siddhas

Thursday 21 May 2015

நம்மாழ்வார் அய்யா. அறிவியலுக்கு எதிரானவரா?


நான் எனக்கு தெரிந்த நண்பன் ஒருவன். மன்னிக்கவும். அவன் நண்பன் இல்லை வம்பன். அவனோடு பேசி கொண்டு இருந்தேன். அவன் 2 விசயங்கள் சொன்னான். முதல் விஷயம். இன்று பல இளைங்கர்கள். அதுவும் குறிப்பாக படித்த பல இளைங்கர்கள் விவசாயம் குறித்து பேசுவது என்பது ஒரு தேவை இல்லாத Fashion னாம். அடுத்து சொன்னான் பாருங்க ஒரு விஷயம். இயற்க்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அய்யா. சும்மா இயற்க்கை, இயற்க்கைனு. அறிவியல், நவீன தொழில் நுட்பம் ஆகியவற்றை எதிர்த்த ஒரு பழமை வாதியாம். அந்த படித்த முட்டாள்க்கு நான் என்ன ரிப்ளை கொடுத்தேன் தெரியுமா.
இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.






Wednesday 13 May 2015

வாய் புண், வயிற்று புண் குணமாக



 உடல் சூடு, அளவுக்கு அதிகமான காரம், அளவுக்கு அதிகமான உணவு, அளவுக்கு அதிகமான பட்டினி. மற்றும். கோபம், ஆசை முதலிய பல உணர்வுகளை அடக்கி  வெய்த்து. அந்த அழுத்தத்தால்  ஏற்ப்படும் பாதிப்பு என்று. பல காரணங்களால்  வாய் புண்,  வயிற்று  புண் வரும்.

   நாம் கோபப்படுவதால் நமது உடல் நலன் பாதிப்பு அடைவதை விட. அதை அடக்குவதால் அதிகம் பாதிப்பு அடையும். அதற்க்காக. நமது கோபத்தை வெளிப்படுத்தி. பிறர் மனங்களை புண் படுத்துவதும் கூடாது. பின்ன. வேறு என்ன தான் செய்வது.

 ஓஷோ சொன்ன வழி  தான். உங்கள் ஆத்திரம் தீர. கை சோர்ந்து போகும் அளவு. தலகாணியை  குத்துங்கள். மற்றும் புலம்பல் தியானம் என்று ஒரு தியானம். உங்கள் மனதினில் உள்ள அணைத்து கவலைகளையும். தனியாக. அறையில் அமர்ந்து. கதவை சாத்தி  கொண்டு கத்தி  புலம்புங்கள். எவ்வளவு அழ  முடியுமோ. அழுது  விடுங்கள். அதன் பின். உங்கள் மனதை. பாறாங்கல்  போல். அழுத்தி கொண்டு இருந்த பாரம் இறங்கியிருப்பதை நீங்கள் உணர்வீர்கள்.

 மின்சார எந்திரங்களை.  Hi, Lo  வோல்ட்டேஜ்ஜில் இருந்து Stabelizer காப்பதை போல். மனித எந்திரத்தை காக்கும் Stabelizer  தான். ஸ்படிக மாலை.

ஒரு இடத்தில்  அநீதி நடக்கிறது. அந்த அநீதியை தட்டி கேக்கும் தகுதி, அதிகாரம் நமக்கு இருக்கிறது. தண்டனை கொடுக்கும் அதிகாரம் இருக்கிறது  என்றால்.நாம் அதை செய்து தான் ஆக வேண்டும். ஆனால். அதை கூட கோபபடாமல் செய்யலாம்.

 வாய் புண்,  வயிற்று புண்ணிற்கு  உரிய இயற்க்கை நிவாரணங்கள்.

 வாய் புண் உள்ளவர்கள்  ஹனுமார்க்கு.  வெண்ணை காப்பு செய்வதை போல். தினமும் வாயில் வெண்ணை தடவி கொள்ளுங்கள்.  நீங்கள் வீட்டில் இருக்கும் பொழுது. உறங்க போகும் பொழுது. தினமும் சுத்தமான தேங்காய் எண்ணையை. அது உங்கள் வீடு அருகே. எங்கே கிடைக்கும் என்று விசாரித்து. வாங்கி. அதை தினசரி உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

 வெறும் வயிற்றில் தேங்காய் பால். தொடர்ந்து 48 நாட்கள் குடித்து வாருங்கள். அதற்க்குள்  குணமாகி விடும். அந்த 48 நாட்களிலும் குணமாகவில்லை என்றால். அது குணம் ஆகும் வரை. தேங்காய் பால். வெறும் வயிற்றில் குடிப்பதை நிருத்தாதீர்கள்.  மற்றும். மாதுளம் பழம். ஒரு நாளைக்கி 2 பழம்  கண்டிப்பாக எடுத்து கொள்ள வேண்டும்.

 அதை தவிர்த்து.  மாதுளம் மணப்பாகு. இதை எவ்வாறு செய்வது.


மாதுளம் பழச்சாறு - 100 மி.லி.,
பனங்கற்கண்டு - 100 கிராம்,

Tuesday 12 May 2015

உடல், உள்ளம் இரண்டின் சூட்டையும் தணிக்கும் ஸ்படிகம்




வணக்கம் நண்பர்களே. நடுவில் சில நாட்கள் தொழில் நிமித்தமாக. பயணம் செய்ய வேண்டி இருந்தது. அதனால்.  blog பதிவு செய்ய நேரம் கிடைக்காமல் போய்  விட்டது. வரும் வியாழ  கிழமையில் இருந்து. நான் தொடர்ந்து பத்து நாட்கள்.  ஆழ்நிலை தியானத்தில் அமர போகிறேன். அந்த பத்து  நாட்களும். யாரிடமும் ஒரு வார்த்தை பேச மாட்டேன். பேச்  புக், google  blogger எதையும் உபயோகபடுத்த மாட்டேன். அதன் பிறகு. நான் சென்னையில் இருக்கும் அணைத்து நாட்களிலும். சித்த  மருத்துவம் தொடர்பான பதிவுகள் தொடரும்.

 இன்று உடல் சூட்டை தணிக்கும் வழிகளை  பற்றி பார்ப்போம்.

  உடல் சூட்டை தணிக்க. என்ன, என்ன உணவுகள் எடுத்து கொள்ள வேண்டும் என்பது உங்களுக்கே தெரியும். தர்பூசணி, கிர்ணி பழம், இளநீர், மோர் என்று உடலுக்கு குளிர்ச்சியை தரும் பட்டியல் நீளும். உடல், மனம் இரண்டையும் குளிர்ச்சியாக வெய்க்க உள்ள வழிமுறைகளில் மிக சிறந்த வழிமுறை என்னவென்றால் ஸ்படிக மாலை அணிவது.

 அன்று அறிவியல் ரீதியான காரணங்கள் சொன்னால் அதை எடுத்து கொள்ளும் பக்குவத்தில் மக்கள் இல்லை. இப்பொழுது ஓரளவு விழிப்புணர்வு வந்து உள்ளது. அது போல், அன்று இல்லாத கால கட்டங்களில். வேப்பிலை, துளசி, வில்வம், ஆல், அரசு, அத்தி, வன்னியில்  ஆரம்பித்து. பசுவின் கோமியம் சாணம் வரை.  அதீத மருத்துவ பயன்கள்  உடைய அனைத்திற்க்கும்  ஆன்மீக சாயம்  சித்தர்கள் பூசி விட்டார்கள். எளிமையாக அனைவருக்கும் புரியும் படி சொல்வதென்றால். கசப்பான மருந்துகளை தேனில் குழைத்து  கொடுப்பதை போல். அன்று சித்த  பெருமக்கள். அறிவியல் என்னும் மருந்தை ஆன்மீகம் என்னும் தேனில் கலந்து கொடுத்தார்கள். அதில் ஒன்று தான் இந்த ஸ்படிக மாலை.


ஸ்படிகம் என்றால் என்ன?

  பல நுறு  வருடங்களாக பூமிக்கு அடியில் தேங்கியுள்ள நீர் பாறையாக மாறும். அந்த பாறையில் இருந்து சுத்தமான கற்களை தேர்வு செய்து. அதில் தான் ஸ்படிக மாலை, ஸ்படிக லிங்கம் செய்வார்கள்.

 ஸ்படிக மாலை அணிவதால் கிடைக்கும் அறிவியல் ரீதியான பலன்கள்.

1] ஸ்படிக மாலை அணிவது. நமது உடலில் அதீதமாக உள்ள சூட்டை கட்டுபடுத்தும்.  ஸ்படிக மாலை. நமது உடலில் சரியான அளவில் உள்ள சூட்டை குறைக்காது.  உடல் சூட்டை  சீரான. சரியான அளவில் வெய்க்கும்.

 2] மனித மனம் ஆல்பா, பீட்டா என்று இரண்டு நிலைகளில் இருக்கும். இன்று பெரும்பாலான மனித மனம் பீட்டா நிலையிலேயே இருக்கிறது. மனித மனம் ஆல்பா நிலையில் இருந்தால் தான் அமைதியாக இருக்கும். ஸ்படிக மாலை. நமது மனதை. அலை பாயும் பீட்டா நிலையில் இருந்து. அமைதியான ஆல்பா நிலைக்கு  அழைத்து செல்லும். ரத்த  கொதிப்பு உள்ளவர்களுக்கு. ஸ்படிக மாலையை விட சிறந்த மருந்து எதுவும் இல்லை.

 நமது உடல்  சூடு, உள்ள சூடு இரண்டையும் தணிக்கும் ஆற்றல் ஸ்படிகதிர்க்கு  இணையாக. வேறு எதற்க்கும்  இல்லை.

 ஸ்படிக மாலை குறித்து கேட்கப்படும் கேள்விகள்.

 1]ஸ்படிக மாலை  அணிவதர்க்கு  என்று ஏதேனும் அடிப்படை  தகுதிகள் இருக்கிறதா?.
2] ஸ்படிக மாலை அணிவதற்க்கு . ஏதேனும் ஆச்சார. அனுஷ்டானங்களை கடைபிடிக்க வேண்டுமா?
3] ஸ்படிக மாலை அணிவோர்கள். அசைவம் சாப்பிட கூடாதா.
4] ஸ்படிக மாலை பெண்கள் அணியலாமா?
5] ஸ்படிக மாலையில் எவ்வளவு? விதமான தரங்கள் உள்ளது
6] ஸ்படிக மாலையின் தரத்தை எவ்வாறு கண்டறிவது.

 ஏற்கனவே. நான் மேலே குறிப்பிட்டதை போல். அன்று. மக்கள் பயன் பெற வேண்டும் என்பதற்க்காக. சித்த  புருஷர்களும், ரிஷிகளும் அறிவியலை. ஆன்மீகம் என்னும் தேனில் கலந்து கொடுத்தார்கள். அது போலவே ஸ்படிகம். பின்னால் வந்த. குறுக்கு புத்தி உடைய சில சாமானிய மக்கள். ஸ்படிக மாலை. இன்னார், இன்னார் அணியலாம். ஸ்படிக மாலை அணிய. இன்ன, இன்ன விதி முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று. அவர்கள் இஷ்டத்திற்க்கு  மனதில் தோன்றியவைகளை எழுதி வெய்த்து விட்டு சென்று விட்டார்கள்.

 அறிவியல் ரீதியாக. ஸ்படிகம். சிறுவர் முதல் பெரியவர் வரை. ஆண்கள், பெண்கள் யார் வேண்டுமானாலும் அணியலாம்.

 காற்று, சூரியன், சந்திரன், நீர் என்று. இறைவனின் அணைத்து படைப்புகளும் அனைவருக்கும் பொதுவானது தானே. நீர் அனைவர்க்கும் பொதுவானது என்றால். நீர் பாறையில் இருந்து கிடைக்கும் ஸ்படிகம் மட்டும் எவ்வாறு? ஹிந்துக்களுக்கு மட்டும். உரிய ஒன்றாக ஆகும். நாஸ்திகர்கள் உட்பட. இதை யார் வேண்டுமானாலும் அணியலாம்.

 தெய்வ  பக்த்தி  உள்ளவர்கள்.  108 மணிகள் உடைய ஸ்படிக மாலையை கையில் வெய்த்து.  உங்களுக்கு பிடித்த இறைவனின்  பெயரை. கிடைக்கும் நேரத்திற்க்கு  தகுந்தார் போல். ஜெபம் செய்யலாம்.

 அதை தவிர்த்து. இறை நம்பிக்கை உடையவர்கள், இல்லாதவர்கள் இருவருமே.  அதி காலையில் எழுந்து. மொட்டை மாடி போன்ற ஒப்பன் ச்பேச்சில். உங்கள் லட்சியம் என்னவோ. அதையே. திரும்ப, திரும்ப சொல்லி. மொட்டை மாடியில். ஜெபம் போல் ஸ்படிக மலையை வெய்த்து செய்யுங்கள்.

 நாம் வெற்றி பெற வேண்டும் என்றால் மனம் ஒருநிலைப்பட  வேண்டும்.  அமைதியான அதிகாலை வேளை  தான் மனதை ஒரு நிலை படுத்த சரியான நேரம். பிரும்ம முகூர்த்தம் எனப்படும் மூன்றிலிருந்து ஐந்து.

 இதை நீங்கள் சும்மா. முயற்ச்சி  செய்து பாருங்க. உங்களுடைய ஆசை நியாயமான ஆசையாக இருந்தும். அது நிறைவேற கால தாமதம் ஆனால். இவ்வாறு செய்வது. அதன் கால தாமத்தை குறைக்கும். முக்கியமாக. இதன்மூலம் உங்களுடைய நேர்மறை எண்ணம் அதிகரிக்கும்.

 ஸ்படிக மாலையை நீங்கள் கழிவறை செல்லும் நேரம் தவிர. மீதி அணைத்து நேரங்களிலும் கழுத்தில் போட்டு கொள்ளலாம். முக்கியமாக நீங்கள் குளிக்கும் பொழுது. கழுத்தில் ஸ்படிக மலையோடு குளிப்பது நல்லது.

  ஸ்படிக மாலையின் தரத்தை எவ்வாறு? கண்டறிவது.

 ஸ்படிக மாலையில் மொத்தம் பத்து  விதமான Quality இருக்குங்க. ஸ்படிக மாலையில் நீங்க கை வெக்கறீங்கனா. வெச்சவுடன். நீங்க ஒரு வித குளிர்ச்சியை உணர்வீர்கள். உணர்ந்தால். அது நல்ல உயர் தரமானது.

 காதி, பூம்புகார் போன்ற கடைகளில் தரமான ஸ்படிக மாலை கிடைக்கும்.

 இதன் விலை?

 450 ரூபாயில் ஆரம்பித்து. 4800 ரூபாய் வரை. என்னுடைய தொழில். டூர். நான். மாதம் ஒருமுறையோ, இரு முறையோ. ஒரு 30, 40 பேரை அழைத்து  கொண்டு காசி செல்வேன். அப்பொழுது. காசியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள



 சாரநாத்தில். எனது நண்பர்கள். யார், யாருக்கு ஸ்படிக மாலை தேவை படுகிறதோ வாங்கி. வருவேன். 4800 ரூபாய் மதிப்பிலான ஸ்படிக மாலை. சாரநாத்தில் வெறும் 350 ரூபாய் மட்டுமே. அங்க. 1st, 2nd quality லாம்  கிடையாது.  Only One. அது No 1.

 நாளை. வயிற்று  புண், வாய் புண்ணிற்கு  உரிய நிவாரணத்தை பாப்போம்.



Thursday 7 May 2015

மைக்கோவிர்க்கு எமனாகும் வினிகர். காச நோய், நிமோனியா, மார்பு சளி முதலான பல் பிணிகளுக்கு தீர்வு .



இன்று TB.  எலும்புருக்கி நோய்க்கான தீர்வை பாப்போம்.

எலும்புருக்கி நோய் மைக்கோ பாக்டீரியா என்பதால் ஏற்படுவது. அலோபதி மருத்துவத்தில் இதை குனபடுத்த ஆறு மாதம் முதல் இரண்டு ஆண்டுகள் வரை ஆகும். சிலருக்கு அதற்க்கு மேலும் ஆகலாம்.  மைக்கோ பாக்டீரியாவிர்க்கு  எமனாக வினிகர் உள்ளது. அதனால் நோய் உள்ளவர்கள். தினமும் உணவில் வினிகர் சேர்த்து கொள்ள வேண்டும். இதை தவிர்த்து

பூண்டு, வாழைபழம், சீதா பழம், ஆரஞ்ச், அன்னாசி, வால் நட், புதினா, கரும் மிளகு, முருங்கக்காய், கிரீன் டீ  ஆகிய பத்து  உணவு பொருட்கள் எலும்புருக்கி நோய்க்கு நிவாரணமாக உள்ளது.

மற்றும்.

வைட்டமின் டி என்பது உணவில் காணப்படும் ஒரு ஊட்டச்சத்து மட்டுமன்று, அது நம் உடலில் சுரக்கும் ஒரு ஹார்மோனும் கூட. உலகளவில் சுமார் 1 பில்லியன். அதாவது 10 கோடி  மக்கள், அவர்களின் இரத்தத்தில் மிகக் குறைந்த அளவில் வைட்டமின் டி-யைக் கொண்டிருப்பதாகவும், இந்த குறைபாடு அனைத்து வயதினரிடையேயும்,  பரவலாகக் காணப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

வைட்டமின் டி என்பது, கொழுப்புச் சத்தில் கரையக்கூடிய வைட்டமின் வகையைச் சார்ந்தது. இந்த கலப்பானது உடலில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பேட் போன்றவற்றை மேம்படுத்தக் கூடியதாகும். மனிதர்களைப் பொறுத்தவரை, இந்த வைட்டமின் வகையில் வைட்டமின் டி3 மற்றும் வைட்டமின் டி2 ஆகியவை மிக முக்கியக் கூறுகளாகும். போதுமான சூரிய ஒளி உடலுக்கு கிடைக்குமானால், கொலஸ்ட்ராலில் இருந்து வைட்டமின் டி-யை உடல் ஒருங்கிணைத்துக் கொள்ளும். இதன் காரணமாக, வைட்டமின் டி ‘சூரிய ஒளி வைட்டமின்’ என்றும் குறிப்பிடப்படுகிறது.

நோய் தடுப்பு வைட்டமின் டி, உடலில் அபரிமிதமாக இருந்தால், அது எலும்புருக்கி நோய் மட்டுமல்ல.  புற்றுநோய், இதயம் மற்றும் இரத்த நாளங்கள் சம்பந்தப்பட்ட நோய்கள், சிறுநீரக நோய், காசநோய், நிமோனியா, முடி உதிர்தல் மற்றும் மன அழுத்தம், ஈறு நோய்  போன்ற நோய்களை தடுக்கக் கூடியதாகும்.

வைட்டமின் டி. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, ஜலதோஷம்,  மற்றும் நிமோனியா காய்ச்சல் போன்றவற்றிற்கு எதிரான பாதுகாப்புக் கவசத்தை வழங்கக்கூடியதாகும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு உகந்தது. சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியுடன் கூடிய ஆரோக்கியமான குழந்தைகளின் உருவாக்கத்திற்கு மிகவும் முக்கியமானதானக உள்ள வைட்டமின் டி, குறைமாத பிரசவம் நிகழும் அபாயங்களையும் குறைக்க வல்லதாகும்.

மேலும், வைட்டமின் டி- யை சரியான அளவில் உட்கொண்டு வந்தால், கீழே தவறி விழுவது, எலும்பு முறிவுகள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் முதலாம் வகை சர்க்கரை நோய், போன்றவற்றால் ஏற்படும் காயங்களினால் உண்டாகக்கூடிய அபாயங்களை குறைக்கும். மேலும் உடலில் உண்டாகும் புண்களை விரைவில் ஆற்றக் கூடிய சக்தியும் கொண்டது வைட்டமின் டி.

 மேலே குறிப்பிட்ட 10 உணவுகளும் நமக்கு வைட்டமின்  சக்த்தை  அதிகம் தந்து. நம்மை பல்வேறு நோய்களிலிருந்து காக்கும்.

 நாளை.   இந்த வெய்யிலில் உடல் மட்டும் சூடாவது இல்லை. அதனால் மனமும் சூடாகிரது.

 உடல், மன சூட்டை  தணிக்க வழிகளை நாம் நாளை பாப்போம்.

Monday 4 May 2015

ஆஸ்மா, வீசிங், சைனஸ் முதலான சுவாச நோய்களுக்கு யோகா, மூலிகைகள்.



ஆஸ்மா, வீசிங், சைனஸ்  என்று சுவாசம் சம்பந்தமாக வரும்  எந்த  நோயுமே  இந்த உலகில் சரி செய்ய முடியாத விஷயம் இல்லை. அதற்க்கு  உதாரணமாக எனது தம்பியையே கூறலாம். மேலே இருப்பது  எனது தம்பியின் புகைப்படம்  தான்.


 16 வருடங்களுக்கு முன்.  பிறக்கும் பொழுதே இவனுடன் ஐந்து சத்ருக்கள் உடன் பிறந்தார்கள். அவை. ஆஸ்மா, வீசிங், சைனஸ்,  டிங்கு, எலும்புருக்கி நோய் எனப்படும்  TB . டிங்குவை உடனடியாக மருத்துவம் மூலம்  சரி செய்ய முடிந்தது. அனால்.  மீதி  நாலு   சத்ருக்களையும் அவ்வாறு அழிக்க  முடியவில்லை. ஆஸ்மா, வீசிங், சைனஸ். இந்த மூன்றில்  ஏதேனும் ஒன்று வந்தாலே. அது எவ்வளவு வேதனை. மூன்றும் ஒன்றாக. அதுவும் பச்சிளம் குழந்தைக்கு.  குறிப்பாக.  எலும்புருக்கி நோயால். வாழ்நாள் முழுக்க  எலும்பும், தோலுமாக பலவீனமாக  அவன் இருப்பானே என்று மிகுந்த கவலையில் ஆழ்ந்தேன்.


முதல் 12 வருடங்கள். நானும் எனது பெற்றோரும். தூங்கிய  இரவுகளை விட.  தூங்காத இரவுகளே அதிகம்.   நான்கு வருடங்களுக்கு முன். வெற்றி கரமாக எனது தம்பி அந்த நான்கு சத்ருக்களையும் கொன்று விட்டான். எவ்வாறு  .


தினமும்  தூதுவளை, துளசி. அவனது உணவில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் இடம் பிடித்தது. மற்றும். அவனது எலும்புருக்கி நோயை குணப்படுத்தும்,  எலும்பை  பலபடுத்தும் உணவுகள் அவனுக்கு கொடுக்கபட்டது. எலும்புருக்கி நோய்க்கு உண்டான உணவுகள், மூலிகைகள் குறித்து நாளை பாப்போம்.


நான் ஆதம்பாக்கத்தில் உள்ள. வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாழும் கலைமன்றத்தில்  மாணவனாக. சேர்ந்தேன். அங்கு. மற்றும் எனது தந்தையின் நண்பர்  கார்த்திக். போன்றோர்களிடம். யோகாசனங்களை கற்று கொண்டு. அவற்றில் எவை, எவை. சுவாச பிரச்சனைக்கான சிறந்த யோகாசனங்கள் என்பதை தேர்வு செய்து. அவற்றை எனது தம்பிக்கு சொல்லி கொடுத்தேன். அணைத்து. யோகாசனங்களுமே. சுவாசத்திற்கு நல்லது. அதில் முக்கியமாக. Breathing  exercise  எனப்படும் பிராணாயாம பயிற்ச்சி. அது நான் யோகா வகுபிற்க்கு செல்வதற்கு முன்பே. வீட்டில் கற்று தரப்பட்ட ஒன்று தான். ஆனால்?  எனது தம்பிக்கு இருந்த பிரச்சனைகளுக்கு.  பிராணாயாமம் மட்டும் பத்தாது. அதனால். அவனுடைய சுவாசம் சம்பந்தமான அணைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் மூன்று முக்கிய யோகாசனங்களை  அவனுக்கு கற்று தந்தேன்.


அவை.

  வஜ்ராசனம்.



 சுப்த வஜ்ராசனம்.



 ஹலாசனம்.




இவை மூன்றின் பலன்களையும் வெகு விரைவில் யூ  டியூப்பில் வீடியோக்களாக  வெளியிடுகிறேன். முழுமையான பலனை பெற. அருகில் உள்ள நல்ல யோகா ஆசிரியரை அணுகி நீங்கள் பயிற்ச்சி எடுத்து கொள்ளுதலே சிறந்தது.  எனது வீடியோ. ஒரு  மாதிரி. அவ்வளவே. ஏற்கனவே மாரைடைப்பை தடுக்கும் வழிமுறைகள் குறித்து இரண்டு வீடியோக்கள் அப்லோட் செய்து இருக்கிறேன். எழுத்து மூலம் சொல்லும் தகவல்களை. காணொளி வாயிலாக சொன்னால். தமிழ் படிக்க தெரியாதவர்களும் பயன் பெறுவார்கள் என்றாலும். எனக்கு. பேசுதலை விட. எழுதுவதில் ஆர்வம் அதிகம். பேச்சு பணியோடு வழக்கம் போல் எழுத்து பணியும் தொடரும்.


 நான் மேலே குறிப்பிட்ட மூன்று யோகாசனங்களில்.  சுப்த வஜ்ராசனம் எனப்படும் யோகா. சுவாச பிரச்சனை மட்டும் அல்ல. எலும்புகளை நன்கு பலப்படுத்துதல். அதில் உள்ள கோளாறுகளை சரி செய்தல். முதலியவற்றை செய்யும்.   வஜ்ராசனம் மட்டும்.  நீங்கள் கற்று கொள்ளாமல் இப்பொழுதே கூட புகைபடத்தில் இருப்பதை பார்த்து  முயற்ச்சி செய்யலாம். ஆனால்? சுப்த வஜ்ராசனம், ஹலாசனம் இரண்டையும். ஒரு நல்ல ஆசானிடம் பயிற்ச்சி எடுக்காமல் முயற்ச்சி செய்தால். உங்களுக்கு ஒழுங்காக உள்ள  எலும்பு கூட உடைந்து விடும். காரணம். இந்த இரண்டு ஆசனங்களையும் செய்வதற்கு. உடலில்  Flexibility தேவை. நீங்கள் முறையான நடன பயிற்ச்சி எடுத்து இருந்தால் கவலை இல்லை.


பிறக்கும் பொழுதே. எலும்புருக்கி நோயுடன் பிறந்த என் தம்பி. இன்று. 16 வயதினில். 6 அடிக்கும் மேல் உயரம். 15 இஞ்சில் ஆர்ம்ஸ். அகன்ற மார்பு. அவன் உயரத்திற்கு ஏற்ற எடை என்று. ராஜகுமாரன் போல் இருக்கிறான். கராத்தே, சிலம்பம் இரண்டு பயிற்சிகளும் முறைப்படி கற்று இருக்கிறான்.


 அவன் ஒழுங்காக ஒத்துழைத்ததால் தான்.  என்னால் அவனுக்கு யோகா பயிற்ச்சி. அதுவும். அப்பொழுது அவன் உடல் இருந்த நிலைக்கு கடினமான யோகா பயிற்ச்சி கொடுக்க முடிந்தது. அவனுடைய விடா முயற்ச்சி, தன்னம்பிக்கை,  மருந்து மாத்திரைகளால் தீர்க்கவே முடியாத  நோய்களை. மனம் என்னும் மந்திர சக்தி கொண்டு. அந்த சக்தியை உடல் என்னும் எந்திரத்தில் செலுத்தி. எவ்வாறேனும். தீர்க்க முடியாத நோய்களை தீர்த்து கட்ட வேண்டும் என்று அவனுக்கு இருந்த அந்த வெறியே. இன்று நிரந்தர தீர்வை கொடுத்து இருக்கிறது.


சுவாசம் சம்பந்தமான கோளாறு  இருப்பவர்கள் தினமும் துளசி நீர் அருந்த வேண்டும். பெருமாள் கோவிலில் ஒரு உத்தரிணி, இரண்டு உத்தரிணி அல்ல. எட்டு மணி நேரம் தாமிர பாத்திரத்தில். துளசியை நன்கு  ஊர வெய்த்து. 1, 2 டம்பளர் வெறும் வயிற்றில் தொடர்ந்து 48 நாட்கள் குடிக்க வேண்டும். மற்றும்  தூதுவளையை தினமும் சேர்த்து கொள்ளவும். அதோடு  சரகர் சொன்ன 10 மூலிகைகள். 2/5/2015  செய்த பதிவை பார்க்கவும்.


 இவற்றை செய்தால். சுவாசம் சம்பந்தமான அணைத்து கோளாறுகளும் நிச்சயம் நீங்கும்.


 நாளை எலும்பு உருக்கி நோய்க்கான தீர்வை பார்க்கலாம்.


          

Herbal Remedys and Technique, Exercise for Heart Attack.