siddhas

Thursday, 9 April 2015

ரத்த அழுத்தம் போக்கும் மூலிகையும், தியானமும். அனைவருக்கும் ஏற்றது.



இதற்க்கு முன் ஆரோக்யம் சம்பந்தமாக நீயா, நானாவில் விவாதம் நடந்த பொழுது. ஒரு பெண்மணி பேசினார். என் வீட்டு காரருக்கு சுகர் இருக்கு. ஆனால் அவர் சந்தோசமா ஒரு கிலோ பாதாம் அல்வாவ சாப்ட்டால் கூட அவரை அது ஒன்னும் பண்ணாது. [இது சிரிக்க மட்டும்] விஷம் என்று தெரிந்தே ஒருவன் பயப்படமால் சிரித்து கொண்டே சாப்பிட்டால். அவன் சாகாமல் இருப்பானா. bp என்பது சக்கரை வியாதி போல் அல்ல. தினமும் கோங்ரா சட்னியை ஆந்திரா ஸ்டைல்லில் சாப்பிட்ட பலர் bp இல்லாமலே பல ஆண்டுகள் வாழ்ந்து இருக்கிறார்கள். bp க்கு 90 சதவீத காரணம். நமது மனக்கவலையும், கோபமுமே. உப்பும், காரமும் 10 சதவீதமே. ஆனாலும். உணவில். அளவோடு உப்பு, காரம் சேர்த்து கொள்வது நல்லது. 

பூமராங் என்று அக்கலாதில் ஒரு வகை ஆயுதம் இருந்ததாம். அதை கொண்டு நாம் எதிரியை தாக்கினால். அது எதிரியை தாக்கி விட்டு. நமது கைக்கே மீண்டும் வரும். அதே போல். ஜெட்டி, பனியனில் ஆரம்பித்து. மூலிகை மருந்துகள் வரை. அனைத்தும் இங்கிருந்து வெளி நாடு போய். மீண்டும் நமக்கே திரும்ப வருகிறது. 

 ரத்த அழுத்தத்திற்கு நாம் அன்றாடம் உணவும்  முக்கிய உணவுகளே மருந்தாக இருக்கிறது. தினமும் வெள்ளை பூண்டும், வெள்ளை வெங்காயமும் சேர்த்து கொள்பவர்களுக்கு. bp வருவதற்கான வாய்ப்பு குறைவு. அவ்வாறு சேர்த்தும் bp வந்தால். அதற்க்கு காரணம் மன கவலை. 

  இது வெய்யில் காலம் வேறு. தினமும் வெள்ளை வெங்காயத்தை துண்டு, துண்டாக நறுக்கி. அதை கெட்டி தயிரில் போட்டு. தயிர் பச்சடி செய்து சாப்பிடுங்கள். உடல் சூடு, ரத்த அழுத்தம் இரண்டையும் குறைக்கும். வெள்ளை பூண்டை பச்சையாகவும் சாப்பிடலாம். அதை பசும் பாலில் போட்டு. சுண்ட காய்ச்சியும் சாப்பிடலாம். அதுவும் உடற் பயிற்ச்சி செய்பவர்களுக்கு. பூண்டு பால். ஒரு மிக சிறந்த ஊட்ட சக்த்து பானம். வாழை தண்டு, முள்ளங்கி ஆகியவையும் ரத்த அழுத்த்தை கட்டுப்படுத்த உதவும். நெல்லிக்காய் ரத்த அழுத்தத்திற்கு மிக, மிக சிறந்த மருந்து. இதை காலையில் மட்டும் தான் உண்ணவேண்டும். காலையில் நெல்லிக்கனி அமிர்தம். இரவில் நஞ்சு. 


 கற்பூறவல்லி என்னும் மூலிகை. நமது ரத்த அழுத்தத்தை சீராக வெய்க்கும். கற்பூறவல்லியை அப்படியே சாப்பிடலாம். தேனில் ஊர வெய்த்தும் சாப்பிடலாம். அடிக்கடி சளி தொல்லையால் அவதிப்டுபவர்களுக்கு கற்பூறவல்லி மிக சிறந்த நிவாரணி. ஒரு ஐந்து இலைகளை சாப்பிட்டால் போதும். பீட்ரூட்டும் ரத்த அழுத்தத்திற்க்கு நல்லது. ஆனால் பலருக்கு சக்கரை வியாதி வந்து. அதன் இலவச இணைப்பாக Bp வருவதால். பீட்ரூட் சரிப்பட்டு வராது. 

 மன அழுத்தத்தின் மறு வெளிப்பாடே ரத்த அழுத்தம். அதுவும். Bp அதிகம் உடையவர்களுக்கு படுத்தவுடன் தூக்கம் வராது. அதற்கான காரணம் என்ன தெரியுமா. 

 நீங்கள் பைக்கில் வந்து கொண்டு இருக்கிறீர்கள். மெயின் ரோட். வண்டி இறைச்சலுக்கு நடுவில் காதை கிழிக்கும் அளவு லௌட் ஸ்பீக்கர் இரைச்சல் வேறு. அந்த இடத்திலிருந்து உங்கள் வீட்டிற்கான தூரம். ஒரு மைல் என்று வெய்த்து கொள்வோம். நீங்கள் மூன்று நிமிடங்களில் அந்த இடத்திலிருந்து உங்கள் வீட்டிற்க்கு வந்து விடுகிறீர்கள். வீட்டிற்க்கு வந்தவுடன் எவ்ளவு அமைதியாக உணர்வீர்கள். நமது மனத்தை மூன்று பகுதிகளாக மனோ தத்துவ வல்லுநர்கள் பிரித்து உள்ளனர். 

 உள் மனம், வெளி மனம், ஆழ் மனம். வெளி மனம் என்பது கடல் அலை போல் ஒரே இரைச்சல். அதை குறிக்கும் விதமாக தான் அலைபாயும் மனம் என்றார்கள். உள் மனம் என்பது நடு கடல் போன்ற அமைதி. ஆழ் மனம். ஆழ் கடல் போன்றதொரு அமைதி. 

ஆழ் மன தியானத்தை நீங்கள் உறங்க போகும் முன் செய்தால். உங்களுக்கு தூக்கம் சீக்கிரம் வரும். ரத்த அழுத்த அளவை வெகு விரைவில் கட்டுக்கு கொண்டு வரும். இதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். சிறுவர் முதல் பெரியவர் வரை. இது வெறும் ஆழ் மனத்தை நீங்கள் நினைத்து செய்யும் தியானம் மட்டும் அல்ல. ஆழ் மன பயணம் என்றும் சொல்லலாம். 

 நீங்கள் உறங்கும் முன். உங்களது ஆழ் மனத்தை கற்ப்பனை செய்து கொள்ளுங்கள். முடிந்தால். அதனுள் நீங்கள் பயணம் செய்வதை போல் உணருங்கள். எவ்வளவு? நேரம் இந்த தியானம் செய்ய வேண்டும் நீங்கள் தியானம் செய்கிறீர்கள் என்பதையே மறந்து தூங்கும் வரை. படுத்தவுடன் தூக்கம் வர மூன்று, நான்கு மணி நேரம் மேல் ஆகிறவர்களுக்கு. இதை செய்தால். படுத்த அரை மணி, ஒரு மணியில் தூக்கம் வரும்.  ஒரு மணி நேரம் ஆகிறது என்றால். ஐந்து, பத்து நிமிடங்கள். படுத்த அடுத்த நிமிடமே தூங்கும் அளவு மன நலன் நன்றாக இருப்பவர்கள் இதை செய்தால். அவர்கள் உடலில், மனத்தில் உள்ள புத்துணர்ச்சி இன்னும் அதிகரிக்கவே செய்யும். கடிமான உடற் பயிற்சியின் மூலம். பலவீனமாக உள்ள ஒருவன் கூட பயில்வான் ஆவான் என்றால். இயற்கையாகவே பயில்வான் போன்ற உடல் அமைப்பு உள்ளவன் உடற் பயிற்ச்சி செய்தால். இந்த தியானமும் அதே போல் தான். சரி. ஆழ் நிலை தியானத்தை எவ்வாறு செய்வது. 

கீழே   உள்ள இந்த படத்தை பாருங்கள். 



 இது தான் உங்கள் ஆழ் மனத்தின் புகைப்படம். இதை மட்டுமே நீங்கள் கண்ணை மூடி கொண்டு நினைக்க வேண்டும் நிமிர்ந்து படுக்க வேண்டும். மூச்சை மென்மையாக இழுத்து மென்மையாக விட வேண்டும். 

 நாளை அல்சர் நோய்க்கு உரிய மூலிகைகளை பார்ப்போம். 

Wednesday, 8 April 2015

Bp க்கு பை, பை சொல்வது எப்படி.




  

நீங்கள் எந்த மருத்துவரிடம் வேண்டுமானாலும் கேளுங்கள். அவர் ஆங்கில மருத்துவரோ, சித்த மருத்துவரோ, ஆயுர்வேத மருத்துவரோ எந்த மருத்துவராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அந்த மருத்துவர் BP யை கட்டுப்படுத்த கூறும்  அறிவுரைகள் இரண்டு. கோபத்தை கட்டுப்படுத்துங்கள், கவலை படாதீர்கள். 

 நாம் அனைவருமே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறோம். எவனாவது என்னால் கவலையே பட முடியவில்லையே என்று கவலை படுவானா.  கவலை எதனால் ஒரு மனிதனுக்கு வருகிறது. நாம் எரிச்சல் அடைய வேண்டும், கோபப்பட வேண்டும் என்பதற்காகவே சிலர் நம்மை வெறுப்பேற்றுவதை போல் பேசுகிறார்களே. அப்பொழுது எவ்வாறு? கோபப்படாமல் இருக்க முடியும். 


 ஒரு முறை புத்தர் ஒரு கிராமத்திற்க்கு சென்றார். அந்த ஊர் மக்களும் மற்றும் அவர்களின் தலைவனும் உலகில் எவ்வளவு கெட்ட வார்த்தைகள் உண்டோ, அத்தனையையும் பயன் படுத்தினர். புத்தரும் அவருடைய ஐந்து சீடர்களும் அதற்க்கு துளி கூட கோபப்படாமல் மலர்ந்த தாமரை போன்ற மந்திர புன்னகை செய்தார்கள். அந்த மந்திர புன்னகையில் சந்திர, சூரியர்களும்  நட்ஷத்திரங்களும் தெரிந்தன. 

 இவ்வளவு கேவலமாக பேசியும் எப்டிடா நீங்க யாரும் கோபமே படாமல் இருக்கீங்க. உங்களால கெட்ட வார்த்தைக்கு உண்டான மரியாதை போச்சேடா என்று ஊர் தலைவன் அலுத்து கொண்டான். அதற்க்கு புத்த பகவான் சிரித்தவாறே. நாங்கள் இந்த ஊரிர்க்கு அருகில் உள்ள கிராமத்திற்கு போனோம். அந்த ஊர் மக்கள் எங்களை நன்கு வரவேற்றார்கள். அவர்கள் நிறைய இனிப்பு கொடுத்தார்கள். எங்களுக்கு இவ்ளவு இனிப்பு வேண்டாம் என்று நாங்கள் கொஞ்சமாக எடுத்து கொண்டு மீதியை அவர்களுக்கே திருப்பி கொடுத்து விட்டோம். அப்பொழுது அந்த இனிப்புகள் யார்க்கு? சொந்தம். 

 ஊர் தலைவன்- யார் கொடுத்தார்களோ அவர்களுக்கே சொந்தம். 

 புத்தர்- அப்படியானால். நீங்கள் திட்டிய எந்த கெட்ட வார்த்தைகளையும் நாங்கள் வாங்கி கொள்ளவே இல்லை. 

 இப்பொழுது நாம் ஷாப்பிங் செய்ய மார்க்கெட் அல்லது ஒரு மாலிற்கு போகிறோம் என்றால் கண்ணில் படுவது அனைத்தையும் வாங்கி விடுவோமா. அதில் பல நமக்கு தேவை இல்லாததாக இருக்கும். கண்ணில் படும் அனைத்தையும் நமது கை வாங்காது. அவ்வாறு இருக்க நமது காதுகளில் விழும் அனைத்து வார்த்தைகளையும் நமது மனம் எதற்க்காக வாங்க வேண்டும். இதை உணர்ந்தால் நீங்கள் சந்தோசம். ம்ஹ்ம். அதுக்கும் மேல. ஆனந்தம். ம்ஹ்ம். அதுக்கும் மேல. பேரானந்த நிலையில் இருப்பீர்கள். 

  நாம் கோபப்படும் சூழ்நிலை வந்தால்? நமக்கு வரும் கோபத்தை உடனே வெளி காட்டினால் கூட பிரச்சனை இல்லை. ஆனால் அதை அடி மனத்தில் அடக்கி வெய்த்தால் அதன் மூலம் உடலில் Preasure ஏறும். கோபப்பட்டாலும் உடலுக்கு கெடுதல். அதை அடக்கினால் அதை விட கெடுதல். வேறு என்ன? தான் செய்வது. மனம் ஒரு குரங்கு அல்லவா. குரங்கு குல்லா கதை போல். மனத்தை நாம் வேறு ஏதேனும் ஒன்றில் திசை திருப்ப வேண்டும். நமக்கு பிடித்த ஏதேனும் ஒன்றை பற்றி நினைக்கலாம். இயற்கையை ரசிக்கலாம், நல்ல நூலை வாசிக்கலாம், ஏதேனும் ஒன்றை பற்றி சிந்திக்கலாம்.  வேறு வழியே இல்லை. நாம் கோபத்தை முகத்திலும், குரலிலும் காட்டினால் தான் வேலை ஆகும் என்னும் சூழ்நிலை வந்தால் ஸிநிமா நடிகரை போல் கோபப்படுவதை போல் நடிக்க வேண்டும். நாம் பதில் அடி கொடுக்கும் சூழ்நிலை வந்தால் கூட. அன்பே சிவம் படத்தில் கமல் எவ்வாறு சிரித்தவாறே மாதவனுக்கு பதில் அடி கொடுப்பாரோ. அந்த ஸ்டைல்லில் கொடுக்க வேண்டும். 

அடக்கு, அடக்கு என்றால் மனம் வீறு கொண்டு எழும் என்கிறார் வேதாத்திரி மஹரிஷி. இந்த உபதேசம் நம்மை போன்ற சாதாரண மனிதர்களுக்காக மஹரிஷி சொன்னது. உண்மை ஞானிகளுக்கு இது பொருந்தாது. மனத்தில் நமக்கு தீய எண்ணங்களோ, தேவையில்லாத கவலையோ வந்தால் அதை அடக்க வேண்டும் என்று நாம் முயற்சிப்போம். அப்பொழுது. நம்மையே அறியாமல் நாம் அதையே திரும்ப, திரும்ப நினைப்போம். அது ஆபத்து அல்லவா. அது போன்ற எண்ணங்கள் நம்மை அறியாமலேயே வரும் பொழுது. அதை நல்ல பயனுள்ள ஏதேனும் ஒன்றை சிந்தித்தோ, செய்தோ திசை திருப்புங்கள். 

 உங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு மஹான். ராகவேந்திரர், ஷீரடி பாபா போன்ற ஞானிகளின் படங்கள் முன் அமர்ந்து அவர்களது கண்களையே சில நிமிடங்கள் பார்க்கலாம். உங்களுக்கு பிடித்த நூல்களை படிக்கலாம். இவ்வாறு மனத்தை திசை திருப்ப பல வழிகள் இருக்கிறது. 

 கோபத்தை பயத்தின் ஆண் பால் என்று சொல்கிறார் ஓஷோ. தண்ணி, நீர். இரண்டு வார்த்தைக்கும். அர்த்தம் ஒன்று தானே. அதே போல் தான். கவலையும், பயமும். உங்களுக்கு BP வருவதற்கான முக்கிய, மூல காரணமே கவலை தான். BP வந்ததை நினைத்து நீங்கள் மேலும் கவலைப்பட்டால் அதன் மூலம் நீங்கள் என்ன தான் அதற்குரிய மருத்துவம் எடுத்து கொண்டாலும், உங்களுக்கு அது கூடுமே ஒழிய குறையாது. 


 சுக்கி சிவம் அவர்கள். எப்போதும் சந்தோசம் என்னும் நூலில் ஒரு சுவையான, அருமையான சம்பவத்தை குறிப்பிடுகிறார். 

 சோவியத் நாட்டில் வாழ்ந்த மிகப்பெரிய மனோ தத்துவ மேதை பாவ்லாவ் என்பவர். அவர் ஒரு பூனையை பிடித்து வெய்த்து ஆராய்ச்சி செய்தார். பூனைக்கு வயிறார உணவு கொடுத்து விட்டு. அந்த உணவு அதனுடைய வயிற்றில் எவ்வாறு ஜீரணிக்கப்படுகிறது என்பதை பற்றிய ஆராய்ச்சியை அவர் மேற்கொண்டார். பூனையை Xray கருவி மூலம் பரிசோதித்த பொழுது உணவு உள்ளே போனதும் செரிமானத்திற்கு தேவையான அமில வகைகள், சாறுகள். அதன் குடலில் உருவாகி பெருகுவதை பார்த்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக அவர் வளர்க்கும் முரட்டு நாய் ஒன்று அறையிலிருந்து வெளியே வந்து. பூனை மீது பாய பார்த்தது. பாவ்லாவ் அந்த நாயை தடுத்து. அதை அறைக்குள் பூட்டினார். அதன் பிறகு என்ன? ஆயிற்று தெரியுமா. 

அந்த பயத்தின் பாதிப்பால். ஜீரண வேலைகள் பூனையின் உடலில் அப்படியே நின்று போனது. அதன் குடலில் ஜீரணத்திற்க்கு தேவையான அமிலங்களும், சாறுகளும் ஆறு மணி நேரம் கழித்து தான் மீண்டும் சுரக்க ஆரம்பித்தது. அதற்க்குள் அதன் வயிற்றில் உள்ள உணவு. செரிக்க படாமல் கட்டியாகி, கொடிய நஞ்சாகவே மாறி விட்டது. 

 பாவ்லாவ் பூனையின் உடலில் ஜீரணம் எவ்வாறு ஆகிறது என்பதற்க்கு செய்த சோதனைக்கு பைரவர் புண்ணியத்தில் கிடைத்த ரிஸல்ட். 

 மனித உடல். கவலை, அச்சம், கோபம் முதலியவற்றால் என்ன, என்ன பாதிப்புகள் அடைகிறது. 

  நீங்கள் கவலைப்படுவதால் உங்கள் பிரச்சனைகள் தீரும் என்றால் தாராளமாக கவலை படுங்கள். கவலைப்படுவதால் பிரச்சனைகள் தீர போவதில்லை. பின்னர் எதற்க்காக? நீங்கள் கவலைப்பட வேண்டும். 
பிரச்சனைகளுக்கு கவலைப்படாமல் அதை எவ்வாறு தீர்ப்பது என்று தீர்க்கமாக, ஆழமாக சிந்திக்க வேண்டும். தீர்க்க முடியாத பிரச்சனையாக இருந்தால் அதை ஏற்று கொள்ளுங்கள். பிரச்சனை எங்கு தான் இல்லை. மூச்சு திணற, திணற 30 பக்கத்துக்கு நான் ஒரு போஸ்ட் போடறேன். நீங்களும் அதை பொறுமையா படிக்கறீங்க இல்ல. நான் கூட ஒரு பிரச்சனை தான். 

 நமது கண்களில் படுவதையெல்லாம் நமது கைகள் வாங்காத பொழுது. நமது காதுகளில் விழுவதை நமது மனம் ஏன்? வாங்க வேண்டும். உங்களுக்கு கோபம், கவலை வரும் பொழுது இந்த மந்திரத்தை உங்கள் மனதிற்க்குள் எவ்வளவு சொல்ல முடியுமோ அவ்வளவு சொல்லுங்கள். 

நாளை Bp யை குணப்படுத்தும் மூலிகைகளை பற்றி பார்ப்போம்.  

Tuesday, 7 April 2015

தேங்காய் பூலோகத்தின் கற்பக விருட்சம்




தேங்காய் சமையலில் சேர்த்து கொள்ளவே கூடாது என்னும் தேங்காய் மடையர்களின் சொல்லை பொருட்படுத்தாமல் தினமும் சமையலில் தேங்காய் சேர்த்து அதன் மூலம் பள, பள தோலுடன் தள, தளவென்று இளமையாக இருக்கும் மலையாள மக்களுக்கு நான் இந்த பதிவை சமர்பிக்கிறேன். நேற்று நெய் புராணம் பார்த்தோம். இன்று தேங்காய் புராணம் பார்ப்போம்.
சக்கரை வியாதி உள்ளவர்கள் தேங்காய் சேர்த்து கொள்ள கூடாது என்பது சரி தான். ஆனால் சிறு குழந்தைகளுக்கு கூட தேங்காய்யை கண்ணில் காட்ட கூடாது என்று சொல்பவர்களை தான் நான் தேங்காய் மடையர்கள் என்று குறிப்பிட்டேன். பீட்ரூட், கேரட்டில் கூட சக்கரை உள்ளது. ஆங்கில மருத்துவ உலகினருக்கு தேங்காய் மீது மட்டும் why this கொலவெறி.
மனித உடலில் 13 Vitamins. Minerals and Trace Elements 14 இருக்கும். இவற்றில் ஏதேனும் ஒன்று கூடினாலும் குறைந்தாலும் பிரச்சனை தானே.
மிகவும் பலவீனமாக உள்ள ஒரு கல்லூரி மாணவன் நல்ல டாக்ட்டர் ஒருவரிடம் சென்றான். அவர் அவனுக்கு உடம்பு நன்றாக தேருவதற்க்கு ஒரு டானிக் எழுதி கொடுத்தார். அதை காலையில் ஒரு ஸ்பூந் நைட் ஒரு ஸ்பூந் சாப்பிட வேண்டும் என்று சொன்னார். அவன் உடலை விட மனம் பலவீனம். ஓவர் நைட்ல அர்னால்ட் ஆணும்னு எலி குஞ்சு மாதிரி இருக்கற அந்த பையன் ஒரு பாட்டில் டானிக்யும் ஜூஸ் குடிக்கற மாதிரி ஒரே மடக்கில் குடிச்சான். அதன் பிறகு என்ன நடந்து இருக்கும் என்பது உங்களுக்கே தெரியும்.
உணவும் அதே மாதிரி தாங்க. இப்போ நெய்னு எடுத்துண்டா அது என்ன. ஒரு டானிக். ஒரு நாளைக்கி ஒரு ஸ்பூந் சேர்த்துக்கலாம். கடினமான உழைப்பாளிகள். உடற் பயிற்ச்சி செய்பவர்கள் ரெண்டு ஸ்பூந் சேர்த்துக்கலாம். அதையே சோறு திங்கும் அளவு தின்று. தினமும் நெய்யில் பொறித்த பலகாரங்களை தின்று அதனால் நோய் வந்தால் அதற்க்கு காரணம் நெய் அல்ல. அசட்டு தனம், கிறுக்கு தனம்.
இன்று பல படித்த மேல் தட்டு குடும்பங்களில் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் உணவு. No Cocunut, No Oil, No Curd, No Ghee. சில வீடுகளில் No Milk also. அவ்வாறு உணவு கொடுத்தால் அந்த குழந்தைக்கு No Energy, No Power, No Stamina. ஆனால் குழந்தைகளுக்கு Noodles போன்ற குப்பை உணவுகளையும் கக்கூஸ் கழுவ நன்கு உபயோகப்படும் பெப்சி, கோக் போன்ற பானங்களையும் கொடுப்பார்கள். ஒரு குழந்தைக்கு பிடித்த உணவு, பிடிக்காத உணவு என்பது அந்த குழந்தையின் தாய் பழக்கப்படுத்துவதில் தான் இருக்கிறது. Noodles எப்பையாது உண்பதில் தவறில்லை. அதிலும் சக்த்துக்கள் இருக்கிறது. ஆனால் அது போன்ற அதிக சுவை மிகுந்த உணவுகளை விவரம் தெரிவதற்கு முன்பே ஊட்டி பழகினால் பின்னர் அதிக சக்த்து மிகுந்த கீரை போன்ற உணவுகள் குழந்தைகளுக்கு பிடிக்காமல் ஆகி விடும். அதனால் நீங்கள் சுவை மிகுந்த உணவுகளை முதலில் குழந்தைக்கு கொடுப்பதை விட சக்த்து மிகுந்த உணவுகளை கொடுத்து பழகுங்கள்.
எனக்கு இன்று வரை கீரை, பாகற்காய் போன்ற உணவுகள் பிடித்த உணவு. காரணம். எனது தாய் சிறு வயதிலேயே அதை கொடுத்து பழக்கினார். பீஸா, பர்கர் போன்ற உணவுகளின் சுவைகளை 12 வயதிற்கு மேல் தான் என் நாக்கு அறிந்தது. ஒழுங்காக சமைக்க தெரிந்தவர்கள் சமைத்தால் பாகற்காய் கசக்காது. கொழுப்பு என்பது என்ன. உடலில் இருக்க வேண்டிய சக்த்துகளில் அதுவும் ஒன்று. அந்த கொழுப்பு அதிகரித்தால் தான் வியாதி. கொழுப்பு சக்த்தே ஒருவரது உடலில் இல்லையென்றால் என்ன ஆகும் யோசித்து பாருங்கள். கொழுப்பு சக்த்துள்ள உணவுகளையே குழந்தைகளின் கண்ணில் காட்டாமல் வளர்ப்பது சரியா.
தேங்காய் உண்ணுவதன் மூலம் கிடைக்கும் நற்பலன்களை பார்ப்போம்.
1] வாழைப்பழம், ஆப்பிள்ளில் உள்ளதை விட அதிக ப்ரோடீந் தேங்காய்யில் உள்ளது.
2] தேங்காயில் உள்ள Fatty Acid. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கிறது
3] இதையம், சிறுநீரகம், கல்லீரல் குறைபாட்டிற்கு தேங்காய் மிக சிறந்த மருந்து.
4] புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன.
5] தேங்காய் பால் அல்சர்க்கு ஒரு மிக சிறந்த மருந்து. அதிக உடல் வலிமையை தர கூடியது
6] இளநீரை விட சிறந்த க்லூகோஸ் வாட்டர் உண்டா. அது வெறும் சக்தியை கொடுப்பது மட்டும் அல்லாமல் சக்தியை செரிக்கவும் உதவி புரிகிறது.
 7]வாதம், பித்தம், கபம் முதலான பல வியாதிகளுக்கு இளநீர் அரு மருந்து.
8]குடல் புழுக்களை இளநீர் அழிக்கிறது, காலரா நோய்க்கு நல்ல நிவாரணமும் அளிக்கிறது
9]ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவிற்க்கு சிறந்த மாற்று பொருளாக இளநீர் பயன் படுத்தப்படுகிறது.
10ரத்தத்தில் உள்ள நச்சு பொருட்களை அழிக்க இளநீர் பயன்படுகிறது
11] தாய்ப்பாலில் எந்த அளவு புரத சக்த்து உள்ளதோ. அதற்க்கு இணையாக இளநீரிலும் உள்ளது.

தேங்காய் எண்னை
தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களைக் குணப்படுத்துகின்றன. நாள்பட்ட தீராத புண்களுக்கு மருந்தாகத் தரப்படும் மத்தம் தைலம், தோல் நோய்களுக்கான கரப்பான் தைலம், வாத வலிகளைக் குணப்படுத்தும் கற்பூராதி தைலம், தலைக்குப் பயன்படுத்தப்படும் நீலபிரிங்காதித் தைலம், சோரியாசிஸ் நோய்க்குப் பயன்படும் வெப்பாலைத் தைலம், தலையில் உள்ள பொடுகுக்கு மருந்தாகும் பொடுதலைத் தைலம் ஆகிய தைலங்களில் தேங்காய் எண்ணெய்யின் பங்கு முக்கியமானது.

நாளை Bp நோய்க்கு உரிய மருத்துவத்தை பார்ப்போம்





Monday, 6 April 2015

மண்ணின் மைந்தன்



இன்று. மண்ணாசை கொண்ட ஒரு மாமனிதரின் பிறந்த நாள். இவர் மண்ணை பிடிப்பதில் ஆசைப்படவில்லை. மண்ணை காப்பாத்தற்கு ஆசைப்பட்ட தமிழ் மண்ணின் மைந்தன். என்னை போன்ற லட்ச கணக்கான இளைங்கர்கள் கும்பிடும் குலசாமி. யார் என்று உங்கள் அனைவருக்கும் தெரிந்து இருக்குமே. இயற்க்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அய்யா. இவர் உண்மையில் மறையவில்லை. பல லட்சம் மக்களின் மனங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.
இன்று மத்திய அரசாங்கம் மீத்தேன் திட்டத்தை கை விட்டு விட்டது. சூரியூர் கிராமத்தில் பெப்சி கம்பனி இழுத்து மூடப்பட்டு உள்ளது. இவற்றிற்க்கு எல்லாம் வித்திட்டவர் நம்மாழ்வார் அவர்கள். அவர் உடல் இந்த மண்ணை விட்டு மறையும் முன் தன்னை போன்ற ஆயிரக்கணக்கான நம்மாழ்வார்களை உருவாக்கி விட்டு மறைந்து உள்ளார். போபால் முதல் பிடி கத்தரிக்காய் வரை வரும் முன்னே எச்சரித்தவர் இவர்.
கத்தி திரைப்படத்தில் விஜய் சொல்லும் ஒவ்வொரு புள்ளி விவரமும் நம்மாழ்வார் அய்யா பல மேடைகளில் பேசியவை. உழவுக்கும் உண்டு வரலாறு போன்ற நூல்களில் எழுதியவை. இந்த திரைப்படம் இயற்க்கை விஞ்ஞானி நம்மாழ்வார்க்கு சமர்ப்பணம் என்று டைட்டில் காடில் போட்டு இருக்கலாம். எது எப்டியோ. அந்த திரைப்படம் ஓட்டு மொத்த சமுதாய ஊடகத்தையும் விவசாயம் பற்றி பேச வெய்த்தது மட்டும் அல்லாமல் மழைக்கு கூட பள்ளிக்கூடம் ஒதுங்காதவர்களையும் மீத்தேன் வாயு பற்றி சிந்திக்க வெய்த்தது. அந்த திரைப்படத்திற்கு பிறகு என் உறவினர்களில் சிலர் பெப்சி, கோக் குடிப்பதை விட்டனர். அதை பாராட்டியே ஆக வேண்டும்.
அடுத்து. neutrino திட்டத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மீத்தேன் போலவே இதுவும் ஊத்திக்க தான் போர்து. இதுல வேற நிலம் கையகப்படுத்தும் மசோதாவ நிறைவேற்றியே தீருவோம்னு கேடியும், வெங்காயமும் காமெடீ பண்ணிண்டு இருக்கு. இளைங்கர் சக்தி அதற்க்கு எதிராக இருக்கும் வரை உங்கள் ஆணவமும் சரி, ராணுவமே ஆனாலும் சரி. செல்லுபடி ஆகாது.
ஒவ்வொரு நெல்மணியும் நம்மாழ்வார் அய்யாவின் வரலாறு சொல்லும்.

நோய் தீர்க்கும் நெய்.

Add caption

சென்ற புத்தக கண் காட்சியில் எனது நண்பர் யுக பாரதியை சந்தித்தேன். அப்பொழுது நண்பர் யுக பாரதி அவர்கள் கூறினார். நெய் இல்லா உண்டி பாழ். நீர் இல்லா நெற்றி பாழ் என்று ஔவ்வையார் சொல்லியிருக்காங்க. நீர் இல்லா நெற்றி பாழ் என்பதை வேண்டுமானால் ஏற்று கொள்ளலாம். என் போன்ற பருமனான ஆசாமிகள் நெய் எடுத்து கொண்டால் ஆரோக்கியம் பாழ் என்றார். நான் அவரிடம் கூறினேன். அய்யா. நீர் இல்லா நெற்றி பாழ் என்பது வேண்டுமானால் அனைவருக்கும் பொருந்தாத ஒன்றாக இருக்கலாம். ஹிந்துக்களிலேயே வைஷ்ணவர்களில் பெரும்பாலானோர் திருநீர் இட்டு கொள்ளாதவர்கள் இருக்கிறார்கள். ஆனால் நெய் என்பது மத சின்னம் அல்ல. அது ஒரு அரு மருந்து என்று சொல்லி அங்கே நெய் புராணம் கூற ஆரம்பித்தேன். அடியேனது நெய் புராணத்திற்கு இயற்க்கை விஞ்ஞானி நம்மாழ்வார், டாக்ட்டர் அப்துல் ரஹீம், ஹீலர் பாஸ்கர் போன்றோர்களின் நூல்கள் உதவி புரிந்தன. 
1] உடலில் உள்ள கெட்டச் சத்துக்களை வெளியேற்றுகிறது,
2] கண் நிரம்புகளை பலப்படுத்துகிறது.
3] தசைகளை வலுப்படுத்துகிறது
4] நெய்யில் உள்ள விட்டமின் A, D, E,, K ஆகியவை உடலில் ரத்தத்ததை சுத்தப்படுத்தி ரத்த சுழற்சியை மேம்படுத்தும் மேன்மையான பணியை செய்கிறது.
5] வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை சமன் செய்து வயிறு மற்றும் குடல் பகுதியில் உள்ள மியூகஸ் லையனிங் பகுதியை வலுவாக்குகிறது.
6] நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
7] சர்ம பளபளப்பை தருகிறது.
8] அல்சர் நோய்க்கு நெய் மிக சிறந்த மருந்து.
9] நெய்யில் Saturated fat – 65%
Mono – Un Saturated fat – 32%
Linoleic – Un Saturated fat -3% உள்ளது.
10] சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேதம் இரண்டிலுமே நெய் மிக உயர்ந்த இடத்தில் இருக்கிறது.
11] அரபு தேசங்களை இஸ்லாமின் கீழ் ஒரே ஆட்சிக்கு அடிகோலிய ஹசரத் முகம்மது அவர்கள், பசுவின் பால் ஒரு மருந்து; அதன் நெய் அமிர்தம்; அதன் மாமிசம் ஒரு நோய்”
நெய் என்பது பாலின் தரத்தைப் பொறுத்து இருக்கிறது. கலப்படம் இல்லாத பால் ஒரு சாத்வீகமான, உடலுக்கும் மனதுக்கும் அமைதியைக் கொடுக்கும் உணவு.
ஆனால் தற்சமயம், நமக்குக் கிடைக்கும் பால் பரிசுத்தமானதா என்பது ஒரு கேள்விக் குறிதான். பால் அதிகம் கறக்க வேண்டும் என்று பசு மாடுகளுக்கு ஹார்மோன் ஊசிகள் போடுகிறார்கள். கால்நடை தீவனங்கள் ரசாயனக் கலவைகளால் ஆரோக்கியமானவையாக இருப்பதில்லை. இதனால் கறவை மாடுகளும் அவற்றின் பாலும் மிகவும் பாதிக்கபடுகின்றன.
நல்ல சுத்தமான பாலிலிருந்து தயாரிக்கப்பட்ட தயிர், மோர், நெய் முதலியவை நம் உடலுக்கு போஷாக்கைக் கொடுப்பதுடன் வியாதிகளைப் போக்கும் உணவுப் பொருட்களாகவும் இருக்கின்றன.
சுத்தமான நெய் எனப்படுவது வீட்டிலேயே காய்ச்சப்படும் நெய்.
வெண்ணெயைக் காய்ச்சும் போது, அதிலிருந்து நம் உடலுக்குத் தேவையான நல்ல பாக்டீரியாக்களை ஊக்குவிக்கும் என்சைம்கள் வெளிப்படுகின்றன.
அனைத்தையும் பொறுமையாக கேட்ட எனது நண்பர். அவருடைய குடும்ப டாக்ட்டர். நீங்கள் குண்டாக இருப்பதால் நெய்யை தவிர்க்க வேண்டும் என்று சொல்லியும் அவர் அப்பப்ப நெய் சேர்த்தார். அதனால் அவருக்கு ஒன்றும் ஆகவில்லை. அவருக்கு மிகவும் பிடித்த அவரின் ரோல் மாடலாக இருக்கும் ஒரு எழுத்தாளர். அவர் ஆரோக்கியம் பற்றி எழுதிய தனது புத்தகத்தில் நெய் சாப்பிட்டால் ரத்த குழாய்களில் கொழுப்பு படியும் என்று தனது நூலில் பயமுறுத்தி இருக்கிறார். அதை படித்ததில் இருந்து நண்பர் யுக பாரதிக்கு நெய் என்றால் பயம், வெண்ணை என்றால் பயம், தயிர் என்றால் பயம், பால் என்றாலும் பயம். நான் எனது நண்பருக்கு அது சம்பந்தமாக விளக்கம் கொடுத்தேன்.
நெய்யில் உள்ள வைட்டமின் K2 ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிவதை தடுக்கிறது. எனவே இதையத்திற்க்கு சிறந்தது என்றேன். மேலும் உங்களுக்கு சந்தேகமாக இருந்தால் இந்த நெய்யை வெய்த்து பூச்சாண்டி, பயாஸ்கோப் காட்டும் ஆங்கில மருத்துவர்களிடம் மூன்று கேள்விகளை கேளுங்கள்.
question Number 1. வைட்டமின் K2 வின் பணி என்ன. அதற்க்கு அந்த டாக்டர் விளக்கம் கொடுத்த பின்.
question Number 2. நெய்யில் வைட்டமின் K2 இருக்கிறதா, இல்லையா. இல்லை என்று பொய் சொல்ல டாக்டர்ரால் முடியாது. வேறு வழியில்லை. இருக்குனு தான் சொல்வார்.
question Number 3. நெய்யை தினமும் அரை ஸ்பூந், ஒரு ஸ்பூந் சாப்பாட்டுல சேர்த்து கொண்டால் அது உடலுக்கு நல்லதா. கெட்டதா.
ஆங்கில டாக்ட்டர்????...
நீங்க 3ர்ட் question ன first question னா கேட்டால் அந்த டாக்ட்டரிடம் இருந்து வரும் பதில் நோ. அவ்வாறு கேட்காமல் நான் கேட்பதை போல் கேட்டால். அந்த ஆங்கில டாக்ட்டர். அது வந்து. லிமிட்டா நெய் சாப்பிட்டா அது ஒன்னும் பெரிசா பண்ணாது தான். அப்டினு பதில் சொல்லுவாரு.
மேலும் எனது நண்பர் யுக பாரதியிடம் அதே டாக்ட்டர் ஹார்ட் அட்டாக் வராமல் இருக்க அசைவ உணவுகளை தவிர்க்குமாறும் நிச்சயம் கூறியிருப்பார். அசைவ பிரியரான நீங்கள் அதை கேட்டீர்களா.
யுக பாரதி- இல்லை.
ஒரு ஸ்பூந் நெய்யில் 14 கிராம் கொழுப்பு தான் உள்ளது. நீங்கள் சாப்பிடும் ஆடு, நண்டு, இறால், வஞ்சரம், கோழி இவற்றில் இருப்பதை விட அதிகமாகவா நெய்யில் கொழுப்பு இருக்கிறது. உங்க நெஞ்சை தொட்டு சொல்லுங்க. என்றேன். அவர் வாயிலிருந்து, இதையத்தில் இருந்து இல்லை என்று பதில் வந்தது. மேலும் அவர் இனி தினமும் மத்திய உணவில் ஒரு ஸ்பூந் நெய் சேர்த்து கொள்கிறேன் என்றும் அசைவ உணவை சற்று குறைத்து கொள்கிறேன் என்றும் சொன்னார்.
நான் அவரிடம் நிறைவாக. நீங்கள் அசைவம் சாப்பிடுவதும், சாப்பிடாததும் உங்கள் விருப்பம். ஆனால் நீங்கள் எந்த உணவை சாப்பிடுவதாக இருந்தாலும் அதை விருப்பத்தோடு, மகிழ்வோடு உன்ன வேண்டும். அப்பொழுது தான் அந்த உணவு செரிக்கும். நீங்கள் உண்ணும் உணவிற்க்கு தகுந்த வேலையை உடம்பிற்கு கொடுக்க வேண்டும். நீங்கள் எந்த எழுத்தாளரின் நூலை படித்தீர்களோ அதே எழுத்தாளரின் நூலை நானும் படித்தேன். அதன் பிறகு எனக்கு உடற் பயிற்சியின் மீது இருந்த காதல் அதிகரித்து விட்டது. நீங்களோ அவர் அதில் கூறிய நல்ல விசயங்கள் அனைத்தையும் விட்டு விட்டீர்கள். நெய் சமாச்சாரத்தை மட்டும் மிக கெட்டியாக பிடித்து கொண்டு விட்டீர்கள். நாளையிலிருந்து உடற் பயிற்ச்சி செய்ய ஆரம்பியுங்கள். இந்த புத்தக கண் காட்சியில் அனைத்து ஸ்டால்களிலும் நீங்கள் நடப்பதிலிருந்தே உங்கள் உடற் பயிற்ச்சி ஆரம்பம் ஆவதாக நினைத்து கொள்ளுங்கள் என்று கூறி விடை பெற்றேன்.

சுவாமியே சரணம் நெய்யப்பா.
நாளை தேங்காய் பற்றி பார்ப்போம்.

Sunday, 5 April 2015

சக்கரை நோய்க்கு உணவே மருந்து மருந்தே உணவு உடற் பயிற்சியின் அவசியம்.


 நேற்று நாம் சக்கரை நோய்க்கு மிக சிறந்த மருந்தான நில வேம்பு பற்றி பார்த்தோம். எனது முகநூல் நண்பர் மோசஸ் அவர்கள் சக்கரை நோய்க்கு மேலும் சில எளிய மருந்துகளை பற்றி கூறினார். அவற்றை நாம் பார்ப்போம். 
அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். உணவே மருந்து, மருந்தே உணவு. இதுவே பண்டை தமிழர்களின் சிறப்பு. ஆனால் அதை இன்றைய தலைமுறை தமிழர்கள் உணராததில் எனக்கு வெறுப்பு. சரி. மோசஸ் கூறிய மருத்துவ குறிப்பை பார்ப்போம்.
நூக்கல் 2 எடுத்து மிக்சியில் அரைத்து அதில் 5 ஆவாரம் பூக்களை அரைமணிநேரம் ஊரவைத்து குடிக்க வேண்டும். 5 வெண்டைக்காய்களை எடுத்து துண்டு துண்டாக நறுக்கி ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு இரவு ஊற வைத்து மறுநாள் காலை வெறும் வயிற்றில் அந்த தண்ணீரை மட்டும் குடிக்க வேண்டும்.
சக்கரை இனிக்கிற சக்கரை என்பது மாறி சக்கரை கசக்கர சக்கரை என்று சொல்லும் அளவு சக்கரை வியாதி படாத பாடு படுத்துகிறது. சக்கரை வியாதிக்கு காரணம் வெறும் சக்கரை மட்டும் அல்ல. நமது முறையற்ற உணவு முறைகள். நேரம் கெட்ட நேரத்திற்க்கு உண்ணுதல், உறங்குதல் என்று பல, பல காரணங்கள். அதுவும் தமிழகம் சக்கரை வியாதியின் ராஜ தானியாக இருக்கிறது. இதற்க்கு காரணம் தமிழர்கள் நமது பாரம்பரிய உணவு முறையை மறந்து சிலந்தி வலையில் சிக்கிய பூச்சி போல் அயல் நாட்டு மோகத்தில் சிக்குண்டு உள்ளார்கள். ஒரு அரை ஸ்பூந் நெய் சேர்த்து கொண்டால் உடல் குண்டு ஆகி விடும் என்று பயப்படும் இன்றைய தலைமுறை. டொமினோஸ், பிஸா ஹட் போன்ற உணவகங்களில் தின்று, தின்று அதன் மூலம் உடல் பருமன் மட்டும் அல்லாமல் பல்வேறு அவதிகளுக்கு யுவதிகளும், யுவன்களும் ஆளாகிறார்கள்.
என்னடா இது. இந்த பெரிசு ஓவர்ரா அட்வைஸ் பண்றதேனு யூத்ங்க மைன்ட் வாய்ச்ல நினைப்பதை நான் catch பண்ணிட்டேன். நானும் யூத் தாங்க. என் வயசு 26 தான் ஆர்து. இதுக்கு முன் நானும் ரொம்ப குண்டா தான் இருந்தேன். பிசாவ பிசாசு மாதிரி சாப்டுவேன். ஆனால் ஒரு அரை ஸ்பூந் நெய் என் அம்மா தட்டில் விட வந்தால் ஏதோ விசத்தை விட வந்த மாதிரி அலறுவேன். அது எல்லாம் எவ்ளோ பெரிய முட்டாள் தனங்கள் என்பது எனக்கு இப்பொழுது புரிகிறது.
ஆறு அடி உயரம் உடைய நான். 2013 இல் 112 கிலோ எடை இருந்தேன். அப்பொழுது நான் நெய்யை ஒரு நோயாக நினைத்தேன். இன்று என்னுடைய எடை 80 கிலோ. இப்பொழுது தினமும் மத்திய சாப்பாட்டின் பொழுது ஒரு ஸ்பூந் நெய் தவறாமல் சேர்த்து கொள்கிறேன். நான் 112 கிலோ எடையில் இருந்த பொழுது என்ன சாப்பிட்டேனோ அதை விட இரண்டு மடங்கு அதிகமாகவே இப்பொழுது சாப்பிடுகிறேன். ஆனால் பீசா போல் உடல் ஆரோக்கியத்திற்கு பிசாசாக இருப்பவைகளை உண்ணாமல் சக்த்தான உணவுகளை உண்ணுகிறேன். அதற்க்கு தகுந்த வேலையை என் உடலுக்கு கொடுக்கிறேன். ஒரு நாளைக்கி இரண்டு மணி நேரம் உடற் பயிற்ச்சி. இரண்டு மணி நேரம் நடை பயிற்ச்சி.
என்னுடைய தொழில் டூர் கன்டக்ட் பண்றது. வருடத்தில் பாதி நாள் காசி ராமேஸ்வரம் போன்ற இடங்களுக்கு நிறைய பெரியவர்களை அழைத்து கொண்டு செல்வேன். அது போன்ற சமயங்களில் அதிகாலை மூணு மணிக்கு கயா போன்ற இடங்களுக்கு ஒரு 30, 40 பேரை அழைத்து கொண்டு வெளியில் கிளம்ப வேண்டி இருக்கும். திரும்பி வர இரவு 11, 12 ஏன் ஒரு மணி கூட ஆகும். அது போன்ற சமயங்களில் நான் அதற்க்கு ஒரு நாள் முன்பாக இரவு 10.30க்கு உடற் பயிற்ச்சி ஆரம்பித்து 12.30க்கு முடித்து 12 45க்குள் குளித்து ஏஸீயை on பண்ணி ட்ரெஸ் எல்லாம் ஜம்னு பண்ணி மூணு மணிக்கு அலாரம் வெய்த்து ஒரு மணிக்கு படுப்பேன். வெறும் 2 மணி நேர தூக்கம். காசியில் இருந்து கயாவிற்க்கு வேண்னில் செல்ல 5.30 லிருந்து 6 மணி நேரம் ஆகும். அந்த நேரத்தை நான் தூங்க பயன்படுத்தி கொள்வேன். காசியில் என்னுடைய க்ரூப். வாத்தியார் வீட்டில் உட்காந்து திதி கொடுத்து கொண்டு இருப்பார்கள். அவர்களுக்கு அது முடிய மூன்று மணி நேரம் ஆகும். எனக்கு அப்பொழுது வேலை இல்லை. அந்த நேரத்தில் என்னுடைய கால்கள் காசி சந்துகளில் ஒரு 2 மணி நேரமாது நடக்கும்.
நிறைய ஓய்வு நேரம் இருப்பவர்கள் உடற் பயிற்சிக்கு என்று ஒரு டைம் டேபிள் போட்டு அதன்படி தினமும் செய்யலாம். காலை 9 மணிக்கு ஆஃபீஸ் சென்று மாலை ஐந்து மணிக்கு வீட்டிற்க்கு வருபவர்கள் என்றால் பிரச்சனை இல்லை. என் போல் பிஸ்நெஸ் ட்ரிப், ஆஃபீஸ் ட்ரிப் அடிக்கடி போபவர்களுக்கு உடற் பயிற்ச்சி செய்ய என்று தனியாக நேரத்தை ஒதுக்க முடியாது. கிடைக்கும் நேரத்தை உடற் பயிற்சிக்கு என்று பயன் படுத்தி கொள்ள வேண்டும்.
எனக்கு மிகவும் பிடித்த பர்சனாலட்டிகளில் நடிகர் அருண் விஜய் அவர்களும் ஒருவர். சமீபத்தில் வேந்தர் தொலைக்காட்சி லைவ் ப்ரோக்ராம்மில் அவர் இளைங்கர்களுக்கு ஃபிட் நஸ் சம்பந்தமாக நிறைய நல்ல, நல்ல ஆலோசனைகளை வழங்கினார். அப்பொழுது அவர். நான் அதிகாலை ஷூட்டிங் கிளம்பினால் வீட்டிற்க்கு வர இரவு 10 மணி ஆகி விடும். இரவு 10 30க்கு மேல் தான் உடற் பயிற்ச்சி செய்ய ஆரம்பிப்பேன் என்றார்.
அப்பொழுது என் மைன்ட் வாய்ஸ். இவர் நம்ப ஆளுடா என்று நினைத்தது.
சரி. நாம் நெய் சமாச்சாரத்துக்கு வருவோம். நெய்யில் நல்லதே இல்லையா. அளவுக்கு மீறினால் தாங்க அமிழ்தும் நஞ்சு. நெய்யில் எவ்ளோ நல்ல விசயங்கள் இருக்கிறது தெரியுமா.
அதை நாம் நாளை பார்ப்போம்.

Saturday, 4 April 2015

சக்கரை நோய்க்கு மிக சிறந்த மருந்து




 440இல் இருந்த சக்கரை அளவு 30தே நாளில் 240 ஆக ஆன அதிசயம்.

என் தாய்க்கு ஏழு வருடங்களாக சக்கரை நோய் இருந்தது. உண்மையில் சக்கரை நோய் என்பது ஒரு நோய் அல்ல. நமது உடலில் சக்கரையின் அளவு அதிகமானால் வரும் பாதிப்பு. சக்கரையின் அளவை சரி செய்தால் போதும். அதான். அந்த அளவை எப்படி சரி செய்வது. எவ்ளோ இன்சுலின் , எவ்ளோ மாத்திரைகள். எத்தினை ஆயிரங்கள், லக்ஷங்கள் மருந்திற்கு என்று செலவு செய்வது. சரி ஆகவே மாட்டேங்கர்தே. இதற்க்கு ஒரு தீர்வே இல்லையா. இருக்கிறது. என் அம்மாவிற்க்கு இருந்த சுகர் எவ்ளோ தெரியுமா. கேட்டால் ஷாக் ஆய்டுவீங்க. 440. ஒரே மாதத்தில் அது 240 ஆக ஆனது. எப்படி. 

 எங்களது ஒரு குடும்ப நண்பரின் ஆலோசனைப்படி நிலவேம்பு என்னும் மூலிகையை எனது தாயார் தினமும் சாப்பிட்டு வந்தாங்க. என் அம்மாவிற்க்கு மட்டும் அல்லாமல் எனது அத்தைகளும் நிலவேம்பு கஷாயம் குடித்ததன் பலனாக இன்று சக்கரை வியாதி பூர்ணமாக குணம் அடைந்து விட்டது. 

 நிலவேம்பு வெறும் உடலில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துவதை மட்டும் செய்வதில்லை. உடல் வலிமை, குடல் பூச்சிகள் அழிய, டெங்கு, பன்றி காய்ச்சல் போன்ற அனைத்து கொடிய வியாதிகளையும் தீர்க்கும் சர்வ ரோக நிவாரணி நிலவேம்பு. டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் பரவிய சமயத்தில், அதற்க்கு நிலவேம்பு மிக சிறந்த மருந்து என்று தமிழக அரசாங்கமே அறிவிப்பு வெளியிட்டது உங்களில் சிலருக்கு நியாபகம் இருக்கலாம். 

 இதை எவ்வாறு பயன் படுத்துவது-  இவற்றோடு கொத்தமல்லி, கிச்சலி தோல் எல்லாம் சேர்க்க வேண்டும் என்று சிலர் சொல்வார்கள். அது தேவையில்லை. விருப்பபட்டால் சேர்க்கலாம். இரண்டு டம்ப்ளர் நீரில் அதிக பக்சம் 10, 15 கிராம் நிலவேம்பு போட வேண்டும். 15 கிராம்க்கு மேல் போட்டால் ஓவர் டோஸ். அவர், அவர் வயது, உடல் வாகிற்கு தகுந்தார் போல் டோஸேஜ் கொஞ்சும் கூடலாம், குறையலாம். ஆனால் டோஸேஜ் குறைந்தால் கூட பிரச்சனை இல்லை. அதிகரித்தால் ஆபத்து. பத்து கிராம் என்பது சிறுவர், பெரியவர் அனைவருக்கும் ஏற்று கொள்ளும் சரியான டோஸேஜ். வாரத்திற்கு ஒருமுறை நீங்கள் உங்கள் சக்கரையின் அளவை சோதனை செய்யுங்கள். அதற்க்கு தகுந்தார் போல் நீங்கள் டோஸேஜ்ஜை அதிகரித்து கொள்ளலாம். ஆனால் அதிக பக்சம் 15 கிராம் தான். வெறும் வயிற்றில் எடுத்து கொள்ள வேண்டும் 

 இத்தகைய சிறப்பு வாய்ந்த நிலவேம்பின் ஆரம்ப விலை எவ்ளவு தெரியுமா. வெறும் 55 ரூபாய். சில நாட்டு மருந்து கடைகளில் இதை விட விலை குறைவாகவும் கிடைக்கலாம், கூடவும் கிடைக்கலாம். 

 பின் குறிப்பு- உடல் ஆரோக்கியத்திற்கு இனிப்பாக இருக்கும் பெரும்பாலானவை நாவிற்க்கு கசப்பாகவே இருக்கும். நிலவேம்பும் அதற்க்கு விதி விலக்கல்ல. நிலவேம்போடு தேனை சிறிது கலந்து குடித்தால் அது இனிப்பாகவும் இருக்கும். நிலவேம்பின் மருத்துவ குணத்தை சற்று கூட்டுவதாகவும் இருக்கும். தேனில் நிறைய ட்யூப்லிகேட் வருகிறது. காதியில் சுத்தமான மலை தேன் கிடைக்கும். சரி. சக்கரை வியாதி உள்ளவர்கள் நிலவேம்பில் தேன் கலந்து குடித்தால் சக்கரை வியாதி குணம் அடையுமா. என்னும் சந்தேகம் வரலாம். நிச்சயம் குணம் அடையும். நிலவேம்பின் மருத்துவ குணத்தை முறிக்கும் அளவு சக்தி தேனிர்க்கு இல்லை. என்ன ஒரு ரெண்டு, மூணு நாள் முன்ன, பின்ன ஆலாம். தினமும் இன்சுலின் போட்டு கொள்ளும் அவஸ்தைக்கு மூக்கை பிடித்தவாறே மடக்குனு ஒரு 30, 50 மில்லி நிலவேம்பு நீரை குடிப்பது கஷ்ட்டமாக இருக்காது. முதல் 30 நாள் கஷ்ட்டமாக இருக்கும். 31 ஆவது நாள். 

 சக்கரை வியாதியே உங்களுக்கு இருக்காது.