siddhas

Showing posts with label திருத்தேவன்குடி. Show all posts
Showing posts with label திருத்தேவன்குடி. Show all posts

Friday, 13 February 2015

அருளை அள்ளி வழங்கும் அரு மருந்து நாயகி




திருத்தேவன்குடி கற்கடகேஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் அமைந்துள்ளது. நண்டு பூசித்த ஸ்தலம். தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் இது 42வது தலம் ஆகும். உடல் நோய்கள் அதுவும் குறிப்பாக சர்ம நோய்களுக்கு மிக சிறந்த பரிகார ஸ்தலம். இங்கு அம்பாள் பெயரே அரு மருந்து நாயகி. சோழ மன்னர் ஒருவரின் நோய்யை இந்த ஸ்தலத்து ஈசனும் அம்பாளும் தீர்கக அவரால் எழுப்பப்பட்ட கோவில் இது. திருந்து தேவன் குடி, நன்டான் கோவில் என்று பல்வேறு பெயர்களில் இந்த ஸ்தலம் அழைக்கப்படுகிறது.



இந்த ஸ்தலத்து ஈசனுக்கு நல்லெண்ணையால் அபிஷேகம் செய்து அதை பிரசாதமாக பக்தர்களுக்கு கொடுப்பார்கள். அதை நாம் உடலில் பூசி கொண்டு சிறு துளி அதை உண்டால் தோல் வியாதிகள் குணமாகும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. பழனி நவ பாசான முருகன் போலவே இந்த ஸ்தலத்து சிவ லிங்கத்திலும் பல வித மூலிகைகளின் சூட்சுமங்கள் அடங்கியுள்ளன. உடற்பிணி, மனப்பிணி நீக்கி, மன துயரங்கள் போக்கி, நாம் எண்ணியதை கற்கடகேஸ்வரரும்,  அரு மருந்து நாயகியும் அள்ளி தருகின்றனர். கடக ராசியினர் இந்த ஸ்தலத்தை வழிபடுவது கூடுதல் சிறப்பு.  இந்த ஸ்தலம் கும்பகோணத்தில் இருந்து 15 கிலோ மீட்டரும், திருவிசைநல்லுரில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்து உள்ளது.



மருந்து வேண்டில் இவை மந்திரங்கள், இவை
புரிந்து கேட்கப்படும் புண்ணியங்கள், இவை
திருந்து தேவன்குடித் தேவர் தேவு எய்திய
அருந்தவத்தோர் தொழும் அடிகள் வேடங்களே.

   திருஞான சம்பந்தர்.