siddhas

Monday, 20 April 2015

சகாயம். 700 கோடியில் ஒருவர்.




நேர்மை, துணிச்சல் இரண்டும் மிகுந்த மத்திய. மாநில அரசு அதிகாரிகள் ஒரு லக்சம் பேர் கூடவா  இந்தியாவில் இருக்க மாட்டார்கள். தமிழகத்தில் ஒரு ஆயிரம் பேர் கூடவா  இருக்க மாட்டார்கள்.  ஒரு அரசாங்க அதிகாரி. மிக நேர்மையாக பணியாற்றுகிறார் என்றால். அவர் வாங்கும் சம்பளத்திற்கு. நேர்மையாக வேலை செய்கிறார்.  அவ்வளவு தான். அந்த ஆயிரத்தில். சகாயம் என்கிற ஒருவரை மட்டும். ஏன்? தலையில் தூக்கி  வெய்த்து  கொண்டாட வேண்டும்.  என்று சிலர் கேட்கிறார்கள்.

  அதீத நேர்மை, அதீத துணிச்சல். இரண்டும் ஒருங்கே அமையபெற்ற அதிகாரிகள். இந்தியாவில். அதிக பக்ஷம் ஒரு ஆயிரம் பேர் இருப்பார்கள்.  ஆனால்?  சகாயம் அளவு நேர்மை, துணிச்சல் வாய்ந்த அதிகாரி.  அகில உலகங்களில் சல்லடை போட்டு தேடினாலும். எங்கும் கிடைக்க மாட்டார்கள். இவர் ஆயிரத்தில்  ஒருவரோ, லக்சதில் ஒருவரோ, ஏன் ? கோடியில் ஒருவரோ கூட  அல்ல . 700 கோடி உலக மக்கள் தொகையில். இவரை போல் இவர் மட்டுமே இருக்கிறார். இவர் 700 கோடியில் ஒருவர்.

அப்படி என்ன? அவர் செய்தார். லஞ்சம்  வாங்காமல் நேர்மையா இருந்தார், தப்பு செய்பவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுத்தார்,  தனது அதிகாரத்தை பயன் படுத்தி. அதிக பக்சம். எவ்வளவு மக்களுக்கு நன்மை செய்ய முடியுமோ. அதை  செய்தார். அவ்வளவு தானே. என்று நீங்கள் கேட்டால். இல்லை. உலகில் எந்த ஒரு அதிகாரியும் செய்யாததை, செய்ய துனியாததை  இவர் செய்தார்.  இதை  பற்றி ஏற்கனவே பலர்  முகனுல்  பக்கங்களில் பதிவு செய்துள்ளனர். ஆனாலும். மறதி  என்பது தமிழர்களின் தேசிய வியாதி. அதுவும் வெய்யில் காலங்களில்.  நம்மில் பலர் இதை  மறந்து விடுவார்கள் என்பதால். இப்பொழுது இதை  நியாபகபடுத்த வேண்டியது என் கடமை.

 காஞ்சிபுரத்தில் ஒரு பெரியவர். பெப்சி கூல் டிரிங் வாங்குகிறார்.  அதில் அழுக்குகள்  மிதப்பது அப்படியே அப்பட்டமாக தெரிகிறது, அப்பொழுது காஞ்சிபுரம் டி.ஆர்.ஓவாக இருந்த சகாயத்திடம். அந்த பாட்டிலோடு பெரியவர்  வந்தார். சகாயம் அவர்கள். உடனே களத்தில் குதித்தார். 7,8 கடைகளில், குடோன்களில் அவர் அதிகாரிகளுடன் ஆய்வில் இறங்குகிறார். உடன் இருக்கும் அதிகாரிகள் எல்லாம் பயந்து நடுங்குகின்றனர். சார். இது  ரொம்ப பெரிய........... இடம்.  என்று இழுத்தனர்.  சகாயம் அவர்கள்.  இது. எவ்ளோ பெரிய...........................  இடமாக  வேண்டுமானாலும் இருக்கட்டும்.  மக்களின் ஆரோக்யம் என்பது. அதை  விட ரொம்ப பெரிய..........................................     விஷயம் என்று சொன்னார். அணைத்து இடங்களில் செய்த ஆய்வுகளிலும். பெப்சி கூல்  டிரிங்கில் அழுக்கு இருப்பது  தெரிய வந்தது. முடிவில். அந்த கூல் டிரிங். லேப்பில் பரிசோதனை செய்வதற்காக அனுப்பி வெய்க்கப்பட்டது.   உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அழுக்கு படலங்கள், நச்சு பொருட்கள் இருப்பது  உறுதி செய்யபட்டது.  சகாயம் அவர்கள் உடனடியாக என்ன?  செய்தார் தெரியுமா.

 செங்கல்பட்டில் உள்ள தாசில்  தாருக்கு  போன் செய்து. எட்டு பூட்டுகளை  வாங்கி கொண்டு. சென்னை, திருச்சி நெடுஞ்சாலைக்கு வர சொன்னார். அவரும் எட்டு பூட்டுகளோடு சகாயம் சொன்ன இடத்திற்க்கு  வந்தார்.  எதற்காக? இந்த பூட்டு  என்று தாசில்  தார்  கேட்டார். வாங்க. சொல்றேன். என்று அவரை வண்டியில் அழைத்து கொண்டு. நேராக. திருமுல்லை வாயிலில் உள்ள பெப்சி கம்பெனிக்கு  போனார்.  அப்பொழுது கூட. தாசில்  தாரால். பெப்சி கம்பெனிக்கு  வேட்டு  வெய்க்க தான். இந்த எட்டு பூட்டுகள்  என்று.   கற்பணை  கூட  செய்து பார்க்க முடியவில்லை. நம்ப எதுக்காக. பெப்சி கம்பெனிக்கு  வந்து இருக்கோம் என்று தாசில்  தார்  கேட்டார்.   அவரிடம். சகாயம் அவர்கள். Flash Bag  சொன்னார்.  மேலும் லேப்  ரிப்போர்ட்டை. தாசில்தார் கையில் கொடுத்து.  இந்த காப்பியை. இதன்  மேனேஜர்ரிடம் கொடுத்து. உடனடியாக. இந்த இடத்தை விட்டு. அனைவரும் வெளியேறுமாறும். இந்த கம்பெனிக்கு  சீல் வெய்க்க போவதாகவும். சொல்லுங்கள் என்று  அவர் சொல்ல. அதை  கேட்ட தாசில்தார். பயத்தில் உறைந்து போய் விட்டார். சார்.  இது  ரொம்ப பெரிய இடம். எதுக்கும். கலெக்டர்  கிட்ட ஒரு வார்த்தை... என்று அவர் இழுக்க. சகாயம். அவரிடம் கேட்டால்.  வேண்டாம் என்று தான்  பதில் வரும். இதை  செய்வதற்கு. சட்டப்படி. துணை கலெக்டர்ரான எனக்கே அதிகாரம் உண்டு. நான் சொன்னதை  செய்யுங்கள். என்று அழுத்தமான குரலில் சொல்ல. தாசில்தார். பயந்து நடுங்கியவாறே உள்ளே போனார்.

 ஒரு மணி நேரம் கழித்து  தாசில்தார் வெளியே வந்தார். சார். அவுங்க. உள்துறை செயலாளர், தலைமை செயலாளர்னு  ஒருத்தர் விடாம. எல்லாருக்கும் போன் பண்ணிட்டாங்க. யார், யார் பேரலாமோ  சொல்லி. நாங்க. அவுங்க கிட்ட பேசிக்கறோம், இவுங்க கிட்ட பேசிக்கறோம்னு சொல்றாங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்கு சார் என்று அவர் சொல்ல. சகாயம். நமது கையில் லேப்  ரிப்போர்ட் இருக்கு. இப்பொழுது. இவர்களாக வெளியில் வரவில்லை என்றால். அனைவரையும் கைது செய்து. பின்னர். இந்த கம்பெனிக்கு  சீல் வெய்போம்  என்று சொல்லுங்கள் என்று சகாயம் சொல்ல. அதை அப்படியே. அவர். அந்த கிளை மேலாளரிடம் சொல்ல. அடுத்த பதினைந்து நிமிடங்களில். அனைவரும் வெளியே வந்தனர்.  பின்னர் அந்த கம்பெனிக்கு  எட்டு பூட்டுகள்  போட்டு பூட்டப்பட்டது.

 இதை  பற்றி. ஒரே  ஒரு பத்திரிகை மட்டும் தான்  செய்தி வெளியிட்டது. கத்தி  கதிரேசன் ஸ்டைல்ல சொல்லனம்னால். லேகியம் விக்கவும், சமையல் குறிப்பு எழுதவும், சினிமா கிசு, கிசுக்கள்  எழுதவும் பத்திரிகைகளில் இடம் இருக்கு. ஆனால்  இதை  பத்தி நாலு வரி எழுத இடம் இல்லை. இதை  பற்றி துணிச்சலாக எழுதிய. தமிழ் நாட்டில் முதுகெலும்பு உடைய ஒரே பத்திரிகை. ஜூனியர் விகடன்.


 அப்பொழுது செல். நமது நாட்டிற்க்கு  வரவில்லை. பெப்சி கம்பெனிக்கு  எட்டு பூட்டு  போட்டபின். அலுவலகத்திற்கோ, வீட்டிற்கோ. செல்லாமல். அவர். அருகில் உள்ள கிராமங்களில் ஆய்வு செய்ய சென்றார். இரவு எட்டு மணிக்கு தான்  வீட்டிற்க்கு  வந்தார். அதற்குள் . வீட்டிற்கும், அலுவலகத்திற்கும். மாறி, மாறி பல போன் கால்கள். அவர் வீட்டிற்க்கு  வரும் பொழுது. அவரது மனைவியார்  வெளியே நின்று கொண்டிருந்தார்.  பல மிரட்டல் கால்கள் வந்ததை பற்றி சொன்னார். யாரை கேட்டு பெப்சி கம்பனிக்கு சீல் வெய்த்தீங்க. உங்களை சச்பெண்ட்  பண்ண போறோம். என்று கலெக்டர் சொல்ல. நான். இந்திய சட்ட, திட்டங்களை மீறி எதுவும் செய்யவில்லை. என் மீது நடவடிக்கை எடுப்பதாக  இருந்தால். தாராளமாக எடுக்கலாம். Iam Waiting என்று  போன்னை  வெய்த்தார்.

 இவர் அது  மட்டும் செய்யவில்லை. காஞ்சிபுரம் மாவட்டத்தில். பெப்சி குளிர்பானம் விற்க்க  தடையும் விதித்தார். உலகில் வட  கொரியா போன்ற சில நாடுகள். பெப்சி, கோக் பானங்களை தடை செய்துள்ளது. இதை  கேரளா, அருணாச்சல் பிரதேஷ், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் விற்பதில்லை. இப்பொழுது டெல்லியில். பள்ளி, கல்லூரிகளில் இதை  விற்க்க  தடை.  அது  எல்லாம் செய்தது அரசாங்கமே ஒழிய, அரசாங்க அதிகாரிகள் இல்லை. ஆனால்?.உலகிலேயே.  பெப்சி  விற்க்க  தடை உத்தரவு பிறப்பித்த முதல். One  and  Only அதிகாரி  இவர் தான்.  பின்னர். அவர் அங்கிருந்து உடனடியாக.  transfer  செய்யப்பட்டதும். இரண்டே நாளில். அந்த எட்டு பூட்டுகள்  உடைக்கபட்டதும் வேறு விஷயம். ஆனால்?.

தன்னுடைய அதிகார வரம்பை தவறாக துஷ் பிரயோகம் செய்யும். பல அதிகாரிகளின் மத்தியில். எந்த அளவு தன்னுடைய அதிகாரத்தை பயன் படுத்தி. நல்லது செய்ய முடியுமோ செய்தார். இரண்டு நாட்களாது அவரால். பெப்சி கம்பெனியை தடை செய்ய முடிந்ததே. இவர். மாற்றலாகி போகும் ஒவ்வொரு ஊரிலும்.  அது  வரை  கிடைக்காமல் இருந்த. முதியோர் பென்ஷன், தியாகி பென்ஷன், மாற்று திறநாளிகளுக்கு அரசாங்கம் மூலம்  கிடைக்க வேண்டிய உதவி என அனைத்தும் கிடைத்தது. சென்னையில் 650 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலங்களை. இவர் மீட்டதில் ஆரம்பித்து. மதுரையில். பல ஆயிரம் கோடி மதிப்பில்.  நடந்த. கிரானைட்  முறைகேட்டை. அம்பலபடுத்தியது  வரை. இவர். செய்த சாதனைகள். கொஞ்சம், நஞ்சம் அல்ல. மேலோட்டமாக. இதை  கேட்பவர்களுக்கு. இவர் ஏதோ. தனது கடமையை ஒழுங்காக. செய்த ஒரு அதிகாரி என்று தோன்றலாம். ஆனால்?

 பலமுறை. இவர் தனது உயிரை பணையம் வெய்த்து தான். இத்தனை  விசயங்களை செய்ய முடிந்தது. ஒரே நாளில் இரண்டு முறை transfer  செய்யப்பட்டவர் இவர். MA, ML  படித்து. IAS  சும்  படித்தவர்.  சட்ட படிப்பு இவர் படித்ததால்  தான். சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன் படுத்தி.  ஆட்டையா  போடும்  பலரை இவரால் வேட்டை ஆட முடிந்தது. போர் கலைகள் கற்ற மற  தமிழனாக இவர் இருப்பதால். பத்து  பேர் ஆயுதங்களோடு வந்தாலும். இவரால் தனி ஒருவனாக. அவர்களை.  பந்தாட முடிந்தது.

 இப்பொழுது சொல்லுங்கள். இத்தகைய நேர்மை, துணிவு, வீரம், அறிவு என அனைத்தையும் உடைய. தமிழை தாய் மொழியாக கொண்ட இவர்.  நமது தமிழ் நாட்டின் முதல் அமைச்சராக ஆனால்  எப்படி இருக்கும். இவரை பற்றி தெரியாதவர்களும். நமது தமிழ் நாட்டில் இருக்கிறார்கள் என்பது கசப்பான உண்மை.

 அடுத்து கிருஷ்ண கிரியில் 77 ஏக்கர் பரபளவு நிலத்தை. கோக்  கம்பெனிக்கு  தமிழக அரசாங்கம் வாடகைக்கு விட போகிறது. ஒரு ஏக்கருக்கான வாடகை 77 ருபாய் மட்டுமே.

77x 77= 5929 ரூபாய் மட்டுமே. இது  பன்னாட்டு நிறுவனத்திற்கான வாடகையா? இல்லை. Bachelor ரூமிர்கான வாடகையா.

  வெய்யில் அதிகம் இருப்பது  உண்மை தான். கோக், பெப்சி குடிப்பதற்கு  பதில். Fresh  Lemon  Juice  குடிக்கலாமே.

 மேலும் சகாயம் அவர்களை பற்றி சிந்திக்க வேண்டியது நிறைய இருக்கிறது. சிந்திப்போம்.

Sunday, 19 April 2015

உடற் பயிற்சியால் மூளைக்கு நல்லது. கிராண்ட் மாஸ்டரின் வெற்றி சூத்திரம்.


இரும்பினில் செய்த தசைகளும், நிரம்புகளும் கொண்ட உடல் வேண்டும் என்றார். சுவாமி விவேகானந்தர். 15 வயதில் ஒரு முரட்டு  குதிரையை தனி ஒருவனாக அடக்கி.  அந்த குதிரை வண்டியில் வந்த கர்ப்பிணி பெண்ணை காப்பாற்றியவர் விவேகனந்தர். அவர். கடைசி வரை. உடற் பயிற்ச்சியை  விட  வில்லை. பல ஊர்கள், நாடுகள் அவர் சென்ற பொழுதும். டம்பிள்ஸ். அவர் கூடவே பயணம் செய்தது.

 இதற்கு  முன். அதாவது.  நமது தாத்தா, பாட்டி  காலத்தில். உடற் பயிற்ச்சி  என்பது. ஏதோ. விளையாட்டு துறையை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே உரியது என்பதை போல் ஒரு எண்ணம் இருந்தது. அதை  அன்றைய காலத்தில் தவறு என்று சொல்ல  முடியாது. காரணம்.

அன்று  3,4 கிலோ மீட்டர்  துரம் என்றாலும். மக்கள் நடந்தே தான்  சென்றனர். பைக்கில் செல்லவில்லை. அன்று, ஆன், பெண் அனைவருக்குமே கடினமான வேலைகள் இருந்தது.   இன்று. இயந்திர தனமான இந்த உலகில்  எல்லாமே தலை கீழாக ஆகி விட்டது. அன்று மனிதர்கள் செய்த வேலைகளை. இன்று machines  தான். செய்கிறது.  அதனால். இன்று ஆரோக்யமாக வாழ. உடற் பயிர்ச்சி  மிக, மிக அவசியமான ஒன்று. நாம். எந்த வேலை செய்வதாக இருந்தாலும். அதை. இந்த உடலை கொண்டே செய்கிறோம்.  ஆரோக்கியம் இல்லாத மனித உடலின் மனமும் ஆரோக்கியம் இன்றியே இருக்கும்.   மன நலனிற்கு உடல் நலன் மிக, மிக அவசியம்.




 கிரான்ட்  மாஸ்டர் விஸ்வநாத் ஆனந்த் சொல்வதை  சற்று கேளுங்கள்.

நான் தினமும் ஜிம்மிற்க்கு  சென்று உடற் பயிற்ச்சி  செய்து எனது உடலை கட்டுபாடுடன் வெய்த்து உள்ளேன். எனது உடல் கட்டுப்பாட்டுடன்  இருந்தால்  தான். மனமும் கட்டுபாடுடன் இருக்கும். உடல் ஆரோக்யமாக  இல்லாமல் செஸ் போட்டியில் சவால்களை எதிர் கொள்வது என்பது. கடினமான செயலாகி விடும்.

 நீங்கள். வீடுகளில், அலுவலகங்களில்   கடின வேலை செய்பவர்களாக இருந்தாலும். ஒவ்வொரு குறிப்பிட்ட உடல் பாகத்திற்கு என்று பிரத்யேகமாக செய்யும் உடற் பயிற்ச்சி.  அதிக பலனை தரும்.

 சரி. இப்பொழுது. உடற் பயிற்ச்சி  செய்வதன் மூலம். உடலில், மனதில், மூளையில், ஏன்? மரபணுவில் கூட சில நல்ல மாற்றங்கள் நடக்கிறது. அது சம்பந்தமாக அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வை பற்றி, ஆரோக்யத்திற்கு என்றே வரும். பிரபல .Cell  Metabolism  என்னும் ஆங்கில  இதழில் வந்த. கட்டுரை ஒன்றை பாப்போம்.

உடற்பயிற்ச்சி செய்தால் உடலுக்கு நல்லது. ஆனால்? மூளைக்கு நல்லதா. ஆம். இது சம்பந்தமாக நடந்த பல ஆராய்ச்சிகள் இதை நிரூபித்து உள்ளன.
உடற்பயிற்சி எப்படி மூளை செயல்பாட்டுக்கு உதவுகிறது, எப்படியெல்லாம் நன்மை செய்கிறது என்பதை ஆதாரபூர்வமாக நிரூபித்திருக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. கடுமையான உடற்பயிற்சி செய்யும் போது மூளையில் ‘ஐரிசின்’ (irisin) என்ற மூலக்கூறு உற்பத்தியாகிறது என்று அடையாளம் காட்டியிருக்கிறது அந்த ஆய்வு. அதோடு, அந்த மூலக்கூறு, நரம்புகளைப் பாதுகாக்கிறது என்றும் உறுதியாக எடுத்துச் சொல்லியிருக்கிறது.
இந்த ஆய்வை தலைமை ஏற்று நடத்தியவர் டாக்டர் புரூஸ் ஸ்பீஜெல்மேன் (Dr.Bruce Spiegelman). அமெரிக்காவில் இருக்கும் டானா ஃபார்பர் கேன்ஸர் இன்ஸ்டிடியூட் மற்றும் ஹார்வர்ட் மெடிக்கல் ஸ்கூலில் பேராசிரியர். அவர் தலைமையிலான குழு, ஒரு எலியை வைத்து ஆராய்ச்சி செய்ததில்தான் இந்த உண்மையைக் கண்டுபிடித்திருக்கிறது.



உடற்பயிற்சி செய்வதால், செயற்கை முறையில் ரத்தத்தில் இருக்கும் ‘ஐரிசின்’ அளவை அதிகரிக்க முடியும். அது, கற்றல் மற்றும் ஞாபகம் தொடர்பான மரபணுவை செயல்பட வைக்கும் என்றெல்லாம் பட்டியல் போடுகிறது இந்த ஆய்வு. சுருக்கமாக, ‘உடற்பயிற்சி, மூளையில் அறிவாற்றல் தரும் செயல்பாட்டை மேம்படுத்தும். நரம்புத் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கும்’ என்று அடித்துச் சொல்கிறார்கள் இந்த ஆய்வை நடத்தியவர்கள். அதாவது, மன அழுத்தம், பக்கவாதம், அல்ஜீமெர்ஸ் நோய் (Alzheimer’s disease) போன்ற நரம்பியல் நோய்கள் நெருங்குவதற்கான வாய்ப்பை உடற்பயிற்சி தடுத்துவிடும் என்கிறார்கள்.

 நாளை.

 பிரியாணி சாபிட்டால் சிக்ஸ் பாக்  போய்  விடுமா.  நுரையீரலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு. முதலியவற்றை பாப்போம்.

  பின் குறிப்பு. ரெட் டீ  ஷர்ட்டில்  இருக்கும் இந்த இளைங்கன். எனது ஆருயிர் நண்பன் சரத் குமார். மிக சிறந்த Waight  Lifting  Champion. ஆறு முறை மிஸ்டர் இந்தியா பட்டம் வென்ற காமராஜின் மாணவன்.








Saturday, 18 April 2015

ஜீரன சக்திக்கு உதவும் வாழ்கை முறைஉணவு முறை. நா சொல்வதை. கேட்க கூடாது.




ஜீரன சக்தியை அதிகரிக்க. என்ன, என்னவெல்லாம் சாப்பிடலாம் என்பதை பார்க்கும் முன்.  ஒரு மனிதன், மனுசி  ஆரோக்யமாக வாழ. ஒரு நாளைக்கி எவ்வளவு சாப்பிடலாம். எந்த, எந்த வேளைகளில் எவ்வளவு  அளவு சாப்பிட வேண்டும். என்பதை பற்றி பாப்போம்.

  வெறுமன  உட்கார்ந்த இடத்தில்  வேலை பார்பவர்கள். அதாவது. physical  work. உடற் பயிர்ச்சி  கூட  செய்யாதவர்கள், செய்ய முடியாதவர்கள். ஒரு நாளைக்கி 1800 கலோரி உணவை  தான்  அதிக பக்சம் எடுத்து கொள்ள வேண்டும். கடின உடற் பயிர்ச்சி  செய்பவர்கள் ஒரு நாளைக்கி 2500 கலோரியில் இருந்து. 4000 அதுக்கும் மேல.  அவுங்க எந்த அளவு exercise  பண்றாங்களோ அதற்கு  தகுந்த மாதிரி சாப்பாடு எடுத்து கொள்ள வேண்டும்.


இப்பொழுது நான் என்று எடுத்து கொண்டால். மணிக்கு ஏழு  கிலோ மீட்டர்  வேகத்தில். ஒரு நொடி கூட  ஓய்வு எடுக்காமல் இரண்டு மணி நேரம் நடப்பேன்.  14 கிலோ மீட்டர்.  என்னுடைய நடை வேகத்திற்கு. ஒரு மணி நேரத்தில் 750 கலோரிகளாவது எரியும். ஆக  வெறும் நடையிலேயே. எனக்கு 1500 கலோரிகள் எரிக்கப்படும். அதை  தவிர்த்து இரண்டரை மணி நேர கடுமையான உடற் பயிர்ச்சி. முதலில்  Floor  Exercise ஒண்டரை மணி நேரம். பின்னர். பவர் டியூப், மசில்  மாஸ்டர், டம்பிள்ஸ், கர்லா கட்டை, க்ரிப்  ட்ரைனர்  போன்ற instrumental  exercises  ஒரு மணி நேரம்.

  ஒரு நாளைக்கி. 5000 கலோரிகள் கிடைக்கும் உணவை எடுத்து  கொண்டால் தான். என்னால். இவ்ளவும்  பண்ண முடியும். 2500 கலோரிகள் உள்ள உணவை எடுத்து கொண்டால். பாதி  நடக்கும் பொழுதே. நான் சுருண்டு தெருவில் விழுந்து விடுவேன்.  ஆக.   நீங்கள் உண்ணும் உணவானது. நீங்கள் செய்யும் உடல் உழைப்பிற்கு தகுந்த அளவு இருக்க வேண்டும்.

 நாம் சாப்பிடும் பொழுது. நாவின் பேச்சை கேட்க  கூடாது.  வயிற்றின் பேச்சை கேட்க வேண்டும். அது  தான். உடல் ஆரோக்யத்திற்கு நல்லது.






 தலை வாசல் விஜய்யை பலருக்கு. அவர் ஒரு சாதாரண குண சித்திர நடிகராக தான்  தெரியும். உண்மையில் அவர் ஒரு மிக சிறந்த யோகா ஆசிரியர் மற்றும் நீச்சல் வீரரும் கூட. அவரின் மகள் ஜெய வீணா.  வயது 12.  சமீபத்தில். கேரளாவில் தேசிய அளவில் நடந்த நீச்சல் போட்டியில் தங்க பதக்கம்  வென்றாள். தலை வாசல் விஜய். உணவின் அளவு முறை பற்றி பலமுறை சொல்வது.

 காலையில் ராஜா  மாதிரி சாப்பிடனும், மதியம் கொஞ்சும் கம்மியா. ராணி மாதிரி. இரவு பிச்சை காரன் மாதிரி.

நைட் எப்போதுமே புல் லோட்  வயிற்றில் ஏற்ற   கூடாது.

 சாப் பிட்டு அரை மணி நேரம் கழித்து  தான். நாம் தண்ணீர் குடிக்க வேண்டும். நடுவில் விக்கல் எடுத்தால் வேறு வழியில்லை.  அது  எப்பொழுதாவது தற்செயலாக நடக்கும்  ஒன்று. இரவு நாம் துங்க போவதற்கு இரண்டு மணி நேரம் முன்பே உன்ன வேண்டும்.

  மிக கடுமையான உடற் பயிற்சியெல்லாம் செய்ய வேண்டும் என்று கூட  அவசியம் இல்லை.  உங்களால் முடிந்தால் செய்யலாம். ஒரு நாளைக்கி 15 நிமிடங்கள் உடற் பயிற்ச்சி  செய்தாலே ஆரோக்யமாக வாழலாம். மற்றும் தினமும் 30 நிமிட நடை.

 ஜீரன சக்திக்கு நாம் எடுத்து கொள்ள வேண்டிய உணவுகள்.

  சூடான நீரில் சிறிது எலுமிச்சை பழ  சாற்றை பிழிந்து வெறும் வயிற்றில் குடிப்பது. உடல் இளைக்க, ஜீரன சக்தி இரண்டிற்கும் நல்லது.  மற்றும் வேப்பிலை கட்டி.





உங்களில் சிலருக்கு  இதை  பற்றி தெரிந்து இருக்கும். தெரியாதவர்கள். இது  ஏதோ. வேப்பிலையில் இருந்து செய்யபடுவது  என்று நினைப்பார்கள். உண்மையில் இதற்கும், வேப்பிலைக்கும் சம்பந்தமே இல்லை. இதற்கு எதனால் அந்த பெயர் வந்தது என்று தெரியவில்லை. பெயர் ஆராய்ச்சி எதற்கு. இது உடல் ஆரோக்யதிற்கும், ஜீரனத்திற்கும் நல்லது.

  இதை  எப்படி செய்வது.

   நாரத்தை,   எலுமிச்சை இலைகள். ஒரு கைப்பிடி.
கறிவேப்பிலை அரை கைப்பிடி.
மிளகாய் வற்றல்—-3
ஓமம்,  அல்லதுசீரகம்      2 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி—   அரை டீஸ்பூன்

ருசிக்கு—-உப்பு
கடுகு,  வெந்தயம்  வகைக்கு  கால் டீஸ்பூன்
நல்லெண்ணெய்—–சிறிது.
நாரத்தை  இலை மற்றும் எலுமிச்சை  இலைகளில் நார் பகுதியை நீக்கி விட்டு  சிறு இலைகளாக கிழித்து கொள்ளவும். கறிவேப்பிலை  அப்படியே
சேர்க்கலாம்.
வெறும் வாணலியில்    கடுகு,வெந்தயத்தை  சிவக்கவும்,ஓமத்தை
வாஸனை வரும்படியும் வறுத்து  ஆறவிடவும்.

மிளகாயைத் துளி எண்ணெயில்    வறுத்து ,   உப்பு,பெருங்காயம்
சேர்த்து  மிக்ஸியில் அரைத்து.    ஒரு முறை கிளறிவிட்டு ஒன்று சேர
பொடிக்கவும்.    தண்ணீர் இதில் கொஞ்சும் கூட சேர்க்க வேண்டாம்.
சற்று கெட்டியாக     மசிந்ததை எடுத்து  சிறிய வில்லைகளாகவோ
உருண்டையாகவோ செய்து     சிறிது சிறிதாக
உபயோகிக்கலாம்.

சிறிய பாட்டில்களில்  போட்டு  மூடிவைத்து உபயோகிக்கவும்.
நாரத்தை, எலுமிச்சை,இலைகள் பித்தத்தை நீக்கி  நாவிற்கு
ருசியைக் கொடுக்கும். இது சற்று விறுவிறுவென்று இருக்கும். அனைவரின் நாவிற்கும் இது  பிடிக்குமா என்று தெரியவில்லை. ஏற்கனவே நான் மேலே  சொன்னதை போல். நாவின் பேச்சை கேட்க கூடாது. வயிற்றின் பேச்சை கேட்க வேண்டும். இந்த வேப்பிலை கட்டி. காதி, அம்பிகா அப்பளம் டிப்போ, மற்றும் பல நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

 தயிர், மோர் அண்ணம்  உண்ணும் பொழுது. உருகாய்க்கு பதில் இதை  தொட்டு கொண்டால். நல்ல விறு, விறுப்பா  இருக்கும். உடல் ஆரோக்யத்திற்கும்  நல்லது.

 இஞ்சி ஜீரணத்திற்கு நல்லது என்பது அனைவருக்குமே தெரியும். தெரிந்து பயன் இல்லை. அதை  தினமும் உணவில் சேர்த்து கொண்டால் தான்  பயனே. நான்  தினமும். மூன்று  வேளையும். சாப்பிட்டு  அரை மணி நேரம் இடைவேளை விட்டு. இஞ்சி மரப்பா ஒரு சிறிய துண்டு வாயில் மென்னுவேன். நெல்லிகாய் சாப்பிட்டு  தண்ணீர் குடித்தால். எவ்வாறு தண்ணீர் தித்திக்குமோ.  அதே  போல். இஞ்சி மறப்பா சாப்பிட்டு தண்ணீர் குடித்தால். அது ஒரு தனி சுவை.

 பப்பாளி பழம்  ஜீரன சக்திக்கு நல்லது. வெளி நாடுகளில் மாமிச உணவு செய்யும் பொழுது. சிறிது பப்பாளி துண்டை சேர்த்து கொள்வார்கள்.

 கொத்தமல்லியை சாறாக்கி. அதனுடன் ஒரு கரண்டி ஜீரகம் கலந்து. அது இரண்டையும் தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.

மோரில் ஓமம் கலந்து குடிக்கலாம்.

 பெருங்காயத்தை மட்டுமே. சாப்பாட்டில்  போட்டு. அதோடு சிறிது நெய்யும் கலந்து உண்பது. ஜீரணத்திற்கு மிக நல்லது. ஒரு 2,3 உருண்டை அவ்வாறு சாபிட்டாலே போதும்.




 அஷ்ட்ட  சூர்ணம். எட்டு விதமான ஆயுர்வேத முலிகைகளால்  இதை  தயார் செய்வார்கள். இதன் சிறப்பு என்னவென்றால். பசியே எடுக்கவில்லை என்றாலும். வயிற்றில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்கி பசியை துண்டும்.  ஔட்  கோயிங் ரொம்ப ஓவரா இருந்தாலும். அதை  கட்டுபடுத்தும். கோட்டக்கல் போன்ற ஆயுர்வேத மருந்து கடைகளில் கிடைக்கும். வாரம் ஒரு முறை அல்லது இரு முறை. அஷ்ட்ட  சூரணத்தை அன்னத்தில் ரெண்டு ஸ்பூன் போட்டு. அதில் நெய் ஒரு ஸ்பூன் கலந்து உண்ணலாம்.

  நாளை. உடற் பயிர்ச்சி  செய்தால் உடல் ஆரோக்யத்திற்கு நல்லது சரி. மனதிற்கு நல்லதா. இல்லை. யோகா தான். உடல், மனம் இரண்டிற்கும் நல்லது என்று நீங்கள் நினைத்தால் தவறு. உடற் பயிற்ச்சியும். உடல், மனம் இரண்டிற்குமே நல்லது. எப்படி? இதற்கான அறிவியல் பூர்வமான விளக்கத்தை நாம் நாளை பாப்போம்.




Friday, 17 April 2015

புற்று நோய் வராமல் தடுக்கவும், தீர்க்கவும் தீர்வு. 448 நோய்களை குணமாக்கும் துளசி.



புற்று நோய் வருவதற்கான காரணங்கள் பல. புற்று நோய். கேசாதி, பாதம்
முதல் எங்கு வேண்டுமானாலும் வரும். புற்று நோய் ஒருவருக்கு வந்து விட்டால். அதற்க்கு உரிய சிகிச்சையை எடுத்து கொண்டே ஆக வேண்டும். முன்பு இது தீர்க்க முடியாத நோயாக ஆங்கில மருத்துவத்தில்  இருந்தது. இப்பொழுது  தீர்வு ஆங்கில மருத்துவ உலகிலும் வந்து விட்டது.  சித்த மருத்துவம். மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் தீர்வு இருகிறதா? என்றால் இருக்கிறது.

 கர்நாடகாவில் யாரோ ஒரு சித்த மருத்துவர். புற்று நோய்க்கு ஒரு மூலிகையை இலவசமாக கொடுப்பாராம்.  அதை பெற்று கொண்ட 5000 புற்று நோயாளிகள் முழுமையாக குணம் அடைந்தனர்.  இந்த சேவைக்கு. அவருக்கு கிடைத்த பரிசு என்ன?  தெரியுமா. அக்கம், பக்கத்தில் உள்ள ஆங்கில மருத்துவர்கள். ஒரு போலி சமூக சேவகரை செட் பண்ணி. அந்த போலி சமூக சேவகர் மூலம். அவர் மீது கேஸ் போட்டார்கள். அவர் போலி மருத்துவர் என்று.  வழக்கு முடியும் வரை. அவர் இலவசமாக கூட யாருக்கும் மூலிகை கொடுக்க கூடாதுனு  ஜட்ஜ் அய்யா தீர்ப்பு சொல்லிட்டாரு.

 இந்த சம்பவத்தை என்னுடைய நண்பர் ஒருவர் வெகு நாள் முன்பு சொன்னார். இது எந்த? அளவு உண்மை என்று தெரியவில்லை. அந்த சித்த மருத்துவரின் பெயர். மற்றும் தொலைபேசி என்னை எவ்வளவு கேட்டும் அந்த நண்பர் கொடுக்க மறுத்து  விட்டார். இந்த பதிவை படிப்பவர்களில். அந்த 5000 பேரில் ஒருவர் இருந்தால். இல்லை. அந்த மருத்துவரின் பெயர், என். இரண்டும் தெரிந்த யாரேனும் ஒருவர் இருந்தால். அதை எனக்கு தெரியபடுத்தவும். இப்பொழுது அந்த மருத்துவரின் மன நிலை, சூழ்நிலை எவ்வாறு இருக்கிறது என்பது தெரிந்தால் தான். அது சம்பந்தமாக என்னால் பதிவு செய்ய முடியும்.

  புற்று நோய்க்கான தீர்வுகள் எனக்கு தெரிந்தவற்றை சொல்கிறேன்.

  மருத்துவர்கள் வெறும் மருத்துவர்களாக மட்டும் அல்லாமல். மனோ தத்துவ நிபுணர்களாகவும் இருக்க வேண்டியது அவசியம். ஒரு அம்மாக்கு புற்று நோய் மிக முற்றிய நிலையில் தான் கண்டு பிடிக்கப்பட்டது. அவங்களுக்கு அறுவை சிகிச்சையும் செய்யபட்டது. ஆனால். அந்த அம்மாவை அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றிய மருத்துவர்.  உங்களுக்கு என்ன தான் ஆபரேஷன் பண்ணாலும்..... ரொம்ப. அது உங்களுக்கு முற்றி போனவுடன் தான்.  ஆபரேஷன் பண்ணியிருக்கு. அதனால. நீங்க இவ்ளவு நாள் தான் உயிரோட இருப்பீங்கனு. அந்த மருத்துவர் சொல்ல. அதை கேட்டு பயத்தாலேயே தினம், தினம் அவுங்க செத்து கொண்டு இருந்தார்கள்.

 எனது நண்பர் சதீஷ் சொன்னதின் பேரில். நான் அவங்களை நேரில் சென்று பார்த்து கவுன்சிலிங் கொடுத்து. தினமும் வெறும் வயிற்றில். செம்பு பாத்திரத்தில் நிரப்பிய  துளசி நீரை குடியுங்கள். என்று எனக்கு தெரிந்த. புற்று நோய்க்கான சிறந்த மருத்துவத்தையும் அவங்களுக்கு சொல்லி விட்டு வந்தேன். மேலும் அங்கு ஒரு கொலையும் செய்தேன். நான் கொன்றது யாரை தெரியுமா. உலகின் மிக கொடிய நோயான பயத்தை.

  இப்பொழுது அந்த அம்மா. பயபடுவதே இல்லை. நான் கூறியபடியே. தினமும் முதலில் துங்கி எழுந்தவுடன். அவுங்க. சிரித்த முகத்துடன் கண்ணாடியை பார்கிறார்கள். எனக்கு இன்றிலிருந்து எல்லாம் நன்றாகவே இருக்கும். நான் நீண்ட நாள் வாழுவேன் என்று உரக்க. தன்னம்பிக்கையோடு கூறுகிறார்கள். பிறகு பத்து  நிமிடம் வஜ்ராசனம். அதை செய்த பிறகு. வெறும் வயிற்றில் செம்பு பாத்திரத்தில் இருந்து துளசி நீரை எடுத்து  அருந்துகிறார்கள். உடல், மனம் இரண்டுமே ஆரோக்யமாக இப்பொழுது அவங்களுக்கு இருக்கு.

 துளசியின் மகத்துவம் பாப்போம்.

 ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளை. எவ்வளவு தாரளமாக போட முடியுமோ அவ்வளவு தாராளமாக. செம்பு பாத்திரத்தில். ஒரு 1.5, 2 லிட்டர் தண்ணீர் விட்டு 8 மணி நேரம்   ஊர வெய்க்க வேண்டும். பின்னர். வெறும் வயிற்றில். ஒரு டம்ளர்ரோ, இரண்டு டம்ளர்ரோ குடிக்க வேண்டும். அவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம். அதாவது 48 நாட்கள் குடித்தால். புற்று நோய் பூரணமாக குணம் ஆகும். அது உடலின் எந்த பகுதியில் இருந்தாலும். மிக முற்றி போனால். இது  வேலை செய்யுமா என்று தெரியவில்லை. ஆனால். ஆரம்ப நிலையிலேயே. புற்று நோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு. இந்த துளசி சிகிச்சையை மேற்கொண்டால். புற்று நோய்  மட்டுமல்ல. 448 விதமான நோய்கள் குணமடையும். துளசியின் மருத்துவ பண்புகள். அறிவியல் பூர்வமாக நிருபிகபட்ட உண்மை. சரி. அந்த துளசி நீரை. எவர்சில்வர் பாத்திரத்தில் விட்டு குடிக்கலாம். அதிக வசதி இருந்தால். தங்க பாத்திரத்தில் கூட விட்டு குடிக்கலாம். ஏன்? செம்பு பாத்திரம்.

 தாமிர சக்த்து  [செம்பு] உடலுக்கு தேவையான ஒன்று. தைராய்ட் வர உடலில் தாமிர சக்தி குறைவதும் ஒரு காரணம். தைராய்ட் நோய் உள்ளவர்கள் செம்பு பாத்திரத்தில் நீர் அருந்துதல். தைராய்ட் நோய்க்கு  சிறந்த சிகிச்சை. கீழ் வாதம் முதலான நோய்கள் குணமாகும். உடலில் உள்ள புண்களை குனப்படுத்துவதுடன் . புதிதாக. உடலில் அணுக்களையும் உற்பத்தி  செய்யும் சக்தி தாமிரத்திர்க்கு  உண்டு. தாமிர பாத்திரத்தில் நிரப்படும் சாதாரண நீரே.  உடற் கட்டியை குணபடுத்தும் என்றால். தாமிர துளசி நீர்.

  துளசி நீர், புற்று நோயை குணபடுத்தும் என்று சித்த மருத்துவமோ, ஆயுர் வேத மருத்துவமோ. சொல்லியிருக்கா என்பதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. நீ சொல்லும் இந்த செய்தி. அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்றா? கை வைத்தியம், பாட்டி வைத்தியம் பண்ணி சரி பண்ண. புற்று நோய் ஒன்னும் bp, சுகர்  அல்ல. அது ஆட் கொல்லி நோய். என்று. உங்களில் சிலர் கேட்பது புரிகிறது. உங்களது கேள்வி. மிக நியாயமானதும் கூட. துளசி புற்று நோயை குணபடுத்தும் என்பதை. உலக அளவில் நடந்த பல அறிவியல் ஆய்வுகள் முடிவு செய்துள்ளது. அதில் ஒன்று. NDTV இதை பற்றி அமெரிக்காவில் நடந்த ஆய்வு சம்பந்தமாக செய்தி வெளியிட்டு உள்ளது. அதன் லிங்க் கீழே.

http://www.ndtv.com/india-news/tulsi-enters-us-lab-to-fight-cancer-548197

 Tulsi  Cures  Cancer  என்று google ளில் டைப் செய்து பாருங்கள். இதே போல். பல ஆய்வுகளின் முடிவை google  சொல்லும்.

 வியாதி உள்ளவர்கள் தான். தாமிர பாத்திரத்தில் துளசி நீரை விட்டு குடிக்க வேண்டும் என்று இல்லை. நல்ல ஆரோக்கியம் இருப்பவர்களும். தினமும் ஒரு டம்பளர் துளசி நீரை பருகுங்கள். மண் பானை நீரை விட தாமிர பாத்திர நீர் உடல் ஆரோக்யத்திற்கு அவ்வளவு நல்லது.

 பெருமாள் கோவில்களில். தாமிர பாத்திரத்தில் துளசி நீர் பன்னெடுங்காலமாக கொடுக்கும் ஆன்மிக சடங்கினுள் ஒரு மிக பெரிய அறிவியல் உண்மை ஒளிந்து இருப்பது உங்களுக்கு புரிகிறதா.

 இந்த உலகிலேயே. மிக சிறந்த நதி. தாமிரபரணி ஆறு தான்.

  இதை தவிர்த்து. வைட்டமின் சி. மற்றும் இ. அதிகம் உள்ள உணவுகளை எடுத்து கொண்டால் புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு மிக குறைவு.

  வைட்டமின் சி உள்ள உணவுகள்.

   நாம் தினமும் சுவை, மனம் ஆகியவற்றிற்காக சேர்த்து கொள்ளும் மிளகு. மற்றும் தக்காளி, பப்பாளி பழம், அணைத்து கீரை வகைகள்.

 வைட்டமின்  இ உள்ள  உணவுகள்.

 பாதாம், மாம்பழம், கோதுமை, கேரட் , பூசணிக்காய், கடுகு  கீரை, சூரிய காந்தி என்னை, ஆலிவ் ஆயில்.

 இதை தவிர்த்து. புற்று நோய் என்று அல்ல. பூண்டு. அணைத்து வியாதிகளுக்கும் நல்லது. ஆயுர்வேதம் பூண்டை மிக உயர்ந்த இடத்தில வெய்த்து உள்ளது. ஆதலால். இடையில் வந்த சில பிரகஸ்பதிகள். சாஸ்திர நுல்களில் பூண்டை சேர்த்து கொள்ள கூடாது என்று எழுதியதை. அப்படியே கண் மூடி தனமாக பின் பற்றாதீர்கள். இஞ்சியும் புற்று நோய்க்கு நல்லது. ஒமேகா 3 என்னும். உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பு. புற்று நோய் வரும் அபாயத்தை. பெருமளவு தடுக்கும். வேர்கடலையில் ஒமேகா 3. உள்ளது. மீன்களுக்கு இணையான அளவு ஒமேகா 3. வேர்கடலையில் மட்டுமே உண்டு.  பாதாமில் உள்ளதை விட மூன்று மடங்கு அதிக நற்குணங்கள் வாய்ந்தது வேர்கடலை. அதனால். தினமும் சிறிதளவு வேர்கடலை எடுத்து கொள்ளுங்கள்.

 மற்றும் வாழை தண்டு, பீன்ஸ் போன்ற நார் சக்த்து  உள்ள உணவுகளை சேர்த்து கொள்ளுங்கள்.

 எனது தாயாருக்கு  தலை முதல் கால் வரை பல நோய்கள் இருந்தது. ஆங்கில மருத்துவம் குணமே செய்ய முடியாது என்று கை விட்ட பல நோய்கள். இன்று பெரும்பாலானவை. ஆயுர் வேத மருத்துவத்தால் குணம் ஆகி விட்டது. குணம் ஆகி கொண்டு இருக்கிறது.

எங்களது நங்கநல்லூர் ஏரியாவிலேயே ஆகாஷ் மாதவன் என்கிற சிறந்த ஆயுர் வேத மருத்துவர் தன்வந்திரி போல் வந்து எனது தாயை காத்து விட்டார். அவரின் விலாசம் மற்றும் தொலை பேசி என்னை. இந்த பதிவில்  தருகிறேன். உங்களுக்கோ, உங்களுக்கு தெரிந்தவர்களுக்கோ. ஏதேனும். தீர்க்க முடியாத நோய் இருந்தால். இவரை தொடர்பு கொள்ளலாம்.

Number 27, Barani Complex, Nanganallur Market Road, Opposite to Vasanth & Co.

 Contact- 09789887007,
 044- 22243619.

  நாளை. இன்று பலருக்கு உள்ள ஒரு பிரச்சனை தான். அஜீரண கோளாறு. அதற்கான தீர்வை பாப்போம்.


Thursday, 16 April 2015

நுறு சதவீதம் இயற்கையான, அதிக சக்துகளை உள் அடக்கிய உலகின் ஒரே அற்ப்புத உணவு.




Ganesa Moorthy Roja என்னும் எனது முகநுல் நண்பர். பட்டப்படிப்பு படித்து விவசாயம் செய்யும் இளைங்கர். இயற்க்கை வின்ஞானி நம்மாழ்வார் அவர்களையே தனது குலசாமியாக வணங்குபவர். அவர் சென்ற மார்ச் 11 அன்று சென்னை வந்து இருந்தார். அப்பொழுது அசோக் நகர் ஹாட் சிப்ஸ்சில் அவரை சந்தித்தேன். அது என்னுடைய வாழ்நாளில் ஒரு பொன் நாள் என்று சொல்லலாம். அவர். மிகுந்த மன வருத்ததுடன் சிலவற்றை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.


MNC கம்ப்பனிகள் கொடுக்கும் ரசாயன கலவைகள் அடங்கிய விதையை விவசாயிகள் நட்டால் தான். அரசாங்கம் மூலம் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய மானியம் கிடைக்கும். நமது நாட்டில் விளையும் விளை பொருட்களின் விதையை விலை கொடுத்து. அந்த தானியங்கள் எதுவுமே விளையாத வெளி நாட்டு காரர்களிடம் நாம் வாங்க வேண்டும். இந்த கொடுமை வேறு எந்த நாட்டிலாவது நடக்குமா. அது விதை அல்ல. விஷம். 40, 50 லக்சம் செலவு செய்து இன்று ஒவ்வொருவரும் மருத்துவர் ஆகிறார்கள். அவர்களுக்கு வருமானத்தை அதிகம் ஏற்படுத்தி தர. உயிர் காக்கும் மருத்துவர்களை காக்கும் ஒரு நடவடிக்கையாக அரசாங்கம் செய்வதாக தான் நாம் இதை நினைக்க வேண்டும்.


பின் குறிப்பு- இது வஞ்சக புகழ்ச்சி அணி.

எந்த அரசாங்கம் வந்தாலும் இது மாற போவதில்லை. ஆனால்? எதுவும் என்றாவது ஒரு நாள் மாறும் என்னும் நம்பிக்கையில் நாம் ஆறுதல் அடைவதை தவிர வேறு வழியில்லை.

 கியூபா ஒரு கம்யூனிச நாடு என்பது உங்கள் அனைவருக்குமே தெரியும். அந்த கம்யூனிச நாடு தான். நமது பாரம்பரிய சித்த  மருத்துவத்தை காத்து கொண்டு இருக்கிறது என்பது. உங்களில் எவ்வளவு பேருக்கு தெரியும்.  அது மட்டுமா. அங்கே . நுறு சதவீதம் இயற்க்கை முறையில் விவசாயம் நடக்கிறது. அணைத்து கல்லுரி மாணவர்களும். ஒரு நாளைக்கி இரண்டு மணி நேரம் விவசாயம் கண்டிப்பாக செய்ய வேண்டும்.

 அமெரிக்கா உட்பட பல நாட்டாமை நாடுகள் கியூபா மீது பொருளாதார தடை விதித்தும். உலக அரங்கில் ஒரு வல்லரசாக மட்டும் அல்ல. நல்லரசாகவும் தலை நிமிர்ந்து கியூபா நிற்கிறது. அந்த பொருளாதார தடைகளால் கரன்சி விசயத்தில் பிரச்சனை வந்த பொழுது. பழைய பண்டம் மாற்றும் முறையை சில ஆண்டுகள் அவர்கள் கடை பிடித்தனர். பிரேசில் நாடு. கியூபாவிற்கு பெட்ரோல்லை கொடுத்து அதற்கு பதிலாக எதை  பெற்று கொள்கிறது தெரியுமா. சித்த  மருத்துவத்தை.


கேடி அரசாங்கம் கூன் பாண்டியர்களின் ஆதரவோடு நிலம் கையகபடுத்தும் சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி விட்டது. ஆனால். அதை செயல்படுத்த முடியாது. அது வேறு விஷயம்.

 அரசியல் வாதிகள் பசித்தால் சோறு தின்பார்களா. இல்லை அமெரிக்க டாலர்களை தின்பார்களா.


அரசியல் வியாதிகளை நாம் மாற்றுவதும். அத்தகைய வியாதிகளை ஆதரிக்கும் கோடான கோடி மன நோயாளிகளை நாம் மாற்றுவதும் கஷ்ட்டம். ஆனால்? நாம் அதற்கு பதிலாக உணவு முறையை மாற்றி கொண்டால் பிரச்சனை இல்லை. ஒரு சதவீதம் கூட ரசாயன கலவை இல்லாத ஒரே உணவு உலகில் கேழ்வரகு மட்டுமே. ஏன்?





கேழ்வரகுக்கு உரம் போட்டால்தான் ஆபத்து. வேகமாக செடி உயர வளர்ந்து, கதிர் மட்டும் சிறுத்து, விதை குறைந்துபோகும். இயற்க்கை , செயர்க்கை என்று எந்த உரமும் கேழ்வரகிற்கு போட முடியாது. அதனால் MNC கம்ப்பனிகளின் பாட்ஷா, படையப்பா எதுவுமே கேழ்வரகிடம் பலிக்காது. கேழ்வரகில் அடங்கியுள்ள Calcium. பாலில் உள்ளதை விட மூன்று மடங்கும். அரிசியில் உள்ளதை விட பத்து மடங்கும் அதிகம்.

கேழ்வரகில் 'மித்தியானைன் [Methionine] எனும் ஒரு முக்கிய அமினோ அமிலம் இருப்பது இதன் கூடுதல் சிறப்புக்குக் காரணம். தனியாக இந்த 'மித்தியானைன்’ புரதம் குறித்த ஆய்வுகள் இப்போது கொடிகட்டிப் பறக்கின்றன. வயோதிகத்தைக் கட்டுப்படுத்தவும், தோல், நகம், முடியின் அழகைப் பேணவும் இந்தப் புரதச் சத்து மிக அவசியம். இந்த 'மித்தியானைன்’ அதிகம் உள்ள ஒரே தானியம் கேழ்வரகு மட்டும் தான். ஈரலில் படியும் கொழுப்பை விரட்ட இந்த 'மித்தியானைன்’கொண்ட கேழ்வரகு பெரிதும் உதவும். அதற்காக நாளைக்கே கடைக்குச் சென்று, இந்த 'மித்தியானைன்’ கேப்சூல்ஸ் இருக்கிறதா என்று தேடாதீர்கள். தனியாக 'மித்தியானைன்’ புரதத்தை மட்டும் பிரித்துச் சாப்பிட்டால், ஒரு சில ஆபத்துகள் நேர வாய்ப்புகள் உண்டு என்று சொல்கின்றன ஆய்வுகள். ஆதலால், மொத்தமாக 'மித்தியானைன்’ உள்ளடக்கிய கேழ்வரகை, கூழாக, அடையாக, தோசையாகச் சாப்பிட்டுப் பழகுங்கள்.

இப்பொழுது நான் தினமும் மத்தியம் கேழ்வரகு அடை தான் உண்கிறேன். இரவில் சப்பாத்தி. அரிசி உணவை பண்டிகை காலங்களில் மட்டுமே உண்கிறேன். நீங்களும்.  ஒரு வேளை கேழ்வரகை. கஞ்சி, கூழ், இட்லி, தோசை, அடை என்று ஏதேனும் ஒரு formமில் உண்ணலாம்.

 கேழ்வரகை விட ஓட்ஸ் மூன்று மடங்கு விலை அதிகம். கேழ்வரகிலோ. ஓட்ஸ்சை விட மூன்று மடங்கு சக்துகள் அதிகம். நமது நாட்டிலேயே. சக்தான தானியங்கள் விளையும் பொழுது. அதை விட சக்த்து குறைவாகவும், விலை அதிகமாகவும் உள்ள அன்னிய உணவு நமக்கு எதற்க்கு.

மூட்டு வலி முதல் ஆண்மை குறைவு வரை. அனைத்திற்கும் கேழ்வரகு உணவு. மிக சிறந்த மருந்து.

நாளை. புற்று நோய். Cancer நோய்க்கு உரிய தீர்வை பாப்போம்.

Wednesday, 15 April 2015

எலும்பு தேய்மானம். [Arthritis] க்கு தீர்வு.


இன்றைய பெண்மணிகள் 30, 35 வயதை தாண்டினாலே.  எலும்புகள் தேய ஆரம்பித்து விடுகிறது. எலும்பு தேய்மானம் இப்பொழுது ஆண்களிடையேயும் அதிகரித்து வருகிறது.   இன்றைய உணவு முறை, வாழ்க்கை முறை ஆகியவையே அதற்க்கு   காரணம்.  கால்சியம் சக்துக்கள்  எந்த, எந்த உணவுகளில் அதிகம் இருக்கும் என்பது உங்களுக்கே தெரியும். கீரை வகைகள், பால், கம்பு, சோளம் போன்ற தானிய வகைகள்,பப்பாளி  பழம், முள்ளங்கி போன்றவை  அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். தினமும் வெள்ளை மலை பூண்டை. ஒரு 30 இல் இருந்து 50 கிராம். பாலில் போட்டு. சுண்ட காய்த்து  குடித்தால். எலும்புகள் எந்த வயதிலும். அதன்  வலிமையை இழக்காது.  கண் கெட்டபின்  சூரிய நமஸ்காரம் என்பது போல் அல்லாமல். இதை  இன்றிலிருந்தே செய்யுங்கள். எலும்பு தேய்மானம் அடைந்தாலும். நீங்கள். அதற்கு  தகுந்த உணவுகளை எடுத்து கொண்டு. தேய்ந்த  எலும்புகளை  Replace  செய்வதற்கு  என்றே பிரத்யேகமாக சில யோகாசனங்கள் இருக்கிறது. ஒரு நல்ல யோகா  ஆசிரியரிடம். அவற்றை கற்று கொண்டால். பிரச்சனை  இல்லை.

 ஒரு நல்ல பைக், கார்  நாம் வாங்கி. அதை  உபயோகப்படுத்தாமலேயே  இருந்தால் என்ன ஆகும். மனித உடலும் ஒரு வண்டி  தான். தனக்கு தானே பெட்ரோல், டிசல் போட்டு. தன்னை தானே சர்வீஸ் செய்து கொள்ளும் எந்திரம்  மனித எந்திரம். வண்டியை நாம் ஓட்டும் பொழுது மட்டும் தான். நாம் அதற்கு பெட்ரோல், டிசல் அல்லது எரிவாயு என்று ஏதேனும் ஒரு தீனி கொடுப்போம். ஆனால்? மனித எந்திரம். வேலை செய்தாலும், எந்த வேலையும் செய்யாமல் புடிச்சி வெய்த்த  பிள்ளையார் மாதிரி 24 மணி நேரமும் ஒரே இடத்தில உட்கார்ந்து இருந்தாலும்.சாம்பார், ரசம், தயிர் என்று முன்று ரவுண்டு  புல் மீல்ஸ் சாபிட்டால் ஆரோக்கியம் என்ன ஆகும். நிங்கள் என்ன வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால்  அதற்க்கு  தகுந்த வேலையை உடலுக்கு  கொடுக்காமல் விட்டால். அந்த உணவுகள் செரிக்கப்படாமல் கெட்ட  கொழுப்பாக மாறும். அதன்  மூலம். நமது உடலில் உள்ள திசுக்களும், எலும்புகளும் பலவீனமாக ஆகும். தினமும் யோகா அல்லது உடற் பயிற்ச்சி . முடிந்தால் இரண்டையுமே செய்யுங்கள். ஆரோக்யமாக வாழுங்கள்.  

 ஊனினை  உருக்கி உள்  ஒளி  பெருக்கி.

  மாணிக்க வாசகர்.

  இன்று நாம் உண்ணும் உணவு அனைத்துமே ரசாயனங்களின் கலவை. ஒரு சதவீதம் கூட  ரசாயன கலவை கலக்காத சக்த்தான  உணவு இருக்கிறதா. இருக்கிறது. அதை  நாம் நாளை பார்ப்போம் .

Monday, 13 April 2015

இனிப்பான மருந்து. நீர் கடுப்பு நோய்யை குணப்படுத்தும். சக்கரைக்கு மாற்று.


சக்கரைக்கு மாற்றாக. வெறும் சுவை மட்டும் அல்லாது. ஆரோக்கியத்தையும் தரும் ஒன்று.      நீர் கடுப்பு நோய்க்கு சிறந்த மருந்தாகும் ஒன்று. இவ்வளவு மருத்துவ குணங்கள் இருந்தும். தித்திக்கும் சுவையோடு உள்ள மருந்து. இந்த ஒன்றே ஒன்று தான். அது என்ன?. அது தான் பனங்கர்கண்டு. இதில் அடங்கியுள்ள சக்த்து பட்டியலை பார்ப்போம். 







Nitrogen (N)
202
NA
NA
NA
10
0
Phosphorus (P)
79
7
4
2
3
0
Potassium  (K)
1,030
1
52
234
65
2.5
Calcium (Ca)
8
1.5
6
67
24
6
Magnesium (Mg)
29
1
2
14
7
1
Sodium (Na)
45
1
4
9
2
1
Chloride (Cl)
470
NA
NA
NA
16
10
Sulfur (S)
26
NA
NA
NA
13
2
Boron (B)
0.6
NA
NA
NA
0
Zinc (Zn)
2
0.2
0.2
4.2
.2
0.1
Manganese (Mn)
0.1
0.1
0.1
3.3
.2
0
Iron (Fe)
2
1
0.4
1.2
1.26
0.1
Copper (Cu)
0.23
0.1
0
0.1
0
0
Thiamine
0.41
0
0
0
0
0
Vitamin C
23.4
0.5
0.5
0
0
0




 பனங்கர்கண்டு.  உங்கள் வீட்டில் சளிக்காக  கஷாயம் போடும் பொழுது.  வால் மிளகு, கண்டம் திப்பிலி, அதி மதுரம், சித்ரத்தை போன்ற மூலிகை பொருட்களோடு. பனங்கர்கண்டையும் போடுவார்கள். இது பனை மரத்திலிருந்து கிடைப்பதாலும். கர்க்கண்டை போன்ற தோற்றம் மற்றும் சுவையில் இருப்பதாலும். இதற்க்கு பனங்கர்கண்டு என்று பெயர் வந்தது. இந்த பனங்கர்கன்டை மிக்ஸீயில் பொடித்து சக்கரைக்கு மாற்றாக பயன் படுத்தலாம். ஒரு கிலோ சக்கரையின் விலை 36 என்றால். இது ஒரு கிலோ 80 முதல்   400 ரூபாய் வரை.  ஆனால்? 100 கிராம் சுகர் ஃப்ரீ 90 ரூபாய் கொடுத்து வாங்குவதற்கு. இதை ஒரு கிலோ 80 ரூபாய் கொடுத்து வாங்குவது எவ்வளவோ மேல். 2 ஸ்பூந் சக்கரையில் கிடைக்கும் இனிப்பு. ஒரு ஸ்பூந் பனங்கர்க்கன்டில் கிடைக்கும்.  மேலும் இதில் Rich Iron, Cacium சக்த்துக்கள் அடங்கி உள்ளது. 

நீர் கடுப்பு. [ Urinary Infection]  நோய்க்கு சிறந்த மருந்து. 


 இதை சக்கரை வியாதி உள்ளவர்கள் தான் பயன் படுத்த வேண்டுமா.

 இல்லை. சக்கரைக்கு மாற்று தான் இது. யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இதன் மூலம் உடலில் கெட்ட சக்கரையின் அளவு ஏறவே ஏறாது. எங்கள் வீட்டில். நாங்கள் அனைவருமே பனங்கர்கண்டிர்க்கு மாறிட்டோம். 

 நாளை தமிழ் புத்தாண்டிற்க்கு வாங்க வேண்டிய ஐட்டங்களில் பனங்கர்கண்டும் இருக்கும் என்று நினைக்கிறேன். 

 அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். 

 நாளைய பதிவு-  பொதுவாக இன்று பல பெண்மணிகளுக்கு 30 வயதை தாண்டினால் மூட்டு வலி வருகிறது. அதற்க்கான தீர்வு.