைய பள்ளியில் தனது மகனை சேர்த்து அதனால் படாத  பாடு பட்டார். அவரது மகன். அளவுக்கு மீறிய. அந்த பள்ளியின் கண்டிப்பால். அதிக மன அழுத்தத்திற்கு  உள்ளானான். அத்தகைய பள்ளிகளில் என்ன, என்ன மாதிரியெல்லாம். மாணவர்களை மட்டும் இல்லாமல். பெற்றோர்களையும் சேர்த்து கொடுமைபடுத்துவார்கள் என்பதற்க்கு  எனது குடும்ப நண்பர் பல விசயங்களை சொன்னார். அதில் ஒன்று. அத்தகைய பள்ளிகளின் வாட்ச் மேன். நாயை விரட்டுவதை போல். பெற்றோர்களை விரட்டுவான். நீங்க பாடம் எடுக்கற லக்சனதுக்கு லக்ச கணக்குல பணத்தை தூக்கி  கொடுக்கும் இளிச்ச வாய்களுக்கு நியாயமா கோவில் கட்டி கும்பிடனும்டா. கொக்கா மக்காஸ்.

  டாப்பிக் வேற எங்கயோ பெய்டுத்து. சரி.. இப்போ மீண்டும் கல்லீரல் சமாச்சரதிர்க்கே வருவோம்.



கரிசலாங்கண்ணி கீரை. கல்லீரல் பிரச்சனைக்கு மிக சிறந்த நிவாரணி . கல்லீரல் பிரச்சனை  உள்ளவர்கள் தினமுமே இதை உண்ணலாம்.

 இதை தவிர்த்து நன்னாரி கிழங்கும்  கல்லீரல் பிரச்சனைக்கு நல்லது. நன்னாரியை அப்டியே பழமாக, சர்பத்தாக , ஊருகாயாக. உணவில் எவ்ளவு சேர்த்து கொள்ள முடியுமோ சேர்த்து கொள்ளுங்கள்.

 மற்றும் ஆப்பிள், வால்நட்ஸ், எலுமிச்சை, மஞ்சள்,  பூண்டு போன்ற பல உணவுகள் லிவரை சுத்தபடுத்தும். அனால். முழுமையாக லிவரை க்யூர் செய்வது. கரிசலாங்கண்ணி கீரை தான். அதை போல் வேறு எதுவும் இல்லை. இதை ஆங்கில மருத்துவம் உட்பட அணைத்து மருத்துவ முறையும் ஒப்பு கொண்ட விஷயம். அதற்க்கு  அடுத்த இடத்தில இருப்பது  நன்னாரி பழம்.

  நாளை. நிரம்பு தளர்ச்சிக்கான தீர்வை பாப்போம்.









Friday 24 April 2015

மண்ணீரல்[Spleen] னில் ஏற்படும் பாதிப்புகளுக்கு. நிரந்தர தீர்வு.



மனித உடலினுள்ளே பல உள் உறுப்புகள்  உண்டு. அவற்றில் மண்ணீரலுக்கே அதிக பொறுப்புகள் உண்டு. மன்னீரல்  நமது உடலில் காத்தல், படைத்தல், அழித்தல்  என்னும் முத்தொழிலையும் செய்கிறது.

 மூளையின்  செயல்பாடுகளை  சீராக்கி. புதிய எண்ணங்களை படைக்கிறது. ரத்தம் வழியாக பரவும் நோய்களுக்கு எதிராக. தடுப்பு சுவர் போல் இருந்து  காத்தல்  தொழிலை செய்கிறது. ரத்தத்தில் உள்ள நுண் கிருமிகளை அழிக்கிறது.  இத்தகைய மண்ணீரல் பாதிக்கப்பட்டால். நமது உடல் ஆரோக்கியம் என்ன? ஆகும்.

கால்,  வயிறு வலியில்  ஆரம்பித்து. ரத்த அழுத்தம், மஞ்சள் காமாலை வரை. பல நோய்கள் வரும்.  மண்ணீரல் பாதிக்கபட்டவர்கள். உற்சாகம் இன்றி. சோகமாக கானபடுவார்கள்.

  ஒரு ஆன்.  அவருக்கு. இடுப்பில் பெண்களை போல் அதிக சதை இருந்தால் அதற்க்கு  உடல் கொழுப்பு மட்டும் காரணமாக இருக்காது. மண்ணீரல் பாதிப்பும் ஒரு காரணம்.

பல காரணங்கள் மண்ணீரல் பாதிக்க இருந்தாலும். மனமே முதல் காரணம்.  அதை தவிர்த்து. மது, புகை போன்ற தீய பழக்க வழக்கங்கள். ரத்தத்தில் பித்த நீர் அதிகரிப்பு  போன்ற காரணங்களாலும் மண்ணீரல் பாதிக்கப்படும். இதற்க்கு  தீர்வு.

 சென்ற 16 அன்று. மற்ற எந்த உணவுகளிலும் இல்லாத பல சிறப்புக்கள். கேழ்வரகில் என்ன, என்னவெல்லாம் இருக்கிறது என்பதை பற்றி பார்த்தோம் அல்லவா. மண்ணீரல் பாதிப்பு உள்ளவர்களுக்கு. கேழ்வரகு உணவு சிறந்த மருந்து. காரணம். காரணம். Methionine Acid   ரத்த  சிகபனுக்களின் உற்பத்தி, பித்த நீர் சுத்தி. இரண்டையும் செய்கிறது.  கேழ்வரகில் உள்ள அளவு Methionine  உலகில் வேறு எந்த தானியத்திலும் இல்லை. நமது உடலில் காத்தல், படைத்தல், அழித்தல்  என்னும் முத்தொழிலையும் செய்யும் மன்னீரலை. Methionine  காக்கும். அதை அதிகம் தருவது கேழ்வரகு. அதை தவிர்த்து.

 பழங்களில்- ஸ்ட்ராபரி, பப்பாளி, மாதுளை, பிளம்ஸ், அன்னாசி, ஆரஞ்ச், திராட்சை.

காய்களில்-  முளைத்த  பயிறு, புதினா, பூண்டு, வெள்ளரி, சின்ன வெங்காயம், முளை விட்ட பயிர்,  பீட்ரூட், கேரட், கீரை வகைகள். மற்றும் தேங்காய்.

 பழங்களில்  பப்பாளி, கொய்யா இரண்டும். மண்ணீரல் பிரச்சனைக்கு மிக விரைவான தீர்வு தரும்  என்பதால். மண்ணீரல் பிரச்சனை  உள்ளவர்கள். இந்த இரண்டு  பழங்களையுமே. தினமும் சேர்த்து கொள்ளுங்கள்.

  நாளை கல்லீரல் பிரச்சனைக்கு  உரிய தீர்வை பாப்போம்.


Endometriosis. உலகில் ஆறில் ஒரு பெண்ணிற்கு வரும் நோய். இதை தடுக்க தீர்க்க வழிகள்.




 Endometriosis. இதற்க்கு  எவ்வளவு பேருக்கு அர்த்தம் தெரியும். இதை தமிழில். இடமகல் கருப்பை அகப்படலம் என்று சொல்வார்கள். கருப்பை என்னும் வார்த்தை மட்டும் புரியர்து. மத்தது புரியலை என்று சொல்கிறிர்களா. இந்த பெயர் வேண்டுமானால் உங்களில் பலருக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால். உலகில் ஆறு பெண்களில் ஒருவருக்கு இந்த பிரச்சனை  இருக்கிறது.  நீங்களும் அந்த ஆறில் ஒருவராக இருந்தால்? Endometriosis  பிரச்சனைக்கான அறிகுறிகள், தீர்வுகளை பாப்போம்.

 Endometriosis என்றால் என்ன? அதன்  அறிகுறிகள்.

  பெண்மணிகளுக்கு கருப்பையின் வெளியே இருக்கும் ஒரு Tissue  தான் Endometriosis. அது சற்று அப் நார்மல்லாக அதிகம் ஆகுதல், குறைதல். கருப்பையின் வெளியே உள்ள அது. உள்ளே வருதல் போன்றவைகள் நிகழ்ந்தால். அதன் அறிகுறியாக முதலில் உயிர் போகும் அளவு  இடுப்பு வலி வரும். பின்னர் வயிற்று  வலி.

 யூட்ரச்  பிரச்சனை  என்று முதலிலேயே சொல்லியிருக்கலாமே. எதற்க்கு  சுத்தி வளைச்சி. Endometriosis, இடமகல்னுலாம் சொல்லி குழப்பனும் என்று நீங்கள் நினைக்கலாம். Endometriosis  என்பது. யூட்ரச்சில் உள்ள.  Fallopian Tube, Cervix, Vaginia, Ovary போல். Endometriosis சும்  ஒரு பகுதி. அவ்வளவே.






ஆனால்?  யூட்ரஸ்சில் ஏற்ப்படும் பிரச்சனைகளுக்கு இந்த Endometriosis  தான் முக்கிய மூல  காரணம். இந்த பிரச்சனை  உள்ள ஒரு   பெண். மருத்துவரிடம் சென்று சோதனை   செய்தால். அவர். உங்களுக்கு யூட்ரஸ்சில் பிரச்சனை  என்று தான் சொல்லுவாரே ஒழிய. Endometriosis  என்று சொல்ல மாட்டார். காரணம். அவ்வாறு மருத்துவர்.   Endometriosis என்று சொன்னால். அதை கேட்கும் பெண். நமக்கு ஏதோ? புது வித நோய் வந்து இருக்கிறதோ என்று குழம்புவார். Endometriosis னா  என்னனு. டாக்டர்ரிடம். சம்பந்தபட்ட பெண் கேள்வி கேட்பார். அவர் விளாவரியாக. அந்த பெண்ணிற்க்கு  புரியும்படி விளக்க வேண்டியதாக இருக்கும். அதனால். வெறும்ன  உங்களுக்கு யூட்ரச்  பிரச்சனை  என்று மருத்துவர்   சொல்லி விடுவார்.

  உங்களுக்கு அடிக்கடி. முதலில் இடுப்பு வலி வந்து. அடுத்து வயிறு  வலி  வந்தால். உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள். அவ்வாறு செய்து. உங்களுக்கு வெறும் சாதாரண வலி தான் என்று மருத்துவர் சொன்னால் சந்தோசம். அவ்வாறு இல்லாமல். உங்களுக்கு யூட்ரச்  பிரச்சனை  என்று மருத்துவர் சொன்னால். Endometrirosis மூலம்  வரும் பிரச்சனையா என்று மருத்துவரிடம் கேளுங்கள். அவர் சில நொடிகள் உங்களை ஆச்சர்யமாக பார்ப்பார்.

  இதை முற்ற விட்டால்.  மிக ஆபத்து. காரணம். முற்ற விட்டால். புற்று நோய் வரும்.

   So. Prevention Is Better Than  Cure. வரும் முன்னே காப்பது சிறந்து.


 எனக்கு தெரிந்து. இந்த பிரச்சனை ஆங்கில மருத்துவத்தின் மூலம்   முழுமையாக தீர்க்க முடியாது.

 இதற்க்கு  என்றே உள்ள சில பெயின்  கில்லர் மாத்திரைகள் வலியை  கட்டுபடுத்தும். அனால் Endometriosis  பிரச்சனைக்கு ஒரு எண்டு. அதன்மூலம்  கிடைக்காது. இதர்க்கு ஆங்கில மருத்துவம் தரும் ஒரே ஒரு தீர்வு. யூட்ரஸ்  உறுப்பையே  அறுவை சிகிச்சை செய்து வெட்டி விடுவது தான்.

  எனக்கு தெரிந்த ஒரு  அம்மையார். மிகவும் முத்திய  நிலையில் மருத்துவரிடம் பரிசோதனை செய்தார். அந்த அம்மாவிற்க்கு  Endometriosis  இருப்பது  உறுதி செய்யப்பட்டது. நல்லவேளை. அவருக்கு cancer  இல்லை. ஆனால். அந்த அம்மாவின் உயிரை காப்பாற்ற. கருப்பை. அறுவை சிகிச்சையின் மூலம்  வெட்டி அகற்றப்பட்டது.  அதன் மூலம். 35 வயதிலேயே 75 வயது போல் அவரின் உடல் பலவீனம் அடைந்தது.

  இந்த Endometriosis நோய்க்கான இயற்க்கை நிவாரணங்களை பாப்போம்.

   Folic  Acid அதிகம் உள்ள உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். பச்சை காய் கறிகளில் இந்த போலிக் ஆசிட் இருக்கும். குறிப்பாக கீரையில் அதிக அளவில்.


விட்டமின்  C, D அதிகம் உள்ள உணவுகளை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும்.

 தேனில் ஊற  வெய்த்த. நெல்லிக்கனி ஒன்று, இரண்டு காலையில்  வெறும் வயிற்றில் சாப்பிடுவது. இதற்க்கு மிக சிறந்த மருத்துவம் ஆகும். தேனில் இன்று நிறைய கலப்பட வகைகள் இருப்பது  வேதனையான விஷயம். காதி என்றால் நம்பி வாங்கலாம். அணைத்து காதி கிளைகளிலும்   தேனில் ஊர வெய்த்த நெல்லிக்கனியை கண்ணாடி குடுவைகளில் போட்டு விற்ப்பார்கள்.

 முள்ளங்கியை வேக வெய்த்து அதன்  நீரை தினமும் அருந்தி வந்தால். Endometriosis சில் உள்ள அணைத்து குறைபாடுகளையும் இது சரி செய்து விடும். கருப்பை பிரச்சனைக்கு. நமது நாட்டு சித்தர்கள் பரிந்துரைத்த மிக சிறந்த தீர்வு. சீனாவில் பெண்கள். [அந்த அரசின் லூசு தனமான சட்டங்களால் இன்று பெண்களே அந்த நாட்டில் ஒரு அறிய வகை உயிரினம்] ஆனால் காலம் காலமாக. அங்கு பெண்மணிகள் Endometriosis  மூலம்  வரும் பிரச்சனைகளுக்கு முள்ளங்கி மூலம்  தீர்வை கண்டனர். சீனர்களின் பிரதான உணவுகளில் முள்ளங்கியும் ஒன்று.

 Endometriosis  பிரச்சனை  வந்தால் தான். தேனில் ஊர வெய்த்த நெல்லிகாயும், முள்ளங்கியும் உன்ன வேண்டும் என்று இல்லை. பல மருத்துவ, மகத்துவ குணங்கள். தேன், நெல்லிக்காய், முள்ளங்கியில் அடங்கியுள்ளது. இதை தினமும் உண்டால்.  Endometriosis  பிரச்சனை வரவே வராது.  தினமும் இவற்றை உண்ணுங்கள் ஆரோக்யமாக வாழுங்கள்.  Endometriosis  பிரச்சனையை. ரொம்ப முத்த விட்டால். கருப்பையை அறுப்பதை  தவிர வேறு வழி  இல்லை.

 நாளை. உங்கள் அனைவர் வீட்டிலும் என்ன? சமையல். முள்ளங்கி சாம்பாரா.

  நாளை மண்ணீரல் பிரச்சனைக்கு உரிய தீர்வை பாப்போம்.





Thursday 23 April 2015

வயிறு வலி நிரந்தரமாக தீர அற்ப்புதமான வழிகள்.


குழந்தைகளுக்கு மட்டும் தான்  வயிற்றில் அடிக்கடி  பூச்சி  சேரும் என்று இல்லை. இது பல பெரியவர்களுக்கும் இருக்கும் பிரச்சனை. எத்தனை  பெரியவர்கள். நமது கண் முன்னே தினம், தினம் வயிற்று  வலியால்  அவதிப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.  பொதுவாக. நாம் அனைவருக்குமே. என்றாவது ஒருநாள். தலை வலி, வயிற்று  வலி இரண்டுமே வந்து இருக்கும். சிலருக்கு. தலை வலி, வயிற்று  வலி. நிரந்தரமாக இருக்கும். தலை வலிக்கான தீர்வை. சென்ற 11 அன்று செய்த பதிவில் பார்த்தோம். இன்று வயிற்று  வலிக்கான தீர்வை பாப்போம்.

 வயிற்று  வலி வர.  18இற்கும் மேற்பட்ட காரணங்கள்.  அதில் ஒன்றான  Food Alergy.  இது அடிக்கடி  நாம் அனைவர்க்கும் நடக்கும் ஒன்று.  நிரந்தரமாக சிலருக்கு  வயிற்று   வலி வர நான்கு   வைரஸ் கிருமிகள்  மிக முக்கியமான காரணம். அவை.


1]  RotaVirus
3] NoroVirus
4] AdenoVirus
5] AstroVirus.

ஆகிய நான்கு  வைரஸ் கிருமிகள்.நிரந்தர வயிற்று வலிக்கு  நிரந்தரமான காரணங்கள். மற்றும் வாயு தொல்லை, சிறு நீரகத்தில் ஏற்ப்படும் பிரச்சனை. இதை  தவிர்த்து.  Endometriosis  எனப்படும் நோயால் ஏற்ப்படும் வயிறு  வலி. பெண்களுக்கு மட்டுமே வரும். அது ஏன்? எதனால்? நாளை பாப்போம். இன்று. நிரந்தர வயிற்று  வலிக்கான நிரந்தர தீர்வை பாப்போம்.

அறுசுவைகளில் கசப்பும் ஒன்று. நாம் வாரத்தில் ஒரு நாளாவது  வேப்பம்பூ ரசம், பாகற்காய் சேர்த்து கொள்ள வேண்டும். நிறைய வெல்லம்  சேர்த்து பக்குவமாக வறுத்தால். பாகற்காய் கசக்காது. வேப்பம்பூ ரசம். அது சாப்பிடும் படி சுவையாக தான்  இருக்கும். ஒருமுறை சாப்பிட்டு தான்  பாருங்களேன். வயிற்று  வலியை  ஏற்படுத்தும்  ஐந்து கிருமிகளுக்கும்  வேப்பிலை எமன். சென்ற 17 அன்று. புற்று நோய்க்கான தீர்வாக. தொடர்ந்து 48 நாட்கள் செம்பு பாத்திரத்தில் துளசியை எட்டு மணி நேரம் ஊர போட்டு. வெறும் வயிற்றில் குடித்து வந்தால் புற்று நோய் பூரணமாக குணம் ஆகும். மேலும். 448 வித நோய்கள்  குணம் ஆகும் என்பதை  பார்த்தோம் அல்லவா. அந்த 448இல் வயிறு சம்பந்தபட்ட அணைத்து கோளாறுகளும் அடங்கும்.

 எலுமிச்சை சாறு. துளசி சாறு இரண்டையும் ஒன்றாக கலந்து. தினமும்  குடிப்பது. வயிற்றில் உள்ள அசுத்தங்களை சுத்தபடுத்தும். அது மட்டும் இல்லாமல். உடலில் ஜீரன சக்தியை அதிகரிக்கும். வாயு தொல்லை, அதனால் வரும் வயிறு வலி தொல்லை. இதனால் நீங்கும்,. மேலும். இது உடலில்  உள்ள நோய் எதிர்ப்பு சக்த்தியை அதிகரிக்கும்.  நமது உடலை சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தும். அகத்திகீரை, மனத்தக்காளி  கீரை. இரண்டும்.  வயிறு வலிக்கு  சிறந்த உணவு. இவை  சற்று கசப்பாக தான்  இருக்கும். இதோடு. தேங்காய், வெல்லம்  இரண்டையும் சேர்த்து சமைப்பது. இதன் மருத்துவ குணம், சுவை இரண்டையும் கூட்டும். வெந்தயம், ஜீரகம், பெருங்காயம் மூன்றையும்  மோரில் கலந்து குடித்து வருதல். infection  னால்  வயிறுக்கு ஏற்ப்படும் பாதிப்புகளுக்கு சிறந்தது.

  மிக முக்கியமாக. வேப்பிலை, பாகற்காய்.இரண்டும்.  வயிறு வலி, வயிற்று  புழுக்கள், வயிறு அசுத்தம் அடைவதால் வரும் நோய்கள், வயிறு வலிக்கு காரணமாக இருக்கும் நான்கு  வைரஸ்கள். முதலியவற்றிற்கு எமன்கள்.  தாமிர பாத்திர துளசி நீரோ. அணைத்து வியாதிகளுக்குமே எமன்.

 நாளை. Endometriosis  நோய்க்கு உரிய தீர்வை பாப்போம்.








Wednesday 22 April 2015

நெஞ்சு எரிச்சலுக்கு தீர்வு. விஷத்தை விலை கொடுத்து வாங்கும் மடையர்கள்.



அஜீரண கோளாறுக்கும் அசிடிட்டிக்கும். [ நெஞ்சு எரிச்சலுக்கும்] சற்று தொடர்பு இருக்கிறது.  ஆனால்.  நாம் சாப்பிடும் உணவு  ஜீரணம் ஆகாமல் போனால். அசிடிட்டி வராது.   அசிடிட்டிக்கு அஜீரணம் காரணம் இல்லை .  ஆனால். அஜீரண கோளாறுக்கு அசிடிட்டி  கரணம்.

  மனித உடல். Physics, chemistry இரண்டின் கலவை. நமது மனித உடலே ஒரு எந்திரம் தான்.  செரிமானம். மற்ற செயல்பாடுகளுக்கு என்று மனித உடலில். பல அமிலங்கள், எந்திரங்கள் இருக்கிறது.  நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்க. வயிற்றில் Gastric  Acid  சுரக்கிறது.





இந்த ஆசிட். உணவுக் குழாய் வயிற்றுடன் சேரும் இடத்திலுள்ள வட்ட வடிவ தசைகளில் உள்ளது. வயிற்றிலிருந்து ஆசிட் மேலே வர விடாமல். அந்த தசைகள்.  இறுகி தடுக்க வேண்டும். இந்த பிடிப்பு சரியில்லை எனில் ஆசிட் எளிதில் மேலே வந்து விடுகின்றது. இதனையே நெஞ்செரிச்சல் அல்லது `அசிடிட்டி' என்கிறோம். வயிற்றில் இருக்க வேண்டிய ஆசிட். நெஞ்சிற்க்கு  வந்தால். அது  நெஞ்சிர்ற்கு அநீதி அல்லவா.

 சரி. நெஞ்சிர்ற்கு அநீதியை ஏற்படுத்தும். அசிடிட்டிக்கு  உரிய தீர்வை பாப்போம். அதற்க்கு  முன்.  சில வியாதிகள் தானாக நம்மை வந்து தாக்கும். அவை. தொற்று  வியாதிகள். ஆனால்?. அசிடிட்டி போன்ற பல வியாதிகள். நாமே பெரும்பாலும் நமக்கு வர வெய்த்து கொள்கிறோம். அசிடிட்டி எதனால்? வருகிறது.

 அதிக கோபம், அதிக காரம். அதை தவிர்த்து. இன்று பலர் செய்யும் முட்டாள் தனம். நாம் oxygen னை  சுவாசித்து. Carbondai  oxide  டை வெளியே விடுவோம். உலகில் அணைத்து  மனிதர்களும். இதை  தானே செய்கிறோம். நாமே நினைத்தாலும். Carbondai  oxide  டை சுவாசிக்க முடியாது. அத்தகைய carbondai oxide. டை. MNC  கம்ப்பனிகள். கூல் டிரிங் பாட்டில்களில்  அடைத்து விற்கிறார்கள். அந்த விஷத்தை. தினமும் லக்ச கணக்கான முட்டாள்கள் காசு கொடுத்து வாங்கி குடிக்கிறார்கள். இதை  தெரியாமல் செய்யும் படிப்பறிவு இல்லாத பாமர மக்களிடம் கூட. எடுத்து சொன்னால். தவறை திருத்தி கொள்கிறார்கள். ஆனால்? இதை  தெரிந்தே செய்யும் படித்த முட்டாள்கள். வியாதி வந்து நல்லா அவஸ்த்தை  படட்டும்  என்று தான் சொல்ல தோன்றுகிறது.  புகை, மது போன்றவைகளும். அசிடிட்டி ஏற்ப்பட காரணம். சரி.  அசிடிட்டிக்கான தீர்வை பார்ப்போம்.

சிறிதளவு இனிப்பு, உணவுக்கு முன்னால் எடுத்துக் கொள்ளலாம். பேரீச்சை, அத்தி, நாவல்பழம், தேங்காய், மாம்பழம், பப்பாளி, மாதுளை, செல்லெரி இலை, சர்க்கரைவள்ளி கிழங்கு, காரட், பீட்ரூட், சீரகம், தனியா, ஏலக்காய்,  பார்லி, கம்பு, கோதுமை, சோம்பு,
குளிர்ந்த பால்,பாதாம்,  துளசி இலை, தர்பூசணி, வெள்ளரி,
இஞ்சி சாறு 2 டீஸ்பூன்,துளசி,  கிராம்பு, சீரகம்,
 வெள்ளரி. மற்றும். அரிசிப்பொறி சாப்பிட அது அசிடிட்டியை உறிஞ்சி விடும். புதினா இலைகளை கொதிக்க வைத்து அந்த நீரை குடிப்பது சிறந்தது. சிறு துண்டு வெல்லத்தை 2 மணிக்கொரு முறை வாயில் வைத்து அந்நீரை விழுங்க அசிடிட்டி கட்டுப்படும். காலையில் வெதுவெதுப்பான நீரில் சிட்டிகை மஞ்சள் தூளை போட்டு பருக அசிடிட்டி குறையும்.

முடிந்த அளவு மிளகாய்க்கு பதில் மிளகை  பயன்படுத்தவும். இளநீர். நெஞ்சு எரிச்சலுக்கு மிக நல்லது. தக்காளி. முடிந்த அளவு. அசிடிட்டி பிரச்சனை இருபவர்கள் மட்டும் தவிர்க்கவும்.



அதிக பழம், காய்கறிகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.  இதுபோன்ற உணவு செரிக்க உடலுக்கு குறைந்த சக்தியும். அதன்மூலம். உடலுக்கு அதிக சக்தியும் கிடைக்கிறது.

 நாளை. வயிற்று  புழுக்களுக்கான  தீர்வை பார்ப்போம்.




Tuesday 21 April 2015

சூப்பர் ஸ்டார் சிக்கிரட் பிடிப்பதை நிறுத்திய காந்தி. நுரையீரல் பிரச்சனைக்கு தீர்வு.



நுரையீரல் பஞ்சு போல் மென்மையானது. புகை பிடித்தல். புற்று நோயை  உண்டாக்கும். புகை பிடித்தல் உயிரை கொல்லும்னு . குட்கா முகேஷ் திரை அரங்கில். எவ்வளவு முறை சொன்னாலும். புகை  பிடிப்பவர்கள். பிடித்து கொண்டு தான்  இருக்கிறார்கள். புகை பிடிப்பவர்களுக்கு வரும் பாதிப்பை விட. அதை  சுவாசிப்பவர்களுக்கு வரும் பாதிப்பு அதிகம். பெரும்பாலான வீடுகளில். புகைப்பவர்களை விட அதை   சுவாசிப்பவர்கள். அதிக பாதிப்பிற்க்கு  உள்ளாகிறார்கள்.

  இந்த கட்டுரையை படிக்கும். புகை பிடிப்பவர்களின் கவனத்திற்க்கு.  நீங்கள் ஆரோக்யமாக  இருக்கிறீர்கள். உங்கள் மனைவி, வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு. அடிக்கடி. ஏதேனும் நோய். வருகிறது என்றால். அது  நீங்கள் பிடிக்கும் புகையை அவர்கள் சுவாசிப்பதால் தான். நீங்கள். உண்மையிலேயே. உங்கள் குடும்பத்தை நேசிப்பவராக இருந்தால். இதை  செய்வீர்களா. உங்களுக்காக  இல்லையென்றாலும். உங்கள் குடும்பத்தினரின் ஆரோக்யதிர்காகவாது. சிகிரெட்டை  துர  எறியுங்கள்.  குடியை விட. புகை பழக்கம்  கொடிது. காரணம். குடி. குடிப்பவனை மட்டும் கொல்லும். புகை. அதை. சுவாசிப்பவர்களையும். சேர்த்து  கொல்லும்.

 இப்ப. இந்த பழக்கத்தில்  இருந்து வெளி வருவது மிக சுலபம். இதற்க்கு என்றே. மெடிக்கல் ஷாப்பில் மருந்து விற்கிறார்கள். அதை  தொடர்ந்து. 14 நாட்கள் நீங்கள் உபயோகபடுத்தினால். பின்னர். உங்களுக்கு சிகிரட்  வாடையின் மீது ஒரு வித வெறுப்பு  வந்து விடும். நீங்களாகவே விருப்பப்பட்டாலும். உங்களுக்கு புகை பிடிக்க தோனாது.  இன்னொரு வழியும் இருக்கிறது.

 அதாவது காந்தி வழி. புரியவில்லை. சூரிய காந்தி பூ.


 உங்களுக்கு எப்பொழுது எல்லாம். புகை பிடிக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ. அப்பொழுது. சூரிய காந்தி விதைகளை சிறிது. பல் இடுக்கில். அடக்கி வெய்த்து கொள்ளுங்கள். சில நிமிடங்கள் கழித்து.  அதை  துப்பி விட வேண்டும். முழுங்க கூடாது. இவ்வாறு சில நாட்கள் செய்து வந்தால். எந்த வித பாதிப்பும் இல்லாமல். நீங்கள் புகை பழக்கத்தில்  இருந்து வெளியே வரலாம்.



 ரஜினி. இவ்வாறு செய்து தான். தனது புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டார்.

பிறந்த இந்த 27 வருடங்களில். நீ. என்ன?  சாதனை செய்தாய். என்று என்னை யாராவது கேட்டால். இதுவரை. புகை பிடிக்காமல்,  தண்ணி அடிக்காமல், குட்கா, ஜர்தா, பான் உண்ணாமல்.  நான் வாழ்ந்து கொண்டு இருப்பதே    மிக பெரிய சாதனை என்பேன். இப்பொழுது. ஸ்டார் ஹோட்டல்களில்.  பெண்கள் அதிகமாக தண்ணி அடிக்கிறார்களாம். எங்கே? போய்  கொண்டு இருக்கிறது. நமது தேசம்.  இதற்க்கு  முன்.  பெண்ணை பெற்ற பெற்றோர்கள். தனது பெண்ணிற்க்கு  மாப்பிள்ளை பார்க்கும் பொழுது. பையனிற்க்கு  குடி, புகை, ரேஸ். இது  போன்ற தீய பழக்கங்கள் இருக்கிறதா என்று விசாரிப்பார்கள். இப்பொழுது. பையனுக்கு பொண்ணு பார்க்கிரவர்களும். அதே  போல். விசாரிக்க வேண்டிய. நிலையில். இன்று  நமது நாடு போய்  கொண்டு இருக்கிறது.

 நுரையீரல் பிரச்சனையை தீர்க்கும் உணவுகளை பார்ப்போம்.

 பீன்ஸ். நாம் சாப்பிடும் உணவுகளில் அதிகம் சேர்த்து கொண்டால். நுரையீரலில் பாதிப்பு வருவதற்க்கான  வாய்ப்பு. கணிசமாக குறையும் என்பது. ஜெப்பான்னில். கார்ட்டின் யூனிவர்சிட்டி  நடத்திய ஆய்வில். தெரிய வந்துள்ளது.  வைட்டமின் சி. அதிகம்  உள்ள உணவுகள். நுரையீரல் பிரச்சனைக்கு தீர்வை அளிக்கும்.

 மாதுளம் பழம், ஆப்பிள், ஆரஞ்சு. இந்த மூன்று  பழங்களும்  நுரையீரலுக்கு அதிக நன்மை செய்யும். மாதுளம் பழம். நுரையீரலில் தோன்றும் கட்டியை. தடுப்பதை மட்டும் செய்யாமல்.  சுவாச பிரச்சனையையும் சரி செய்யும்.

 நாளை. நெஞ்சு எரிச்சலுக்கு உரிய தீர்வை பார்ப்போம்.

Monday 20 April 2015

சிக்ஸ் பாக்கின் ரகசியம். உபாயத்தால் வந்த அபாயம்.




சிக்ஸ் பாக். இன்றைய பல இளைங்கர்களின் கனவுகளில் ஒன்றாக இருக்கிறது. உடல் இளைக்க. உடற் பயிற்ச்சி  செய்பவர்கள் ஒருபுறம் என்றால். நல்ல ஆரோக்யமான உடல் இருந்தாலும். சிக்ஸ் பாக் வர வேண்டும் என்பதற்காக. உடற் பயிற்ச்சி  செய்பவர்கள் இன்னொரு புறம். பிரியாணி. மற்றும் கொழுப்பு சக்த்து உள்ள உணவுகளை எடுத்து கொண்டால். சிக்ஸ் பாக்கிற்கு என்று exercise  பண்ணாலும் Six  Pack வராது. சிக்ஸ் பாக் வந்த பிறகு. பிரியாணி தின்னால். வந்த சிக்ஸ் பாக் பெய்டும்.  ஆனால். கட்டட வேலை, ரோடு போடும் வேலை, விவசாயிகள் இவர்கள் எல்லாம். நிறைய கொழுப்பு சக்த்து உள்ள உணவுகளை எடுத்து கொள்கிறார்கள். அவர்கள் சிக்ஸ் பாக்கிற்கு என்று தனியாக உணவுகளை எடுத்து கொள்வதில்லை. ஜிம்மிற்க்கு  போவதில்லை. ஆனாலும். ஜிம்மிற்கு போய்  சிக்ஸ் பாக் வர வெய்க்கும்  நம்மை விட. அவர்களுக்கு. சிக்ஸ் பாக் ஜம்  என்று நன்றாக இருக்கிறது. அதற்க்கு  காரணம். நமக்கு உடற் பயிற்ச்சி  என்பது. நாம் வேலை செய்யும் நேரம் போக. நமக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் ஒரு பகுதி. ஆனால்? அவர்களுக்கு.  அவர்கள் ஒரு நாளைக்கி. 8 மணி நேரம், 10 மணி நேரம் செய்யும் வேலையே உடற் பயிற்ச்சி  தான்.



  நாம். நுரையீரல் பிரச்சனைக்கான தீர்வை பார்க்கும் முன். உங்களிடம் ஒரு சுவாரஸ்யமான கதையை முதலில் பகிர்ந்து கொள்கிறேன்.  இந்த கதை.   சென்ற பிப்ரவரி மாதம். தினமணியில் நான் படித்தது. இது  எந்த? அளவு உண்மை.






  கன்பூஷியஸ். ஏறக்குறைய 2600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். அப்பொழுது அத்தகைய தொழில் நுட்பங்கள் இருந்து இருக்குமா என்பது தெரியவில்லை. ஆனால்?. ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய கதை.

சீன தேசத்து ஞானிகளில் முதன்மையானவர் கன்பூஷியஸ். இவருக்கு பல சீடர்கள். அதில் ஒருவர் தான் சாங்- ஹோ - சாங்க். தமது குருவிடமிருந்து பல கலைகளை கற்றவர். இயற்பியல், எந்திரவியல் வல்லுநர்.


ஒருமுறை அறிங்கர் சாங் கிராம புறத்தில் உலாவ சென்றார். வழியில் ஒரு அழகான பழத்தோட்டம் கண்டு உள்ளே நுழைந்தார். Six Pack உடம்புடன் ஒரு இளைங்கர் கிணற்றில் இருந்து தண்ணீர்  இறைத்து கொண்டிருந்தார். வாளி [ பக்கெட் ] ரொம்பியதும் தன்னீரை நிமிர்ந்து எடுக்காமல் குனிந்து, முதுகை வளைத்து எடுக்கும் அமைப்பில் அந்த விவசாயி வீட்டு கிணறு இருந்த்து. பாவம் இப்படி மாடாய் உழைத்தால் இவனது ஆரோக்யம் சீக்கிரமே கெட்டு விடுமே. இளமையிலேயே கூன் விழுந்து இவன் கிழவன் போல் ஆகி விடுவானே என்று சாங் வருந்தினார்.


பின்னர் அந்த இளைங்கனை சந்தித்து, இந்த கிணற்றின் இரண்டு பக்கமும் தூண் போல் அமைத்து நடுவில் ஒரு கம்பியை பொருத்தி, அதில் ஒரு கொக்கியை பொருத்தி அதில் இதே பக்கெட்டை தொங்க விட்டு நீ நீரை இறைத்தால் உனக்கு சிரமம் தெரியாது என்று விளக்கினார். அதோடு மறுநாள் அவரே அதை செய்தும் கொடுத்தார்.

அந்த விவசாயிக்கு இது புதுசு. எவ்வாறு இதில் தண்ணீர்  இறைப்பது என்று தெரியாமல் குழம்பினார். சுமார் 2500  ஆண்டுகளுக்கு முன் இது கூட ஒரு அறிவியல் விந்தை அல்லவா. சாங் அதில் எவ்வாறு தண்ணீர்  இறைப்பது என்று செய்து காட்டினார். பின்னர் அந்த விவசாயி மிகுந்த மகிழ்வுடன் தண்ணீர்  இறைக்கலானார். இது உண்மையில் நல்ல விசயம் தான். இதோடு சாங் நிறுத்தி இருக்கலாம். இதன் பின்னர் அவர் செய்த சில அறிவியல் விந்தைகள், அந்த விவசாயிக்கு ஆபத்தாக முடிந்தது.

மறுநாள் மாலை சாங் அந்த தோட்டத்திற்கு வந்தார். விவசாயி அவரை வணங்கி வரவேற்று அமர செய்தார். விவசாயி தண்ணீர் இறைக்கும் சிரமமும், நேரமும் முன்பை விட குறைந்தது. ஆனாலும் சில குறைகள் இருப்பது சாங்கின் அறிவியல் கண்ணிற்க்கு தெரிந்தது. ஒவ்வொரு முறையும் அவர் பக்கெட்டை கிணறுக்குள் இறக்கி, தண்ணீர் எடுத்ததும் கயிற்றிலிருந்து பக்கெட்டை கழட்டி எல்லா செடிகளுக்கும் தண்ணீர் விட்டு மறுபடியும் மாட்டி, மறுபடியும் கழட்டி, மறுபடியும் மாட்டி, மறுபடியும் கழட்டி, மறுபடியும் மாட்டி, கழட்டி, மாட்டி, கழட்டி, மாட்டி. இவ்வாறு கழட்டி, மாட்டும் வேலை மற்றும் நீர் விடுவதற்கு என்று கிணற்ரிற்க்கும், தோட்டத்திற்கும் இடையில் நடக்கும் வேலைக்கு முற்றுப்புள்ளி வெய்க்க வேண்டும் என்று சாங் நினைத்தார். அந்த விவசாயியை மண்வெட்டியை கொண்டு வர சொன்னார்.

கிணற்றின் அடியில் இருந்து தோட்டம் வரை செல்லும் ஒரு கால்வாய் அவர் அமைத்தார். அதன் பின் அந்த விவசாயி நின்ற இடத்தில் இருந்தே நீரை இறைத்து, அந்த கால்வாயில் ஊற்றினார். அவருக்கு நடக்கும் வேலையும் இல்லாமல் போனது, கழட்டி மாட்டும் வேலையும் இல்லாமல் போனது. ஒரு வருடம் கழித்து.

இதற்க்கு முன் இல்லாத அளவு அமோக விளைச்சல், லாபம். அதற்க்கு நன்றி செலுத்தும் விதமாக பெரும் தொகையுடன் சாங் ஆசிரமத்திற்கு விவசாயி அவரது மனைவி இருவரும் வந்தனர். துறவியை வணங்கினர். பக்தனுடைய இந்த காணிக்கையை நீங்கள் ஏற்று கொள்ள வேண்டும் என்று சாங் முன் பணத்தை நீட்ட. அவர் அதை வாங்கி கொள்ள வில்லை. பணமும், துரும்பும் உண்மை துறவிக்கு ஒன்று தான். அந்த பணத்தில் ஒரு சிறு பகுதியை செலவழித்தால் தோட்டத்தில் ஒரு குழாய் வெய்த்து அதன் மூலம் நீர் இறைக்கும் வேலையும் செய்யாமல் அந்த உழைப்பு, அதற்கான நேரத்தையும் மிச்சப்படுத்தலாம் என்று சொல்ல உடனே ஒரு பைப் connection கொடுக்கப்பட்டது.

முதலில் அந்த விவசாயிக்கு குனியும் வேலை போனது, பின்னர் நடக்கும் வேலை போனது. இப்போ பைப் connection மூலம் நீரை இறைக்கும் வேலையும், அதை கால்வாயில் ஊற்றும் வேலையும் போனது. தோட்டத்தை பெருக்குவது விவசாயி மனைவியின் வேலை. [நல்ல வேளை. சாங் வேக்கம் க்லீநர் கண்டுபிடிக்கவில்லை]  சில வருடங்கள் கழித்து.

பல ஊர்களுக்கு சுற்று பயணம் செய்த சாங் தனது மடத்திற்க்கு திரும்பினார். இரண்டு நாட்கள் கழித்து அந்த விவசாயியின் தோட்டத்திற்க்கு சென்றார். அங்கு அவர் கண்ட காட்சிகள் அவரை திகைப்படைய செய்தது. நாம் வேறு இடத்திற்க்கு மாறி வந்து விட்டோமா என்று குழம்பினார். நடக்கும் பாதைகளில் கூட செடிகள் தாறு மாறாக வளர்ந்து இருந்தது. புதர்கள், முட் செடிகள், அழுகிய நிலையில் கிளைகளில் தொங்கும் பழங்கள். அப்பொழுது யாரோ இரும்பும் சத்தம் கேட்டது. பார்த்தால் சும்மா six pack உடலுடன் சிறுத்தை மாதிரி இருந்த விவசாயி உடல் பலம் சிறுத்து, உடம்பு மிக பெருத்து, தொந்தியும், தொப்பையுமாக கயிற்று கட்டிலில் படுத்து இருந்தார். அருகில் விவசாயியின் மனைவி. விவசாயியின் அந்த நிலமையை கண்ட சாங் மனம் அதனால் மேலும் வருத்தம் அடைந்தது.

சாங்கை பார்த்ததும் விவசாயி எழுந்து கை கூப்பினார். விவசாயியின் மனைவி சாங்கை முறைத்து ஒரு பார்வை பார்த்தாள். அவள் பார்வையிலேயே நம் மீது இவளுக்கு ஏதோ கோபம் என்பது அவருக்கு புரிந்தது. ஆனால்? கோபத்திற்கான காரணம் புரியாதவராய் சாங்கை பார்த்து. உனக்கு எதனால் இந்த நிலமை. நீ வேறு ஏதேனும் கடின வேலை செய்ததால் உனக்கு இந்த மாதிரி ஆய்டுத்தா. சொல். அந்த உழைப்பையும் குறைக்க நான் எதாவது உபாயம் செய்கிறேன் என்று சொல்ல, அருகில் இருந்த விவசாயியின் மனைவி அய்யா, உபாயம்ங்கர பேர்ல நீங்க இதுவரை செய்த அபாயங்கள் எல்லாம் போதும். இவர் கடினமாக உழைத்ததால் இப்படி ஆகவில்லை. உழைப்பதை நிறுத்தியதால் தான் இவ்வாறு ஆனார் என்று சொல்ல, அப்பொழுது தான் சாங்கிற்க்கு அவள் கோபத்திற்கான காரணம் புரிந்தது. அவள் மேலும் பேசலானாள்.

இதற்க்கு முன் இவர் உடம்பிலிருந்து வெள்ளமாக வேர்வை வரும் அளவு உழைத்தார். அதில் இவர் உள் உடம்பு நல்லா சுத்தம் ஆச்சு, பாத்தி கட்டி நல்லா ஃபுல் மீல்ஸ் சாப்ட்ட மனுசன். படுத்த உடனேயே தூங்கிய என் புருசன். இப்போ இவர் உடம்பு வேர்ப்பதில்லை, சரியாக சாப்பிடுவதில்லை, போன வருடம் சாப்பிட்ட சாப்பாட்டில் கால் பங்கு கூட இந்த வருடம் இவர் சாப்பிடவில்லை. அப்டி கம்மியா சாப்ட்டே அஜீரண கோளாறு, தூக்கம் வராமல் தவிப்பு, இது எல்லாம் சேர்ந்து தான் இன்று இவரை இந்த நிலைக்கு ஆக்கியது என்று அவள் சொல்லி முடித்ததும். சாங் அப்டியே அமைதி ஆனார். சாங் தன்னுடைய தவறுக்கு மன்னிப்பு கேட்டது மட்டுமில்லாமல் தனக்கு ஞானம் புகட்டிய அந்த ஞான பெண்ணை தனது குருவாக ஏற்று கொண்டார்.

மூன்று மாதம் கழித்து. விவசாயி பழைய தெம்புடன் உழைக்கலானார். கிணறு இருந்தது, கிணற்றின் இரண்டு பக்கமும் தூண் இருந்தது, இரண்டு தூண்களுக்கு நடுவில் கம்பி, கம்பியில் கொக்கி, கொக்கியில் வாளி, கீழே கால்வாய் எல்லாம் இருந்தது. ஆனால் குழாய்யை காணோம்.

மனிதனுடைய உடல் உழைப்பு, நேரம் முதலியவற்றை குறைக்க எந்திரங்கள் தேவை தான். ஆனால் உயிர் அற்ற எந்திரங்களையே ஒரு மனிதன் முழுமையாக சார்ந்து இருந்தால், உயிர் உள்ள மனித எந்திரம் ரிப்பேர் ஆய்டும். சும்மாவா சொன்னார் திருமூலர். மனமே மந்திரம், உடலே எந்திரம். அன்று உணவே மருந்து. இன்று மருந்தே உணவாக இருக்கு. அன்று நம்முடைய அன்றாட வேலைகளே உடற் பயிற்சியாக இருந்தது. இன்று உடலுக்கு என்று தனியாக பயிற்ச்சி தேவைப்படுகிறது. கடின வேலைகள் செய்வதை விட, தலை முதல் தோள், மார்பு, கை, வயிறு, இடுப்பு, கால் என்று உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பிற்க்கு என்று பிரத்யேகமாக பயிற்சிகள் செய்வது சிறந்தது தான். தினமும் ஒரு அரை மணி நேரமாது உடற் பயிற்ச்சி செய்யுங்கள். நோயின்றி வாழுங்கள். நோயற்ற வாழ்வே, குறைவற்ற செல்வம்.
நாளை. நுரையீரல் நோய்க்கு உரிய தீர்வை பார்ப்போம்.






சகாயம். 700 கோடியில் ஒருவர்.




நேர்மை, துணிச்சல் இரண்டும் மிகுந்த மத்திய. மாநில அரசு அதிகாரிகள் ஒரு லக்சம் பேர் கூடவா  இந்தியாவில் இருக்க மாட்டார்கள். தமிழகத்தில் ஒரு ஆயிரம் பேர் கூடவா  இருக்க மாட்டார்கள்.  ஒரு அரசாங்க அதிகாரி. மிக நேர்மையாக பணியாற்றுகிறார் என்றால். அவர் வாங்கும் சம்பளத்திற்கு. நேர்மையாக வேலை செய்கிறார்.  அவ்வளவு தான். அந்த ஆயிரத்தில். சகாயம் என்கிற ஒருவரை மட்டும். ஏன்? தலையில் தூக்கி  வெய்த்து  கொண்டாட வேண்டும்.  என்று சிலர் கேட்கிறார்கள்.

  அதீத நேர்மை, அதீத துணிச்சல். இரண்டும் ஒருங்கே அமையபெற்ற அதிகாரிகள். இந்தியாவில். அதிக பக்ஷம் ஒரு ஆயிரம் பேர் இருப்பார்கள்.  ஆனால்?  சகாயம் அளவு நேர்மை, துணிச்சல் வாய்ந்த அதிகாரி.  அகில உலகங்களில் சல்லடை போட்டு தேடினாலும். எங்கும் கிடைக்க மாட்டார்கள். இவர் ஆயிரத்தில்  ஒருவரோ, லக்சதில் ஒருவரோ, ஏன் ? கோடியில் ஒருவரோ கூட  அல்ல . 700 கோடி உலக மக்கள் தொகையில். இவரை போல் இவர் மட்டுமே இருக்கிறார். இவர் 700 கோடியில் ஒருவர்.

அப்படி என்ன? அவர் செய்தார். லஞ்சம்  வாங்காமல் நேர்மையா இருந்தார், தப்பு செய்பவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுத்தார்,  தனது அதிகாரத்தை பயன் படுத்தி. அதிக பக்சம். எவ்வளவு மக்களுக்கு நன்மை செய்ய முடியுமோ. அதை  செய்தார். அவ்வளவு தானே. என்று நீங்கள் கேட்டால். இல்லை. உலகில் எந்த ஒரு அதிகாரியும் செய்யாததை, செய்ய துனியாததை  இவர் செய்தார்.  இதை  பற்றி ஏற்கனவே பலர்  முகனுல்  பக்கங்களில் பதிவு செய்துள்ளனர். ஆனாலும். மறதி  என்பது தமிழர்களின் தேசிய வியாதி. அதுவும் வெய்யில் காலங்களில்.  நம்மில் பலர் இதை  மறந்து விடுவார்கள் என்பதால். இப்பொழுது இதை  நியாபகபடுத்த வேண்டியது என் கடமை.

 காஞ்சிபுரத்தில் ஒரு பெரியவர். பெப்சி கூல் டிரிங் வாங்குகிறார்.  அதில் அழுக்குகள்  மிதப்பது அப்படியே அப்பட்டமாக தெரிகிறது, அப்பொழுது காஞ்சிபுரம் டி.ஆர்.ஓவாக இருந்த சகாயத்திடம். அந்த பாட்டிலோடு பெரியவர்  வந்தார். சகாயம் அவர்கள். உடனே களத்தில் குதித்தார். 7,8 கடைகளில், குடோன்களில் அவர் அதிகாரிகளுடன் ஆய்வில் இறங்குகிறார். உடன் இருக்கும் அதிகாரிகள் எல்லாம் பயந்து நடுங்குகின்றனர். சார். இது  ரொம்ப பெரிய........... இடம்.  என்று இழுத்தனர்.  சகாயம் அவர்கள்.  இது. எவ்ளோ பெரிய...........................  இடமாக  வேண்டுமானாலும் இருக்கட்டும்.  மக்களின் ஆரோக்யம் என்பது. அதை  விட ரொம்ப பெரிய..........................................     விஷயம் என்று சொன்னார். அணைத்து இடங்களில் செய்த ஆய்வுகளிலும். பெப்சி கூல்  டிரிங்கில் அழுக்கு இருப்பது  தெரிய வந்தது. முடிவில். அந்த கூல் டிரிங். லேப்பில் பரிசோதனை செய்வதற்காக அனுப்பி வெய்க்கப்பட்டது.   உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அழுக்கு படலங்கள், நச்சு பொருட்கள் இருப்பது  உறுதி செய்யபட்டது.  சகாயம் அவர்கள் உடனடியாக என்ன?  செய்தார் தெரியுமா.

 செங்கல்பட்டில் உள்ள தாசில்  தாருக்கு  போன் செய்து. எட்டு பூட்டுகளை  வாங்கி கொண்டு. சென்னை, திருச்சி நெடுஞ்சாலைக்கு வர சொன்னார். அவரும் எட்டு பூட்டுகளோடு சகாயம் சொன்ன இடத்திற்க்கு  வந்தார்.  எதற்காக? இந்த பூட்டு  என்று தாசில்  தார்  கேட்டார். வாங்க. சொல்றேன். என்று அவரை வண்டியில் அழைத்து கொண்டு. நேராக. திருமுல்லை வாயிலில் உள்ள பெப்சி கம்பெனிக்கு  போனார்.  அப்பொழுது கூட. தாசில்  தாரால். பெப்சி கம்பெனிக்கு  வேட்டு  வெய்க்க தான். இந்த எட்டு பூட்டுகள்  என்று.   கற்பணை  கூட  செய்து பார்க்க முடியவில்லை. நம்ப எதுக்காக. பெப்சி கம்பெனிக்கு  வந்து இருக்கோம் என்று தாசில்  தார்  கேட்டார்.   அவரிடம். சகாயம் அவர்கள். Flash Bag  சொன்னார்.  மேலும் லேப்  ரிப்போர்ட்டை. தாசில்தார் கையில் கொடுத்து.  இந்த காப்பியை. இதன்  மேனேஜர்ரிடம் கொடுத்து. உடனடியாக. இந்த இடத்தை விட்டு. அனைவரும் வெளியேறுமாறும். இந்த கம்பெனிக்கு  சீல் வெய்க்க போவதாகவும். சொல்லுங்கள் என்று  அவர் சொல்ல. அதை  கேட்ட தாசில்தார். பயத்தில் உறைந்து போய் விட்டார். சார்.  இது  ரொம்ப பெரிய இடம். எதுக்கும். கலெக்டர்  கிட்ட ஒரு வார்த்தை... என்று அவர் இழுக்க. சகாயம். அவரிடம் கேட்டால்.  வேண்டாம் என்று தான்  பதில் வரும். இதை  செய்வதற்கு. சட்டப்படி. துணை கலெக்டர்ரான எனக்கே அதிகாரம் உண்டு. நான் சொன்னதை  செய்யுங்கள். என்று அழுத்தமான குரலில் சொல்ல. தாசில்தார். பயந்து நடுங்கியவாறே உள்ளே போனார்.

 ஒரு மணி நேரம் கழித்து  தாசில்தார் வெளியே வந்தார். சார். அவுங்க. உள்துறை செயலாளர், தலைமை செயலாளர்னு  ஒருத்தர் விடாம. எல்லாருக்கும் போன் பண்ணிட்டாங்க. யார், யார் பேரலாமோ  சொல்லி. நாங்க. அவுங்க கிட்ட பேசிக்கறோம், இவுங்க கிட்ட பேசிக்கறோம்னு சொல்றாங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்கு சார் என்று அவர் சொல்ல. சகாயம். நமது கையில் லேப்  ரிப்போர்ட் இருக்கு. இப்பொழுது. இவர்களாக வெளியில் வரவில்லை என்றால். அனைவரையும் கைது செய்து. பின்னர். இந்த கம்பெனிக்கு  சீல் வெய்போம்  என்று சொல்லுங்கள் என்று சகாயம் சொல்ல. அதை அப்படியே. அவர். அந்த கிளை மேலாளரிடம் சொல்ல. அடுத்த பதினைந்து நிமிடங்களில். அனைவரும் வெளியே வந்தனர்.  பின்னர் அந்த கம்பெனிக்கு  எட்டு பூட்டுகள்  போட்டு பூட்டப்பட்டது.

 இதை  பற்றி. ஒரே  ஒரு பத்திரிகை மட்டும் தான்  செய்தி வெளியிட்டது. கத்தி  கதிரேசன் ஸ்டைல்ல சொல்லனம்னால். லேகியம் விக்கவும், சமையல் குறிப்பு எழுதவும், சினிமா கிசு, கிசுக்கள்  எழுதவும் பத்திரிகைகளில் இடம் இருக்கு. ஆனால்  இதை  பத்தி நாலு வரி எழுத இடம் இல்லை. இதை  பற்றி துணிச்சலாக எழுதிய. தமிழ் நாட்டில் முதுகெலும்பு உடைய ஒரே பத்திரிகை. ஜூனியர் விகடன்.


 அப்பொழுது செல். நமது நாட்டிற்க்கு  வரவில்லை. பெப்சி கம்பெனிக்கு  எட்டு பூட்டு  போட்டபின். அலுவலகத்திற்கோ, வீட்டிற்கோ. செல்லாமல். அவர். அருகில் உள்ள கிராமங்களில் ஆய்வு செய்ய சென்றார். இரவு எட்டு மணிக்கு தான்  வீட்டிற்க்கு  வந்தார். அதற்குள் . வீட்டிற்கும், அலுவலகத்திற்கும். மாறி, மாறி பல போன் கால்கள். அவர் வீட்டிற்க்கு  வரும் பொழுது. அவரது மனைவியார்  வெளியே நின்று கொண்டிருந்தார்.  பல மிரட்டல் கால்கள் வந்ததை பற்றி சொன்னார். யாரை கேட்டு பெப்சி கம்பனிக்கு சீல் வெய்த்தீங்க. உங்களை சச்பெண்ட்  பண்ண போறோம். என்று கலெக்டர் சொல்ல. நான். இந்திய சட்ட, திட்டங்களை மீறி எதுவும் செய்யவில்லை. என் மீது நடவடிக்கை எடுப்பதாக  இருந்தால். தாராளமாக எடுக்கலாம். Iam Waiting என்று  போன்னை  வெய்த்தார்.

 இவர் அது  மட்டும் செய்யவில்லை. காஞ்சிபுரம் மாவட்டத்தில். பெப்சி குளிர்பானம் விற்க்க  தடையும் விதித்தார். உலகில் வட  கொரியா போன்ற சில நாடுகள். பெப்சி, கோக் பானங்களை தடை செய்துள்ளது. இதை  கேரளா, அருணாச்சல் பிரதேஷ், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் விற்பதில்லை. இப்பொழுது டெல்லியில். பள்ளி, கல்லூரிகளில் இதை  விற்க்க  தடை.  அது  எல்லாம் செய்தது அரசாங்கமே ஒழிய, அரசாங்க அதிகாரிகள் இல்லை. ஆனால்?.உலகிலேயே.  பெப்சி  விற்க்க  தடை உத்தரவு பிறப்பித்த முதல். One  and  Only அதிகாரி  இவர் தான்.  பின்னர். அவர் அங்கிருந்து உடனடியாக.  transfer  செய்யப்பட்டதும். இரண்டே நாளில். அந்த எட்டு பூட்டுகள்  உடைக்கபட்டதும் வேறு விஷயம். ஆனால்?.

தன்னுடைய அதிகார வரம்பை தவறாக துஷ் பிரயோகம் செய்யும். பல அதிகாரிகளின் மத்தியில். எந்த அளவு தன்னுடைய அதிகாரத்தை பயன் படுத்தி. நல்லது செய்ய முடியுமோ செய்தார். இரண்டு நாட்களாது அவரால். பெப்சி கம்பெனியை தடை செய்ய முடிந்ததே. இவர். மாற்றலாகி போகும் ஒவ்வொரு ஊரிலும்.  அது  வரை  கிடைக்காமல் இருந்த. முதியோர் பென்ஷன், தியாகி பென்ஷன், மாற்று திறநாளிகளுக்கு அரசாங்கம் மூலம்  கிடைக்க வேண்டிய உதவி என அனைத்தும் கிடைத்தது. சென்னையில் 650 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலங்களை. இவர் மீட்டதில் ஆரம்பித்து. மதுரையில். பல ஆயிரம் கோடி மதிப்பில்.  நடந்த. கிரானைட்  முறைகேட்டை. அம்பலபடுத்தியது  வரை. இவர். செய்த சாதனைகள். கொஞ்சம், நஞ்சம் அல்ல. மேலோட்டமாக. இதை  கேட்பவர்களுக்கு. இவர் ஏதோ. தனது கடமையை ஒழுங்காக. செய்த ஒரு அதிகாரி என்று தோன்றலாம். ஆனால்?

 பலமுறை. இவர் தனது உயிரை பணையம் வெய்த்து தான். இத்தனை  விசயங்களை செய்ய முடிந்தது. ஒரே நாளில் இரண்டு முறை transfer  செய்யப்பட்டவர் இவர். MA, ML  படித்து. IAS  சும்  படித்தவர்.  சட்ட படிப்பு இவர் படித்ததால்  தான். சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன் படுத்தி.  ஆட்டையா  போடும்  பலரை இவரால் வேட்டை ஆட முடிந்தது. போர் கலைகள் கற்ற மற  தமிழனாக இவர் இருப்பதால். பத்து  பேர் ஆயுதங்களோடு வந்தாலும். இவரால் தனி ஒருவனாக. அவர்களை.  பந்தாட முடிந்தது.

 இப்பொழுது சொல்லுங்கள். இத்தகைய நேர்மை, துணிவு, வீரம், அறிவு என அனைத்தையும் உடைய. தமிழை தாய் மொழியாக கொண்ட இவர்.  நமது தமிழ் நாட்டின் முதல் அமைச்சராக ஆனால்  எப்படி இருக்கும். இவரை பற்றி தெரியாதவர்களும். நமது தமிழ் நாட்டில் இருக்கிறார்கள் என்பது கசப்பான உண்மை.

 அடுத்து கிருஷ்ண கிரியில் 77 ஏக்கர் பரபளவு நிலத்தை. கோக்  கம்பெனிக்கு  தமிழக அரசாங்கம் வாடகைக்கு விட போகிறது. ஒரு ஏக்கருக்கான வாடகை 77 ருபாய் மட்டுமே.

77x 77= 5929 ரூபாய் மட்டுமே. இது  பன்னாட்டு நிறுவனத்திற்கான வாடகையா? இல்லை. Bachelor ரூமிர்கான வாடகையா.

  வெய்யில் அதிகம் இருப்பது  உண்மை தான். கோக், பெப்சி குடிப்பதற்கு  பதில். Fresh  Lemon  Juice  குடிக்கலாமே.

 மேலும் சகாயம் அவர்களை பற்றி சிந்திக்க வேண்டியது நிறைய இருக்கிறது. சிந்திப்போம்.