siddhas

Sunday 3 May 2015

பல ரோகம் போக்கும் தங்க மரம்




ஒரு முக்கிய அறிவிப்பு.

இன்று இதைய நோய் சம்பந்தமான யூ  டியூப் வீடியோவை பார்த்து பல நண்பர்கள் பாராட்டினார்கள். ஆனாலும் பேச்சில் உள்ள அளவு எனக்கு எழுத்தில் திறமை இல்லை என்பது உண்மை தான். தமிழே எழுத படிக்க  தெரியாத பல இளைய தலை முறையினர் இருப்பதால். அவர்களும் பயன்   பெற வேண்டும் என்பதற்காகவே. இந்த யூ  டியூப்  சேவை. யூ  டியூப்  வீடியோவில். நான் எழுத்தில் சொல்லாத தகவல்கள் நிறைய வரும்.

 தமிழை படிப்பதை விட. தமிழ் வீடியோவை பார்ப்பது எளிது அல்லவா.

  ஆனாலும். எனக்கு பேச்சில் விட எழுத்தில் தான் அதிக ஆர்வம். வழக்கம் போல் என்னுடைய எழுத்து பனி தொடரும். கூடுதலாக பேச்சு  பணி. அவ்வளவே.

 நேற்றைய பதிவின் தொடர்ச்சியை பாப்போம்.

ஒரு மருத்துவன் நோயாளியை எவ்வாறு நடத்த வேண்டும் என்கின்ற கேள்விக்கு சரகர் கூறி இருக்கும் விடை
.
தம் புத்ர வத் உபாச்சறேத் -நோயாளிகளை உன் சொந்த பிள்ளைகளை போல் கவனி .
இதற்க்கு மேல் அடுத்த கட்டம் -மம பூத தயா பிரதி -நீ உன்னை எவ்வாறு நடத்துவாயோ அவ்வாறு உன்னிடம் வரும் அனைத்து ஜீவன்களையும் நடத்து.

இதை விட சிறந்த கருத்து எதுவுமே இல்லை ,என்னை நெகிழ செய்த கருத்து .கண்களில் நீர் பணிக்கும் .எண்ணி பாருங்கள் ,ஒரு மருத்துவர் அதிக வீர்யமுள்ள மருந்துகளை ,ஒரே பெயருள்ள வெவ்வேறு கம்பெனி மருந்துகளை ,இல்லை தேவயற்ற பரிசோதனைகளை ,இல்லை சந்தைக்கே வராத அல்லது சந்தையில் தடை செய்ய பட்ட ஒரு மருந்தை தன் குழந்தைக்கோ இல்லை தனக்கோ கொடுக்க முயல்வாரா? நிச்சயம் கிடையாது .நோயாளி என்பவன் வேறு யாரோ என்பதால் தான் இந்த அசிரதை அஜாக்கிரதை எல்லாம் .எத்தனை பெரிய தத்துவத்தை எளிமையாக ஒரு வரியில் அடக்கி விட்டார்கள் !!
இப்படி ஒவ்வொரு மருத்துவரும் எண்ணி மருத்துவம் செய்தால் உலகம் எத்தனை அற்புதமாக இருக்கும் .!!

சரக சம்ஹீதையில் கொன்ணை அத்யாயம்.

கொன்ணை மரம். இதன் ஆங்கில பெயர் Golden Shower Tree. Botanical Name [CASSIA FISTULA] இதன் மருத்துவ பயன்பாடுகள் பற்றி சரகர்.
சரகராலும், சுச்ரூதாவாலும் பல தோல் குஷ்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டது. சரகர் எவ்வாறு சர்ம நோய்களுக்கு இந்த மருந்து பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி, ஒரு அத்தியாயமே எழுதியிருக்கிறார். தன்வந்திரி நிகண்டு, தோல் வியாதிகள், ஜுரம் இவற்றுக்கு மருந்தாக, கொன்னையை குறிப்பிடுகிறது. இதன் இலைகள் ஜூரத்தை குறைக்கவும், பூக்களும் விதைகளும் பித்தத்தையும், கபத்தையும் குறைக்கவும், பழக்கதுப்பு, பசியை உண்டாக்கும் என்றும் ப்ருஹத் நிகண்டு ரத்னாகரா தெரிவிக்கிறது.

சரகர் கொன்னை பழ கதுப்பை, 12 வகையான மருந்தாக தயாரிக்கும் விதத்தை கூறியிருக்கிறார்.

கொன்னை தோல் வியாதிகள், உடல்பருமன், கொலஸ்ட்ரால் குறைப்பு இவற்றுக்கு அருமருந்து, குஷ்டம், வெண் குஷ்டம், போன்ற சர்ம வியாதிகளுக்கு பயன்படும்.

கொன்னை மரப்பட்டை வலிகளை குறைக்கவும், தொற்றுநோய்கள் அண்டாமலும் தாக்கும்.

பாக்டீரியா தொற்றுகளை தடுக்கும் சக்தி உடையது. ஷயரோக கிருமியான மைக்கோபேக்டீரியம் டியூபர்க்ளோசிஸ் என்றதை அழிக்கும். விதைகளின் சாரம் சால்மோனெல்ல டைஃபி, இவற்றை அழிக்கும். பழக்கதுப்பு சிறப்பான கிருமி, நுண்ணுயிர் நாசினி.

வேர்ப்பட்டையிலிருந்து எடுக்கப்படும் பால், மூட்டு வலி, ஆர்த்தரைடீஸ், சோரியாஸிஸ்க்கும் நல்ல மருந்து.

தோலில் அரிப்பு, நமைச்சல் இவற்றை போக்கும்

இதயத்திற்கு நல்ல டானிக். நீரிழிவு, மூட்டு வலி மலச்சிக்கல், கல்லீரல் வீக்கம் இவற்றுக்கெல்லாம் மருந்தாக பயன்படுகிறது.

கொன்னை மரப்பட்டை வைரஸ் கிருமிகளின் எதிரி. அதே போல் பழக்கதுப்பு பாக்டீரியாவை அழிக்கும். விதைகளின் பொடி அமீபா நுண்ணுயிர்களை அழிக்கும். எலிகளை வைத்து நடத்திய பரிசோதனைகளில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தவிர கொலஸ்ட்ராலை குறைக்கும் குணமும் உடையது கொன்னை. கொன்னை இலைகள் டயாபடீஸ் உள்ள எலிகளுக்கு கொடுத்த போது, சர்க்கரை அளவு குறைவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

பழக்கதுப்பு, கொன்னையின் மற்ற பாகங்களை விட, சிறந்த கிருமி நாசினி, ஃபங்கஸ் எனப்படும் நுண்ணுயிர்களுக்கு கொன்னை மர வேர் எதிரி.
கொன்னை பழம் உலர வைத்தது பாதுகாப்பான மலமிளக்கி.

உபயோகம்

கொன்னை இலைகொழுந்திலிருந்து பிழிந்த சாற்றில் 150 மி.லி. எடுத்து, சர்க்கரையுடன் சேர்த்து உட்கொள்ள, கிருமி, திமிர்ப்பூச்சி வெளியேறும்.

இலையை அரைத்து படர்தாமரைக்கு பூசலாம்.

கொன்னை பூவுடன், பழச்சாறு விட்டு அரைத்து, உடம்பில் தேய்த்து குளிக்க, தேமல், சொறி, கரப்பான் நீங்கும்

பூவை குடிநீரில் சேர்த்து குடிக்க வயிற்றுவலி, குடல் நோய்கள் நீங்கும்.

பூவை தேனில் ஊறவைத்து கொடுக்க காலை வெளிஏற வேண்டியவை ஒழுங்காக வெளிஏறும். . பாலுடன் பூவைக் கலந்து காய்ச்சி உண்ண உள் உறுப்புக்களை வலிமைப்படுத்தும். மெலிந்தவர்களுக்கு பலன் தரும்.

மரப்பட்டையின் கஷாயம் (60 மிலி), தேன் (5 மி.லி.) கலந்து ஒரு நாளைக்கு இருவேளை, 1-2 மாதங்கள் உட்கொண்டு வர கொலஸ்ட்ரால், அதிக உடல்பருமன் குறையும்.

மரப்பட்டை கூழ் 15 கிராம் அளவில், 1 மாதம் உண்டுவர மூட்டுவலி, வயிற்றுப் பூச்சிகள் நீங்கும

கொழுந்து இலைகளின் கூழுடன் 5-15 கிராம் மோருடன் 1 மாதம் சாப்பிட்டு வர உடல் பருமன் குறையும். இதே போல் பூவுடன், மோர் சேர்த்து உட்கொள்ள, வயிற்றுப்புண்கள் குணமாகும். இவ்வளவு பயன்களை தரும் கொன்னை மரம், ராஜமரம் என்று ஆயுர்வேதத்தில் குறிப்பிடுவது ஆச்சரியமல்ல.

ஒரு மருத்துவன் நோயாளியை எவ்வாறு நடத்த வேண்டும் என்கின்ற கேள்விக்கு சரகர் கூறி இருக்கும் விடை
.
தம் புத்ர வத் உபாச்சறேத் -நோயாளிகளை உன் சொந்த பிள்ளைகளை போல் கவனி .
இதற்க்கு மேல் அடுத்த கட்டம் -மம பூத தயா பிரதி -நீ உன்னை எவ்வாறு நடத்துவாயோ அவ்வாறு உன்னிடம் வரும் அனைத்து ஜீவன்களையும் நடத்து.

இதை விட சிறந்த கருத்து எதுவுமே இல்லை ,என்னை நெகிழ செய்த கருத்து .கண்களில் நீர் பணிக்கும் .எண்ணி பாருங்கள் ,ஒரு மருத்துவர் அதிக வீர்யமுள்ள மருந்துகளை ,ஒரே பெயருள்ள வெவ்வேறு கம்பெனி மருந்துகளை ,இல்லை தேவயற்ற பரிசோதனைகளை ,இல்லை சந்தைக்கே வராத அல்லது சந்தையில் தடை செய்ய பட்ட ஒரு மருந்தை தன் குழந்தைக்கோ இல்லை தனக்கோ கொடுக்க முயல்வாரா? நிச்சயம் கிடையாது .நோயாளி என்பவன் வேறு யாரோ என்பதால் தான் இந்த அசிரதை அஜாக்கிரதை எல்லாம் .எத்தனை பெரிய தத்துவத்தை எளிமையாக ஒரு வரியில் அடக்கி விட்டார்கள் !!
இப்படி ஒவ்வொரு மருத்துவரும் எண்ணி மருத்துவம் செய்தால் உலகம் எத்தனை அற்புதமாக இருக்கும் .!!

சரக சம்ஹீதையில் கொன்ணை அத்யாயம்.

கொன்ணை மரம். இதன் ஆங்கில பெயர் Golden Shower Tree. Botanical Name [CASSIA FISTULA] இதன் மருத்துவ பயன்பாடுகள் பற்றி சரகர்.
சரகராலும், சுச்ரூதாவாலும் பல தோல் குஷ்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டது. சரகர் எவ்வாறு சர்ம நோய்களுக்கு இந்த மருந்து பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி, ஒரு அத்தியாயமே எழுதியிருக்கிறார். தன்வந்திரி நிகண்டு, தோல் வியாதிகள், ஜுரம் இவற்றுக்கு மருந்தாக, கொன்னையை குறிப்பிடுகிறது. இதன் இலைகள் ஜூரத்தை குறைக்கவும், பூக்களும் விதைகளும் பித்தத்தையும், கபத்தையும் குறைக்கவும், பழக்கதுப்பு, பசியை உண்டாக்கும் என்றும் ப்ருஹத் நிகண்டு ரத்னாகரா தெரிவிக்கிறது.

சரகர் கொன்னை பழ கதுப்பை, 12 வகையான மருந்தாக தயாரிக்கும் விதத்தை கூறியிருக்கிறார்.

கொன்னை தோல் வியாதிகள், உடல்பருமன், கொலஸ்ட்ரால் குறைப்பு இவற்றுக்கு அருமருந்து, குஷ்டம், வெண் குஷ்டம், போன்ற சர்ம வியாதிகளுக்கு பயன்படும்.

கொன்னை மரப்பட்டை வலிகளை குறைக்கவும், தொற்றுநோய்கள் அண்டாமலும் தாக்கும்.

பாக்டீரியா தொற்றுகளை தடுக்கும் சக்தி உடையது. ஷயரோக கிருமியான மைக்கோபேக்டீரியம் டியூபர்க்ளோசிஸ் என்றதை அழிக்கும். விதைகளின் சாரம் சால்மோனெல்ல டைஃபி, இவற்றை அழிக்கும். பழக்கதுப்பு சிறப்பான கிருமி, நுண்ணுயிர் நாசினி.

வேர்ப்பட்டையிலிருந்து எடுக்கப்படும் பால், மூட்டு வலி, ஆர்த்தரைடீஸ், சோரியாஸிஸ்க்கும் நல்ல மருந்து.

தோலில் அரிப்பு, நமைச்சல் இவற்றை போக்கும்

இதயத்திற்கு நல்ல டானிக். நீரிழிவு, மூட்டு வலி மலச்சிக்கல், கல்லீரல் வீக்கம் இவற்றுக்கெல்லாம் மருந்தாக பயன்படுகிறது.

கொன்னை மரப்பட்டை வைரஸ் கிருமிகளின் எதிரி. அதே போல் பழக்கதுப்பு பாக்டீரியாவை அழிக்கும். விதைகளின் பொடி அமீபா நுண்ணுயிர்களை அழிக்கும். எலிகளை வைத்து நடத்திய பரிசோதனைகளில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தவிர கொலஸ்ட்ராலை குறைக்கும் குணமும் உடையது கொன்னை. கொன்னை இலைகள் டயாபடீஸ் உள்ள எலிகளுக்கு கொடுத்த போது, சர்க்கரை அளவு குறைவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

பழக்கதுப்பு, கொன்னையின் மற்ற பாகங்களை விட, சிறந்த கிருமி நாசினி, ஃபங்கஸ் எனப்படும் நுண்ணுயிர்களுக்கு கொன்னை மர வேர் எதிரி.
கொன்னை பழம் உலர வைத்தது பாதுகாப்பான மலமிளக்கி.

உபயோகம்

கொன்னை இலைகொழுந்திலிருந்து பிழிந்த சாற்றில் 150 மி.லி. எடுத்து, சர்க்கரையுடன் சேர்த்து உட்கொள்ள, கிருமி, திமிர்ப்பூச்சி வெளியேறும்.

இலையை அரைத்து படர்தாமரைக்கு பூசலாம்.

கொன்னை பூவுடன், பழச்சாறு விட்டு அரைத்து, உடம்பில் தேய்த்து குளிக்க, தேமல், சொறி, கரப்பான் நீங்கும்

பூவை குடிநீரில் சேர்த்து குடிக்க வயிற்றுவலி, குடல் நோய்கள் நீங்கும்.

பூவை தேனில் ஊறவைத்து கொடுக்க காலை வெளிஏற வேண்டியவை ஒழுங்காக வெளிஏறும். . பாலுடன் பூவைக் கலந்து காய்ச்சி உண்ண உள் உறுப்புக்களை வலிமைப்படுத்தும். மெலிந்தவர்களுக்கு பலன் தரும்.

மரப்பட்டையின் கஷாயம் (60 மிலி), தேன் (5 மி.லி.) கலந்து ஒரு நாளைக்கு இருவேளை, 1-2 மாதங்கள் உட்கொண்டு வர கொலஸ்ட்ரால், அதிக உடல்பருமன் குறையும்.

மரப்பட்டை கூழ் 15 கிராம் அளவில், 1 மாதம் உண்டுவர மூட்டுவலி, வயிற்றுப் பூச்சிகள் நீங்கும

கொழுந்து இலைகளின் கூழுடன் 5-15 கிராம் மோருடன் 1 மாதம் சாப்பிட்டு வர உடல் பருமன் குறையும். இதே போல் பூவுடன், மோர் சேர்த்து உட்கொள்ள, வயிற்றுப்புண்கள் குணமாகும். இவ்வளவு பயன்களை தரும் கொன்னை மரம், ராஜமரம் என்று ஆயுர்வேதத்தில் குறிப்பிடுவது ஆச்சரியமல்ல.

 அடியேனுக்கு தேவையான தகவல்களை தந்த. Swamis  Indology  Blog  உரிமையாளர் சுவாமிநாதன் மற்றும் அமானுஷ்யம் blog  உரிமையாளர் யோகி குரு முதலானோர்க்கு  நன்றி. எழுத்தாளார்  ஜெய மோகன் அவர்களின் நுல்  மூலம்  நான்  அதிகம் சரகர் அவர்களை பற்றி தெரிந்து கொண்டேன். அவரின் நுலே. என்னை சரக  சம்ஹிதா வாங்க தூண்டியது.

 நாளை ஆஸ்மா, வீஸிங்  முதளியவற்றிர்கான நிரந்தர தீர்வை பாப்போம்.

No comments:

Post a Comment