siddhas

Monday 6 April 2015

நோய் தீர்க்கும் நெய்.

Add caption

சென்ற புத்தக கண் காட்சியில் எனது நண்பர் யுக பாரதியை சந்தித்தேன். அப்பொழுது நண்பர் யுக பாரதி அவர்கள் கூறினார். நெய் இல்லா உண்டி பாழ். நீர் இல்லா நெற்றி பாழ் என்று ஔவ்வையார் சொல்லியிருக்காங்க. நீர் இல்லா நெற்றி பாழ் என்பதை வேண்டுமானால் ஏற்று கொள்ளலாம். என் போன்ற பருமனான ஆசாமிகள் நெய் எடுத்து கொண்டால் ஆரோக்கியம் பாழ் என்றார். நான் அவரிடம் கூறினேன். அய்யா. நீர் இல்லா நெற்றி பாழ் என்பது வேண்டுமானால் அனைவருக்கும் பொருந்தாத ஒன்றாக இருக்கலாம். ஹிந்துக்களிலேயே வைஷ்ணவர்களில் பெரும்பாலானோர் திருநீர் இட்டு கொள்ளாதவர்கள் இருக்கிறார்கள். ஆனால் நெய் என்பது மத சின்னம் அல்ல. அது ஒரு அரு மருந்து என்று சொல்லி அங்கே நெய் புராணம் கூற ஆரம்பித்தேன். அடியேனது நெய் புராணத்திற்கு இயற்க்கை விஞ்ஞானி நம்மாழ்வார், டாக்ட்டர் அப்துல் ரஹீம், ஹீலர் பாஸ்கர் போன்றோர்களின் நூல்கள் உதவி புரிந்தன. 
1] உடலில் உள்ள கெட்டச் சத்துக்களை வெளியேற்றுகிறது,
2] கண் நிரம்புகளை பலப்படுத்துகிறது.
3] தசைகளை வலுப்படுத்துகிறது
4] நெய்யில் உள்ள விட்டமின் A, D, E,, K ஆகியவை உடலில் ரத்தத்ததை சுத்தப்படுத்தி ரத்த சுழற்சியை மேம்படுத்தும் மேன்மையான பணியை செய்கிறது.
5] வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை சமன் செய்து வயிறு மற்றும் குடல் பகுதியில் உள்ள மியூகஸ் லையனிங் பகுதியை வலுவாக்குகிறது.
6] நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
7] சர்ம பளபளப்பை தருகிறது.
8] அல்சர் நோய்க்கு நெய் மிக சிறந்த மருந்து.
9] நெய்யில் Saturated fat – 65%
Mono – Un Saturated fat – 32%
Linoleic – Un Saturated fat -3% உள்ளது.
10] சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேதம் இரண்டிலுமே நெய் மிக உயர்ந்த இடத்தில் இருக்கிறது.
11] அரபு தேசங்களை இஸ்லாமின் கீழ் ஒரே ஆட்சிக்கு அடிகோலிய ஹசரத் முகம்மது அவர்கள், பசுவின் பால் ஒரு மருந்து; அதன் நெய் அமிர்தம்; அதன் மாமிசம் ஒரு நோய்”
நெய் என்பது பாலின் தரத்தைப் பொறுத்து இருக்கிறது. கலப்படம் இல்லாத பால் ஒரு சாத்வீகமான, உடலுக்கும் மனதுக்கும் அமைதியைக் கொடுக்கும் உணவு.
ஆனால் தற்சமயம், நமக்குக் கிடைக்கும் பால் பரிசுத்தமானதா என்பது ஒரு கேள்விக் குறிதான். பால் அதிகம் கறக்க வேண்டும் என்று பசு மாடுகளுக்கு ஹார்மோன் ஊசிகள் போடுகிறார்கள். கால்நடை தீவனங்கள் ரசாயனக் கலவைகளால் ஆரோக்கியமானவையாக இருப்பதில்லை. இதனால் கறவை மாடுகளும் அவற்றின் பாலும் மிகவும் பாதிக்கபடுகின்றன.
நல்ல சுத்தமான பாலிலிருந்து தயாரிக்கப்பட்ட தயிர், மோர், நெய் முதலியவை நம் உடலுக்கு போஷாக்கைக் கொடுப்பதுடன் வியாதிகளைப் போக்கும் உணவுப் பொருட்களாகவும் இருக்கின்றன.
சுத்தமான நெய் எனப்படுவது வீட்டிலேயே காய்ச்சப்படும் நெய்.
வெண்ணெயைக் காய்ச்சும் போது, அதிலிருந்து நம் உடலுக்குத் தேவையான நல்ல பாக்டீரியாக்களை ஊக்குவிக்கும் என்சைம்கள் வெளிப்படுகின்றன.
அனைத்தையும் பொறுமையாக கேட்ட எனது நண்பர். அவருடைய குடும்ப டாக்ட்டர். நீங்கள் குண்டாக இருப்பதால் நெய்யை தவிர்க்க வேண்டும் என்று சொல்லியும் அவர் அப்பப்ப நெய் சேர்த்தார். அதனால் அவருக்கு ஒன்றும் ஆகவில்லை. அவருக்கு மிகவும் பிடித்த அவரின் ரோல் மாடலாக இருக்கும் ஒரு எழுத்தாளர். அவர் ஆரோக்கியம் பற்றி எழுதிய தனது புத்தகத்தில் நெய் சாப்பிட்டால் ரத்த குழாய்களில் கொழுப்பு படியும் என்று தனது நூலில் பயமுறுத்தி இருக்கிறார். அதை படித்ததில் இருந்து நண்பர் யுக பாரதிக்கு நெய் என்றால் பயம், வெண்ணை என்றால் பயம், தயிர் என்றால் பயம், பால் என்றாலும் பயம். நான் எனது நண்பருக்கு அது சம்பந்தமாக விளக்கம் கொடுத்தேன்.
நெய்யில் உள்ள வைட்டமின் K2 ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிவதை தடுக்கிறது. எனவே இதையத்திற்க்கு சிறந்தது என்றேன். மேலும் உங்களுக்கு சந்தேகமாக இருந்தால் இந்த நெய்யை வெய்த்து பூச்சாண்டி, பயாஸ்கோப் காட்டும் ஆங்கில மருத்துவர்களிடம் மூன்று கேள்விகளை கேளுங்கள்.
question Number 1. வைட்டமின் K2 வின் பணி என்ன. அதற்க்கு அந்த டாக்டர் விளக்கம் கொடுத்த பின்.
question Number 2. நெய்யில் வைட்டமின் K2 இருக்கிறதா, இல்லையா. இல்லை என்று பொய் சொல்ல டாக்டர்ரால் முடியாது. வேறு வழியில்லை. இருக்குனு தான் சொல்வார்.
question Number 3. நெய்யை தினமும் அரை ஸ்பூந், ஒரு ஸ்பூந் சாப்பாட்டுல சேர்த்து கொண்டால் அது உடலுக்கு நல்லதா. கெட்டதா.
ஆங்கில டாக்ட்டர்????...
நீங்க 3ர்ட் question ன first question னா கேட்டால் அந்த டாக்ட்டரிடம் இருந்து வரும் பதில் நோ. அவ்வாறு கேட்காமல் நான் கேட்பதை போல் கேட்டால். அந்த ஆங்கில டாக்ட்டர். அது வந்து. லிமிட்டா நெய் சாப்பிட்டா அது ஒன்னும் பெரிசா பண்ணாது தான். அப்டினு பதில் சொல்லுவாரு.
மேலும் எனது நண்பர் யுக பாரதியிடம் அதே டாக்ட்டர் ஹார்ட் அட்டாக் வராமல் இருக்க அசைவ உணவுகளை தவிர்க்குமாறும் நிச்சயம் கூறியிருப்பார். அசைவ பிரியரான நீங்கள் அதை கேட்டீர்களா.
யுக பாரதி- இல்லை.
ஒரு ஸ்பூந் நெய்யில் 14 கிராம் கொழுப்பு தான் உள்ளது. நீங்கள் சாப்பிடும் ஆடு, நண்டு, இறால், வஞ்சரம், கோழி இவற்றில் இருப்பதை விட அதிகமாகவா நெய்யில் கொழுப்பு இருக்கிறது. உங்க நெஞ்சை தொட்டு சொல்லுங்க. என்றேன். அவர் வாயிலிருந்து, இதையத்தில் இருந்து இல்லை என்று பதில் வந்தது. மேலும் அவர் இனி தினமும் மத்திய உணவில் ஒரு ஸ்பூந் நெய் சேர்த்து கொள்கிறேன் என்றும் அசைவ உணவை சற்று குறைத்து கொள்கிறேன் என்றும் சொன்னார்.
நான் அவரிடம் நிறைவாக. நீங்கள் அசைவம் சாப்பிடுவதும், சாப்பிடாததும் உங்கள் விருப்பம். ஆனால் நீங்கள் எந்த உணவை சாப்பிடுவதாக இருந்தாலும் அதை விருப்பத்தோடு, மகிழ்வோடு உன்ன வேண்டும். அப்பொழுது தான் அந்த உணவு செரிக்கும். நீங்கள் உண்ணும் உணவிற்க்கு தகுந்த வேலையை உடம்பிற்கு கொடுக்க வேண்டும். நீங்கள் எந்த எழுத்தாளரின் நூலை படித்தீர்களோ அதே எழுத்தாளரின் நூலை நானும் படித்தேன். அதன் பிறகு எனக்கு உடற் பயிற்சியின் மீது இருந்த காதல் அதிகரித்து விட்டது. நீங்களோ அவர் அதில் கூறிய நல்ல விசயங்கள் அனைத்தையும் விட்டு விட்டீர்கள். நெய் சமாச்சாரத்தை மட்டும் மிக கெட்டியாக பிடித்து கொண்டு விட்டீர்கள். நாளையிலிருந்து உடற் பயிற்ச்சி செய்ய ஆரம்பியுங்கள். இந்த புத்தக கண் காட்சியில் அனைத்து ஸ்டால்களிலும் நீங்கள் நடப்பதிலிருந்தே உங்கள் உடற் பயிற்ச்சி ஆரம்பம் ஆவதாக நினைத்து கொள்ளுங்கள் என்று கூறி விடை பெற்றேன்.

சுவாமியே சரணம் நெய்யப்பா.
நாளை தேங்காய் பற்றி பார்ப்போம்.

1 comment:

  1. paruppu nei yilirunthuthaan namathu saappadu aarambiththathu

    ReplyDelete