siddhas

Tuesday 20 January 2015

56 வருடங்கள் பேசா விருதம் இருந்த ஞானி






12] ஞானியர் கோவில்கள் 

இந்த சித்த புருசர். 1940இல் ஆரம்பித்து. 1996 வரை 56 வருடங்கள் பேசா விருதம் இருந்த ஞானி. இவர் ஜீவ சமாதி. அம்பத்தூர் Ot பஸ் ஸ்டாப் அருகில் இருக்கிறது. பல அதிசயங்கள், அற்புதங்களை சத்தமே இல்லாமல் பண்ண ஞானி. இவர் பெயராலேயே இவர் அதிஸ்டானம் உள்ள தெரு இருக்கிறது. மௌன சாமி மடம் தெரு. அந்த தெரு வாசிகளை மௌன சாமி சித்தர் பீடம் எங்கு இருக்குனு கேட்டு பாருங்க. அப்டி ஒன்னு இங்க இல்லவே இல்லை. இந்த தெரு பேர் தான் மௌன சாமி தெரு என்று சொல்வார்கள். பல இடங்களில் இன்று இவ்வாறு தான். அருகில் இருப்பவர்கள் அதன் அருமை, பெருமை உணராத தீர்த்த கறை பாவியாக இருக்கிறார்கள். அம்பத்தூர் Ot பஸ் ஸ்டாப்பில் இருந்து இது நடக்கும் தூரம் தான். அந்த தெருவில் காதி கடை இருக்கிறது. அதற்க்கு எவ்வாறு செல்ல வேண்டும் என்று கேளுங்கள். அந்த காதி கடைக்கு முன்பே இந்த சித்தர் பீடம் இருக்கிறது. பெரிய கறுப்பு கேட். அதில் வெள்ளை தாமரை Design இருக்கும். வெளியில் பார்க்க வீடு போல் தான் இருக்கும், உண்மையில் அங்கு ஒரு வீடும் இருக்கிறது. அந்த வீட்டின் பின் அந்த சித்தர்ரின் அருள் சுரக்கும் பீடம் இருக்கிறது. அந்த வீட்டு உரிமையாளர் தான். இந்த சித்தர் பீடத்தை பராமரித்து கொண்டிருக்கிறார்.

Timing. Morning 6 to Night 7.30

No comments:

Post a Comment