siddhas

Wednesday 21 January 2015

தீரா குறை தீர்க்கும் சித்த புருஷி








14] ஞானியர் கோவில்கள்

நகரங்களில் சில இடங்களில் ஒரு தெரு ஒரு கிலோ மீட்டர். அதற்கும் மேல் கூட நீளமாக இருக்கும். அதை போல் தான் சென்னை பீச் ரயில் நிலையம் அருகில் உள்ள தம்பு செட்டி தெரு. பீச் ரயில் நிலையத்தில் இருந்து நீங்கள் இறங்கி வந்து. இடது பக்கம் உள்ள தம்பு செட்டி தெருவில் சென்றால் அங்கே புகழ்பெற்ற காளிகாம்பாள் கோவில் இருக்கிறது. அது பாரிஸ் [ பூக்கடை] போகும் வழி. வலது பக்கம் உள்ள தம்பு செட்டி தெருவில் போனால். அது ராயபுரம் செல்லும் வழி. அந்த தெருவின் எண்ட் எதுவோ அங்கே இடது பக்கம் அமர்ந்து இருக்கும் இந்த பெண் சித்தர் பெயர் தான் ராஜ ராஜேஸ்வரி அம்மா. தன்னை நம்பி வந்தோர் குறைகளை தீர்த்த கருணா மூர்த்தி. அதே சமயம். தீயவர்கள் யாரேனும் இவரை நெருங்க முயற்ச்சி செய்தால் அவர்களை மலை பாம்பு வாசலில் வரவேற்கும். அதை பார்த்து அலறியடித்து கொண்டு வந்தவர்கள் ஓடுவார்கள். சுயம்பு சித்தர் பீடத்தை எனக்கு தெரியப்படுத்திய அதே ராஜன் அய்யா தான் இவரை பற்றியும் தெரியப்படுத்தினார். இவரும், இவரது துணைவியாரும் பலநாட்கள் இந்த பெண் சித்தர்ரோடு வாழ்ந்து இருக்கிறார்கள். காளிபாம்பாளை தரிசனம் செய்ய செல்பவர்கள். அப்படியே இந்த சித்த புருஷியையும் ஒரு முறை தரிசனம் செய்யுங்கள். இவர் ஜீவ சமாதி. நடைபாதையில் எளிமையாக இருக்கிறது. 

No comments:

Post a Comment